Pages

Thursday, July 20, 2017

கிறுக்கல்கள் -141





எந்த கேள்விக்கும் ஒரே ஒரு சரியான விடை மட்டுமேதான் இருக்க முடியும் என்று கட்சி கட்டினார் ஒருவர்.
மாஸ்டர் கேட்டார்: மனிதன் ஈரத்தில் படுத்து இருந்தால் உடம்பு வலி எடுக்கிறது. ஆனால் மீனோ நீரிலேயேத்தான் இருக்கிறது.
மரத்தில் வசிப்பது மனிதனுக்கு ஆபத்து. ஆனால் குரங்குகள் அங்கேயேத்தான் வசிக்கின்றன.
இப்போது வசிப்பிடம் எது சரி என்று கேட்டால் மீனுடையதா, குரங்குடையதா, மனிதனுடையதா - எதை இது மட்டுமே சரி என்று சொல்ல முடியும்?
புலி மாமிசத்தை உண்கிறது, எருமை புல் தின்கிறது, மரங்கள் பூமியில் இருந்து சத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. எது 'மட்டுமே' சரியான உணவு?

No comments: