Pages

Wednesday, June 29, 2016

கிறுக்கல்கள்! - 135



தான் சந்தித்த சிந்தனையாளர் ஒருவரைப்பற்றி சொன்னார்:
இது கிறுக்குத்தனமான உலகம். பணக்காரர்களிடன் நிறைய பணம் இருக்கிறது; ஆனால் அவர்களுக்கு கடனுக்கு பொருட்களை விற்கிறார்கள். ஏழைகளிடம் பணம் இல்லை; ஆனால் அவர்களுக்கு கடன் கிடையாது, அவர்கள் பணம் கொடுத்தே எதையும் வாங்க வேண்டும்.”
ம்ம்ம்.. அப்படியானால் என்ன செய்யலாம்?”
அப்படியே மாற்றவேண்டும். பணக்காரர்கள் காசு கொடுத்து பொருட்களை வாங்கட்டும். ஏழைகளுக்கு கடனில் பொருட்களை கொடுக்கலாம்.”
அப்படி கடனுக்கு பொருள் கொடுக்கும் கடைக்காரர் சீக்கிரமே ஏழை ஆகிவிட வேண்டியதுதான்.”
ரொம்ப நல்லது! அப்புறம் அவரும் கடனுக்கு பொருட்களை வாங்கலாம்!”

No comments: