Pages

Saturday, January 13, 2018

மகர சங்க்ராந்தி 2018




வாக்கியப்பஞ்சாங்கப்படி நாளை ஞாயிறு மாலை நாலே முக்கால் மணிக்கு சூர்ய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஆகவே புண்ணிய காலம் அது முதல் அஸ்தமன நேரமான ஆறு மணி வரைதான். இந்த நேரத்திலேயே ஸ்நானம் செய்து தர்ப்பணம் தானம் சூர்ய பூஜை உண்ணுதல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ராகு காலமாக இருப்பது பரவாயில்லை; வேற வழியில்லை. அடுத்த நாள் புண்ணிய காலமில்லை.

த்ரிகணித பஞ்சாங்கம் கடைபிடிப்பவர்களுக்கு மத்யான்ஹிகம் 2 மணிக்கே புண்ணிய காலம் பிறக்கிறது. அவர்கள் அதன்பின் ஸ்நானாதிகளை செய்யலாம்.
இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்றெல்லாம் கேட்டு பிரயோசனமில்லை. அவரவர் உடம்பு இடம் கொடுக்கும்  அளவுக்கு அவரவர் தர்மத்தை கடைபிடிக்க பார்க்கவும்.

No comments: