Pages

Friday, May 26, 2017

ஆன்மீக விசாரம் - 14





கடைசியா ஒரு பதிவோட இந்த தொடரை நிறைவு செய்யலாம்.
ப்ராயச்சித்தங்கள் பத்தி இங்கே சில பதிவுகளில எழுதி இருந்தேன். நேத்து நண்பர் ஒருவர் ப்ளஸ்ல எழுதி இருந்தார். அது இது தொடர்பா இருக்கு. அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஜோசியர் பத்தி குறிப்பிட்டு ப்ரெடிக்‌ஷன் மிகத்துல்லியம்ன்னு சொல்லி இருந்தார். அந்த போஸ்டை படிச்சா அந்த ஜோசியர் சொல்கிற பல விஷயங்களில ஒண்ணு: நான் ப்ராயச்சித்தங்களை நம்பறதில்லை. … காலத்தை உணர்தல் மட்டுமே பரிகாரம்.ஒரு பிரச்சனை ஏன் ஆரம்பித்தது. ஏன் இன்னும் முடியவில்லை. எப்பொழுது முடியும் என்பதை தெள்ளத்தெளிவாக கூற முடியும்..... காத்திருங்கள் என்பதே என் அளவில் சரி.
நண்பர் //வினைகள் தீர்க்க காத்திருப்பதை தவிர வேறு வழியில்லைங்களா // ன்னு கேட்டு இருக்கார்.
சில சமயம் ப்ராயச்சித்தங்கள் செய்வதால முடியும் என்கிற என் போஸ்ட்களை படிச்சவங்களுக்கு ஏற்கெனெவே உணர்த்தி இருக்கேன். இப்ப இன்னும் கொஞ்சம்.
ஒரு ஆசாமி ஒரு குற்றம் செய்யறார். போலீஸ் பிடிச்சு வழக்கு தொடருது. நீதிபதி விசாரிச்சு தண்டனை கொடுக்கறார். எல்லாமே ஒழுங்காவே நடக்கிறதா வெச்சுப்போம்! யாரும் கோணக்கழி வெட்ட வேணாம்! என்ன தண்டனை கொடுக்கப்படும்? சின்ன குற்றம்ன்னா சின்ன தண்டனை. கோர்ட் கலையற வரை இங்கேயே சிறை என்கிற ரீதியில கூட இருக்கும். இது சம்பந்தமான நடந்த நிகழ்ச்சி ஒண்ணோட கதை நினைவுக்கு வந்தாலும் இங்க இப்ப பகிரப்போறதில்லை.
இன்னும் கொஞ்சம் பெரிய குற்றத்துக்கு தண்டனையா சில ஆயிரங்கள் அபராதம்ன்னு கொடுக்கலாம். இன்னும் கொஞ்சம் பெரிய தண்டனைக்கு இத்தனை வருஷம் சிறைன்னு கொடுக்கலாம். இன்னும் கொஞ்சம் பெரிய குற்றத்துக்கு ஆயுள் சிறையா இருக்கலாம். குற்றம் ரொம்ப பெரிசா இருந்தா தூக்குத்தண்டனையாக்கூட இருக்கலாம்.
இது போலத்தான் இங்கேயும். சின்ன கர்ம பலன் ஒரு நாள் காய்ச்சலில கழிந்து போகலாம். இன்னும் கொஞ்சம் பெரிசு ஒரு வார படுக்கையாப்போகலாம். இன்னும் கொஞ்சம் பெரிசு கை கால் ப்ராக்சர் ஆகி ஆபரேஷன்ல முடியலாம். செல்வம் நம்ம வீட்டிலேந்து திருடு போறதா இருக்கலாம். இன்னும் அதிகமா போனா நாள் பட்ட தீராத வியாதியா அது வரலாம். ப்ராயச்சித்தங்கள் இந்த அபராதங்கள் கட்டறா மாதிரி. கேஸ் அப்பீலுக்கு போறா மாதிரி. ஓரளவுக்கு தண்டனையை குறைச்சுக்கலாம். ஆனா ஆயுள் சிறை என்கிறா மாதிரி தண்டனையிலேந்து அபராதம் கட்டி வெளியே வர முடியாதில்லையா? அதே சமயம் ஆயுள் 5-10 வருஷ தண்டனையா குறைக்கப்படலாம். தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையா மாற்றப்படலாம். அதாவது முழுக்க தீரலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சம் ரிலீப் இருக்கும்.
ப்ராயச்சித்தங்கள் குறிச்சு ஜோதிடர்கள்கிட்ட மாறுபட்ட கருத்துக்கள் இருக்கு. சிலர் அதெல்லாம் கிடையவே கிடையாது என்பார்கள். சிலர் எல்லாத்துக்கும் ப்ராயச்சித்தங்கள் சொல்லுவார்கள். சிலர் கேட்டால் மட்டுமே சில கண்டிஷன்களோட சொல்லுவார்கள். சொல்றேன்; நீ நிச்சயமா செய்வியா? நீ செய்யாட்டா எனக்கு அதுல கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு என்பார்கள். ஜாதகத்தில இவர் செய்யறதுக்கு சாதகமான அம்சங்கள் இருக்குன்னு தோணிணா மட்டும் சிலர் சொல்வாங்க.
கொஞ்சம் யோசிச்சு பாத்தா இங்கே கொஞ்சம் தமாஷ் இருக்கு. ஜோதிடர்களோட ப்ரெடிக்‌ஷனே பிரச்சினைகளோட போக்கையும் நிர்ணயிக்கிறா மாதிரி தோணலே? உதாரணமா ஒத்தர் இந்த ஜோதிடரை நம்பி வரார். ஜோதிடர் ஜாதகத்தை பாத்துட்டு "ஒண்ணும் செய்ய முடியாது; காலாகாலத்துக்கும் இதை அனுபவிக்க வேண்டியதுதான்"னு சொல்லறார்ன்னு வெச்சுப்போம். வந்தவர் வருத்தத்தோட "ஹும்! நமக்கு வாய்ச்சது அவ்ளோதான்" ன்னு அதை தீர்க்க ஒரு முயற்சியும் செய்யாம விட்டுடலாம். அதுக்கு வாய்ப்பு இருக்கவே இருக்கு. தீர்ந்து இருக்கக்கூடிய பிரச்சினை தீராதுன்னு சொன்னதால தீராமலே போயிடுமே!
அப்படி ஏதும் நடந்தா அதுவும் இறையின் விளையாட்டுன்னு எடுத்துக்கலாம்! தீர வேண்டிய கேஸா இருந்தா இவர் இன்னொரு ஜோதிடர்கிட்டப்போய் கன்சல்ட் பண்ணி பரிகாரம் தேடிப்பார்!

No comments: