Pages

Saturday, October 29, 2016

கிறுக்கல்கள் -176





சீடர் விடேன் தொடேன் என்று அதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தார்.
சாவுக்கு அப்புறம் வாழ்வு இருக்கா?
மாஸ்டர் சொன்னார்: “நீ இந்த கேள்வியிலேயே நிக்கறது ஆச்சரியமா இருக்கு!”
ஆச்சரியம் என்ன இதில?”
ஜன்னலுக்கு வெளியே கையை காட்டி சொன்னார்: “இதோ பாரேன்! உன் எதிரே அருமையான வசந்த கால நாள் இருக்கு. இதமான வெயில்; பறவைகளின் பாட்டு;

மலரும் பூக்கள். இயற்கையை ரசிக்கறதை விட்டுட்டு நாளைக்கு என்ன கிடைக்குமோன்னு இருக்கியே! இப்ப கிடைக்கற சுவையான சாப்பாட்டை சாப்பிட மாட்டேன்னு சொல்ற குழந்தை மாதிரி இருக்கே! முதல்ல உனக்கு தினமும் கிடைக்கற உணவை சாப்பிடு!”

No comments: