Pages

Showing posts with label *குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label *குட்டிக்கதைகள். Show all posts

Friday, December 8, 2017

கிறுக்கல்கள் -170





தானே குழப்பத்தில் இருந்து கொண்டு இருந்தாலும் தன்னையே ஆன்மீக குரு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களை கண்டு மாஸ்டர் சிரிப்பார்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவர் பாதசாரிகளுக்கான வழிகாட்டி என்று புத்தகத்தை எழுதி வெளியிட்ட நாளிலேயே சாலையில் விபத்தை உண்டாக்கி இறந்து போன ஒருவரைப்போல என்பார்!

Thursday, December 7, 2017

கிறுக்கல்கள் -169





ஒரு பிரசங்கி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு சென்றார்.
சீடர்கள் மாஸ்டரை கேட்டார்கள் - இந்த சுற்றுப்பயணம் அவரது பார்வையை விசாலமாக்குமா?
மாஸ்டர் சொன்னார்: இல்லை அவரது குறுகிய மனப்பான்மையை இன்னும் அதிக இடங்களில் பரப்பும்!

Wednesday, December 6, 2017

கிறுக்கல்கள் -168





மாஸ்டர் சொன்னார்: பலரும் உழைப்பால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்கையால் விளைவது அவரும் மற்றவரும் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது மட்டுமே. உண்மையில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது விழிப்புணர்வால்தான். விழிப்புணர்வு இருக்குமிடத்தில் பிரச்சினைகளே ஏற்படுவதில்லை!

Tuesday, December 5, 2017

கிறுக்கல்கள் -167





சரியான பார்வை என்கிறது ஏன் அவ்வளவு கஷ்டம் என்று யாரோ கேட்டார்கள். மாஸ்டர் கதை சொன்னார்.

சாம் ஐரோப்பா பயணம் முடித்து திரும்பினார்.அவருடைய கம்பனி 'டிட்டி ஆண்களின் ஜட்டி' இல் பார்ட்னராக இருந்தவர் ஆர்வத்துடன் கேட்டார்: சாம், ரோமுக்கு போக முடிந்ததா?
! போனேனே?
அட! போப்பை தரிசனம் செய்தீர்களா?
தரிசனமா? அவரோட தனியே ஆடியன்ஸ் கிடைச்சதாக்கும்!
அடாடாடா! அவர் எப்படி இருக்கார்?
ம்ம்ம்ம்? அவர் 110 சென்டி மீட்டர்ன்னு நினைக்கறேன்!

Monday, December 4, 2017

கிறுக்கல்கள் -166





மதத்தைக்குறித்த மாஸ்டரின் இன்னொரு குறை அது மனிதர்களை பல பிரிவுகளாக பிரித்துவிட்டதுதான். ஒரு சின்ன கதையை அடிக்கடி நினைவுகொள்வார்.

ஒரு சிறுவன் தன் சிறு தோழியிடம் கேட்டான்: நீங்கள் ப்ரஸ்பிடேரியனா?

மூக்கை தூக்கியபடி பதில் வந்தது: ச்சேச்சே! இல்ல, நாங்கள்ளாம் அது போல வேற ஏதோ அருவருப்பான ஒண்ணு!

Friday, October 27, 2017

கிறுக்கல்கள் -165





இரண்டு யூதர்கள் வறுமையில் வீழ்ந்தனர்.

ஒருவர் சொன்னார் கவலைப்படாதே! எல்லாம் அவர் கொடுப்பார்.

மற்றவர் சொன்னார்: உண்மைதான். அவர் எல்லாம் கொடுக்கும் முன் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

Thursday, October 26, 2017

கிறுக்கல்கள் -164





சீடர் ஒருவரிடம் புதிதாக வந்த ஒருவர் கேட்டார் "எனக்கு மாஸ்டர் புனிதமாகிவிட்டாரா என்று இப்போதே தெரிய வேண்டும்.

சீடர் கேட்டார் "எதற்கு? அதனால் என்ன ஆகப்போகிறது?”

அவரே புனிதத்தை அடையவில்லை என்றால் நான் ஏன் அவரை பின் பற்ற வேண்டும்?”

அவர் புனிதராகி இருந்தால் மட்டும் ஏன் நீங்கள் அவரை பின் பற்ற வேண்டும்? அவர் அடிக்கடி சொல்லுவார் 'நீ என்றைக்கு ஒருவரை பின் பற்ற ஆரம்பிக்கிறாயோ அன்றே உண்மையை பின் பற்றுவதை நிறுத்திவிட்டாய்!”

சற்று நேரம் கழித்து சொன்னார்: “பாபிகளும் சமயத்தில் உண்மை பேசுகின்றனர். புனிதர்களும் சமயத்தில் மக்களை திசை திருப்பி விடுகின்றனர். என்ன சொல்லுகிறார்கள் என்பதை கவனி. சொல்லுபவரை அல்ல!”

Wednesday, October 25, 2017

கிறுக்கல்கள் -163




ஒரு நாள் ஒரு சீடர் மாஸ்டரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். நீங்கள் புனிதர் ஆகிவிட்டீர்களா?

மாஸ்டர் சொன்னார், எனக்கு எப்படித்தெரியும்?

உங்களுக்கே தெரியாது என்றால் யாருக்குத்தான் தெரியும்?

மாஸ்டர் சொன்னார்: சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் போய் நீ சாதாரணமாக இருக்கிறாயா என்று கேள்; ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார். அப்படியே பைத்தியக்காரர் ஒருவரிடம் போய் கேள். அவரும் ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார்!

குறும்பு சிரிப்புடன் தொடர்ந்தார்: நீ பைத்தியம் என்று உனக்குத்தேரிந்தால் நீ அவ்வளவு ஒன்றும் பைத்தியம் இல்லை அல்லவா? அதே போல நீ புனிதனா என்று யோசிக்க வேண்டுமானால் நீ அவ்வளவு புனிதன் இல்லை சரியா? புனிதத்துவம் எப்போதும் அகங்காரம் போவதில் இருக்கிறது.

Tuesday, October 24, 2017

கிறுக்கல்கள் -162




மாஸ்டர் ஒரு நாள் திடீரென்று "தீவினையை எதிர்த்து போராட நீங்கள் தயாராக மாட்டீர்கள், அது செய்யும் நல்லதை பார்க்க முடியும் வரை!” என்றார்.

தீவினை நல்லதா என்று குழம்பினர் சீடர்கள். ஒரு நாள் முழுதும் மாஸ்டர் இதை கண்டுகொள்ளவே இல்லை.  

அடுத்த நாள் இரண்டாம் உலகப்போரின் ரேவன்ஸ்ப்ருக் யூத ஜெயில் முகாமில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஒரு பிரார்த்தனையை வெளியிட்டார். ஒரு புத்தகத்தின் அட்டையில் எழுதப்பட்டிருந்த அதில் பின் வருமாறு கண்டு இருந்தது.

இறைவா! நல்லதையே நினைக்கும் ஆண்கள் பெண்களை மட்டுமல்ல கெட்டதையே நினைக்கும் நபர்களையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் எங்களுக்கு இழைத்திருக்கும் தீங்குகளை மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம். அதனால் எங்களிடம் உருவாக்கி இருக்கும் நல்லதையும் நினைத்துப்பாருங்கள்: எங்கள் நட்பு, விசுவாசம், தன்னடக்கம், எங்கள் தைரியம், பெருந்தன்மை, விசாலமான ஹ்ருதயம்... தீர்ப்பு சொல்லும் நாளில் இவை அனைத்தின் பலன்களும் அவர்களுக்கு வெகுமதியாகவும் மன்னிப்பாகவும் இருக்கட்டும்.”

Monday, October 23, 2017

கிறுக்கல்கள் -161





ஆன்மிகத்தில் விசுவாசத்துடன் இருப்பதைவிட உண்மையாக இருப்பதே நல்லது என்றார் மாஸ்டர்.

என்ன வித்தியாசம் என்று கேட்டார் ஒருவர்.

உண்மையாக இருப்பதென்றால் எப்போதும் உண்மைக்கு திறந்த மனத்துடன் இருப்பது. விசுவாசத்துடன் இருப்பதென்றால் தன் பிரசாரத்தை தானே முழுக்க நம்புவது.

Saturday, October 21, 2017

கிறுக்கல்கள் -160




ஆன்மிகத்தில் செயலைவிட சரணாகதிக்கு அதிக மதிப்பிருக்கிறது என்றார் மாஸ்டர்.
நீந்தத்தெரியாத ஒருவன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான். அவன் நான் முழுகிவிடுவேனோ என்று பயந்து கை காலை ஆட்டிக்கொண்டு இருந்தால் பதட்டத்தில் தண்ணீரை குடித்து கடைசியில் முழுகியும் விடுவான். மாறாக தன் எண்ணங்களையும் செயல்களையும் சரணாகதி செய்து சும்மா இருந்து உடல் கீழே செல்ல அனுமதித்தால் அது தானாக மேலே வந்துவிடுகிறது! அது போலத்தான் ஆன்மீகத்திலும்!

Friday, October 6, 2017

கிறுக்கல்கள் -159





யாரோ மாஸ்டரை கேட்டார்கள்: ஏன் மதங்கள் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையுடன் இருக்கிறீர்கள்? அது மனிதர்களுக்கு கிடைத்த மிக நல்ல சொத்து அல்லவா?

ஆமாம். மிக நல்லதும் அதுதான். மிகக் கெட்டதும் அதுதான்!

கெட்டதா? என்ன சொல்லுகிறீர்கள்?


பொதுவாக மனிதர்கள் மற்றவர்களை வெறுக்கப்போதுமான அளவு மதத்தை கற்றுக்கொள்ளுகிறார்கள்; மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் அளவு கற்றுக்கொள்வதில்லை.

Thursday, October 5, 2017

கிறுக்கல்கள் -158




தன் உரையில் மாஸ்டர் பழங்கால புலவர் ஒருவரை மேற்கோள் காட்டினார்

உரை முடிந்தபின் அவரை சந்தித்த ஒரு இள வயதான மாது " மனிதர்களை ஏன் மேற்கோள் காட்டுகிறீர்கள்? ஆகமங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம் அல்லவா? அந்த மனிதருக்கு கடவுளை தெரியும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

மாஸ்டர் சொன்னார்: பெண்ணே! கடவுள்தான் ஆகமங்களை உருவாக்கியது என்று நினைத்தால் அதற்கு பல காலம் முன்பே அவர் படைப்பு என்று ஒன்றை உருவாக்கிவிட்டார்

Wednesday, October 4, 2017

கிறுக்கல்கள் -157




கவர்னர் மாஸ்டரை பார்க்க வந்தபோது பத்திரிக்கைகள் மீது செயல்படுத்தப்பட்ட தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தன் ஆட்சேபணையை மாஸ்டர் தெரிவித்தார்.

சமீபகாலமாக பத்திரிகைகள் எவ்வளவு ஆபத்தானவையாக மாறிவிட்டன என்று உங்களுக்குத்தெரியாது என்றார் கவர்னர்.


எப்போதும் தடை செய்யப்பட வார்த்தைகள்தான் ஆபத்தானவை என்றார் மாஸ்டர்.

Tuesday, October 3, 2017

கிறுக்கல்கள் -156





ஒரு வியாபார நிறுவன செயலர் மாஸ்டரிடம் கேட்டார்: வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன?

மாஸ்டர் சொன்னார்: தினமும் ஒருவரையாவது மகிழ்ச்சி அடையச்செய்!

ஒரு நிமிடம் கழித்து சொன்னார்: அந்த ஒருவர் நீயாக இருந்தாலும் பரவாயில்லை.


இன்னொரு நிமிடம் யோசித்துவிட்டுச்சொன்னார்: அந்த ஒருவர் குறிப்பாக நீயாக இருந்தால் மிக நல்லது!

Monday, October 2, 2017

கிறுக்கல்கள் -155




மாஸ்டரின் கருத்தில் உலகில் நிறைய பேர் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் பலரும் கஷ்டப்படுவதில் ரகசியமாக இன்பம் காண்பதுதான்!

அவருடைய நண்பர் தன மனைவியைப்பற்றி சொன்னதை மேற்கோள் காட்டினார்: நண்பர் சொன்னார்: அன்பே நீ ஏன் ஊரை விட்டுப்போய் நல்லபடியாக பொழுதை கழிக்கக்கூடாது?

மனைவி சொன்னார்: ம்க்கும். உனக்கு நல்லாவே தெரியும்; நான் நல்லபடியாக பொழுதை கழிப்பதில மகிழ்ச்சி அடையறது இல்லே!

Friday, September 29, 2017

கிறுக்கல்கள் -154





நான் செய்திருக்கிற இந்த பெரிய பாவத்துக்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் ஒருவர்.
அஞ்ஞானமே அதை செய்தது என்று அறிவாயாக என்றார் மாஸ்டர்!

பின்னால் சொன்னார்: இப்படியாகத்தான் நீ மற்றவர்களையும் உன்னையும் மன்னிக்க கற்பாய்.
அதன் பின் பழிக்குப்பழி என்றோ பிராயச்சித்தம் என்றோ தேட மாட்டாய்!

Thursday, September 28, 2017

கிறுக்கல்கள் -153





வித்தியாசமான வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும்போது கெட்டது நல்லதே; பாபம் என்பது அருளுக்கு ஒரு வாயில் என்றார் மாஸ்டர்!

சீடர்கள் திகைத்துவிட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: கார்தேஜ் பழைய ரோம சாம்ராஜ்யத்துக்கு ஒரு முள்ளாக இருந்தது. கடைசியில் ரோம் அதை முற்றிலுமாக அழித்துவிட்டது. அதன் பின்னரே அது அமைதியாக இருக்க முடிந்தது… கூடவே அது மெதுவாக ஊளை சதையும் அழுகலுமாக நாறத்தொடங்கிவிட்டது!

உலகத்தில் கெட்டது என்று ஒன்றே இல்லாமல் போகுமானால் மனித உள்ளம் அழுகக்கூடும் என்றார் மாஸ்டர்!

Wednesday, September 27, 2017

கிறுக்கல்கள் -152





மாஸ்டரின் சீடர்கள் சிலர் ஒரு பிரபல மதத்தலைவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மாஸ்டரோ மௌனம் காத்தார்.

இது பற்றி அவரிடம் பின்னால் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: பிறர் மீது தன் சக்தியை காட்டுபவர்கள் உண்மையான மத குரு இல்லை.
பின்னே? மதத்தலைவரின் வேலைதான் என்ன?
சட்டம் போட அல்ல; ஊக்கமூட்ட. வற்புறுத்த அல்ல; விழிப்புணர்வு ஊட்ட!

Wednesday, September 13, 2017

கிறுக்கல்கள் -151




ஒரு விஞ்ஞானி நவீன அறிவியலின் சாதனைகளைப் பற்றிய டாக்குமெண்டரி ஒன்றை மாஸ்டருக்கு காட்டினார். “இதோ பாருங்கள். இப்போது நாங்கள் பாலைவனத்தில் நீரூற்றி சோலையாக்க முடியும். நயாகரா நீர் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி சக்தியை சேமிக்க முடியும். தொலை தூரத்தில் இருக்கும் நக்ஷத்திரத்தின் தன்மையை இங்கிருந்து கணிக்க முடியும். அணுவின் கூறுகளை ஆராய முடியும். சீக்கிரத்தில் நாங்கள் இயற்கையை வென்று விடுவோம்.” 

மாஸ்டருக்கு பிரமிப்பு ஏற்பட்டாலும் சிந்தனை வயப்பட்டார்.

பின்னால் சொன்னார்: “இயற்கையை ஏன் வெல்லனும்? அது நம் நண்பன்.இருக்கும் ஆற்றலை எல்லாம் வெல்ல முடியாத ஒன்றை வெல்வதில் காட்டினால் என்ன? பயம்! பயத்தை எப்போது வெல்லப்போகிறோம்?”