Pages

Monday, August 31, 2015

கிறுக்கல்கள்! - 13


சுய பச்சாதாபத்திலும் வெறுப்பிலும் உழல்பவர்களை மாஸ்டர் மன்னிக்கவே மாட்டார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பது ஒன்றுமேயில்லைநீ அதை மறக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தாலொழிய!
---

ஜோக்காக ஒரு கதையை மாஸ்டர் சொன்னார்.
ஒரு மாது போலீஸுக்கு போய் தன்னை ஒருவன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தாள்.
அவனை அடையாளம் சொல்லுங்க!
ம்ம்ம்ம் முதல்ல அவன் ஒரு சரியான முட்டாள்!
முட்டாள்?
ஆமா, அவனுக்கு பாலுறவு பத்தி ஒண்ணுமே தெரியலை. நான் அவனுக்கு உதவ வேண்டி இருந்தது.

சீடர்கள் பலமாக சிரித்தனர். ஆனால் மாஸ்டர் அடுத்து சொன்னதை கேட்ட பின் அது அவ்வளவு ஜோக்காக தோன்றவில்லை.

அதனால் அடுத்த முறை யாரும் உன்னை புண்படுத்திவிட்டார்கள் என்று  புகார் சொல்லுமுன் அவருக்கு நீ எப்படி உதவி செய்தாய் என்று கண்டுபிடி!
எல்லோரும் இதற்கு பலத்த ஆட்சேபம் செய்தார்கள்.
நீ உன் மனதை புண்பட விடமாட்டேன் என்று உறுதியாக இருந்தால் யார் உன் மனதை புண்படுத்த முடியும்?


No comments: