Pages

Thursday, October 8, 2015

கிறுக்கல்கள்! -43


பரம சத்தியம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது; ஆனால் நமக்குத்தான் பார்க்கத்தெரியவில்லை என்பார் மாஸ்டர்.

ஒரு முறை ஒரு மலை மீது ஏறும்போது கூட ஒரு சீடனை அழைத்துச்சென்றார்.

பாதி தூரம் போன பின் சுற்றும் முற்றும் இருந்த புதர்களை பார்த்துவிட்டு சீடன் கேட்டான்: நீங்கள் காட்டுவதாச்சொன்ன அழகான காட்சி எங்கே?

அப்பனே! நீ அதன் மேல்தான் நின்று கொண்டு இருக்கிறாய். மலை உச்சிக்கு போன பிறகு அது உனக்குத்தெரிய வரும்!

No comments: