Pages

Showing posts with label விசார சங்க்ரஹம். Show all posts
Showing posts with label விசார சங்க்ரஹம். Show all posts

Tuesday, July 6, 2010

70. ஸேது தர்சனத்தில்:



70. ஸேது தர்சனத்தில்:

ரகு வீர பத3ந்யாஸ பவித்ரீ க்ருத பாம்2ஸவே |

த3ச கண்ட2 ஶிரஶ்சே2த3 ஹேதவே ஸேதவே நம: ||

ஸ்ரீ ராமர் அடி வைத்ததால் பவித்ரமான தூளிகள் உள்ளதும், ராவணன் தலையை அறுக்க காரணமாயிருந்ததுமான ஸேதுவிற்கு நமஸ்காரம்.


Thursday, April 22, 2010

விசார சங்கிரகம் -27




38.ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே யிருந்தும் அங்ஙனமாய தனது சுபாவ நிலையினை அறிய வொட்டாமல் மறைப்ப தெது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறந்த மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.
ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே இருந்தும் அப்படிப்பட்ட தனது சுபாவ நிலையினை அறிய விடாமல் மறைப்பது எது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறைத்தது எதுவென்றால் மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.

39.ஜீவன் தன்னை மறந்ததுண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கேது வென்னை?
[ஜீவன் தன்னை மறந்தது உண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கு ஹேது என்ன?]
ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மாவென்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே யன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.

ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மா என்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே அன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.


Monday, April 12, 2010

விசார சங்கிரகம் -26




37.மேற்கூறிய அனுஷ்டாங்களால் ஒருவாறு மனத்திலுள்ள அஞ்ஞான, சந்தேக, விபரீதமாகிய சர்வ பிரதிபந்தங்களும் நசிக்கப்பெற்று சித்தோப சாந்தம் வாய்க்கப்பெற்றாலும் ஓர் சந்தேக மாத்திரமுளது. அதாவது மனதை ஹ்ருதயத்தில் இருத்திவிட்ட பிற்கு அறிவொன்றுதான் பூரணமாக பிரகாசிக்கிறது. இங்ஙனம் மனமானது ஆன்மாகாரமடைந்து விட்ட பிறகு விசாரிக்கிறவன் யார்? தன்னைத்தானே பூஜிப்பதாக முடிவதால் இது ஆட்டைத்தோளில் போட்டுக்கொண்டு "ஆடெங்கே ஆடெங்கே" என்று தேடிய இடையன் கதையாகவன்றோ முடிகிறது?

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்ற சுருதியின்படி மனோரூப ஜீவன், தான் கேவலம் ஆத்ம சொரூபமாகவே யிருப்பதை மறந்த மறப்பினாலேயே ஜீவனென்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டிருத்தலால், எப்போதும் தானாகவே யிருக்கும் ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவே யிருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென் றோர்காலறிந்து கொண்டே ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? பூர்வ ஜன்மாந்தர வாசனா ப்ரதிபந்தத்தால் அடிக்கடி தன் ஆத்மாவாக யிருப்பதை மறந்து தேகாதிகள் நானென்று பிரமிப்பனன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அவ் வுத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அவ் வுத்தியோகஸ்தனாதல் கூடும்? அங்ஙனமே தேகாதிகளை நானென்னும் மனோ ரூபமாகப் பந்தப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்மானுசந்தான மென்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றாலன்றோ ஆன்மாவாதல் கூடும்?
தேகாதிகள் நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடுமாகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன் சர்வ தேவாத்மகமாய் தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்பது சுருதி. அதன்படி மனோரூப ஜீவன், தான் ஆத்ம சொரூபமாகவே மட்டுமே இருப்பதை மறந்த மறப்பினாலேயேதான் ஜீவன் என்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டு இருக்கிறது. எப்போதும் தானாகவே இருக்கிற ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவேதான் இருக்கு. அப்படி இருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென்று ஒரு கால் தியரியா அறிந்து கொண்டால் ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? அப்படி ஆகாது.
பூர்வ ஜன்மாந்தர வாசனைகள் என்கிற தடைகளால அடிக்கடி தன் ஆத்மாவாக இருப்பதை மறந்து தேகம் முதலானவை நான் என்று பிரமிப்பன் அன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அந்த உத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அந்த உத்தியோகஸ்தன் ஆகலாம்? அதே போல "தேகம் முதலானவைகளே நான்" என்னும் மன வடிவிலே கட்டுப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்ம அனுசந்தானம் என்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றால்தான் ஆன்மாவாதல் கூடும்.
தேகம் முதலானவை நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடும். ஆகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன், சர்வ தேவ ஆத்மகமாக தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜிக்க வேண்டும். அப்படி பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

Wednesday, April 7, 2010

விசார சங்கிரகம் -25



28.ப்ரத்யாகாரத்தில் ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?

ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் தாற்பரிய மிதுவாம். ப்ரணவமென்பது அகார உகார மகார அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூல தேகங்களென்றும் உகாரமென்பது ஸ்வப்ன தைஜஸஜீவ சூக்ஷ்ம தேகங்க ளென்றும் மகார மென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரண தேகங்களென்றும் அர்த்த மாத்திரை யென்பது துரியம் அல்லது அஹம் சொரூப மென்றும் இதற் கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆநந்த மாத்திர சொரூப மென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகார மகாரங்களென்னும் மூன்று மாத்திரைக ளடங்கியுள்ள அமாத்திரை சொரூப மென்றும் மௌனாக்ஷர மென்றும் அஜபை யென்றும் ஜபியாமல் ஜபித்தலென்றும் பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வெதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம்.இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயாநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

28.நாம ரூபங்களிலே மனசை போக விடாம ஒரு முகப்படுத்த சொன்னதிலே (ப்ரத்யாகாரத்தில) ப்ரணவத்தை மனோ மயமா ஏன் தியானிக்கச் சொன்னாங்க?
ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் காரணம் இதான்: ப்ரணவமென்கிறது என்ன? அ உ ம ன்னு 3 எழுத்துக்கள். அப்புறம் எழுத்தில்லாம பாதி மாத்திரை. இதெல்லாம் சேர்ந்தது ஓங்கார சப்தம்.
இவற்றில:
அகாரம் என்பது ஜாக்ர, விச்வ, ஜீவ ஸ்தூல தேகங்கள்
உகாரம் ஸ்வப்ன, தைஜஸ, ஜீவ சூக்ஷ்ம தேகங்கள்
மகாரம் சுழுப்தி, பிராஜ்ஞ, ஜீவ காரண தேகங்கள்
அர்த்த மாத்திரை என்பது துரியம் அல்லது அஹம் சொரூபம். (இதெல்லாம் ஞான வழி முதல் பாகத்திலே இருக்கு. மறந்து போயிருந்தா தேடிப்பாருங்க!)
இதற்கு அப்பாற்பட்ட நிலை துரிய அதீதம் (துரியத்தை தாண்டியது) ஆகிய ஆநந்த மாத்திர சொரூபம் என்றும் சொல்லப்படும்.
முன் தியானத்திலே சொன்ன இந்த நான்காவதான அஹம் சொரூபம் என்னன்னா,
மத்த அகார உகார மகாரங்கள் என்னும் மூன்று மாத்திரைகள் அடங்கியுள்ள அமாத்திரை (கால அளவுக்குள்ளே வராத) சொரூபம். [அர்த்த மாத்திரைன்னு சொல்வது கொஞ்சம் குழப்பறதுதான். அது ஏதோ கால அளவை குறிக்கிறதா தோணும். அப்படி இல்லை. அமாத்திரை என்கிறதே சரியான அர்த்தத்தை கொடுக்கிறது.] மௌனாக்ஷரம் என்றும்; அஜபை என்றும்; ஜபியாமல் ஜபித்தலென்றும்; பஞ்சாக்ஷரம் முதலான மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திரம் என்றும் கூறப்படும். இந்த எதார்த்த அர்த்தம் சித்திக்கனும்னே ப்ரணவத் தியானம் செய்யப்படுகிறதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.
{ஓங்காரத்தின் முடிவில என்ன இருக்கும்? மௌனமே! நிர்குண பிரமத்தை சப்தத்தால உணர்த்த முடியாது. மௌனமே சுட்டிக்காட்டும்.}
இந்த யதார்த்த அர்த்தம் சித்தித்தல் பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி ஒன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

Saturday, March 27, 2010

விசார சங்கிரகம் -25




34.ஞானாஷ்டாங்கங்க ளெவை?
இயம் நியமமாதிகளாகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1.இயமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள தோஷங்களை தெரிந்து இந்திரிய சமூகங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் திரஸ்காரமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறா துண்டாகும் அன்பு.
3.ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாகவுண்டாகுமோ அஃதாசனம்.
4,ப்ராணாயாமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களின் நாமரூப மென்ற அசத்தான இரண்டம்சங் களையும் நீக்குதல் இரீசகமும் அவைகளில் அனுசூதமா யிருக்கும் ஸத் சித், ஆனந்தமென்ற சத்தான மூன்றம்சங்களையும் கிரகித்தல் பூரகமும், அங்ஙனம் கிரகித்த அம்சங்களை உள்ளிருத்தல் கும்பகமுமாம்.
5.பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதிற்கலவாது காத்தல்.
6.தாரணை: அஸ்தி, பாதி, ப்ரியரூபமே தானாகிய ஆத்மசொரூபமென்று மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7.தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்சகோசாத்மகமான சரீரத்தை நானல்ல வென்று அப்படியே யிருத்தி நானாரென்று விசாரிக்க, அங்கு தான்றானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாதிருத்தல்.
8.சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.

இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவிற் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவதின்று. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே சர்வ அனர்த்தங்களுக்கும் மூலமென்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன் றடங்கினால் எல்லாங் கைவந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

ஞான அஷ்ட அங்கங்கள் எவை?
இயம் நியமம் ஆதிகள் ஆகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1. இயமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள குற்றங்களை தெரிந்து இந்திரிய கூட்டங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் நிராகரிப்புமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறாது உண்டாகும் அன்பு.
3. ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாக அமருமோ அதுவே ஆசனம்.
4. ப்ராணாயாமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களின் நாமம், ரூபம் என்ற அசத்தான இரண்டு அம்சங்களையும் நீக்குதல் இரேசகம்; அவைகளில் உள் இருக்கும் மாறாத ஸத், சித், ஆனந்தம் என்ற சத்தான மூன்று அம்சங்களையும் கிரகித்தல் பூரகம், அப்படி கிரகித்த அம்சங்களை உள் இருத்தல் கும்பகமாம்.
5. பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதில் கலவாது காத்தல்.
6. தாரணை: அஸ்தி (இருக்கிறது), பாதி (ப்ரகாசிக்கிறது), ப்ரிய ரூபமே தானாகிய ஆத்ம சொரூபம் என்று கருதி, மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7. தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்ச கோச ஆத்மகமான சரீரத்தை நானல்ல என்று அப்படியே இருத்தி நான் யாரென்று விசாரிக்க, அங்கு தான் தானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாது இருத்தல்.
8. சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.
இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவில் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவது இல்லை. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே எல்லா அனர்த்தங்களுக்கும் மூலம் என்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன்று அடங்கினால் எல்லாம் கை வந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

Wednesday, March 24, 2010

விசார சங்கிரகம் -24.




33. ஆந்தர பூஜை அல்லது நிர்குண பூஜை யென்பதென்ன?
நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் சர்வ யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் அஹம் ப்ரஹ்மம் என்னும் தியானமே யாகலான் சர்வ பிரகாரத்தாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டு மென்பதே நிர்குண பூஜையின் தாற்பரியம்.

நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் எல்லா யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் " அஹம் ப்ரஹ்மம்" என்னும் தியானமே ஆதலால், எல்லா வழியாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டும் என்பதே நிர்குண பூஜையின் தாத்பரியம்.


Monday, March 22, 2010

விசார சங்கிரகம் -23




32.ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் போதமாகுமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?

சுழுத்தி மூர்ச்சையாகிய காலங்களில் எவ்வித ஞானமும் அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ அற்பமுமின்றென்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றுந் தெளிந்தேன்" என்ற அனுபவம் முற்கூறிய நிர்விசேஷ நிலையின்றுதித்ததோர் விசேஷ ஞானத்தின் தோற்றமன்றோ? இவ்விசேஷ ஞானமே விஞ்ஞானமெனப்படுகிறது. இவ்விஞ்ஞானமானது ஆன்மாவையேனும் அனான்மாவையேனும் ஆஸ்ரயித்தே விளங்குமல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை ஆஸ்ரயிக்கும்போது மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானமென்றும் அனான்மாவை ஆஸ்ரயிக்கும்போது அஞ்ஞானமென்றும் சொல்லப்படுகிறது. இவ்விஞ்ஞானம் ஆன்மாவை ஆஸ்ரயித்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச்சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை அபரோக்ஷப் படுத்தற்கான தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை ஆஸ்ரயித்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை

நிகழ்சுயஞ் சோதியாகி நிகில சாட்சியுமா மான்மா
புகலும்விஞ் ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்விலா விவ்வான் மாவை யிலக்கிய மாகப்பற்றி
அகமென வனுபவிப்பா யகண்டமாம் விருத்தி யாலே 
-(விவேக சூடாமணி)

என்னும் சுருதியின் தாத்பரியத்தானுந்தெளிக.

ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் விளங்குமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?

சுழுத்தி, மூர்ச்சை ஆகிய காலங்களில் எவ்வித ஞானமும் - அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ - அற்பமும் இல்லை என்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றும் தெளிந்தேன்" என்ற அனுபவம் முன்னே சொன்ன நிர்விசேஷ நிலையிலிருந்து உதித்த ஓர் விசேஷ ஞானத்தின் தோற்றம் அன்றோ? இந்த விசேஷ ஞானமே விஞ்ஞானம் எனப்படுகிறது. இந்த விஞ்ஞானமானது ஆன்மாவையாவது அனான்மாவையாவது சார்ந்தே விளங்கும். அப்படி அல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை சார்ந்திருக்கும் போது "மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானம்" என்றும் அனான்மாவை சார்ந்திருக்கும் போது அஞ்ஞானம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஞ்ஞானம் ஆன்மாவை சார்ந்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை மறைவிலிருந்து நீக்க தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை சார்ந்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை

நிகழ் சுயம் சோதி ஆகி நிகில சாட்சியும் ஆன்மா
புகலும் விஞ்ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்வு இலா இவ் ஆன்மாவை இலக்கியமாகப் பற்றி
அகம் என அனுபவிப்பாய் அகண்டமாம் விருத்தியாலே
(- விவேக சூடாமணி)
என்னும் வேதத்தின் தாத்பரியத்தாலும் தெளிக.

Wednesday, March 17, 2010

விசார சங்கிரகம் -22



31.ஆன்மாவை பாவிப்ப தெப்படி?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் மல்லாத சுயஞ்ஜோதியாய் தன்மயமாய்த் தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்துவாகலான் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே பந்தமாக முடியும். மனதை ஆன்மாகார மாக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயமென்னும் குகையின் மத்தியில் கேவல ப்ரஹ்மமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருத்தலை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதினும் அறியாமை வேறுண்டோ?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் அல்லாத சுயம் ஜோதியாய், தன் மயமாய், தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்து. ஆதலால் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே கட்டுப்பாடு செய்வதாக முடியும். மனதை ஆன்மாகாரம் ஆக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயம் என்னும் குகையின் மத்தியில் ப்ரஹ்மம் மட்டுமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதை விட அறியாமை வேறுண்டோ? [பாவிப்பதை விட்டு இதை "பார்க்க" கற்றுக்கொள்ள வேண்டும்.]


Monday, March 15, 2010

விசார சங்கிரகம் -21



30.ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே தியான ஸ்தானங்களெனினும் அவசியமாயின் ஆறாதார தரிசனைகளையுங் கொள்ளலாமா?

தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறாதார முதலியவனைத்தும் கற்பனைகளேயாம். இவையாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறாதார தரிசனைகளைப்பற்றி நம்மை சிருஷ்டி திதி சங்காரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி ப்ரஹ்மா விஷ்ணு உருத்திரன் மஹேச்வரன் சதாசிவனாதிய நாம ரூபங்களாக பாவனையாலுண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும் அவையனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னையறிந்தால் எல்லாமறிந்ததாகும். யாதொன் றிருந்த படியறிய அறியாவெல்லா மறிந்தனவாம் என்று பெரியோருங் கூறியிருக்கின்றனர். நாநாபாவனையோடுங் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை யறிவதாம். இதுவே முக்தி.

தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறு ஆதார ஸ்தானங்கள் முதலியன அனைத்தும் கற்பனைகளேயாம். இவை யாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறு ஆதார தரிசனைகளைப்பற்றி சொல்லும் போது: நம்மை சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, உருத்திரன், மஹேச்வரன் சதாசிவன் ஆதிய நாம ரூபங்களாக பாவனையால் உண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும்; அவை அனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும். "யாது ஒன்று இருந்த படி அறிய, அறியா எல்லாம் அறிந்தனவாம்" என்று பெரியோரும் கூறியிருக்கின்றனர். நாநா வித பாவனையோடும் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை அறிவதாம். இதுவே முக்தி.



Thursday, March 11, 2010

விசார சங்கிரகம் -20



29.தியானத்தில் தீப ஜ்வாலைபோல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லை யென்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாற்பர்யமென்ன?

(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாற்பரியமிதுவாம் சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம் வைகுண்டம் பரமபத மென்பனவாகக் கூறப்படுகிற அஷ்டதளத்தோடுங் கூடிய சர்வாத்மகமான ஹ்ருதய கமல மத்தியில் அங்குஷ்ட மாத்ர பரிமாணமாய் மின்னலைப்போற் காந்தியுள்ளதாய் தீபஜ்வாலைபோலும் ப்ரகாசிக்கும் அவ்வஸ்துவைத் தியானித்து புருஷன் அமிர்தத்வத்தை அடைகிறான் என்று கூறியிருத்தலால் இதிலிருந்து தான் வேறு அது வேறு என்ற பேத பாவமும் பின்னத்யானமும் வஸ்துவில் பரிச்சின்ன புத்தியும் ஏகதேச புத்தியுமாகிய தோஷங்கள் சம்பவியாதிருத்தற் பொருட்டாம்.

(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாற்பரிய மிதுவாம் ஸ + அஹம் ஸோஹம் ஸ பரமாத்மா அஹம் நானென விளங்கும் ஆத்மா. பிரமபுரமென்னும் தேகமாகியபட்டணத்தில் ஹ்ருதய கமலாசனத்தில் வசிக்கும் ஜீவனாகிய சிவலிங்கத்தை அதாவது தன்னை தேகாதிகளை தானென்று வெளிமுகத்திற் சஞ்சரிக்கும் அகங்கார ரூப மனதை ஹ்ருதயத்திலடக்கி தேகாதிகளிலுள்ள அஹம் பாவம் நீங்கி தேகத்திலிருக்கும் நானார் என்ற விசாரத்தோடும் நிச்சலமாக இருந்தபடியிருந்து விசாரிக்குங்கால் அங்கு அஹம் அஹம் என்று சூக்ஷ்மமாக ஸ்புரித்துக் கொண்டிருக்கும் ஆத்ம சொரூபமே எல்லாமா யல்லாவுமாய் பாஹ்யாந்தர பேதமின்றி எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக லானும் அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்கலானும் அதை தன் மயமாக பாவிக்கின் அறியாமை நீங்காதாகலான் அங்ங்னம் பாவிக்கக் கூறியதாம்.
வெகு காலம் இவ்வாத்மாநுசந்தானடாகிற ஸோஹம் பாவனையால் நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தால் ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் லப்த மாகும்.
சிந்தனை புறஞ்செலாச் சிவோகம் பாவனை சந்தத முஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.
இங்ஙனம் தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையிலிருக்கும் வஸ்துவையறிதலே ஸர்வ பரிபூரணமாயிருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோசாத்மக தேகமே குஹை அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்மத்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்க ளனைத்தும் இதில அந்தர்பூத மாகலானும் இது ஸித்தியானால் மற்றவை தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும் தியானிக்கும் தன்னை யறியாமல் இதரமாய் தெய்வமிருக்கிறதென்றென்னி த்யானிப்பது தனது நிழலைக்காலால் அளத்தற்கு சமானம் என்றும் கையிலிருக்கும் அத்ய பூர்வமான கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமான மென்றும் பெரியோர் கூறுகின்றனர்.

தியானத்தில் தீப ஜ்வாலை போல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தை விட்டு தான் வேறு இல்லை என்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாத்பர்யமென்ன?
(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுதான்: சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம், வைகுண்டம், பரமபதம் என்பனவாகக் பலவிதமா சொல்லப்படுகிற எட்டு இதழ்களோட கூடிய சர்வ ஆத்மகம் ஆன ஹ்ருதய தாமரை மத்தியிலே கட்டைவிரல் அளவே மின்னலைப் போல காந்தியுள்ளதாய், தீப ஜ்வாலை போலும் ப்ரகாசிக்கிற அந்த வஸ்துவைத் தியானித்து புருஷன் அழியா தன்மையை அடைகிறான் என்று கூறியிருக்கிறதால; இதிலிருந்து தான் வேறு, அது வேறு என்ற வித்தியாச பாவமும், வேறு வகையாக த்யானமும், வஸ்துவை பலதாக பார்க்கும் புத்தியும், ஏகதேசபுத்தியுமாகிய தோஷங்கள் சம்பவிக்காம இருக்கணும் என்றே.
--
(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுவாம்: ஸ + அஹம் = ஸோஹம் ஸ = பரமாத்மா; அஹம் = நான் என விளங்கும் ஆத்மா. உடம்பை பிரமபுரமென்னும் பட்டணம் ந்னு சொன்னா, ஹ்ருதயம் கமலாசனம். அங்கே வசிக்கிற ஜீவனாகிய சிவலிங்கம் எதுன்னா , தேகம் முதலானதை தான்னு நினைச்சு வெளிமுகமா சஞ்சரிக்கும் அகங்கார ரூபமான மனசு. இந்த மனசை ஹ்ருதயத்திலே அடக்கி, தேகம் முதலானதில இருக்கிற நான் என்கிற பாவத்தை நீங்கி, தேகத்தில இருக்கிற நான் யார் என்கிற விசாரத்தோட, அசைவில்லாம இருந்தபடி இருந்து விசாரிக்கிறப்ப அங்க “அஹம், அஹம்” ந்னு கண்ணுக்கு தெரியாதபடி துடிக்கிற ஆத்ம சொரூபமே எல்லாமாயும் எல்லாம் இல்லாமாயும் வெளி உள் வித்தியாசமில்லாமல் எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக ஆவதால, அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்குகிறதாலேயும்; அதை தன் – உடம்பு, மனம் - மயமாக பாவித்தால் அறியாமை நீங்காது என்பதால் அப்படி பாவிக்கச் சொன்னாங்க.
வெகு காலம் இந்த ஆத்மா அநுசந்தானம் ஆகிற ஸோஹம் பாவனையால நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தா, ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் கிடைக்கும்.

சிந்தனை புறம் செலா சிவோகம் பாவனை சந்ததமுஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.

இப்படி தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையில் இருக்கும் வஸ்துவை அறிதலே ஸர்வ பரிபூரணமாக இருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோச ஆத்மக தேகமே குஹை; அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்ம த்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்கள் அனைத்தும் இதில அடங்கும். இது ஸித்தியானால் மற்றது எதுவும் தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும். தியானிக்கும் தன்னை அறியாமல் இதரமாய் தெய்வம் இருக்கிறது என்று எண்ணி த்யானிப்பது தனது நிழலைக் காலால் அளத்தற்கு சமானம் என்றும், கையிலிருக்கும் கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமானம் என்றும் பெரியோர் கூறுகின்றனர்.


Tuesday, March 2, 2010

விசார சங்கிரஹம் - 19




28.ப்ரத்யாகாரத்தில் ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?
ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் தாற்பரிய மிதுவாம். ப்ரணவமென்பது அகார உகார மகார அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூல தேகங்களென்றும் உகாரமென்பது ஸ்வப்ன தைஜஸஜீவ சூக்ஷ்ம தேகங்க ளென்றும் மகார மென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரண தேகங்களென்றும் அர்த்த மாத்திரை யென்பது துரியம் அல்லது அஹம் சொரூப மென்றும் இதற் கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆநந்த மாத்திர சொரூப மென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகார மகாரங்களென்னும் மூன்று மாத்திரைக ளடங்கியுள்ள அமாத்திரை சொரூப மென்றும் மௌனாக்ஷர மென்றும் அஜபை யென்றும் ஜபியாமல் ஜபித்தலென்றும் பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வெதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம்.இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயாநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

நாம ரூபங்களிலே மனசை போக விடாம ஒரு முகப்படுத்த சொன்னதிலே ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்க சொல்லியிருக்கே, அதோட தாத்பரியமென்ன?
ப்ரணவத்தியானம் செய்யச் சொல்லியதோட தாத்பரியம் இதான்: ப்ரணவமென்கிறது என்ன? அ உ ம ன்னு 3 எழுத்துக்கள். அப்புறம் எழுத்தில்லாம பாதி மாத்திரை. இதெல்லாம் சேர்ந்த ஓங்கார சப்தம். இவற்றில அகாரம் என்பது ஜாக்ரத், விச்வஜீவன், ஸ்தூல தேகம். உகாரமென்பது ஸ்வப்னம், தைஜஸன், ஜீவ சூக்ஷ்ம தேகம். மகாரம் என்பது சுழுப்தி, பிராஜ்ஞன், ஜீவ காரண தேகம். அர்த்த மாத்திரை என்பது துரியம் அல்லது அஹம் சொரூபம். (இதெல்லாம் ஞான வழி முதல் பாகத்திலே இருக்கு. மறந்து போயிருந்தா தேடிப்பாருங்க!) இதற்கு அப்பாற்பட்ட நிலை துரியாதீதம். ஆநந்த மாத்திர சொரூபம் ன்னும் சொல்லுவாங்க.
முன் தியானத்திலே சொன்ன இந்த நான்காவதான அஹம் சொரூபம் என்னன்னா, மத்த அகார உகார மகாரங்கள் என்னும் மூன்று மாத்திரைகள் அடங்கியுள்ள அமாத்திரை (கால அளவுக்குள்ளே வராத) சொரூபம். மௌனாக்ஷர மென்றும், அஜபை யென்றும், ஜபியாமல் ஜபித்தலென்றும், பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் சொல்கிறாங்க. இந்த எதார்த்த அர்த்தம் சித்திக்கனும்னே ப்ரணவத் தியானம் செய்யப்படுகிறது. இந்த ஆத்மாநுசந்தான, பக்தி ரூப தியானத்தின் பலனான, பக்குவமான நிலையே சமாதி எனப்பட்டு, நிரதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வ ஆத்ம அநுசந்தான ரூப பக்தி ஒன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் ன்னு சொல்லி இருக்காங்க.

Monday, February 22, 2010

விசார சங்கிரஹம் - 18




27.யோகாஷ்டாங்கங்க ளெவை?
இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி யென்பனவாம். இவற்றில்
(1) இயமம்: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரமசரியம், அபரிகிரகமாதிய ஒழுக்கமுடைமையாம்.

(2) நியமம்: சௌசம், சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈச்வர பணிதானமாகிய ஒழுக்கமுடைமையாம்.

மோக்ஷாதிகாரிக்குரிய சர்வ சன்மார்க்கங்களின் ப்ராப்பதியே இயம நியமங்களின் தாத்பரியமாம். இவைகளைப்பற்றி விரிவாகயறிய வேண்டின் யோக சூத்ரம், ஹடயோக தீபிகை முதலிய நூல்களிற் காண்க.

(3) ஆசனம்: ஆசன பேதங்கள் 84 வகையாகும். அவற்றில் சிம்ஹம், பத்ரம், பத்மம், சித்தம் ஆகிய விந்நான்குமே சிரேஷ்டமென்றும் இவற்றிலும் சித்தாசனமே மிக சிரேஷ்டமென்றும் யோகசாஸ்திரங்கள் கூறுகின்றன.

(4) ப்ராணாயாமம்: சுருதிகளிற் கூறியுள்ள மாத்திரைக் கணக்கின்படி ப்ராணனை வெளிவிடுவது இரேசக மென்றும் உட்கொள்வது பூரகமென்றும் ஹிருதயத்தில் நிறுத்துவது கும்பகமென்றும் சொல்லப்படும். மாத்திரை யளவுகளைப் பற்றிச் சில சாஸ்திரங்களில் இரேசக பூரகங்களுக்கு சமமும் கும்பகத்திற்கு இரண்டு மடங்கும்; சில சாஸ்திரங்களில் இரேசகத்தைப்போல் பூரகத்திற்கு இரண்டு பங்கும் கும்பகத்திற்கு நான்கு பங்குமென சொல்லப்பட்டிருக்கிறது. மாத்திரை யென்பது காயத்ரி மந்திரத்தை ஒரு முறை யுச்சரிக்கும் காலமாக சொல்லப்படுகிறது. இவ்வித இரேசக பூரக கும்பகங்களடங்கிய ப்ராணாயாமத்தை தன்னாலியன்ற அளவு மிருதுவாகவும், கிரமமாகவும், நாடோறு மப்யசித்து வரின் சரீரத்தில் ஒரு வித இளைப்புடன், சலனமற்று ஆனந்தமாயிருத்தற்கான இச்சை மனதிலுண்டாகும். இதன் பின் ப்ரத்யாகாரம் செய்ய வேண்டும்.

(5)ப்ரத்யாகாரம்: வெளியிலுள்ள நாம ரூபங்களிற் செல்லவொட்டாமல் மனதை ஒருவழிப்படுத்தலாம். இதுகாறும் ஓடியுழன்ற மனது இப்போது ஒருவழிப்பட்டிருத்த லருமை யாதலின் இதற்கு (1) மனோமாத்திர ப்ரணவ த்யானம் (2) புருவ மத்திய நாட்டம் (3) நாசிகாக்ர திருஷ்டி (4) நாதாநுசந்தானம் ஆகியவை சகாயமாம். இப்படி யொருமைப்பட்ட மனம் ஓரிடமேயிருக்க யோக்கிய மானதாகும். இதன்பின் தாரணை செய்ய வேண்டும்.

(6) தாரணை: மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்ம ரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம். இவ்விரண்டிடங்களிலுமுள்ள அஷ்டதள பத்மங்களின் மத்தியில் ஆத்ம தேவதா ரூப ப்ரஹ்ம சொரூபமே தீப ஜ்வாலை போலும் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதாகப் பாவித்து மனதை அதில் ஸ்திரமாய் நிறுத்துவதாம். இதன்பின் தியானம் செய்ய வேண்டும்.

(7) தியானம்: முற்கூறிய அத்தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லையென்று ஸோஹம் பாவனையால் தியானிப்பதாம். இதிலும் எங்குமுள்ள ப்ரஹ்ம சொரூபமே ஆன்ம ரூபமாய் ஹ்ருதயத்தில் புத்தி சாக்ஷியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்னும் சுருதியின் படி அங்ஙனனமாயிருக்கும் நானார் என்னும் விசாரத்தால் விசாரிக்கில் ஹ்ருதய கமலத்தில் ஆன்ம தேவதை "அஹம் அஹம்" எனத் தான்றானே ஜ்வலித்துக்கொண்டிருப்பது விளங்கும். இவ்வநுசந்தானரூப தியானமே சிரேஷ்டமாகும்.
ப்ரஹ்மரந்திரத்திலுள்ளது சஹஸ்ர (1000) தள பத்மமானாலும் அதுவும் 125 சிறுதளங்களுடைய அஷ்டதள பத்ம மேயாம்.

(8) சமாதி:- மேற்கூறிய தியானத்தின் பரிபாகத்தால் தான் இன்னானென்றும் இன்னது செய்கிறோமென்றும் தோன்றாமல் மனது தியான ரூபத்திலேயே லயித்த அல்லது அஹம் அஹம் என்னும் ஸ்புரிப்பு அடங்கிய (சூக்ஷ்மமான) ஸ்திதியே சமாதி யென்பதாம். இதில் நித்திரை மாத்திரம் வராமல் பாதுகாத்துக்கொண்டு தினந்தோறும் விடாமல் கிரமமாக அநுசந்தித்து வந்தால் ஈச்வரன் கூடிய சீக்கிரத்தில் மனோவிசிராந்திரூப சிரேஷ்டமான கதியை அநுகிரஹிப்பார்.

Wednesday, February 17, 2010

விசார சங்கிரஹம் - 17




26.ப்ராண பந்தனம் மனோலயத்திற்கு மாத்திரம் சாதன மாகிறதே யன்றி மனோலயத்திற்கு சாதன மாகாமையான் மனோநாசத்திலேயே தாத்பரியமுடைய விசாரத்திற்கு இது சாதனமா வதெப்படி?
ஆன்ம சாக்ஷாத்காரம் சித்தித்தற்குரிய சாதனங்களை அஷ்டாங்க யோகம் அஷ்டாங்க ஞானமென இரு பிரிவுகளாகச் சுருதிகறிற் கூறியுள்ள படியால் அந்த யோகாஷ்டாங்களி லொன்றாகிய ப்ராணாயாமத்தினாலாவது அல்லது கேவல கும்பகத்தினாலாவது பந்தப்பட்ட மனதை அதோடு விட்டுவிடாமல் மேற்சாதனங்காகிய ப்ரத்யாகார முதலியவற்றில் கிரமமாக பழகி வரின் முடிவில் விசார பல ரூப சொரூப சாக்ஷாத்காரம் பெறுதல் திண்ணம்.

ப்ராணனை ஒடுக்கினா மனசு ஒடுங்குமே தவிர நாசமாகாது இல்லையா? அப்போ நமக்கு மனோநாசத்திற்கு எப்படி அது சாதனமாகும்?

சரிதான். வேதங்களிலே என்ன சொல்லி இருக்குன்னா ஆன்ம சாக்ஷாத்காரம் சித்திக்க உரிய சாதனங்கள் அஷ்டாங்க யோகம், அஷ்டாங்க ஞானம்னு இரண்டு பிரிவுகள். இதில அஷ்டாங்க யோகத்தில ஒண்ணு ப்ராணாயாமம். இதாலேயோ அல்லது கேவல கும்பகத்தாலேயோ அது மனோநாசத்திற்கு நேரடியா சாதனமாகாது. ஒரு பிடிப்புக்கு வந்த மனசை அப்படியே விடாம அதுக்கும் மேலே ப்ரத்யாகாரம் முதலானவற்றில முறையா பழகி வரணும். அப்படி செய்தா விசாரணையோட பலனா சொரூப சாக்ஷாத்காரம் அடைவது நிச்சயம்.


Monday, February 15, 2010

விசார சங்கிரகம் -16




21.மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களில் முதன்மையானதெது?
ப்ராண வொடுக்கமே மனவொடுக்கத்துக்குச் சாதனமாம்.

ப்ராண வாயுவை ஒடுக்குகிறதே மனசை ஒடுக்குவதில முதன்மையான சாதனமாம்.

22.ப்ராண நிரோதமுண்டாவ தெப்படி?
கேவல கும்பகத்தாலேனும் ப்ராணாயாமத்தாலேனும் ப்ராண நிரோதமுண்டாகும்.
கேவல கும்பகம் செய்வதாலேயும் அல்லது முறையான ப்ராணாயாமத்தாலேயும் ப்ராணன் ஒடுங்கும்.

23.கேவல கும்பகம் என்றாலென்ன?
இரேசக பூரகங்களின்றி ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம். இது ப்ராணோபாசனை முதலியவற்றால் சித்திக்கத்தக்கது.

24.ப்ராணாயாமம் என்றாலென்ன?
யோக சாஸ்திரங்களிற் கூறியுள்ள கணக்கின்படி இரேசக பூரக கும்பகங்கள் வாயிலாய் ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம்.

சாதாரணமா ப்ராணாயாமத்தில மூச்சை உள்ளே இழுப்பதும் தக்க வைச்சு கொள்வதும் வெளியே விடுவதும் அங்கங்கள். இதோட வழி முறைகள் யோக சாஸ்திரத்திலே சொல்லி இருக்கு. வெறும் கும்பகத்திலே மூச்சை உள்ளே எடுக்கிறதும் வெளியே விடுகிறதும் அங்கங்களா இல்லை. இது ப்ராண உபாசனையால சித்திக்கும்.

25.ப்ராண நிக்ரகம் மனோநிக்ரகத்திற்குச் சாதனமா யிருப்பதெப்படி?
ப்ராணனைப் போலவே மனமும் வாயுவின் அம்சமாக லானும் இவ்விரண்டுக்குமே சலிக்குந் தன்மை சுபாவமாக லானும் இவ்விரண்டின் பிறப்பிடமும் ஒன்றே யாகலானும் இவ்விரண்டுள் ஒன்றி னொடுக்கமே மற்றதி னொடுக்கத்திற்கு காரணமாகலானும் ப்ராண நிரோதம் மன நிரோதத்திற்குச் சாதன மென்பதிற் சந்தேகமில்லை.

அதெப்படி ப்ராணனை நிறுத்தினா மனம் நிற்கும்?
அது இரண்டுக்குமே பல விஷயங்கள் பொது. இரண்டும் வாயுவோட அம்சம்; விடாம அலைந்து கொண்டே இருக்கும். இரண்டோட பிறப்பிடமும் ஒண்ணே. அதனாலஒண்ணு ஒடுங்கினா மற்றதும் ஒடுங்கும்.

Friday, February 12, 2010

விசார சங்கிரகம்-15



20. மனோபலமின்மைக்கும் காரணம் யாது?
ஆன்ம விசாரத்திற்குத் தன்னை அதிகாரியாகச் செய்கிற சாதனங்களான தியான யோக மாதியவையில் முன்னரே வேண்டிய அளவு கிரமமாக பயின்று, அதனால் இடையறாத சஜாதீய விருத்தியின் பிரவாகத்தை சஹஜமாகப் பெற்றிருக்கும் பரிபக்குவமுள்ள மனதாயிருந்தால் இவ்விசார சிரவணஞ் செய்தவுடனே தனது எதார்த்த சொரூபத்தை அபரோக்ஷமாகத் தெரிந்து எப்போதும் தன்னிலையிலிருந்து பரம சாந்தியுடன் விளங்கும். இங்ஙனம் பரிபக்குவமடையாத மனதிற்கு விசார சிரவணத்தால் உடனே அபரோக்ஷ ஞானமும் உப சாந்தமும் வாய்ப்பது துர்லபமே; என்றாலும் சிறிது காலம் மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களிற் பழகி வந்தால் காலக்கிரமத்தில் சித்தோபசாந்தம் சித்திக்கும்.

--மனோ பலம் இல்லைனா அதுக்கு காரணம் அது இன்னும் பரி பக்குவம் ஆகலை என்கிறதுதான். ஆத்ம விசாரத்துக்கு தன்னை அதிகாரியா செய்கிறதுக்கு சாதனங்கள் தியானம், யோகம் முதலானவை. இதில போதுமான அளவு பயிற்சி எடுக்கணும். அதுவும் முறையான பயிற்சி. இதனால மனசு கொஞ்சம் கூட இடையில்லாம இயல்பாக ஆன்மாவை நாடி பயணிச்சு கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட மனசு கேள்வி ஞானத்தின் பின்னணியிலே விசாரம் செய்தவுடன் தன் யதார்த்த சொரூபத்தை வெளிப்படையாக தெரிஞ்சு கொள்ளும்; தன்னிலையிலேயே நிற்கும். அந்நிலையிலே பரம சாந்தத்துடன் இருக்கும். இப்படி மனசு விசாரத்தாலே உடனே அந்நிலையை அடையலைன்னாலும் இந்த மன ஒடுக்க சாதனங்களில பழக பழக காலம் செல்ல செல்ல இந்நிலையில் லயிக்கும்.



Wednesday, February 10, 2010

Monday, February 8, 2010

விசார சங்க்ரஹம் 13



18.ஏகமாயும் அகண்டமாயும் விளங்கும் சொப்பிரகாச வடிவ ஆன்ம ஜோதியின் கண் அவஸ்தாத்ரயம், தேகத்ரயமாதிய கற்பனைகள் தோற்றுவதும்; தோற்றினும் ஆன்மா மாத்திரம் எப்போதும் அசலமாகவே யுள்ளதென்பது மெவ்வாறு?


ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.

ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.

ஒரு வீடு இருக்கு. வீட்டில உள்ளே ஒரு அறை. அதில ஒரு விளக்கு எரியுது. அதுக்கு வெளியே ஒரு அறை. இந்த ரெண்டுக்கும் நடுவே ஒரு கதவு இருக்கு. வெளி அறையிலேந்து முற்றத்துக்கு நடுவே ஜன்னல்கள் இருக்கு
இந்த முற்றத்தை ஸ்தூல தேகம் ஜாக்கிரத அவஸ்தையாக கற்பனை செய்யுங்க.
இதில் உள்ள ஜன்னல் வழியா வெளி அறையை பார்க்கலாம்.
வெளி அறை ஸூக்ஷும தேகம். ஸ்வப்ன அவஸ்தை.
இதையும் உள் அறையையும் பிரிக்கிறது ஒரு சுவர். உள் அறை காரண தேகம். (ஆணவம், கன்மம், மாயை)

அதுக்கு இருக்கிறது மஹத்தத்வம் என்கிற வாசல். அதுல இருக்கிற கதவு தூக்கம்.
இதுக்கு கொஞ்சமே கொஞ்சம் வெளியே ஒரு கண்ணாடி இருக்கு. அது அந்தக்கரணம்.
வெளியிருந்து பாத்தா வீட்டு முற்றம் மட்டுமே தெரியும்.
அதிலேந்து எட்டி ஜன்னல் வழியே பாத்தா உள் அறை தெரியும்.
உள் அறையில் போய் நின்னால்தான் கதவு திறக்கும்போது கண்ணடியில பிரதிபலிக்கிற உள்ளே இருக்கிற விளக்கை பார்க்கலாம். சரியா?

இப்ப ஆன்மாதானே எல்லாவற்றையும் பிரகாசிபிக்கிறது? இந்த ஆன்ம சக்தி இல்லாமல் ஒண்ணுமே இயங்காது. இது எப்படி வெளிப்படுதுன்னு பார்க்கலாம்.

ஆன்மா எப்பவும் பிரகாசிக்கும்.
அதை சுத்தி இருக்கிறது அவித்தை அல்லது காரண சரீரம். இது நித்திரை என்கிற ஆழ் உறக்க நிலை - ஸுஷுப்தி யால சூழப்பட்டு இருக்கு.
காலம் கருமம் பிராணன் ஆகியவற்றால இந்த உறக்க கதவு கலைஞ்சா ஆன்ம ஒளி அகங்காரம் வழியா வெளி அறையில பிரகாசிக்கும். இது ஸ்வப்ன நிலை இல்லையா?
இந்த வெளி அறையிலிருந்து முற்றத்துக்கு வெளிச்சம் வரணும்ன்னா அது இந்திரியங்கள் என்கிற ஜன்னல் வழியாதான் வரும்.

இப்ப ரிவர்ஸ்ல போகலாமா? ஏன் போகணும்? ஆன்ம தரிசனத்துக்கு.
பஞ்ச இந்திரியங்களையும் தாண்டிப்போக ஸ்வப்னம். அதையும் தாண்டிப்போக ஆழ் தூக்கத்தில அவித்தை. அகங்காரத்தையும் தாண்டிப்போக உள்ளே ஆன்மா மட்டுமே பிரகாசிக்கும்.
இப்ப படிச்சுப்பாக்கலாமா?

ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) உட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) உள் மனையில் தானே விளங்க; கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக்கு அடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.


Friday, January 8, 2010

விசார சங்க்ரஹம் 12



17.ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறதென்பதெப்படி?

தீப ஜ்வாலையினுள்ளே யுள்ள காலியிடத்திலிருக்கும் பூதாகாசமானது அந்த ஜ்வாலையினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குதல் போன்று ஹ்ருதயத்தில் ஆன்ம ஜோதியினுள்ளே யுள்ள ஞானாகாசமும் அவ்வான்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைந்து எல்லையற்று விளங்குகிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.

--
ஹ்ருதயத்தில் ஆன்மாவே ப்ரஹ்மமாகப் பிரகாசிக்கிறது என்பது எப்படி?

தீபம் ஒண்ணு எரியுது. அதன் ஜ்வாலைக்கு உள்ளே இருக்கிற காலியிடத்தில இருக்கிறது என்ன? ஆகாசம் -ஸ்பேஸ். அது அந்த ஜ்வாலைக்கு உள்ளேயும் இருக்கு. வெளியேவும் வித்தியாசம் பாக்காம நிறைஞ்சு எல்லையற்று இருக்கு. அதப் போல ஹ்ருதயத்தில ஆன்ம ஜோதியினுள்ளே உள்ள ஞானாகாசமும் அந்த ஆன்ம ஜோதியினுள்ளும் புறம்பும் அபேதமாய் நிறைஞ்சு எல்லையில்லாம இருக்கிறது. இதுவே ப்ரஹ்மமென்பதாம்.


Wednesday, January 6, 2010

விசாரசங்கிரஹம் - 11



16.அகங்காரம் ஜீவன் ஆன்மா ப்ரஹ்மம் ஆகிய இவற்றுக்கு தாதான்மிய முண்டாவதெவ்வாறு?

திருஷ்டாந்தம்                                 -       தாஷ்டாந்தம்
அயப் பிண்டம்                                 -      அகங்காரம்
தப்தாய பிண்டம்                             -     ஆன்ம ஸ்வபாவத்தோடு அத்தியாசமாய்த் தோன்றுகிற ஜீவன்
தப்தாய பிண்டத்திலுள்ள அக்னி    -       தேகந்தோறும் விளங்கும் ஜீவனிலுள்ள சிற்பிரகாசம் அதாவது   கூடஸ்த ப்ரஹ்மம்
ஏகமாயுள்ள அக்னி ஜ்வாலை            -ஏகமாயுள்ள வ்யாபக ப்ரஹ்மம்

மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.
தட்டான் மெழுகுருண்டையில் கணக்கற்ற நாநாலோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகாக காணப்படுவது போன்று சுழுத்தியில் எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல சூக்கும தேகங்களும் ஒரே யிருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒன்று பட்டிருத்தலால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறார்கள். இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போன்று ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாய்த் தோன்றுகிறது. இங்ஙனம் சிற்பிரகாசத்தோடு தாதான்மியமாகக்கூடியிருக்கும் மனமாகிய அகங்கார ரூபனான ஜீவனையன்றி ஜீவ சாக்ஷி யாகிய ஆன்மாவும் ஆன்மாவை யன்றி சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இன்றாம். தப்பதாயப்பிண்டமானது கொல்லனாலெவ்வாறடிப் பட்டு விகாரமுற்றாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமும் அடைவதில்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களி லுழன்று சுக துக்கங்களை யனுபவித்தாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் யாதொரு சலனமுமின்றி ஆகாசம் போல் வ்யாபகமாயும் ஞான மாத்திரமாயும் ஏகமாயும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது.
--
மேற்காட்டிய திருஷ்டாந்தத்தால் அகங்கார ஜீவ சாக்ஷி சர்வசாக்ஷிகளுடைய தாதான்மியம் விளங்கும்.

தட்டான் வேலை செய்யறப்ப பாத்தா கைவசம் ஒரு மெழுகுருண்டை வெச்சு இருப்பார். என்னதான் சேதாரம்ன்னு கணக்கு காட்டினாலும் ஒரு சின்ன துகள் கூட சேதாரமாகாது. ராவறதை எல்லாம் இந்த மெழுகுருண்டையில ஒத்தி ஒத்தி சேத்துடுவார். இந்த மெழுகுருண்டையில தங்கம் இருக்கலாம்; வெள்ளி இருக்கலாம்; வேற எதும் கூட இருக்கலாம். ஆனாலும் கணக்கற்ற பல வித லோகங்களின் அணுக்களடங்கி ஒரே மெழுகு உருண்டையா காணப்படுவது போல;

சுழுத்தியில எல்லா ஜீவர்களுடைய ஸ்தூல, சூக்கும, தேகங்களும் ஒரே இருட்டாகிய அவித்தை அதாவது சமஷ்டி மாயையில் அடங்கி ஆத்மாவில் லயித்து ஒண்ணா இருக்கிறதால் எங்கும் ஒரே இருட்டைக் காண்கிறாங்க.

