Pages

Tuesday, October 24, 2017

தீபாவளி சிந்தனைகள் - 2





சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா?
தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

சொல்வது Ranganatha Vadhyar:

மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.

"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...

*"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:*

*உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"*
उल्का-हस्ता-नराःकुर्युः-पितृ என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி.

'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை.

இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.

காரணம் என்ன? "பித்ரூணாம்" என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.

பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் முன்னேறிச் செல்வார்கள்.

இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக "ப்ரதோஷ-காலத்தில் *"உல்காதானம்"* செய்வோம்.

உல்கா=நெருப்புடன்-கூடிய-கட்டை; (தற்காலத்தில்=மத்தாப்பு)

மேலும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

*"நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா"*

என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

*-"दीपैर्नीराजनादत्र-सैषा-"दीपा

ஆக வெடிகள் வெடிக்கிறோமோ இல்லையோ மத்தாப்புகள் கொளுத்த வேண்டும் எனலாம்.
அது சரி ஏன் டாக்டர்கள் பற்றி எழுதினேன்?

டாக்டர்கள் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். அதனால் அவரகளை கட்டுப்படுத்துவது டெக்னிகல் அறிவு இல்லாத நபர்களிடம் போய்விட்டது. இப்போ ஸ்டீல் ப்ளேட் வெச்சா அப்படியே கரைஞ்சுபோயிடும்ன்னு சொன்னாங்க என்று ஒரு வாதத்துடன் கோர்ட்ல கேஸ் எடுத்துக்கறாங்களேன்னு புலம்பி பலனில்லை.
அது போல ஹிந்துக்களே தம்மை இப்போதே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் "செக்யூலர்" மனிதர்களிடம் இது போய் விடும்.
உடனடியாக பட்டாசுகள் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம்.புகை குறைவாக சத்தம் இவ்வளவுதான் இருக்கலாம், தொடர் வெடிகள் இவ்வளவுதான் இருக்கலாம் என்பது போல. சிறு வயதில் நாங்கள் அதிகம் தொடர் வெடிகள் வாஅங்க மாட்டோம். அந்த காசுக்கு ஒத்த வெடி வாங்கினால் இன்னும் அதிக நேரம் வெடிக்கலாமே என்று லாஜிக்! நிறைய காசு வைத்திருப்பவர்களோ அல்லது அப்படி காட்டிக்கொள்ள நினைப்பவர்களோதான் அப்படி அதிகம் வெடிப்பார்கள். இப்போதெல்லாம் நிறையா பெர்ர் கையில் நிறைய காசு இருக்கிறது போலிருக்கிறது.
இதில் சத்த கட்டுப்பாடு இப்போதும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். இன்னும் தீவிரமாக்கலாம். நச்சுப்புகை எதில் அதிகம் வருகிறது? தடை செய்யலாம். பட்டாசு வெடிக்கும் நேரத்தை கட்டுப்படுத்தலாம். ஒரே அல்லது இரண்டே நாட்களில் என்று இல்லாமல் அதிக நாட்கள் குறைந்த நேரம் என்று இருக்கலாம்.
அதே சமயம் காற்று மாசை குறைக்க மற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். எத்தனை கார் வேணுமானாலும் ஓடட்டும்; தெருக்கள் புழுதியுடன் இருக்கட்டும், சுத்தம் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டு தீபாவளிக்கு மட்டும் பட்டாசு தடை என்றால் யார் ஏற்றுக்கொள்வார்கள்? பட்டாசு கட்டுப்பாடு மாசு கட்டுப்பாட்டின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும்.

No comments: