Pages

Thursday, August 31, 2017

வேதம் - 7





மற்றவற்றில் மந்திரம் சொல்பவர்கள் அதன் உட் பொருளை அறிந்தார்களா, எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களது வாழ்கை நெறிகள், பண்புகள் இவற்றை எல்லாம் பற்றி சார்ந்து இருக்கிறது. ஆனால் ஒலி மட்டுமே ஆற்றல் பெற்றதாக இருக்கிற தன்மை வேத மந்திரங்களில் மட்டுமே இருக்கிறது.

இது எல்லோரிடமும் பலிக்குமா என்பது முக்கியமான கேள்வி. வேதத்தில் ஒலியில் மட்டும் மந்திரத்துவம் இருந்தால் யார், எப்படி சொன்னாலும் வினை வருமா? வேதத்தால் எல்லாவற்றையும் உருவாக்க முடியுமானால் இப்போது அதை சும்மா சொன்னாலே போதுமே?
 
பக்தி சாம்ராஜ்ய கதையில் பரிகாசமாக சொன்னாலும் பலன் உண்டு என்பார்கள். அதாவது வேடிக்கை கதையாக … ஸ்ரீரங்கத்து அரிசி என்று சொல்லி கலப்படம் செய்து விற்றானாம். கலப்படம் செய்தாலும் ஸ்ரீரங்கம் என்று சொன்னதால் நற்கதி கிடைத்ததாம் என்பது பக்தி கதை. இப்படி பட்ட விதிகள் மூன்றாவதான ப்ரீதி சாம்ராஜ்யத்துக்கு உண்டு, ஆனால் பகவானை மந்திர பூர்வமாக அணுகக்கூடிய விஷயங்களில் பொருந்தாது, அவன் கருணையே வடிவானவந்தான். ஆனால் அந்த கருணையை தீயிலும் அமிலத்திலும் காட்டாறு வெள்ளத்திலும் காண முடியுமா? அதில் அவனுடைய வீரியத்தைத்தான் காணலாம். எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எளிமை படுத்தியது எல்லாம் பக்தி மார்க்கத்தில்தானே தவிர ஸ்ருதி பிரக்ரியையிலே மிகக்கடுமையாக விதிகள் உள்ளன., உயரத்திலே கயிற்றின் மீது எண்ணெய் கிண்ணத்தை வைத்துக்கொண்டு நடப்பது போலத்தான் வேதங்களின் ஸ்வரங்களிலேயும் பிரயோகங்களிலேயும் நடக்க வேண்டும். இப்படி கட்டுப்பாடு உண்டு
 
இறைவனை நேரடியாக பக்தி மூலம் வழிபடும் போது தவறு செய்தால் என்ன ஆகும்? ஒருவன் இன்னொருவனுக்கு தவறு செய்கிறான். என்ன நடக்கும் என்பது தவறு செய்யப்பட்டவன் யார் என்பதை பொறுத்தது. எளியவனுக்கு, அசக்தனுக்கு சோகம் உண்டாகும். துணிவுள்ளவனுக்கு, சக்தனுக்கு கோபம் வரும். சர்வ சக்தனுக்கு மிகச்சிறந்த ஞானிகளுக்கும் இறைவனுக்கும் பரிவு, க்ருபை உண்டாகும். பாவம் தன்னிடம் தவறு செய்கிறானே என்று! அதனாலே இறைவனை ஆசார்ய முகமாக ஆரத்தழுவி பதம் பற்றி அவனை வழி படும் பக்தி நெறியிலே எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் கொள்ளலாம்; விதிகள் பொருந்தாது.

Wednesday, August 30, 2017

வேதம் - 6




சரி, இப்போ மந்திரம் என்பதோட பொருளை பார்க்கலாம். மந்தாரம் த்ராயதே இதி மந்த்ரஹ. எவனொருவன் உள்ளே மனனம் செய்கிறானோ, மனத்தால் நினைக்கிறானோ அவனை காக்கக்கூடியது மந்த்ரம். இப்போ இந்த ஒலி ஆற்றலை பார்த்தால், நிறைய வித்தியாசங்கள் உண்டு

 மூன்று மந்திர ஜாதிகள் உண்டு
 
முக்கியமாக மந்த்ரம் என்று சொன்னாலே வேத மந்திரங்கள்தான். நியதியால் மந்த்ரத்துவத்தை பெற்று இருப்பது, நியதி என்பது கயிற்றின் மேலே எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போல. இப்போது வைத்துக் கொள்ளலாம் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் சமாதானங்கள் இல்லாமல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதியில் இயங்குவது. சொன்ன சொல் காக்கக்கூடிய தன்மை பெற்றது, - யஸ்ய ஸ்மரண மாத்ரேண - நினைத்த மாத்திரத்திலேயே காப்பது- பகவானின் திரு நாமங்கள் முக்தி தரும் என்பர். அது போல.

கதியால இயங்குவன உண்டு. கதி விசேஷம் என்றால் அனுஷ்டானங்களில், உபாசனைகளில் வரும் மந்திரங்கள். எத்தனயோ உபாசன விதிகளை பார்க்கலாம். ஆகமங்களில் உள்ள விதானங்கள், தந்திர சாஸ்த்திரங்களில் வருவன. அவற்றிலேயும் அமுக்கியமான மந்த்ரத்துவம் உண்டு.இப்படி
வேதத்தில் வழங்கப்படுகின்றவனாய் உள்ள இறைவனை பல வித வடிவங்களிலே வழிபடுவது இரண்டாம் வகை.
 
மூன்றாவதாக தொல் காப்பியர் சொன்னபடி 'நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப' என்பது போல, நல்ல நெறியாளர்களாக பண்பாளர்களாக இறைவனிடம் நிறைந்த அன்பு பூண்டவர் வாயில் இருந்து வருவன எல்லாமே மந்திரம்தான்.
வேத வேத்யனாய் வேதமே வடிவானவனாய், வேதாந்தம் அறிந்து இருக்கும் ஞானிகள் தவ பெரியோர் இறைவனது திருவடிகளிலே தவிர வேறு ஒரு பொருளிலேயும் பற்றில்லாமல் இருக்கும் பெரியோர்கள் அவர்களுடைய அனுஷ்டானங்களும் வாய் மொழிகளும் மந்திரங்களை ஒத்தவை

ஆனால் சாஸ்த்திர வழக்கின் படி முக்கியமாக மந்திரம் என்பது வேதம் மட்டுமே.  

Monday, August 28, 2017

வேதம் - 5




எது புலன்களுக்கு புலப்படாதோ நம் செயல்திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதோ அந்த ஒலி திரளுக்கு மந்திரம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். ரசவாதத்திலே பதார்த்தம் என்கிறார்கள். பிரமாணம், நியதி அல்லது கிரமம் என்பர். எந்த எந்த பொருளை சேர்க்கணும்? என்ன அளவு சேர்க்கணும்? எந்த வரிசையில் எந்த சூழ்நிலையில் சேர்க்கணும்? இதுக்கு எல்லாம் ஒரு விதி இருக்கும். அந்த முறையில் சேர்க்கும் போது பல புதிய பொருட்கள் உருவாகும். அது போல சேர்க்க வேண்டிய ஒலிகள் - பதங்கள்; அவற்றை சேர்க்க வேண்டிய முறை அதாவது ஆனுபூதி கிரமம் என்னும் வரிசை; அதை சொல்ல வேண்டிய முறை ஸ்வரம் என்னும் ஒலிக்குறிகள் - இவை மூன்றும் சேர்ந்ததுக்கே மந்திரம் என்று பெயர்

 ஒருவர் எதை வேணுமானாலும் சொல்லலாம். அவருடைய தனிப்பட்ட தன்மையில் பக்தியினாலேயோ அல்லது அதிகாரத்தினாலேயோ தன் கருணை/ அன்பினாலேயோ பலவற்றை சொல்லலாம். ஆனால் என்ன நடக்கும் என்பது அந்த சொல்லுடைய ஆற்றலால இல்லை. சொல்பவருடைய ஆற்றலால நடக்கும். ராஜா சொன்னா நடக்கறதுன்னா அது அதிகாரத்தோட சக்தி. பெரியவங்ககிட்ட இருக்கறது அன்போட, கருணையோட சக்தி. எல்லாருக்கும் தக்கபடி இறங்கி வந்து கனிவோட பேசறது ஞானியோட கருணை என்கிற சக்தி. இப்படி இல்லாம வேதத்துடைய சக்தி வித்தியாசமானது

 ஒலிக்கூட்டத்தில எது முன்னே எது பின்னே வர வேண்டும் என்கிற கிரமப்படி இருக்கிற இந்த வேதம் அழியாது. மற்ற ஒலிகள் அழியலாம். அக்னி வாயு வருணன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கோம். அதெல்லாம் அழிந்தாலும் அழியும்; ஆனால் இஷேத்வா ஊர்ஜேத்வா என்பது வேத தொடரானால் அது எத்தனை காலமானாலும் அப்படியேத்தான் இருக்கும். யுகம் முடிந்து பிரளயம் வந்து திருப்பி வேதம் வெளிப்படும் போதும் அதேதான் வரும். இதை ஆநுபூதி நித்யத்வம் என்கிறார்கள்.

Friday, August 25, 2017

விநாயக சதுர்த்தி -2017




இன்னைக்கு நம்ம ஆளோட பொறந்த நாள்!
எத்தனையோ விதமா தெய்வங்களோட ரிலேட் பண்ணலாம். ஆனா மனசுக்கு ரொம்ப பிடிக்கறது இந்த பிள்ளையார்தான். அதுவும் நண்பர் இன்னைக்கு (சுட்டு) போட்ட பதிவிலேந்து சுட்டு போட்ட இந்த பிள்ளையார் வெகு அழகு!


 பூஜா விதானம் : இங்கே
அதில் இன்றைய பூஜைக்கான சங்கல்பத்தில் மாற்றம்:
ஹேமலம்ப நாம (2017) ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ
மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுப நாம யோக வணிஜா கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுபதிதௌ,

Thursday, August 24, 2017

வேதம் - 4




காற்று தென்னை ஓலைகள் நடுவே புகுந்து புறப்படுகிறது; மூங்கிலின் துளைகளின் வழியே புகுந்து புறப்படுகிறது. அப்போது எழுவதெல்லாம் ஓசை. ஒரு மரக்கிளை முறிந்து விழுகிறது. அப்போது எழுவது ஓசை
 
கோழி கூவுகிறது. நாய் குலைக்கிறது, சிங்கம் கர்ஜிக்கிறது . இது போல உயிரினங்களால் எழுப்பப்படுவது ஒலி. உயிரினங்களில திறம் சேர்ந்தவன் மனிதன். அவன் தன் சூழ்நிலை, தட்ப வெப்பத்துக்கு ஏற்றபடியும் தாளத்தை ஒட்டியும் பேசி வந்தவை மொழிகள். அவற்றில் செம்மையான மொழி உண்டு, நம் மொழி, செம்மொழி என்றெல்லாம் கொண்டாடுவார்கள். ஆனால் வாய்மொழி என்பது ஒரு வகை மொழியே அல்ல. அதை இப்போது இருக்கின்ற இண்டோ ஈரோபியன், இண்டோ இரானியன் என்றெல்லாம் மொழி வல்லுனர்கள் வகைப்படுத்துவது போல வகைப்படுத்த முடியாது., ஏன்னா அது உணர்வியல் வெளிப்பாடு, மற்றதெல்லாம் மொழியியல் வெளிப்பாடு.

அடுத்ததா இந்த ஒலிகளிலே வேதத்தின் தனித்தன்மையை பார்க்கலாம்.
காடுகளில சில ஒலிகளை எழுப்பினா மிருகங்கள் எல்லாம் பயந்து
ஓடுகிறதை பார்க்கிறோம். ஒலிகளால சிலர் ஈர்க்கப்படுவார்கள். ஒலிக்கு உணர்வுகளை தூண்டக்கூடிய வலிமை இருக்கிறது
 
ஒரு அறிஞர் photosynthesis போல phonosynthesis ஒளிச்சேர்க்கை போல ஒலிசேர்க்கை இருக்கிறதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். காட்டிலே நிறைய மரங்கள் இருக்கின்றனவே. அவை சாதாரணமா ஒரு இடத்திலே வளருகிற மரத்தைவிட இன்னும் செழுமையா இருக்க காரணம் அங்க இருக்கிற மண் வளம் தட்ப வெப்பம் மட்டும் இல்லை. அங்கே இருக்கிற பறவைகள் வண்டினங்களின் ஒலிகளை கேட்டு கேட்டே அவை சந்தோஷப்பட்டு வளமையா இருக்காம். இதுக்கு அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைச்சிருக்கு.. இவற்றுக்கே அவ்வளவு வலிமை இருக்கும்ன்னா நான்மறை கேள்விக்கு இன்னும் சிறந்த தன்மை இருக்காதா
 
ஒருத்தர் ஒரு கிணத்துக்குள்ள விழுந்துட்டார். , ஐயோ ன்னு கூவறார். அது கருணையும் சிரத்தையும் இருக்கற உதவக்கூடிய யார் காதிலேயும் விழுந்தா அவங்க ஒடி வந்து உதவுவாங்க. ஒரு கூக்குரலுக்கு ஒருவரை வரச்செய்யும் தன்மை இருக்கு. ஒலியால அச்சம் வருவதும் நமக்குத்தெரியும். அதே போல ஒரு அரசன் கட்டளை போடுகிறான். அதுக்கு கீழ்படுகிறோம். ஒரு கட்டளைக்கு கீழ்படிய காரணம் அன்பா இருக்கலாம்; பயமா இருக்கலாம்; அல்லது கனிவால, இரக்கத்தால இருக்கலாம். இதெல்லாம் லௌகீக சப்தங்கள். அதாவது உலகத்தில் சாதாரணமாக வழங்கி வருகிறவை. நாம் நம் புலன்களாலேயோ அல்லது ஏதோ உபகரணங்கள் உதவியுடனோ செய்யக்கூடியவை லௌகீகம்.

வேதம் அலௌகீகம், அதாவது உலகத்தில காண முடியாதது. நம்மால் இதை செய்ய முடியாது. கூட்டாக சேர்ந்தாலும் முடியாது. எதேனும் கருவியை கொண்டும் செய்ய முடியாது. இனி வர போகிற கருவிகளைக்கொண்டும் செய்ய முடியாது. இந்த ஒலிகளைத்தான் மந்திரம் என்கிறோம்.

Wednesday, August 23, 2017

வேதம் -3





இப்போ வேதத்துடைய மந்த்ரத்வம், ஸ்வரங்களுடைய விசேஷம், அர்த்தத்ததுடைய முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்
 
பஞ்ச தன் மாத்திரைகளில ஒன்று சப்தம். அதாவது ஒலி. அதில் பல வடிவங்கள் உண்டு. ஓசை, ஒலி, மொழி, வாய் மொழி. அசையா பொருட்கள் சம்பந்தப்பட்டது ஓசை . உயிருள்ளவை எழுப்புவது ஒலி. விசேஷமான, வளர்ச்சி அடைந்த உயிர்களால் வர்ணம் முதலானவையாக வகைப்படுத்தப்பட்டவை மொழி. இன்னும் அதிகம் வளர்ச்சி அடைந்த உயிர்களால் சாக்ஷாத்கரிக்கப்பட்டவை வாய் மொழி அல்லது வேதம் என்கிறோம்
 
வாயால்தான் எல்லா மொழிகளுமே பேசப்படும். அது கிரேக்கமோ லத்தீனமோ ஆங்கிலமோ வேறு எந்த மொழியாகட்டும் எல்லாம் வாயால் பேசப்படுபவைதான். இருந்தாலும் தவத்தாலே பிற ஒன்றுக்கும் புலனாகாத ஒரு பொருள் வாய்க்கப்பட்டதால் இதுக்கு வாய்மொழி என்று பெயர். வாய்த்த மொழி அது வாய் மொழி. ஸ்ருதி என்றால் கேள்வி என்றும் ஆம்னா என்றால் வாய்மொழி வேதம் என்றால் புலம். சந்தஸ் என்றால் மறை. இதை எல்லாம் இப்படி தமிழிலே இப்படி சொல்லியிருக்கிறார்கள்

இது நேரடியாக உத்பத்தியை முழுமையாக தருவதான்னு பார்த்தா இல்லை. ஒரு பொருளுடைய ஓரு தன்மையையோ, அதன் புற வடிவையோ, அல்லது அதுக்கு ஒப்புமையோ காட்டக்கூடிய அளவுக்கு இருக்கலாம். ஆனால் அந்த பொருளுடைய அடிப்படை தத்துவத்தை, அந்த பொருள் எங்கேந்து உயிரோடு புறப்பட்டு வந்ததோ அந்த ஒரு உணர்வு காட்டுகிற ஒன்றை வேற ஒண்ணு காட்டவே முடியாது. அது எங்கேயிருந்து உயிர்தெழுந்ததோ அதுக்கு காரணம் என்ன? வேதத்துடைய தனித்தன்மைக்கு காரணம் என்ன? இது தவத்தாலே உயிரோடு உணர்வோடு ஒருவரிடமிருந்து புறப்பட்டு வந்தது., அதோட அடித்தளத்தை ஆழ் நிலையை சாதாரண ஒலிகளோட கூட்டமைப்பு செய்ய முடியாது. தன் தாடைகளாலும் உதடுகளாலும் பற்களாலும் நாபியில் இருந்து எழும் ஒலி கூட்டி பேசும் மொழிகள் இதை காட்டவே முடியாது.

Tuesday, August 22, 2017

வேதம் - 2





வேதம்தான் நமக்கு எளிதா புலப்படாத அறிவுக்கு திறவுகோல். அடிப்படையிலே இந்த ஐம்பெரும் பூதங்களை நாம் கண்கூடா கண்டு கொண்டு இருக்கோம். அறிவியல் விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து பல வியக்கக்கூடிய தகவல்களை உட்பொருளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டு இருக்காங்க . மாக்ஸ் பிளான்க் மிக பெரிய விஞ்ஞானி. அவர் சொன்னார் : இந்த உலகை ஆராய ஆராய இறைவனுடைய எண்ணிப்பார்க்க முடியாத அறிவையும் ஆற்றலையும் இன்னும் நன்றாக அறிந்தேன். ஒவ்வொரு அறிவியல் ஆய்வும் இறைவனுடைய இந்த ஆச்சரியப்படக்கூடிய ஆற்றலை இன்னும் விளக்குவதாகத்தான், அதுக்கான சான்றாத்தான் இருக்கணும்.

மாறா அவனிடமிருந்து எது தனியாக விலகி போறதோ. விலக்கிக்கொண்டு போகிறதோ, அவனை தொலைவாக்கறதோ அல்லது தன்னிச்சையா செயல்பட தூண்டறதோ, எல்லாம் தானாக வந்ததுன்னு சொல்கிறதோ அதுக்கு அஞ்ஞானம்ன்னு பேர். அது விஞ்ஞானம் இல்லை
 
இறைவனுடைய பெருமைகளை இன்னும் விளக்கறதே விஞ்ஞானம்.. பிரபஞ்சத்தை பார்க்கிறோம். அதுல இன்னும் ஆயிரமாயிரம் அண்டங்கள் இருக்குன்னு விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு நமக்கு சொல்றாங்க. அப்ப நமக்கு இறையின் சக்தி, படைப்புத்தன்மை இன்னும் கொஞ்சம் விளங்கறது

விஞ்ஞானமும் நல்ல நெறி சார்ந்தவர்களால உணரப்பட்டு இருந்தால் இப்படி நெறி சார்ந்த விஞ்ஞானிகளால விளக்கப்பட்டாலும் விஞ்ஞானம் இறைவனின் பெருமைகளை இன்னும் விளக்குமே ஒழிய அவனை அறிய வைக்க முடியாது. அது அதுக்கு ஒரு உபாயமா ஆக முடியாது
 
அது இறைவனுடைய படைப்புகளையும் இந்த உலகையும் இவற்றோட இயல்பையும் நோக்கங்களையும் இன்னும் விரிவா ஆழமா எடுத்துக்காட்டும. அதனால அவன்மேல வைத்திருக்கிற மதிப்பையும் அன்பையும் அறிஞ்சுக்க இருக்கிற ஈடுபாட்டையும் ஆழப்படுத்தி அதிகமாக்குமே ஒழிய அவனை காட்டித்தராது. அவன் இருக்கான்னு சொல்ல இந்த உலகத்தோட இருப்பே போதும். ஆனா அவனை இன்னார்ன்னு அறிய உணர அவனோட இயைந்து போக தேவையான மார்க்கங்கள் வேதத்தில் மட்டுமே இருக்கு.. வேதங்களோட முக்கிய நோக்கமே அதுதான். அதுக்கு இன்னும் பல நோக்கங்கள் இருந்தாலும் அதோட பிரதான நோக்கம் வேற. எல்லாருக்கும் தாயா தந்தையா வழிகாட்டியாவும் எல்லாமாயும் இருக்கற, எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் செய்கிற இறைவனை காட்டிக் கொடுத்து அவனை அடையச்செய்கிறதே அதோட பிரதான நோக்கம் .

Monday, August 21, 2017

வேதம் -1





எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி
இப்படி ஒத்தரோட பேருரை கண்ணுல பட்டுது. மடை திறந்த வெள்ளம்ன்னா அது ஒரு உதாரணம். என்ன ஒரு எனர்ஜி! அவர் பேசின விஷயமும் ரொம்ப நாளா எழுத நினைச்ச விஷயமே. ரைட். இனி எழுதறது அவரோட உரை எளிமைப்படுத்தி என் போக்கிலே.. (கருத்து அவரோடது.) ஏன்னா பிரமிப்புல நாம பாட்டுக்கு வாய பொளந்துண்டு உக்காந்துண்டு இருப்போம். ஒவ்வொரு வாக்கியத்திலேயும் இருக்கிற நுணுக்கங்கள் பிடி படாம போயிடும்!
இவருடைய பயோடேட்டாவை இங்கே பார்க்கலாம்: http://sarpvchaturvedibiodata.blogspot.in/
இது உடான்ஸ்ன்னு தோணும் அளவுக்கு இருக்கு!
உரை தலைப்பு: வேதம், ஸ்வரம், அர்த்தம், மந்திரம்.
--
உலகங்கள் எல்லாம் பிரளயத்தில் மீண்டும் ஒன்றாகி ஒரே வஸ்துவாக ஒடுங்கிப்போறது, (பிர +லயம் ) பல ஆயிரம் லட்சம் வருடங்கள் சென்ற பிறகு பிரளயத்தில இருந்து உலகம் திருப்பியும் தோன்றுகிறது. ஒன்றாக இருந்த அந்த வஸ்துவில இருந்து பஞ்ச பூதங்கள் என்கிற ஐந்து பெரும் பருப்பொருட்கள் தோன்றும், இவை அனைத்தும் அவற்றுடைய பண்புகளாக இருக்கின்ற தன் மாத்திரை என்று சாஸ்திரங்களில சொல்லுகிற உணர்வுகளும் எப்படி உண்டாச்சு? இவை பரந்து விரிந்து பல வேறு உலகங்களாக ஆகி இருக்கின்றன இல்லையா? இதிலதான் நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். ஆனால் இவற்றின் தோற்றுவாய் என்ன? இவை வளர்ந்த விதம் என்ன? இவற்றின் இயக்கம் எப்படி நடக்கிறது? நுணுக்கங்கள் என்ன? ஊழிக்காலத்தில் எப்படி ஒடுங்குகின்றன? எப்படி மீண்டும் தோன்றுகின்றன
 
இவை எல்லாம் விடை காணாத கேள்விகள்
 
இது போன்ற மனிதனும் அவன் சார்ந்து இருக்கின்ற எல்லா பொருட்களும் எங்கிருந்து தோன்றினவோ அந்த மூல அறிவை, மனிதன் தன் இயல்பான அறிவால தெரிந்துகொள்ள முடியாது. புலன்களாலே ஏற்படும் உணர்வினாலேயும் தெரிந்து கொள்ள முடியாது. நேரிடையா தெரிகிற சான்றுகளுக்கு அப்பாற்பட்டது. இப்படி மனித அறிவு, உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கும் அதை தெரிஞ்சுக்க ஒரே வழி மறை என்கிற வேதம்தான். இதுதான் ஒரு டெலஸ்கோப் மாதிரியும் அதே சமயம் ஒரு மைக்ராஸ்கோப் மாதிரியும் எட்டாத ஒன்றை அணுகிப்பார்க்க வழி செய்யறது.

Friday, August 18, 2017

மனீஷா பஞ்சகம் -10





ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அதை மற்றவர் மனது புண்படாமல் வெளிப்படுத்துவது அவரவர் சுதந்திரம்.
ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சில பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அனேகமாக எதிர்ப்பது ஜாதியை இல்லை. அதன் பெயரால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத்தான்; ஒருவர் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை பற்றி இப்படி இப்படி என்று முடிவு கட்டுவதையே எதிர்க்கிறார்கள்; அதன் பெயரால் ஒருவரை ஒடுக்குவதையே எதிர்கிறார்கள்.
இப்படி இல்லாமல் எல்லாம் ஒண்ணுன்னு பாட்டு பாடறது எப்படி சரியா இருக்கும்? இயற்கையில் யாருமே இன்னொருவர் போல இல்லை. ஒருவர் உடல் வலிமை மிக்கவரா இருக்கார். பலர் அப்படி இல்லை. சிலர் புத்திசாலியா இருக்கார். பலர் அப்படி இல்லை. இந்த புத்திசாலித்தனத்துலேயே பல வெரைடியும் இருக்கும்.
ஆயிரத்தெட்டு காரணிகளை பார்த்தா ஒருவர் கூட இன்னொருவர் மாதிரி இல்லைன்னு புரியும்.
சமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும். எல்லாரும் வக்கீலாக வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் ஐடி எஞ்சினீர் ஆக தேவை இல்லை. எல்லாரும் டாக்டர் ஆக வேண்டிய தேவை இல்லை.
சமூக முன்னேற்றம் சரியான வழியில நடக்கலை. செருப்பு தைக்கறவர் இப்ப மேம்பட்ட டெக்னாலஜில பெரிய செருப்பு கடை வெச்சு இருக்கணும். ஏன் பேட்டா ன்னு ஒரு நிறுவனம் வந்து பலருக்கு வேலை இல்லாம ஆக்கணும்? இதே போலத்தான் பல துறைகளும். ப்ரொடக்‌ஷன் பை மாஸ் இல்லாம மாஸ் ப்ரொடக்‌ஷன் வந்துடுத்து.
சமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும்ன்னு சொன்ன மாதிரியே அரசுகள் யார் யாருக்கு என்ன தேவையோ அதை அடிப்படை லெவல்ல அளிக்கணும். ஒரு வேளையாவது வயிறு நிறைய உணவு, கிழியாத சேலை வேட்டி, நனையாத படிக்கு மேலே ஒரு கூரை தவிர யாரும் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அதுக்கு மேல அவரவர் சாமர்த்தியத்துல சம்பாதிச்சுக்கட்டும்.
ஜாதி என்கிறது போகவே போகாது. இப்போ இருக்கற வடிவத்தில இல்லாட்டாலும் வேறு ஏதேனும் ஒரு வடிவில இருந்து கொண்டுதான் இருக்கும்.
நிதர்சனத்தை ஒத்துக்கொண்டு இந்த சாதிகள் மோதிக்காம இருக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சா மட்டும் போதும். ஆனா இது பலரோட பிசினஸ்ஸா இருக்கிறதால அது இப்போதைக்கு நடக்கும்ன்னு தோணலை. சாதி இல்லைன்னு முழங்குகிற அரசியல்வாதிகளேதான் சண்டை சச்சரவை தூண்டுறவங்களாகவும் இருக்காங்க. அவங்களேதான் ஒரு பக்கம் சாதி இல்லைன்னு சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் இன்னின்ன சாதிக்கு ஒதுக்கீடுன்னு கூவிகிட்டே இருக்காங்க.
இதையே பிடிச்சுண்டு பொலம்ப நான் தயாரா இல்லை.
ஜாதி இல்லைன்னு சொல்லறது அவரவர் விருப்பம்; கருத்து சுதந்திரம்.
சங்கரர் அப்படி சொல்லலை.
அப்படி சொன்னதா பெரிய பெரிய மனிதர்கள் பிரசாரம் பண்ணி கேட்டு இருக்கேன். அவங்களுக்கு தெரியலைன்னு சொல்ல முடியாது. அப்போதைக்கு அது அவங்களுக்கு சௌகரியமா இருந்திருக்கலாம்.
அப்படி சொல்லறவங்க எல்லாரும் கோட் பண்ணது இந்த மனீஷா பஞ்சகத்தைத்தான். அதைப்பத்தி நாம வலையில தேடினாலும் அதிகம் கிடைக்காது. "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே" ன்னு பகவத் கீதையில பகவான் க்ருஷ்ணர் சொன்னதா மிஸ் கோட் உலவறா மாதிரிதான் இதுவும்.
தொடரை படிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
ஜாதி இல்லைன்னு சொல்லிக்கறது உங்க சுதந்திரம்; ஆனா அதுக்கு சங்கரரை ஆதாரமா இழுக்காதீங்க. அவ்ளோதான் என் வேண்டுகோள்.