கொல்லன் உலையில நெருப்பு திகுதிகுன்னு எரியும். அதில போட்ட இரும்புத்துண்டு [அயப்பிண்டம்] நல்லா பழுக்க காஞ்சு அதுவும் திகுதிகுன்னு காணும். [தப்தாய பிண்டம்.] கொல்லன் இதை சம்மட்டியால அடி அடின்னு அடிச்சு உருவை மாத்துவான். கட்டியா இருந்த இரும்பு இப்ப தட்டையா - லாடமா ஆயிடுத்து. அடிச்ச அடியிலே இரும்புத்துண்டுக்குத்தான் பாதிப்பே தவிர அதிலிருந்த சூடுக்கு பாதிப்பு உண்டா? அந்த சூடு தானாதான் தணியும்.

இந்த சுழுத்தியாகிய இருட்டிலிருந்து சூக்கும தேகம் அதாவது அகங்காரமும் (நான் என்பதும்) அதிலிருந்து ஸ்தூல தேகமும் உண்டாகிறது. அகங்காரம் உண்டாகிற பொழுதே தப்பதாய பிண்டம் போல ஆன்ம ஸ்வபாவத்தோடும் அத்யாசமாயும் (இல்லாததை இருப்பதாக பார்க்கிறது) தோணும். இப்படி சித் பிரகாசத்தோடு தாதான்மியமா கூடியிருப்பது மனமாகிய அகங்கார ரூபனான ஜீவன். (சூரியனும் சூர்ய கிரணங்களும் ஒண்ணா? வேற வேறயா? இப்படி பிரிக்க முடியுமா முடியாதா ந்னு இருக்கிறது தாதான்மியம்.) இந்த ஜீவன் இல்லாம ஜீவ சாக்ஷியாகிய ஆன்மா இல்லை. இந்த ஆன்மா இல்லாம சர்வ சாக்ஷியாகிய ப்ரஹ்மமும் இல்லை.
சூடாக்கிய இரும்பு துண்டு கொல்லனால எப்படி அடிப் பட்டு விகாரமா ஆனாலும் எப்படி அதிலுள்ள அக்னி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் அடைவது இல்லையோ அப்படியே ஜீவன் எவ்வளவு வ்யவஹாரங்களில் உழன்று சுக துக்கங்களை அனுபவிச்சாலும் அதிலுள்ள ஆன்ம ஜோதி மாத்திரம் அவற்றால் எந்த ஒரு சலனமும் இல்லாம ஆகாசம் போல் எங்கும் ஊடுருவியும், ஞானமாயும் ஒண்ணாவும் விளங்கும் ப்ரஹ்ம சொரூபமாகவே ஹ்ருதயத்தில பிரகாசிக்கும்.


Monday, January 4, 2010

விசார சங்கிரஹம் 10



15. கரணேந்திரியாதிகள் அறியுந் தர்மத்தை யுடையனவாக விருந்தும் அவை திருசிய பதார்த்தங்களெனப்படுவதேன்?

திருஷ்யம் அல்லது அறிபடுபொருள் - திருக்கு அல்லது அறிபொருள்
கடம்                                             -  பார்ப்பவன்
தேக கடாதிகள்                              -  கண்
கண்                                              - கண்ணிந்திரியம்
கண்ணிந்திரியம்                             -  மனம்
மனம்                                           - ஜீவன்
ஜீவன்                                          - அறிவு

மேற்கண்டபடி அறிவாகிய நாமே எல்லா பதார்த்தங்களையும் அறிவதால் நாமே திரிக்கெனப்படுவோம். கடாந்தமாயுள்ள பதார்த்தங்கள் யாவும் நம்மால் அறியப்படுவதால் திருசியங்களாம். மேற்காட்டியுள்ள அறிவறியாமை யடுக்குகளிற் கூறப்படும் திருக்கு திரிசியங்களிலும் ஒன்று மற்றொன்றுக்குத் திருக்காக விருப்பினும் அது வேறொன்றுக்கு திருசியமாகலான் அவை யாவும் உண்மையில் திருக்காகா. நாம் எல்லாவற்றையும் அறிவதால் திருக்கென்றும் ஒன்றாலும் அறியப்படாததால் திருசியமன்று என்று சொல்லப்பட்டாலும் திருசியங்களை பற்றியே நாம் திருக்கென்று வழங்கப்படுகிறோமே யன்றி உண்மையில் திருசியமென்பது நமக்கன்னிய மின்மையால் நாம் அவ்விரண்டுக்கும் அதீதமான பொருளாவோம். ஏனையவ எல்லாம் திருக்கு திருசியங்களுக்கு உட்பட்டனவே.

கண், தோல் முதலியவனைத்தும் அறிகிறவையா இருக்கிறப்ப ஏன் அதை எல்லாமே அறியப்படும் பொருளா சொல்கிறாங்க?

அவை எல்லாமே ஒண்ணை அறிஞ்சாலும் அதை அறிய இன்னும் ஒண்ணு வேண்டியிருக்கு.
பட்டியலை பாத்தா ஒண்ணு மத்ததை பாத்தாலும் அதை ஒண்ணு பார்க்குது. ஒத்தன் ஒரு குடத்தை பார்க்கிறதா வெச்சுப்போம். குடத்தை கண் பாக்குது. ம்ம்ம்ம்... ஆனா அதால மட்டுமே "பாக்க" முடியாது. நம் சித்தாந்தங்கள்படி கண் என்கிற உறுப்புக்கு ஒரு சக்தி பாயணும். அப்பத்தான் அது பார்க்கும். (இந்த சக்தியை இந்திரியம் என்கிறாங்க.) அப்படின்னாலும் மனசு அதில ஈடுபடணும். மனசு எங்கோ இருக்க நடந்து போகிறோம். எதிரே ஒத்தர் மேலே முட்டிக்கிறோம், இல்லையா? இந்த மனசு என்ன செய்யுதுன்னு ஜீவாத்மா பாக்கும். இந்த ஜீவனையோ சித் ஆன அறிவு பாக்கும். ஆக கடைசிலே எல்லாத்தையும் பாக்கிறதா இருக்கிறது இந்த பேரறிவுதான். இந்த நிலையிலே பார்க்கிறதும், பார்க்கப்படுவதும் நாமே - அறிவே. அதனால இந்த சமாசாரத்தில நாம அகப்பட மாட்டோம். மத்த எல்லாமே பார்க்கிறதுன்னாலும் எல்லாமே பார்க்கப்படுவதும்தான்.