Pages

Wednesday, February 13, 2019

பறவையின் கீதம் - 112





ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார்?
சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். நீ இதை எந்த மனிதனிடமும் கேட்கவில்லை. என் தந்தையே இதை உனக்குச்சொன்னார்!”
வாழ்க்கையிலிருந்து ஒரு உரையாடல்:
ஜீசஸ்: நீ சொல். நான் யார்?
கிறிஸ்துவன்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ்: "சரிதான். ஆனால் நீ இதை ஒரு மனிதன் வாயிலாக கேட்டது துரதிருஷ்டம். என் தந்தை இதை உனக்குச்சொல்லவில்லை!”
கிறிஸ்துவன்: "உண்மைதான். நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். உங்கள் தந்தை இதை என்னிடம் சொல்லுவதற்கு முன் யாரோ இந்த விடைகளை எல்லாம் எனக்கு சொல்லிவிட்டார்கள். சைமனிடம் உங்கள் தந்தை இதை சொல்லும் வரை நீங்கள் சைமனிடம் இந்த கேள்வியை கேட்கவில்லை. உங்கள் சாமர்த்தியத்தை கண்டு வியக்கிறேன்!”

Tuesday, February 12, 2019

பறவையின் கீதம் - 111





ஒரு கச்சேரியில் கேட்டது:
ஆஹா! என்ன ஒரு பாடகர். அவரோட பாட்டு அரங்கத்தை நிரப்பிவிட்டது.”
ஆமாம். அது நிரப்பினதால நிறைய பேர் வெளியே போய் அதுக்கு இடம் கொடுக்க வேண்டி இருந்தது"
ஆன்மீக கலந்துரையாடலில் கேட்டது:
சாத்திரங்கள் சொல்கிறபடி நான் எப்படி கடவுளை நேசிப்பது? என் முழு இதயத்தையும் அவருக்கு கொடுப்பது?”
அதற்கு முதலில் நீ படைக்கப்பட்ட விஷயங்களை உன் இதயத்தில் இருந்து நீக்க வேண்டும்.”
தவறான வழி காட்டுதல்! நீ நேசிக்கும் படைக்கப்பட்டவற்றை நீக்க வேண்டிய அவசியமில்லை. பாடல் அரங்கத்தை நிறைத்ததைவிட கடவுளிடமான அன்பு அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
அன்பு ரொட்டித்துண்டு மாதிரி இல்லை. உனக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டதால் மற்றவர்களுக்கு கொடுக்க அது ஒன்றும் குறைந்து போகாது. நான் முழுவதுமாக கடவுளை பெற்றுக்கொள்கிறேன். அடுத்தவரும் முழுமையாக. அடுத்தவரும்.
நீ உன் அன்னையை வெகுவாக நேசிக்கலாம். அதே சமயம் உன் மனைவியை; உன் குழந்தைகளை. ஒவ்வொருவருமே அதனால் பயன்பெறுகிறார்கள். அடுத்து அடுத்து கொடுக்கப்படும்போது அன்பின் தன்மை இன்னும் அதிகமாகிறது.
உன் நண்பன் உனக்கு மட்டும் தன் இதயத்தை தருவானாகில் அவனுக்கு புத்திமதி சொல்;மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல். இல்லையானால் அது மிகவும் பலகீனமான இதயமாக இருக்கும்!

Monday, February 11, 2019

பறவையின் கீதம் - 110





மரத்தின் மேலிருந்த குரங்கு அந்த ஸுஃபியின் தலையை குறி வைத்து தேங்காயை எறிந்தது.

அவர் அதை எடுத்தார். அதில் ஓட்டை போட்டு இளநீரை குடித்தார். பிறகு அதை உடைத்தார். உள்ளே இருந்த தேங்காய் வழுக்கையை தின்றார். நாரை கயிறாக திரித்துக்கொண்டார். ஓட்டை கல்லில் தேய்த்து கிண்ணங்கள் ஆக்கிக்கொண்டார். கிளம்பி போய்விட்டார்.

என்னை விமரிசனம் செய்ததற்கு நன்றி.

Thursday, February 7, 2019

பறவையின் கீதம் - 109





யூத மிஸ்டிக் பால் ஷெம் இன் பிரார்த்தனை வினோதமானது.  

அவர் சொல்லுவார் "நினைவு வைத்துக்கொள் இறைவா, நீ எனாக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நானும் உனக்குத்தேவை. நீ இல்லாவிட்டால் நான் யாரை பிரார்த்திப்பேன்? நான் இல்லாவிட்டால் யார் உன்னை பிரார்த்திப்பார்?”

இப்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் பாவம் செய்யவில்லையானால் கடவுள் பாவ மன்னிப்பு கொடுக்க வாய்ப்பிருக்காதே?

Wednesday, February 6, 2019

பறவையின் கீதம் - 108





ஒரு முஸ்லிம் ராஜா ஒரு அடிமைப்பெண்ணிடம் மனதை முழுதுமாக பறி கொடுத்துவிட்டான். அவளை அடிமைகளின் கொட்டிலில் இருந்து தன் அரண்மனைக்கு இடம் மாற்றிவிட்டான். அவலை திருமணம் செய்து கொண்டு தன் முக்கிய ராணியாக்கிக்கொள்ள திட்டமிட்டு இருந்தான்.

அரண்மனைக்கு வந்து சேர்ந்த அன்றே அவள் நோய்வாய்ப்பட்டாள். நாளாக ஆக நிலமை மோசமானது. அரண்மனை வைத்தியர்கள் எந்த மருந்து கொடுத்தும் நிலை சீரடையவில்லை. ஏறத்தாழ மரணப்படுக்கைக்கே போய்விட்டாள்.

செய்வதறியாத ராஜா அவளை குணப்படுத்துவோருக்கு பாதி ராஜ்யத்தை கொடுப்பதாக அறிவித்தான். ராஜ வைத்தியர்களே கைவிட்ட நபரை குணப்படுத்த யார் முன் வருவர்?
கடைசியாக ஒரு ஹக்கிம் வந்தார். அந்த பெண்ணை தனியாக பார்த்து பேச வேண்டுமென்றார். அனுமதித்தார்கள். என்ன சொல்லுவாரோ என்று ராஜா பதைபதைப்புடன் காத்திருந்தான். ஒரு மணி கழித்து ஹக்கிம் ராஜாவின் முன் வந்தார்.

ராஜா. இவளை குணப்படுத்த நிச்சயமான வழியை எனக்குத்தெரியும். அது வேலை செய்யவில்லை என்றால் என் தலையை தாராளமாக வெட்டிவிடுங்கள். ஆனால் அந்த தீர்வு பெரும் துன்பத்தை தரும். துன்பம் அவளுக்கல்ல. உங்களுக்கு!”

"பரவாயில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேற்றப்படும்.”
வார்த்தை மாற மாட்டீர்களே?'
மாட்டேன்!”

நல்லது ராஜா. அவள் உங்களுடைய அடிமை ஒருவனை காதலிக்கிறாள். அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் அவள் குணமாகிவிடுவாள்.”

பாவம் ராஜா! அவளை மிகவும் காதலித்தான். அவளை விட்டுவிலகவும் மனதில்லை. அவளை சாகவிடவும் விருப்பமில்லை!

Tuesday, February 5, 2019

பறவையின் கீதம் - 107





நசருதீன் அப்போதுதான் தன் சொற்பொழிவை முடித்திருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து "ஐயா, நிறைய தத்துவம் பேசறீங்க! எங்களுக்கு ஏன் ப்ராக்டிகலா ஏதாவது காட்டக்கூடாது?” என்று கேட்டான்.

நசருதீன் திகைத்துப்போனார். “ப்ராக்டிகலான்னா என்ன மாதிரி காட்டச்சொல்லறிங்க?”

ஆஹா! இவரை மாட்டிவிட்டுட்டோம், மக்கள் நம்மையே பாக்கறாங்க பாரு என்ற பெருமிதத்தில் அவன் சொன்னான்: "உதாரணமா சொர்கத்து தோட்டத்திலேந்து ஒரு ஆப்பிளை காட்டுங்களேன்!”

நசருதீன் உடனே பக்கத்தில் இருந்த ஒரு கூடையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

ஆனா இந்த ஆப்பிள் ஒரு பக்கம் அழுகி போயிருக்கே? நிச்சயமா சொர்க லோகத்து ஆப்பிள்ன்னா அப்பழுக்கு இல்லம தானே இருக்கும்?”

ஆமா. சொர்கத்து ஆப்பிள் அப்படித்தான் அப்பழுக்கு இல்லாம இருக்கும். ஆனா உன் லெவலுக்கு இதுவே அதிகம்!”

ஊனக்கண்ணால் அப்பழுக்கு இல்லாத ஆப்பிளை பார்க்க முடியுமா?
அல்லது தன்னலம் மிக்க மனதிருக்கும்போது மற்றவரிடம் நல்லதை பார்க்க முடியுமா?

Monday, February 4, 2019

பறவையின் கீதம் - 106





மத போதனை செய்வோருக்கு ஒரு கதை.

வேலியில் ஒரு ஓட்டையை கண்டுபிடித்த ஆடு அதன் வழியாக வெளியே போய் விட்டது. மேய்ந்துக்கொண்டே வெகு தூரம் போய்விட்டது. திரும்பி வர வழியை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னே ஒரு ஓநாய் தொடருவதை ஆடு உணர்ந்தது. ஓடு ஓடென்று ஓடியது. ஓநாய் விடாமல் துரத்தியது. ஒரு வழியாக ஆட்டிடையன் ஆட்டை கண்டு பிடித்து அரவணைத்துக்கொண்டான்.

யார் சொல்லியும் கேட்கவில்லை; ஆட்டிடையன் வேலியின் ஓட்டையை அடைக்க மறுத்துவிட்டான்.

Friday, February 1, 2019

பறவையின் கீதம் - 105






அவன் எல்லாரையும்விட வித்தியாசமானவனாக இருந்தான். அவனுடன் பழகுவதே மிகக்கடினம். எல்லாவற்றையும் கேள்வி கேட்பான். இவன் புரட்சியாளனா இறைதுதனா, பைத்தியமா ஹீரோவா? “யார் சொல்ல முடியும்?” என்றோம்.”அத்துடன் யாருக்கு அதைப்பற்றி கவலை?”
ஆகவே நாங்கள் அவனுடன் பழகினோம். எப்படி பொதுமக்களின் மற்றவர்களின் கருத்துக்கு உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். அவனை அதன்படி நடந்து கொள்ல வைத்தோம். இப்போது அவன் கூட வாழ்வதற்கு ஏற்றவனாகிவிட்டான். நன்றாக ஒத்திசைந்து கொண்டு. கட்டுப்படுத்த முடிபவனாகவும் அமைஹியாகவும் ஆக்கிவிடோம்.
தன்னைத்தானே வென்றதற்கு நாங்கள் அவனுக்கு வாழ்த்து சொன்னோம். அவனும் தன்னைத்தானே வாழ்த்திக்கொண்டான். அவனுக்கு புரியவில்லை நாங்கள்தான் அவனை ஜெயித்தோம் என்று.
---
ஒரு ராட்சச மனிதன் மதுவகத்தில் நுழைந்தான். “யாரடா இங்கே மர்ஃபி?”
ஒரு சின்ன மனிதன் எழுந்தான். “நான்தான்". வந்தவன் இவனை அடித்து துவைத்துப்போட்டுவிட்டு கோபத்துடன் போய்விட்டான். சில எலும்புகள் உடைந்தன. கண்கள் கருரத்தம் தோய்ந்து வீங்கிவிட்டன. மூக்கு உடைபட்டது.
வந்தவன் போன பிற்கு இவனோ சிரித்துக்கொண்டு இருந்தான். எங்களூக்கு புரியவே இல்லை. வலியுடன் சிரித்துக்கொண்டே சொன்னான்.” நான் அவனை ஏமாற்றி விட்டேன் நான் மர்பி இல்லை. ஹாஹாஹ்ஹா!”