Pages

Showing posts with label கர்மா. Show all posts
Showing posts with label கர்மா. Show all posts

Friday, September 25, 2015

மஹாளய சிராத்தம் - 2


சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. சாதாரண சிராத்தத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹவிர் பாகம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய சிராத்தத்தில் கர்தா சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் கொடுக்கலாம்.

பிதா மாதா இறந்த திதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதாவது அப்பாவின்/ அம்மாவின் சிராத்தம் அஷ்டமியில் வரும் என்றால் அஷ்டமி அன்றுதான் சிராத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

மஹாளய பக்‌ஷத்தில் ஒரு நாள் மட்டும் சிராத்தம் கொடுப்பதாக இருந்தால் சதுர்தசி நீங்கலாக பஞ்சமி முதல் அமாவாசை வரை என்று வேண்டுமானாலும் செய்யலாம். திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும். அமாவாசை, வ்யதீபாதம், அபபரணீ, த்வாதசி. அஷ்டமீ, வருஷ சிராத்த திதி இவற்றில் செய்ய இப்படி தோஷம் பார்க்க வேண்டியது இல்லை. கர்தா சந்ததி இல்லாத விதுரனாகவோ; சந்ததி இல்லாத விதவையாகவோ, ப்ரஹ்மசாரியாகவோ இருந்தால் அமாவாசை அன்று செய்யவும்.

கௌண காலத்தில் செய்வதாக இருந்தால் நந்தை, வெள்ளிக்கிழமை, ப்ரதமை, சதுர்தசீ ஆகியவற்றை விலக்கவும். (நந்தை? அது முஹூர்த்தம் சம்பந்தப்பட்டது.)
மேலே ’திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும்’ என்று சொன்னோமல்லவா? அவை என்ன?

ப்ரதமை, ஷஷ்டி,ஏகாதசி; வெள்ளிக்கிழமை; கர்தா, பத்னீ, ஜேஷ்டபுத்ரன் ஆகியோருடைய நக்‌ஷத்திரம்; வ்யதீபாதம் சம்பந்தப்படாத ரோஹிணீ; ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம் ஆகியவை தோஷமுள்ளவை.

சந்ததி இல்லாதவர்கள் – பத்னி, புத்திரன் இல்லாத விதுரன், விதவை ; ப்ரம்மச்சாரி - அமாவாசை அன்று செய்ய வேண்டும். சந்ததி உள்ளவர்கள் அமாவாசை அன்று செய்யலாகாது. பிதா இல்லாத புத்திரர்கள் எல்லோருமே செய்ய வேண்டும். குடும்பம் பிரிந்து இருந்தால் தனித்தனியாகவே செய்ய வேண்டும்.

ச்ராத்தம் / தர்ப்பணம் செய்ய உசித காலம் மாத்யாஹ்ணிக காலத்துக்கு பின் அபராஹ்ண காலத்துக்குள். அதாவது 12-30 க்கு மேல் 3-30 க்குள். இந்த சரியான நேரத்தில் செய்பவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.

பக்‌ஷ தர்ப்பணம் செய்வோர் அமாவாசை அன்று அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகே மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயத்தில் இன்னொரு விசேஷம் சாதாரணமாக செய்யும் சிராத்தம் போல் இல்லாமல் மற்றவர்களுக்கும் இதில் பங்கு கொடுக்கலாம் என்பதே. அவர்கள் காருணிக பித்ருக்கள் எனப்படுவர். அவர்களது பட்டியல் பின்னால் வருகிறது, இவர்களில் யாருடைய கோத்திரமும் பெயரும் தெரியுமோ அவர்களுக்கு அவர்கள் இறந்து போயிருந்தால் வஸு ரூபமாக வரித்து சிராத்தம் / தர்ப்பணம் கொடுக்கலாம்; தனித்தனியாக செய்ய வேண்டும். 

ஸபத்னீ மாதா (தந்தையின், தன் அம்மாவல்லாத இன்னொரு மனைவி), பெரியப்பா, சித்தப்பா, அண்ணா தம்பிகள், பிள்ளைகள்; அப்பாவுடன் கூடப்பிறந்த தமக்கை, தங்கைகள்; மாப்பிள்ளைகள்; அக்கா, தங்கை, பெண், மனைவி, மாமனார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, ஆசார்யன். காப்பாற்றின யஜமானன்; நண்பர்கள் – இப்படி பலருக்கும் தர்ப்பணம் செய்யலாம். பெயர் கோத்திரம் தெரியாதவர்களுக்கும் பொதுவாக காருண்ய பித்ரு என்று சொல்லி செய்யலாம்.

இப்படி காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கையில் தனியாக கூர்ச்சம் வைத்து ஆவாஹணம் செய்ய வேண்டும்.

வருஷ சிராத்தத்தின் சிராத்தாங்க (பரேஹணி) தர்ப்பணம் அடுத்த நாள் காலையில் விடிவதற்குள் செய்யப்பட வேண்டும், ஆனால் மஹாளய சிராத்தத்தின் பரேஹணி தர்ப்பணம் அன்றே செய்யப்பட வேண்டும், இந்த காலத்தில் வருஷ சிராத்தத்திலேயே மிக அரிதாகவே அடுத்த நாள் செய்கிறார்கள். இதற்கு சமாதானம் இந்த விதியில் இருந்தது எடுத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது!

இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் அவை மேலும் ‘டெக்னிகல்’ ஆகையால் இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது.

Thursday, September 24, 2015

மஹாளய சிராத்தம்-1


எல்லா பித்ருக்களும் யமதர்ம ராஜனால் பூலோகத்துக்கு ஒவ்வொரு வருடமும் பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் (ஆவணி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல்) பூமிக்கு  அனுப்பப்படுகின்றனர். ஆச்வயுஜ சுக்லபக் (புரட்டாசி அமாவாசையை அடுத்த) ப்ரதமை வரையான 16 நாட்கள் அவர்கள் புத்திரன் பெயரன் ஆகியோரால் கொடுக்கப்படும் அன்னம் நீர் ஆகியவற்றை ஏற்று ஆனந்திக்கின்றனர். இவை முக்கிய நாட்கள். கௌண காலமாக (தவறும் பக்ஷத்தில் அடுத்து செய்யும் காலமாக) விருச்சிக ராசியை சூரியன் அடையும் காலம் சொல்லப்படுகிறது (கார்திகை மாத பிறப்பு) இதுவே மஹாளய சிராத்த அனுஷ்டான காலம்.

இந்த காலத்தில் செய்யும் பித்ரு பூஜையானது யாகத்துக்கு சமமானது. இந்த கன்யா மாத்ததில் செய்யும் ஒரு நாள் சிராத்தத்தாலேயே பித்ருக்கள் ஒரு வருஷம் த்ருப்தி அடைகிறார்கள். ஆகவே 16 நாளும் செய்யக்கூடிய கர்மாவுக்கு பலன் அபரிமிதமாகும்.
இந்த 16 நாட்கள் முழுவதும் தினசரி பார்வண விதியாக (அதாவது ஹோமத்துடன்) சிராத்தம் செய்வது சிலாக்கியமாகும். அவ்வளவு நாட்கள் செய்ய சக்தியில்லை எனில் பஞ்சமி முதலோ அஷ்டமி முதலோ அதுவும் முடியாவிட்டால் தசமி முதலோ அமாவாசை வரை செய்யலாம். இதற்கும் சக்தி இல்லை எனில் விலக்கப்பட்ட நாள் இல்லாத ஒரு நாளிலாவது செய்ய வேண்டும்.

சிராத்தமாக செய்ய சக்தி இல்லாதவரே தர்ப்பணமாக செய்யலாம். அமாவாசை முடிய என்றும் பிரதமை முடிய என்று இரண்டு விதமாக முனிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவரவர் க்ருஹ்ய ஸூத்திரத்தை பார்த்து செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட 16 நாட்களில் தின க்ஷயம் ஏற்பட்டால் 15 நாட்கள் மட்டுமே முக்கிய காலமாகும். ஸங்கல்ப சமயத்தில் உள்ள பக்ஷம் திதி இவற்றையே ஸங்கல்பத்துக்கு உபயோகிக்க வேண்டும். வழக்கமாக பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று பார்த்து செய்வது போலில்லை.

தெய்வாதீனமாக மேற்கூறிய முக்கிய காலத்தில் செய்ய முடியவில்லை எனில் கார்த்திகை பிறப்பு வரை கௌண காலம் இருப்பதால் கூடிய வரை சீக்கிரமாக செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிட்டால் பித்ருக்கள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு வருத்தத்துடன் இவ்வுலகைவிட்டு கிளம்புகின்றனர். அப்படி அவர்கள் வருத்தப்பட்டாலே ஒருவன் பித்ரு சாபத்துக்கு உள்ளாகிறான். ’என் அப்பாவுக்கு என் மேல் மிகவும் பிரியம்; அவர் எனக்கு சாபம் கொடுக்க மாட்டார்’ என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தனியாக சாபம் என்று கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் வருத்தமே போதும்; சாபம் ஏற்படும்.
இந்த சாபத்தால் ஐஸ்வர்யம், ஆயுசு, புத்திரன், பெயரன் ஆகியோருக்கும் குறைவு ஆகியன ஏற்படும்.

இதிஹாஸங்களில் இதை புகழ்ந்து சொல்லி இருக்கிறது. மாஹாளய பக்‌ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம் கயா சிராத்தத்துக்கு சமம்; மஹா பரணியில் செய்யும் சிராத்தம் 5 மடங்கு பலன் தரும்; வ்யதீபாத புண்ய காலத்தில் செய்வது 10 மடங்கு பலன்; மத்யாஷ்டமிக்கு 20 மடங்கு; த்வாதசியில் 100 மடங்கு; அமாவாசை சிராத்தத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று சொல்லி இருக்கிறது.

ஒவ்வொரு திதியிலும் கொடுக்கப்படும் சிராத்தத்துக்கு தனி பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
ப்ரதமை – தன லாபம்
த்விதீயை – சந்ததி
த்ருதீயை – இஷ்டமான வரன்
சதுர்த்தி – சத்ருக்களை அகற்றும்
பஞ்சமி – ஐஸ்வர்யத்தை அடைவான்
ஷஷ்டி- புகழத்தகுந்தவன் ஆவான்.
ஸப்தமி – கூட்டத்துக்கு தலைவனாவான்
அஷ்டமி – சிறந்த புத்தியை அடைவான்
நவமி – அழகுள்ள கன்னிகையை அடைவான்
தசமி – எல்லா இஷ்டங்களையும் அடைவான்
ஏகாதசி – எல்லா வேதங்களையும் அடைவான்
த்வாதசி – ஸ்வர்ண லாபம்
த்ரயோதசி – ப்ரஜை, மேதா சக்தி, தேஹ புஷ்டி, பசுக்கள், ஸ்வதந்திர தன்மை, சிறந்த வ்ருத்தி (தொழில்) தீர்க்கமான ஆயுஸ், ஐஸ்வர்யம் – இப்படி சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும்.

சதுர்தசி சிராத்தம் சிறு வயதில் ஆயுதத்தால் அடி பட்டு இறந்த பித்ருக்களுக்கு சிறந்ததாகும்.

அமாவாசை – இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.

சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு....

(தொடரும்)

Monday, April 21, 2014

ந மம....


ந மம.... என்னுடையதில்லை. இந்த கான்சப்ட் ல சமீபத்து மின்னஞ்சல் ஒண்ணும் சில நாட்கள் முன்னும் இன்றும் கேட்ட உபன்யாசமும். ரைட் அப்ப ஒரு பதிவு தேத்தியாச்சு.

முதலில் கீதை
कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

ஹி பு³த்³தி⁴யுக்தா மநீஷிண: = ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்
ப²லம் த்யக்த்வா = பயனைத் துறந்து
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: = பிறவித் தளை நீக்கி
அநாமயம் பத³ம் க³ச்ச²ந்தி = மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்
புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

சுட்டு இருக்கேன்... இவருக்கு நன்றி

இது சாங்க்ய யோகத்தில் 51 ஆவது ஸ்லோகம்.
அடுத்து கர்ம யோகத்துக்கு போகப்போகிறார். அதுக்கு இது ப்ரிலூட்!

ஒரு வேலையும் செய்யாம நாம இருக்க முடியாது. அது யோகம் பயின்ற சிலருக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே சாத்தியம். அதனால என்ன செய்யலாம். வேலை செய்தால் அதில் ஒரு ஆசை வந்து விடுகிறது. முக்கியமா அதன் பலனைப்பத்தி. இதை செய்யறதால எனக்கு என்ன கிடைக்கும்?
அந்த ஆசை வந்துட்டா இது இந்த பலனை இப்படி தரணும்ன்னும் ஒரு ஆசை வந்துடும். ஆசை சீக்கிரமே ஆன்சைட்டியை கொடுக்கும்! (ஒண்ணுமில்லை, ஒரு எதுகை மோனைக்காக இங்க்லீஷ்!) இது நடக்குமோ நடக்காதோ விரும்பியபடி பலன் கிடைக்குமோ கிடைக்காதோ ந்னு மனசு அலை பாய ஆரம்பிச்சா நம் நிம்மதி காணாமல் போயிடும்.

ஒரு ராஜா இருந்தான். அவன் ராஜ்யத்துல ‘கொஞ்சம் நிறைய’ பிரச்சினை. தினசரி நிறைய பிரச்சினைகள் அவன்கிட்ட சொல்லப்படும். அவனும் கேட்டு அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை தகுந்த ஆட்கள்கிட்ட சொல்லி செயலாற்றுவான். இந்த ‘கொஞ்சம் நிறைய’ பிரச்சினை  ‘நிறைய நிறைய’ பிரச்சினை ஆனதும் அவனால தாங்க முடியலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சான். அப்ப பக்கத்துல காட்டுல ஒரு சன்யாசி இருக்கறதா கேள்விப்பட்டு அவரைப்போய் பார்த்தான். தன் பிரச்சினைகளை எல்லாம் சொன்னான். “ஸ்வாமி, ராத்தூக்கம் போயிடுத்து. கவலைகள் மனசை அரிச்சுகிட்டே இருக்கு. இதுல இருந்து மீள வழி சொல்லுங்க” ந்னு கேட்டுகொண்டான்.

அவரும் கொஞ்சம் யோசிச்சார்.  அப்புறம் “சரி, நான் பாத்துக்கறேன். ராஜ்யத்தை எனக்கு கொடுத்துடு!” ந்னு சொன்னார். அவனும்  ‘அப்பாடா விட்டது தொல்லை’ ன்னு நினைச்சு அப்பவே தாரை வார்த்து கொடுத்துவிட்டான்.  “போய்டு வரேன்” ந்னு நிம்மதியா கிளம்பினான்.

சன்யாசி  “கொஞ்சம் இருப்பா! எங்கே போறே?” ந்னு கேட்டார்.
“கால் போன போக்கிலே போவேன்!”
“போய் என்ன வேலை பார்ப்பாய்?”
“யார் என்ன வேலை கொடுக்கறாங்களோ அதை செய்வேன். கிடைச்சதை வெச்சுண்டு உயிர் வாழ்வேன்!”
“ரொம்ப சந்தோஷம்! நான் ஒரு வேலை தரேனே? செய்யறியா?”
“ஆஹா! நிச்சயமா!”
“இதோ பார். எங்கிட்ட ஒரு ராஜ்யம் இருக்கு. அதை நிர்வாகம் செய்ய எனக்கு அனுபவ இல்லை. உனக்கோ அதுல அனுபவம் உண்டு. செய்யறியா? பதிலுக்கு நீ அரண்மனையில வசிக்கலாம். வழக்கமா இது வரைக்கும் அனுபவிச்ச வசதிகளை அனுபவிக்கலாம். என்ன சொல்லறே?”
ராஜா என்ன சொல்வதுன்னு தெரியாமல் தலையை ஆட்டினான்.
“ஆனா எப்பவும் நினைவு வெச்சுக்கோ! நீ என் வேலையாள்தான்.”

தன் பிரச்சினை தீர்ந்ததா இல்லையான்னு புரியாமலே ராஜா அரண்மனைக்கு போய் சேர்ந்தான்.
ரெண்டு மாசம் கழிச்சு சன்யாசி அரண்மனைக்கு போனார்.
ராஜா வரவேற்று எல்லா உபசாரங்களையும் செய்தான்.
“என்னப்பா எப்படி இருக்கே?”
“பரம சௌக்கியம் ஸ்வாமி! நிம்மதியா தூங்கறேன்”
“பிரச்சினைகள் எல்லாம் இல்லாம இருக்கா?”
“இல்லை ஸ்வாமி, வழக்கமான பிரச்சினைகள் எல்லாமே அப்படியேத்தான் இருக்கு. தினசரி பிரச்சினைகளை சந்திக்கறதும் அதுக்கெல்லாம் தீர்வு காண்பதும் வழக்கம் போலவே இருக்கு. ஆனா இப்ப அதெல்லாம் மனசை பாதிக்கிறதில்லை.”
இப்படியே இருன்னு சொல்லிட்டு சன்யாசி காட்டுக்கு திரும்பிட்டார்.

எப்படி நிம்மதி வந்தது?
ராஜாவுக்கு “ராஜ்யம் என்னுது; ‘நான்’ தான் இதுக்கு தீர்வு காணமுடியும்” ந்னு ஒரு எண்ணம் இருந்தது. ராஜ்யம் தன்னோடது இல்லைன்னு ஆன பிறகு அவனால பற்றில்லாம அந்தந்த நேரத்துக்கு எதை செய்யணுமோ அதை செய்யும் பக்குவம் வந்தது.

இதுதான்  ‘ந மம’ கான்சப்ட். என்னுடையதில்லை........

 

Friday, April 4, 2014

பரசுராமர் செய்த கர்மா



கொஞ்சநாளாவே நொச்சூர் வெங்கட் ராமனின் பகவத் கீதை பாகவதம்ன்னு சொற்பொழிவு கேட்டுக்கொண்டு இருக்கேன். ஏதாவது சுவாரசியமா கதை அகப்படும்! அதை கொஞ்சம் இங்கே ஷேர் செய்து கொள்ள ஒரு சின்ன ஆசை. அவருக்கு நம் நமஸ்காரங்கள்!
-------------------------------------------------------------------
பரசு ராமருக்கு ஒரு தாபம் இருந்தது. தன் அப்பா ஜமதக்னி முனிவரின் கட்டளைக்கு உட்பட்டு தன் அம்மாவை வெட்டிக்கொன்றுவிட்டார் அவர். பின்னால் ஜமதக்னி அவளை உயிர்பித்துவிட்டார். இருந்தாலும் பரசுராமருக்கு தான் பெரிய குற்றம் செய்ததாக ஒரு உணர்ச்சி இருந்தது.
பரசுராமர் இப்படி தவித்துக்கொண்டு இருந்த போது கானகம் சென்று முனிவர்களை கண்டு தன் தவிப்பை சொல்லி ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டினார். அவர்கள் ப்ராயச்சித்தம் என்று ஏதும் சொல்லாவிட்டால் இவரது மனம் அமைதி அடையாது என்று கண்டு ப்ராயச்சித்தத்தை சொன்னார்கள்.
ஒரு வருடத்துக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். ஆனால் முன் நாட்களில் பூஜை செய்த அதே பூவை திருப்பி பயன்படுத்தக்கூடாது. அதாவது ஒரு முறை மல்லிகையை பயன்படுத்தி இருந்தால் அதையே திருப்பி ஒரு நாள் பயன்படுத்தக்கூடாது. இதே போல ஒரு நாள் செய்த நிவேதனப்பொருளை திருப்பி இன்னொரு நாள் நிவேதனம் செய்யக்கூடாது. புதிதாக வேறு செய்ய வேண்டும். தினமும் புதிய முத்திரைகளை கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும். இதே போல தினமும் புதிதாக ஒரு மந்திரம் கற்றுக்கொண்டு உருப்போட வேண்டும். தினமும் புதிதாக ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அதில் முன்னே பயன்படுத்திய ஹோம த்ரவ்யத்தை பயன்படுத்தாமல் புதிதாக ஒரு த்ரவ்யத்தை பயன்படுத்த வேண்டும்.
இதை ஏற்றுக்கொண்டு பரசுராமர் கர்மாக்களை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் உற்சாகமாக போனாலும் நாளடைவில் சிக்கல் அதிகமாயிற்று. எதுவுமே புதுசாக இருக்க வேண்டும், முன்னே செய்தது கூடாது என்னும் போது எவ்வளவு நாள்தான் புதுசு புதுசாக கண்டு பிடிக்க முடியும்! கஷ்டப்பட்டு ஒரு வருடத்தை கடத்திய பின் முனிவர்களிடம் போய் நம்ஸ்காரம் செய்து ப்ராயச்சித்தம் பூர்த்தி ஆயிற்றா இல்லையா என்று கேட்டார். அவரது தவிப்பு இப்போது அம்மாவை கொன்றோமே என்பதாக இல்லை. இன்னும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடப்போகிறார்களே என்றே இருந்தது!
முனிவர்கள் பாபம் தீர்ந்தது என்று சொல்ல அப்பாடா என்று சந்தோஷமாக கிளம்பினார் பரசுராமர்.
இப்படியாக கர்மாவின் நோக்கம் சித்த சுத்தி. அதுவே முடிவு இல்லை. மனம் தூய்மை ஆகாமல் வெத்து கர்மாவை செய்து கொண்டு கோப தாபங்களுடன் இருப்பதில் பலனே இல்லை!

 

Wednesday, April 10, 2013

கர்மாக்களின் வகைகள்


கர்மா மனம், சொல், உடம்பு ஆகியவற்றால் செய்யப்படுகிறது.

மனதால் செய்யப்படும் கர்மாக்களில் ..
இறைவனை குணங்களுடன் - இந்த ரூபம், இந்த சக்தி என்பது போல – உபாசிப்பது; இப்படிப்பட்ட குணங்கள் ஏதும் இல்லாமல் உபாசிப்பது. பக்தி, வைராக்கியம் (பற்றின்மை) இவற்றை ஒட்டிய எண்ணங்கள், பர லோகம் குறித்த சிந்தனைகள் ஆகியன புண்ய கர்மாக்கள். உலக விஷயங்களை அனுபவிப்பதிலேயே நாட்டம், மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் எண்ணம், வேதம் சாஸ்திரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்னும் எண்ணம், தர்மம் அதர்மம் ஏதும் இல்லை என்னும் எண்ணம் - இவை பாப கர்மாக்கள். இந்த எண்ணங்கள் பலதும் கலந்து இருப்பது மிஸ்ர - கலந்த – கர்மாக்கள்.

சொல்லால் செய்யப்படும் கர்மாக்களில் வேத அத்யயனம், சாத்திரங்கள் வாசித்தல், கீதா பாராயணம், ஸ்ஹஸ்ரநாமங்கள் ஜபம், பஞ்சாக்ஷரம் முதலான மந்திர ஜபங்கள், பகவந்நாம சங்கீர்த்தனம், பரோபகாரம் செய்வதற்கான சொற்கள், உண்மை பேசுதல், ஹிதமாக பேசுதல் போன்றவை புண்ணியமானவை. வேத சாத்திரங்களை நிந்தித்தல், தேவதா நிந்தனை, பொய் பேசுதல், புறம் சொல்லல், கடுமையான பேச்சு, ஏளனம் செய்தல் - இவை பாப கர்மாக்கள். வேதாத்யயனம், பூஜை செய்தல், மேற் சொன்ன புண்ணிய சொற்கள் இவற்றின் நடுவில் பிறரை நிந்தனை செய்தல், பொய், பரிஹாஸம், லோக சம்பந்தமான சொற்கள் இவை கலந்த கர்மாக்கள்.

புண்ய தீர்த்த ஸ்னானம், குரு, தேவதை இவர்களை வணங்குதல், தேவதா பூஜை, நமஸ்காரம், சாதுக்களை தரிசித்தல், த்யாகம், உலக நன்மைக்காக சஞ்சரித்தல் - இவை சரீரத்தால் செய்யப்படும் புண்ய கர்மாக்கள். பிறரை ஹிம்சித்தல், பரஸ்த்ரீ சங்கம், திருட்டு, துஷ்ட சகவாசம் ஆகியவை காயிக பாப கர்மாக்கள். அன்னதானம் செய்ய மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்தல், கோவில் கட்ட பிறர் சொத்தை அபகரித்தல், தண்ணீர் பந்தல் ஏற்படுத்தி, அதற்கு உழைத்தவனுக்கு கூலி கொடுக்காமல் இருப்பது போன்றவை புண்ணியம் பாபம் கலந்தவை.

இவற்றை அவ்வப்போது விசாரிக்க வேண்டும். அதாவது நம் செயல்கள் இவற்றில் எங்கே அமைகின்றன என்று பார்க்க வேண்டும்.

வாழை மரம் வளர்ப்பதில் முக்கிய பலன் வாழைப்பழம் பெறுவது என்றாலும், இடையில் வாழைப்பூ, வாழை இலை ஆகியன பெறுவது இடையில் ஏற்பட்ட பலன் போல....
முன் சொன்ன விசாரணயால் இவ்வளவு செய்தாலும் ஆத்மா இவை எவற்றுடனும் சம்பந்தப்படாமல் இருக்கிறது என்று திடமாக அறிவது முக்கிய பலனாகும். இடையில் புண்ணிய காரியங்களையே செய்து வர வேண்டும், அப்படி முடியாவிட்டால் கலந்த கர்மாவாக இருக்க வேண்டும். பாப கர்மாக்களை ஒரு போதும் செய்யக்கூடாது என்று உணர்ந்து செயல் படுவது இடைப்பட்ட பலனாகும்.

 

Thursday, November 15, 2012

விதியா மனித முயற்சியா?

 
ஒரு நாள் மாலை ஒரு சீடர் ஸ்வாமிகளின் உபதேசங்கள் சிலதை பெற அவரை அணுகினார். ஆனால் எப்படி பேச ஆரம்பிப்பது என்று புரியவில்லை. ஸ்வாமிகள் அவர் மீது கருணை கொண்டு தானே பேச்சை ஆரம்பித்தார்.

ஸ்வாமிகள்: வேதாந்த பாடங்களை தொடர்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

சீடர்: தினமும் நியமமாக படிப்பதாக சொல்ல முடியவில்லை, அவ்வப்போது படிக்கிறேன்.

படிக்கும்போது பல சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்குமே?

அதற்குக்கூட அவ்வளவு ஆழமாக புரிந்து படிப்பதாக சொல்ல முடியவில்லை.

சாத்திர சம்பந்தமான சந்தேகங்களை சொல்லவில்லை. யாரும் எந்த விஷயம் குறித்தும் தீவிரமாக யோசிக்கும் போது சில சந்தேகங்கள் ஏற்படும், இல்லையா?

ஆமாம். அந்த மாதிரி சந்தேகங்கள் நிறையவே இருக்கின்றன.

அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன். அதை எப்படி தீர்க்க முயற்சி செய்தீர்கள் என்றும் சொல்லுங்கள்.

அத்தகைய சந்தேகம் ஒன்றை சொல்லுகிறேன். அது அடிக்கடி என் மனதில் எழுகிறது. அதற்கு தீர்வு ஏதுமெனக்கு புலப்படவில்லை. தாங்கள் அதை தீர்த்து வைக்க முடியுமானால் நன்றி உடையவனாக இருப்பேன்.

தயை செய்து அதை சொல்லுங்கள்.

அது ஒன்றுமில்லை. விதி, மனித முயற்சி குறித்த தீராத விரோதம்தான். இவற்றின் வீச்சு எதுவரை? இவற்றின் மோதலை எப்படி தவிர்க்கலாம்?

இது மிகப்பெரிய பிரச்சினைதான். நீங்கள் கேட்கும் விதத்தில் கேட்டால் பெரிய பெரிய நபர்களின் புத்திக்கும் இதன் விடை புலப்படாது!

ஏன்? நான் கேட்கும் விதத்தில் என்ன தவறு? உண்மையில் என் பிரச்சினையை மட்டுமே சொல்லி இருக்கிறேன். அதை தீர்ப்பதில் இருக்கும் கஷ்டத்தைப்பற்றி இன்னும் சொல்லவே இல்லையே?

உங்கள் சந்தேகத்தை சொல்வதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது!

எப்படி?

மோதல் என்பது இரு வெவ்வேறு விஷயங்கள் இருந்தால்தானே ஏற்பட முடியும்? ஒரே ஒரு விஷயம் இருந்தால் மோதல் எப்படி ஏற்பட முடியும்?

ஆனால் இங்கே விதி, மனித முயற்சி என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றனவே?

சரிதான், இந்த அனுமானம்தான் மனதில் சந்தேகம் எழக்காரணம்!

அது என் அனுமானம் இல்லையே! அவற்றின் இருப்பை நான் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அவை தனித்தனியா இருக்கின்றனவே!

அங்கேதான் தவறு இருக்கிறது.

எப்படி?

சனாதன தர்மத்தை பின் பற்றுவராக இருந்தால் விதி என்பது தன்னிலும் வேறல்ல என்று தெரிய வேண்டுமே? அது போன ஜன்மத்தில் நீங்கள் செய்த செயல்களின் மொத்த வடிவமேயாகும். கடவுள் இவற்றை வழங்குபவர் மட்டுமே. விதிக்கு காரணம் உங்கள் செயல்களே. அவை கடவுள் உருவாக்கியனவல்ல. மனித முயற்சி என்பது இப்போது நீங்கள் செய்யும் செயல்களாகும்.

இன்னும் அவை எப்படி இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல என்பது புரியவில்லை.

இப்படி பாருங்கள். விதி என்பது முந்தைய கர்மா, மனித முயற்சி என்பது இப்போதைய கர்மா. இரண்டும் உண்மையில் ஒரே விஷயம்தான், காலத்தில் மட்டுமே வேறுபடுகின்றன. உண்மையில் ஒன்றாகவே இருப்பதால் மோதல் இருக்க முடியாது.

காலத்தால் வேறுபாடு என்பதை உதாசீனம் செய்ய முடியாதே! அது மிக முக்கியமானதில்லையா?

அதை நீங்கள் உதாசீனம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதை இன்னும் ஆழ்ந்து பாருங்கள் என்கிறேன். நிகழ் காலம் உங்கள் முன் இப்போது இருக்கிறது; உங்கள் மனித முயற்சியால் அதை வடிவமைக்க முயற்சி செய்யுங்கள் என்கிறேன். கடந்த காலம் கடந்துவிட்டது. அது உங்கள் முன் இப்போது இல்லை, காண முடியாது. அதனால்தான் அதற்கு அத்ருஷ்டம் - பார்க்க முடியாதது - என்று பெயர். இரண்டும் உங்கள் முன் இல்லாததால் அவற்றில் எது பலமானது என்று ஆராய முடியாது. நாமே வரையறுத்தபடி மனித முயற்சி என்னும் நிகழ் கால கர்மா நம் முன் இருக்கிறது. கடந்த கால கர்மாவை காண முடியவில்லை. இரண்டு மல் யுத்த வீரர்கள் நம் முன் உட்கார்ந்திருக்கும் போதே நம்மால் யார் பலசாலி என்பது சரியாக நிச்சயமாக அனுமானிக்க முடியாமல் இருக்கிறது. ஒருவருக்கு எடை கூடுதலாக இருக்கும், மற்றவரால் சுறுசுறுப்பாக செயல் பட முடியலாம். ஒருவர் நல்ல சதை பிடிப்புடன் இருக்கலாம், மற்றவர் மனதில் உறுதியுடன் இருக்கலாம். ஒருவர் நிறைய பயிற்சி செய்து இருக்கலாம், மற்றவர் நிதானமாக கலக்கமற்ற முடிவு எடுப்பவராக இருக்கலாம். இதே போல பல விஷயங்கள் இருக்கும். மல் யுத்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இவற்றைக் கொண்டு முடிவில்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கலாம். நடப்பு என்னவென்றால் எதை பலம் என்று நினைக்கிறோமோ அது போட்டி நேரத்தில் பலகீனமாகக் கூட ஆகிவிடலாம்! இவற்களில் யார் வெற்றி பெறுவார் என்று அறிய ஒரே நிச்சயமான வழி இருவரையும் போட்டியில் இறக்குவதுதான். இப்படி இருக்கும் போது எப்படி மனித முயற்சிக்கும் காணமுடியாத விதிக்கும் இடையே மோதல் என்று, எது நடக்கும் என்பதற்கு விவாதம் மூலம் தீர்வு காண முயல்கிறீர்கள்?

அப்படியானால் இதற்கு தீர்வே இல்லையா? 

இருக்கிறதே! மல் யுத்த வீரர்கள் மோதிப்பார்ப்பதே தீர்வு. யார் பலசாலி என்று தெரிந்துவிடும்!

அதாவது மோதலின் முடிவில்தான் யார் பலசாலி என்று தெரியும். அப்போது தெரிந்து என்ன ஆகப்போகிறது? அதற்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

ஆமாம். மோதலே முடிந்துவிடும்.

ஆகவே, மோதலுக்கு முன் தீர்வை கண்டு பிடிக்க முடியாது; மோதலுக்குப்பின் தீர்வை கண்டு பிடிக்க அவசியமே இல்லை. அதனால் பிரச்சினைக்கு தீர்வே இல்லை.

ஆமாம். எப்படியும் விதி, மனித முயற்சிகளுக்கு இடையே எது வலிமையானது என்று விசாரிப்பதில் அர்த்தமே இல்லை!

சரிதான்! நீங்கள் அப்படியானால் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. மாற்றாக நீங்கள் முழுக்க முழுக்க மனித முயற்சியில் ஈடு பட வேண்டும்.

அதெப்படி

Wednesday, July 13, 2011

இஷ்டி



இன்னிக்கு இஷ்டி.
இஷ்டி? எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கா?
ஆமாம். அனேகமா ராமாயணம் தெரிஞ்ச எல்லாரும் தசரதர் புத்ர காம இஷ்டி செஞ்சுதான் பிள்ளைகளை பெற்றார்ன்னு தெரிஞ்சு இருப்போம்.
அக்னி ஹோத்ரம் செய்யறவங்க இந்த இஷ்டியை மாசம் ரெண்டு தரம் செய்வோம். தசரதரும் செஞ்சு இருக்கார். அப்ப க்ஷத்திரியர்களுக்கும் இதில் அதிகாரம் உண்டுன்னு தெரியுது இல்லையா?
வழக்கமா இஷ்டி செய்வது அமாவாசைக்கு அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு. பௌர்ணமி அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு.
முதலாவது தர்சேஷ்டி. ரெண்டாவது பௌர்ணமாசேஷ்டி. இந்த இஷ்டிகள்தான் பலரும் செய்கிற ஹோமங்களுக்கு முன்னோடி.
இஷ்டி மிகவும் விரிவா இருக்கும். அதை சுருக்கி ஹோமத்துக்கான செயல் முறையை வகுத்து வெச்சு இருக்காங்க.
அமாவாசைக்கு செய்யும் இஷ்டிதான் மற்ற எல்லா இஷ்டிகளுக்கும் முன்னோடி. தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி உட்பட.

ஒரு ஹோமம்ன்னா ஒரு தேவதையை திருப்தி செய்ய பண்ணுவது. இங்கே தேவதை யார்ன்னா அக்னி, மஹேந்திரன்.
எதை ஹோமம் செய்யறோம்?
அக்னிக்கு புரோடாசம்; மஹேந்திரனுக்கு தயிர், பால்.
புரோடாசம்? அரிசி குத்தி, மாவாக்கி, வறுத்து கொஞ்சம் நெய், தண்ணீர் விட்டு கிளரி அதை உருண்டையா ஆமை போல பிடிச்சா அது புரோடாசம். அதை தயார் செய்யறப்ப பொரி மாவு மாதிரி நல்ல வாசனையா வரும்!
மஹேந்திரன் யாரு? இந்திரனேதான். அவனோட இன்னொரு ரூபம்.

ரொம்ப சுலபமா இப்படி ஹோமம்ன்னு சொன்னாலும் இதை செய்து முடிக்க 3-4 மணி நேரம் ஆகும். தயிர் ன்னா மாட்டையும் கன்னுக்குட்டியையும் மேய்வதற்கு புங்கிளையால ஓட்டி ன்னு ஆரம்பிச்சு விலாவரியா போகும். ஒவ்வொரு செயலுக்கும் மந்திரமுண்டு. மாட்டையும் கன்னுக்குட்டியையும் கட்டிப்போட்டு பால கறந்து மீதி பாலை கன்னுக்குட்டி குடிக்க விட்டு, பாலை காய்ச்சி உறை குத்தி... ப்லா ப்லா ப்லா.... அப்புறம் தர்ப்பை அறுக்க வாய்க்காலுக்கு போய் மந்திரம் சொல்லி அறுத்து வந்து... நெல் மூட்டையோட வண்டியை ஓட்டி வந்து இறக்கி, நெல்லை குத்தி..... புரியுது இல்லை?
இது எல்லாம் நீங்க செய்யறிங்களான்னா...

இப்ப இதெல்லாம் பாவனையாதான் நடக்குது. தர்ப்பை விளையற வாய்க்காலையும் காணலை; புரசங்கிளை ஒடிக்க மரங்களும் இல்லை; கன்னுக்குட்டி, மாடு விரட்ட புல்காடும் இல்லை. எல்லாம் கான்க்ரீட் காடாயாச்சு! என்னிக்காவது ஒரு நாள் முழுசா செய்ய எனக்கும் என் பையனுக்கும் ஆசை. பார்க்கலாம். நாராயணன் விட்ட வழி!

அமாவாசை இஷ்டிக்கு முன் தினமே (-அமாவாசை அன்னிக்கு) இஷ்டி ஆரம்பிச்சுடும். பால் காய்ச்சி தயிர் ரெடி பண்ணனுமே! அந்த மாலை வேளை அரிசி கஞ்சியால அக்னி ஹோத்திர ஹோமம். அக்னி ஹோத்திரம் முடிச்சு இஷ்டி ஆரம்பிச்சு தயிர் உறை குத்தி மூடி வெச்சுட்டு அன்னைய வேலை ஓவர். அடுத்த நாள் காலை அக்னி ஹோத்திரம் முடித்து இஷ்டியை தொடர்ந்து நடத்துவோம். காலை பால் கறந்து காய்ச்சி; நெய் காய்ச்சி, புரோடாசம் எல்லாம் தயார் செய்து ஹோமங்கள் நடக்கும்.

இந்த இஷ்டி செய்ய நாலு பேர் வேணும். ஒத்தர் போஸ்ட் பேர் ஹோதா. ஹிஹிஹி... கேள்வி பட்டு இருக்கோம் இல்லை? ஹோதாவோட வேலை தேவதைகளை மந்திரம் சொல்லி கூப்பிட்டறது. அத்வர்யு என்கிறவர்தான் ஹோமங்களை செய்து கொண்டு போகிறவர். ஆக்னீதரர் ன்னு ஒத்தர்; ஈட்டிக்காரன் மாதிரி ஒரு ஈட்டியை பிடிச்சுகிட்டு நிப்பார். இந்த ஈட்டி வழியாதான் தேவதைகள் கீழிறங்கி கொடுக்கிற ஹவிஸை வாங்கிக்கொண்டு போவாங்க.

சாதரணமா ஹோமங்களை செய்கிறவங்க செய்கிற ஐயர்கிட்டே பவர் ஆப் அடார்னி கொடுத்துட்டு வரவங்களை பாத்து வரவேத்து அரட்டை அடிச்சு கொண்டு இருப்பார் இல்லையா? அதெல்லாம் இங்கே நடக்காது. முழு ஹோமத்துக்கும் அக்னி பக்கத்தில இவரும் உக்காரணும். மந்திரங்கள் பலது உண்டு. சரியான இடத்தில அதெல்லாம் சொல்லணும். வேதம் படிக்காம இதெல்லாம் செய்ய முடியாது. அவருக்குன்னு வேலைகளும் உண்டு.

இவருக்கு எஜமானன் ன்னு பெயர். இவருடைய பத்னிக்கும் வேலை உண்டு. நெல் குத்தி அரிசி ஆக்குகிறது; அதை மாவு ஆக்குகிறது எல்லாம் இவங்க வேலை. (ப்லூரல் இல்லைங்க, ஒரு மரியாதைக்கு இவங்கன்னு சொன்னேன்!)
ஹோமம் செய்கிற பொருட்கள் எல்லாம் சுத்தமா இருக்கணும் இல்லையா? அது எப்படி சுத்தமாகும்ன்னா யக்ஞ பத்னி கண்ணால நெய்யை பார்க்கிறதால சுத்தமாகும். இப்ப சொல்லுங்க பெண்களுக்கு வைதிக மதங்கள் முக்கியத்துவம் கொடுக்காம ஒடுக்குதுன்னு.
சாதாரணமா பெண்கள் வேத மந்திரங்கள் சொல்வதில்லை, ஹோமங்கள் செய்வதில்லை என்றாலும் இங்கே அவங்க வேத மந்திரங்கள் சொல்லணும். ஹோமங்கள் செய்யவும் செய்யணும்.

பதிவு நீண்டு போச்சு; இன்னொரு சமயம் தொடரலாம்.


Monday, July 11, 2011

உரத்த சிந்தனை - 2



தலை சுத்தல் இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று இரவு பங்களூரில் இருந்து பஸ் பயணம் அவ்வளவு சரியாக அமையவில்லை.
இந்த பங்களூர் பயணம் நாராயணன் எனக்கு அவ்வப்போது கொடுக்கிற பாடங்களில ஒண்ணா அமைஞ்சது!
ட்ரஸ்ட் க்கு கணிசமான வைப்பு நிதி சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றியதால் அது சம்பந்தமாக பங்களூர் போக முடிவாயிற்று. டிரஸ்டிகளில் ஒருவருடைய நண்பர் ரா. அங்கே இருக்கிறார். அவருடன் கொஞ்சம் சுற்றலாம் என்று முடிவாச்சு. தொலை பேசி மூலம் மூன்று வாரம் முன் பேசியபோது ஜூலை 2, 3 ஊரில் இல்லை, 9-10 பரவாயில்லை என்றார். மற்ற பங்களூர் நண்பர்கள் சிலரும் அப்படியே சொன்னதால் 9-10 என்றே முடிவாச்சு. பேருந்து பயணச்சீட்டும் வாங்கியாச்சு!
கூகுள் மேப் எல்லாம் பாத்து யார் யார் எங்கே இருக்காங்கன்னு ஒரு அலசலும் முடிச்சு ஒரு மாதிரி பயண திட்டத்தை வகுத்தாச்சு. ஏறக்குறைய பங்களுரை வலம் வரா மாதிரிதான் இருந்தது!.
போன புதன் நண்பர் ரா உடன் பேசும் போது “மன்னிக்கணும், ஞாயிறு ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்; அது நினைவு இல்லாம ஒத்துக்கொண்டு விட்டேன்” என்றார்.
‘முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம், நம்ம வேலை சுத்துவது. மீதி எல்லாம் நாராயணன் வேலை’ என்று போயே தீருவது என்று முடிவு செய்தேன். ஒன்றும் இல்லாவிட்டாலும் நண்பர்களை பார்த்து பாட்டரிகளை ரீ சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். நடுவில் சக ட்ரஸ்டி பேசியதில் நண்பர் ரா நேரம் எப்படி ஒதுக்குவது என்று பார்க்கிறேன் என்றார்.
அது சரி, காலை எங்கே போவது? நண்பர்தான் பிசி என்று சொல்லிவிட்டாரே? என் மகனுடன் பேசியதில் ஒருவரை பற்றி முன்னால் அவன் பேசியதை நினைவு படுத்தினான். பக்கத்து ஊரில் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் ஆக இருந்த ஒருவரை முன்னால் அங்கே போன போது சந்தித்து இருக்கிறான். பொறி துயில் ஆழ்துனர்களை இவர்கள் சில காரணங்களால அதிகம் சந்திப்பது இல்லை. ஆனாலும் என்னை அவர் நினைவு வைத்துக்கொண்டு இருந்தார். எனக்குத்தான் மறந்துவிட்டது! நான் பங்களூர் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று ஒரு ஸ்டாண்டிங் இன்விடேஷன் கொடுத்து வைத்து இருந்தார். சரி அவர் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து போன செய்தால் அவர் சென்னையில் இருந்தார். ஒண்ணும் பிரச்சினை இல்லை, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இரவு வந்துவிடுவேன்; மனைவி கொஞ்சம் வெளியே கோவிலுக்கு போக வேண்டி இருக்கும். வேற ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்றார். முகவரி வாங்கிக்கொண்டு போய் சேர்ந்தேன். இனிமையான வரவேற்பு! காலை கடன்கள் அனுஷ்டானங்கள் முடித்து அலுப்பு தீர கொஞ்சம் படுத்து எழுந்தாச்சு! நண்பர் ரா வும் வேலைகளை ஒருவாறு ஏறக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். வெளியே கிளம்பினோம். ஒருவரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது. முன் ஏற்பாடு இல்லாததால் மற்றவர்கள் ஊரில் இல்லை, வீட்டில் இல்லை போன்ற செய்திகளே கிடைத்துக் கொண்டு இருந்தன. சரி நாராயணன் விட்ட வழி என்று வீட்டுக்கு வந்து விட்டோம். மதிய உணவுக்குப்பின் வெளியே கிளம்பி நண்பரை சந்தித்து உரையாடி அவர் குழந்தையுடன் ரகளை செய்ததில் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிட்டது! இரவு பங்களூர் வட கிழக்கு கோடியில் இருந்த நண்பர் வீட்டுக்கு போய் சேர்த்தேன். அங்கு இன்னொரு சின்ன குழந்தை! ஆநந்தமாக பொழுது போயிற்று!
காலை இவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது கணிசமான ஒரு தொகைக்கு செக் கொடுத்தார்! முந்தைய நாள் தங்கிய வீட்டு நண்பரை பார்க்க முடியவில்லை என்று அங்கே மீண்டும் போக திட்டமிட்டு இருந்தேன். அவர் வெகு ஆர்வத்துடன் பல விஷயங்களை கேட்டுக்கொண்டார். கடைசியில் கிளம்பும் முன் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் ‘நல்ல காரியம் எதுக்காவது கொடுங்க’ என்று இவரிடம் கொடுத்து இருந்த கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ட்ரஸ்ட் க்கு கொடுத்துவிட்டார்! அங்கே சந்திக்க வந்த நண்பர் இன்னொருவர் மூலமும் இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது! கடைசியில் நிதிக்காக கிளம்பிய காரியம் நிறைவேறி விட்டது!
எப்படி நிதி திரட்டலாம் என்று நினைத்தேனோ அப்படி இல்லாமல் வேறு வழியில் வந்து சேர்ந்துவிட்டது!
இப்படித்தான் அடிக்கடி இந்த நாராயணன் படுத்துகிறான்!
இதானே கீதையில் கண்ணன் சொன்னது? கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது! பலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர் பாராதே!


Monday, May 2, 2011

நாந்தீ ஶ்ராத்தம்.




இன்னொரு வலைப்பூவில் பின்னூட்டம் போட விஷயம் பெரிதாக இருக்கிறது என்பதால் இங்கே பதிவு:

சுப கர்மாக்கள் செய்யும் போது எல்லா தேவர்கள் ஆசியுடன் செய்கிறோம். குல தெய்வ வழிபாடு உண்டு. அதே போல பிருக்களின் ஆசிர்வாதங்களுடனும் செய்ய வேண்டும். இதுவே சுமங்கலி ப்ராத்தனை என்றும் நாந்தீ என்றும் அறிப்படுகிறது. இது சூத்திரங்களில் விதிக்கப்படவையே ஆகும். அதனால் அச்சானியமாக இருப்பதாக நினைத்து விட்டுவிடக்கூடாது. இதை சூத்திரங்களில் 'ப்ரம்மணான் போஜயித்வா, ஆஶிஷோ வாசயித்வா' என்ற வாக்கியங்களும் உணர்த்துகின்றன.

பித்ருக்களில் பலவகை உண்டு.அதில் நாந்தீமுகர் என்பவரே சுப காலங்களில் ஆராதிக்கத்தக்கவர். சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை என்பதைப்போலவே இவையும் செய்யப்பட வேண்டும். ஶ்ரத்தை உள்ளோர் இன்னும் அன்ன ரூபமாகவே - அதாவது ஹவிஸ் வைத்து நாம் வழக்கமாக செய்யும் ஶ்ராத்தம் என்பதை அறிவது போலவே செய்ய வேன்டும். வித்தியாசங்கள் உண்டு. உபவீதத்தை இடமாக போட்டுக் கொள்வதில்லை. எள்ளைத்தொடுவதில்லை. பதிலாக மங்கள அக்ஷதை பயனாகும். வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு-பிதாமஹ-ப்ரபிதாமஹ என்பதற்குப்பதிலாக - நாந்தீமுக என கூறப்படும்.

பித்ருக்கள் பலவகையாக இருப்பதுபோலவே விஶ்வேதேவர்களும். இங்கே சுப காரியங்களுக்கு உள்ளோர் ஸத்ய வஸு என பெயருடையோர்.

இன்னொரு வித்தியாசம் இங்கு ஸ்த்ரீக்களே முதலில் வரிக்கப்படுவர். அவர்களுக்கே முதலில் பூஜை. அதே போல வழக்கமாக கீழே ஆரம்பித்து மேலே அன்னை-பாட்டி-கொள்ளுபாட்டி என்று போகாமல்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று போகாமல் மேலிருந்து கீழே வரிசையாக வரும்.
ஹோமத்திலும் இதே போல் நாந்தீமுக என்ற அடைமொழியுடன் ஹோமம்.

உத்தமமானது விதிவத்தாக ப்ராம்ஹணர்களை வரித்து வருட ஶ்ராத்தம் போல செய்வது.

மத்திமம் ஆம ஶ்ராத்தம் என வாழை இலையில் அரிசி வாழைக்காய், தக்ஷிணை, வஸ்த்ரம் வைத்து கொடுப்பது.
இதுவும் இல்லாவிட்டால் நிறைய தக்ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் செய்யச் சொல்ல வேண்டும். சாப்பாடு போட வேண்டிய இடத்தில் காப்பிக்குக்கூட வராத பணத்தை கொடுத்து நாந்தீ செய்ததாக எண்ணக்கூடாது.