Pages

Friday, December 8, 2017

கிறுக்கல்கள் -170





தானே குழப்பத்தில் இருந்து கொண்டு இருந்தாலும் தன்னையே ஆன்மீக குரு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களை கண்டு மாஸ்டர் சிரிப்பார்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவர் பாதசாரிகளுக்கான வழிகாட்டி என்று புத்தகத்தை எழுதி வெளியிட்ட நாளிலேயே சாலையில் விபத்தை உண்டாக்கி இறந்து போன ஒருவரைப்போல என்பார்!

Thursday, December 7, 2017

கிறுக்கல்கள் -169





ஒரு பிரசங்கி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு சென்றார்.
சீடர்கள் மாஸ்டரை கேட்டார்கள் - இந்த சுற்றுப்பயணம் அவரது பார்வையை விசாலமாக்குமா?
மாஸ்டர் சொன்னார்: இல்லை அவரது குறுகிய மனப்பான்மையை இன்னும் அதிக இடங்களில் பரப்பும்!

Wednesday, December 6, 2017

கிறுக்கல்கள் -168





மாஸ்டர் சொன்னார்: பலரும் உழைப்பால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்கையால் விளைவது அவரும் மற்றவரும் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது மட்டுமே. உண்மையில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது விழிப்புணர்வால்தான். விழிப்புணர்வு இருக்குமிடத்தில் பிரச்சினைகளே ஏற்படுவதில்லை!

Tuesday, December 5, 2017

கிறுக்கல்கள் -167





சரியான பார்வை என்கிறது ஏன் அவ்வளவு கஷ்டம் என்று யாரோ கேட்டார்கள். மாஸ்டர் கதை சொன்னார்.

சாம் ஐரோப்பா பயணம் முடித்து திரும்பினார்.அவருடைய கம்பனி 'டிட்டி ஆண்களின் ஜட்டி' இல் பார்ட்னராக இருந்தவர் ஆர்வத்துடன் கேட்டார்: சாம், ரோமுக்கு போக முடிந்ததா?
! போனேனே?
அட! போப்பை தரிசனம் செய்தீர்களா?
தரிசனமா? அவரோட தனியே ஆடியன்ஸ் கிடைச்சதாக்கும்!
அடாடாடா! அவர் எப்படி இருக்கார்?
ம்ம்ம்ம்? அவர் 110 சென்டி மீட்டர்ன்னு நினைக்கறேன்!

Monday, December 4, 2017

கிறுக்கல்கள் -166





மதத்தைக்குறித்த மாஸ்டரின் இன்னொரு குறை அது மனிதர்களை பல பிரிவுகளாக பிரித்துவிட்டதுதான். ஒரு சின்ன கதையை அடிக்கடி நினைவுகொள்வார்.

ஒரு சிறுவன் தன் சிறு தோழியிடம் கேட்டான்: நீங்கள் ப்ரஸ்பிடேரியனா?

மூக்கை தூக்கியபடி பதில் வந்தது: ச்சேச்சே! இல்ல, நாங்கள்ளாம் அது போல வேற ஏதோ அருவருப்பான ஒண்ணு!