Pages

Thursday, February 22, 2018

கிறுக்கல்கள் - 174





தெய்வீகத்தை பார்க்க முடியுமா என்று ஒருவர் கேட்டார்.

இப்போதே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்? என்றார் மாஸ்டர்.

பின்னே ஏன் அதை உணரமுடியவில்லை?

ஏன் என்றால் உன் எண்ணங்களால் அதை விகாரப்படுத்திக்கொள்ளுகிறாய்!

புரியவில்லையே!

சைபீரிய குளிர் காற்று வீசும்போது தண்ணீர் இறுகிப்போய் கனமான பனிக்கட்டிகளாக மாறிவிடுகிறது.

எண்ணங்கள் குறுக்கிடும்போது சத்தியம் கோடிக்கணக்கான கண்டதுண்டமாகி 'பொருட்களாக' ஆகி விடுகிறது!

No comments: