Pages

Thursday, July 21, 2016

அந்தணர் ஆசாரம் - 4





அடுத்து பல் துலக்குதல்.
கிழக்கு நோக்கி உட்கார்ந்து பல் துலக்க வேண்டும். வெறும் வாய் சுத்தத்திற்கு என்று இல்லாமல் இதை ஒரு கர்மாவாகவே சொல்லி இருக்கிறது. ரிஷி, சந்தஸ் தேவதையுடன் ஆயு: என்னும் மந்திரத்தால் பல்குச்சியை அபிமந்திரித்து துலக்க வேண்டும். குச்சி சுண்டு விரல் பருமனாகவும் 8 அங்குல நீளமும் இருக்க வேண்டும்.
முள் உள்ள எல்லா மரங்களின் குச்சிகளும் பல் துலக்க தகுந்தவைகள். அவை புண்ணியத்தை தரும். பால் உள்ள குச்சிகளாலும் துலக்கலாம்; அவை கீர்த்தியை கொடுக்கும்,
வேம்பு, நாயுருவி, அத்தி, க்ளா, கருங்காலி, கடம்பை, புன்கு, சாரடை, மூங்கில், வெண்மந்தாரை, நாவல், எருக்கு,வில்வம் - இவை சிலாக்கியமானவை. வில்வத்தை சில மஹரிஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
அச்வத்தம் (ஆல்), புரசு, சிம்சுபா ஆகியன தவிர்க்க வேண்டியவை. சதுர்தசீ, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சங்க்ரமணம் ஆகிய தினங்களில் குச்சியால் பல் துலக்கக்கூடாது. ச்ராத்தம், உபவாஸம் ஆகிய தினங்களில் பல் துலக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். துலக்கினால் ப்ராயச்சித்தம் 100 காயத்ரி ஜபித்த நீரை பருகுதல்.
குச்சி இல்லாமல் இலைகளாலும் புல்லாலும் பல் துலக்கலாம். அமாவாசை ஏகாதசி தவிர இதற்கு விலக்கு இல்லை. நாவல், இச்சி, மாவிலை ஆகியனவற்றுக்கு இந்த விலக்கு கூட இல்லை. இவற்றுள் மாவிலை மிகவும் சிலாக்கியமாகும். கன்னிகை, ப்ரம்ஹச்சாரி, விதவை ஆகியோர் குச்சியால் என்றும் பல் துலக்கக்கூடாது.
சூர்ணங்களை பயன்படுத்தினால் ஆள்காட்டி விரலைத்தவிர்த்து மற்ற விரல்களால் துலக்கலாம்.
அலோபதி மருத்துவத்தில் தினசரி இரவு படுக்கப்போகும் முன் பல் துலக்கச்சொல்கிறார்கள். நெடு நேரம் உணவுபொருட்கள் பல்லுடன் சேர்ந்து இருப்பது இரவு நேரத்தில்தான். உணவு உண்ட பின் 16 முறை வாய்கொப்பளிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டதால் வாயிலிருந்து எல்லா உணவுத்துகள்களையும் நீக்க இது அவசியமாகிவிட்டது. 

No comments: