Pages

Monday, October 23, 2017

தீபாவளி சிந்தனைகள் - 1





ரைட்! இப்ப தீபாவளி முடிஞ்சாச்சு என்கிறதால அடுத்த வருஷத்துக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க இப்பவே ஒரு போஸ்ட்.

நான் டாக்டர். டாக்டர்கள் தவறு செய்ததா பேஷண்ட் அல்லது உறவினர்கள் நினைச்சா அவங்க ஐஎம்ஏ அதாவது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்னுக்கு புகார் கொடுக்கணும்; அவங்க விசாரிக்கணும்ன்னு ஒரு நடைமுறை உண்டு. ரொம்ப டெக்னிகலான விஷயம் என்கிறதால இப்படி. இதை சரியா கடைபிடிக்கலை. இதனால பின் நாட்களில இந்த புகாரும் நடவடிக்கையும் டாக்டர்கள் கையை விட்டு கோர்டுக்கு போயிடுத்து. இப்ப சகட்டு மேனிக்கு கேஸ்களும் இதுக்காக டிபென்ஸிவ் ப்ராக்டிஸும் களத்தையே கெடுத்தாச்சு. இருக்கட்டும்.

தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசுகள் பத்தி ஆட்சேபணை வருது. பல வருஷங்களா செஞ்சுகிட்டு இருக்கோமே, இதுல மத்தவங்க என்ன தலையிடறதுன்னு ஆரம்பிச்சு ஒருபக்கம் பல வாதங்கள் இருந்தாலும் சில விஷயங்களை யோசிக்கணும். சுற்றுப்புற சூழலை நாளுக்கு நாள் நாம கெடுத்துகிட்டு இருக்கோம்.முன்னே மாதிரி வீடுகளா இல்லை. மச்சு வீடுகள் அப்பல்லாம் குறைவே. இப்போதோ பல அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்தாச்சு. ஒரு அலகு இடத்தில இப்ப வாழும் மனிதர்கள் பல மடங்கு அதிகம். குறிப்பா நகரங்களிலேயும் அதிலும் குறிப்பா தலைநகர்கள் - புது தில்லி உள்பட- இங்கே ஏற்கெனவே இருக்கிற காற்று மாசு மிக மிக அதிகம். ஆபத்தான அளவு என்கிறதை பல இடங்களில தாண்டி இருக்கு. இந்த நிலையில் பட்டாசுகள் ஏற்படுத்தற மாசை நாம் ஏற்றுக்கொள்ளுவது கஷ்டம். அது ஒரு நாள் ரெண்டு நாள்ன்னு இருந்தாலும். ஏறத்தாழ நாடு முழுவதுமே ஐப்பசி மாசம் கனமான அட்மாஸ்பியர். மேகங்கள் சூழ்ந்து இருக்கும். நகர மாசு வெளியேறுவது கடினம். எப்பவும் காற்றடிக்கும் எங்க ஊர் மாதிரி இடங்களில பிரச்சினை இல்லை.

ஆனா இது எங்க உரிமை. நீங்க எப்படி கை வைக்கலாம்? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறது காலம் காலமா நாங்க செய்கிற விஷயம் ன்னு சிலர் சொன்னா, எந்த சாஸ்திரத்தில சொல்லி இருக்கு? அது இடையில ஆரம்பிச்ச பழக்கம்ன்னு சொல்றாங்க
 
ஆனா அப்படி சொல்லி இருக்கு.
அடுத்த பதிவில பார்க்கலாம்.

No comments: