Pages

Sunday, July 31, 2022

காஶி யாத்திரை - 32 கயா- 3




அடுத்த நாள் விஷ்ணுபாத ஶ்ராத்தம்.
நாங்கள் கயையில் 3 ஶ்ராத்தங்கள் செய்தோம். மொத்தம் 126 ஓ என்னவோ ஶ்ராத்தங்கள் கயையில் செய்ய இருக்கின்றனவாம். அனைத்து இடங்களும் இந்த விஷ்ணு பாத கோவிலை மையமாகக்கொண்டு சுற்றி அமைந்துள்ளன. கயை நகரமே
மங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்குனி நதியும் சூழ அமைந்துள்ளது. நதிக்கு அந்தப்பக்கமும் குன்றுகளை பார்த்தேன். இந்த ஶ்ராத்த இடங்கள் அனைத்தும் இந்த குன்றுகளிலும் கூட இருக்கின்றன. அவற்றுக்கு கஷ்டப்பட்டே ஏறிப்போக வேண்டும். அனைத்து சாமான்களையும் கூடவே தூக்கிகொண்டு போக வேண்டும். இந்த காலத்தில் எவ்வளவு சிரம சாத்தியம்!
இன்று மாத்ரு ஷோடசி சொல்லி பிண்டங்களை வைக்க வேண்டும். அதனால் கூடுதல் பிண்டங்கள் வேண்டும் என்று வாத்தியார் சொன்னார்.
இன்றும் காலையில் பையரும் நானும் கிளம்பிப்போய் தீர்த்தம் கொண்டு வந்தோம். நேற்று நடந்த ஶ்ராத்தத்துக்கும் இன்றைய ஶ்ராதத்துக்கும் கூடுதல் பிண்டங்களே வித்தியாசம். ஏறக்குறையே அதே நபர்கள்தான் இன்றைக்கும் வந்திருந்தனர். சாப்பிடும் நேரத்துக்கு குழாய் ரிப்பேர்காரர் வர கதவுகளை சார்த்திப்பார்த்து சரிப்பட்டு வராமல் அவரை அப்புறம் வரச்சொன்னோம்.
ஶ்ராத்தம் ஒன்றரை மணிக்கு முன்பு முடிந்துவிட்டது. மந்திரங்கள், நடைமுறை எல்லாம் இப்போது வெகுவாகவே பழக்கம் ஆகிவிட்டு இருந்ததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த பிண்டங்களை விஷ்ணு பாத கோவிலில் வைக்க வேண்டும் என்று கிளம்பிப்போனோம். வந்திருந்த ப்ராம்ஹணர்களில் ஒருவர் நான் உதவி செய்ய வருகிறேன் என்றார். சரி என்று அழைத்துக்கொண்டோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி! செல்போன் போன்ற எதையும் அனுமதிக்கவில்லை. உள்ளே நடை சார்த்தி இருந்தது! இதோ திறந்து விடுவார்கள் என்றார்கள். அந்த இதோ இரண்டரை வரை ஆயிற்று!
என்னடா என்று பார்த்தால் பின்னல் தினமுமே ஒன்று முதல் இரண்டரை வரை நடை சார்த்தி சுத்தம் செய்து விஷ்ணு பூஜை செய்கிறார்கள் என்று தெரிய வந்தது. இவ்வளவு முறை இங்கே வரும் வாத்தியாருக்கும் இது தெரியவில்லை. போகிறது அந்த உள்ளூர் ப்ராம்ஹணராவது சொல்ல வேண்டாமோ? கொஞ்சம் சுருக்க வந்திருந்தால் முடித்திருக்கலாம் போல தோன்றியது.
நாங்கள் போன போது ஓரிருவரே இருந்தனர். இதோ என்று சொன்னதால் முன்னால் க்யூவில் நின்றோம். அந்த இதோ இப்போதில்லை என்று தோன்றிய போது நல்ல கூட்டம் கூடிவிட்டது. திருப்பதி மாதிரியான மக்கள். நானும் பையரும் கிளம்பிவிட்டோம்.
ஶ்ராத்தம் குறித்த தொடரில்
/ ஶ்ராத்தத்தின் போது உபவீதியாக ‘ஈசான விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதில் ஈசானன், விஷ்ணு, பிரம்மா, குகன், ஆஹவனீயம் தக்ஷிணாக்கினி என்று மூன்று அக்னிகள், சூரியன், சந்திரன், பிள்ளையார், க்ரௌஞ்ச மலை, தேவ இந்திரன், அகஸ்தியர், கச்சியப்பர் இவர்களுடைய பாதங்களை பித்ருக்கள் முக்தி பெறுவதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். (இந்த பாதங்கள் கயையில் சிலா ரூபமாக உள்ளன.) /
என்று எழுதி இருந்தேன் நினைவிருக்கிறதா? இவற்றை போய் பார்த்தோம். பெரிய்ய்ய்ய கல் மண்டபத்தில் இவை எல்லாம் கல் தூண்கள் ரூபத்தில் உள்ளன. பாதி தூண்களில் பெயர் எழுதி இருக்கிறது. மீதியில் இல்லை. எப்படியும் அவற்றை வேறு படுத்திப்பார்க்க ஒரு அடையாளமும் காணோம். தரை மேடு பள்ளமாக இருக்கும். அண்ணாந்து பார்த்துக்கொண்டு நகர்வது உசிதம் அல்ல. சுற்று முற்றும் பார்த்துவிட்டு பின் வேறு இடம் போய் நின்றுக்கொண்டு பார்ப்பதே உசிதம்.
விஷ்ணுபாத கோவில் குறித்து பார்க்கலாம். சுருங்கச்சொல்ல… அழகு!
விஷ்ணுபாத் என்ற குன்றின் மீது விஷ்ணுவின் பாதம் உள்ளது. கயாசுரனைக் கொல்லும் போது, ஒரு காலை இக்குன்றின் மீதும், அடுத்த காலை அசுரனின் மார்பின் மீது வைத்ததால், அப்பாதம் உருவானது என்று ஐதீகம். இப்பொழுதுள்ள விஷ்ணு பாத கோவில் அஹல்யாபாய் ஹோல்கர் என்ற இந்தூர் மஹாராணியால் 1780ல் கருங்கற்களினால் கட்டப்பட்டதாகும். ஆமாம். காசி விஸ்வநாத ஆலயத்தை கட்டிய அதே அஹல்யாபாய் ஹோல்கர்தான்.
அஷ்டகோண வடிவில் 100 உயரத்தில் உள்ள பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 16 இன்க் இருக்கலாம். கூரை வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட பல தூண்களால், இரண்டு அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் பிரகாரங்கள், சன்னதிகள் உள்ளன. பூஜையின் போது, வெள்ளியினால் செய்யப்பட்ட அஷ்டகோணத்தில் உள்ள பீடத்தைச் சுற்றிலும் இருக்கும்படி வைத்து அபிஷேகம், ஆராதனை செய்து அலங்காரம் செய்கிறார்கள்.

இங்கே இன்னொரு விசேஷமான கோவில் மங்கள–கௌரி கோவில். சக்தி பீடம்: சதியின் உடல் பாகங்களில் இரு மார்பகங்கள் இங்கு விழுந்ததால் புனிதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் இரு உருண்டையான கற்கள் கோவிலில் காணப்படுகின்றன என்கிறார்கள்.. இக்கோவில் சுற்றும் இடிந்த பகுதிகள் காணப்படுகின்றன. கோவில் அக்‌ஷய்ய வடம் போகும் வழியில் சற்றே விலகி இருக்கிறது என்றூ பின்னால் தெரிய வந்தது. முன்னால் தெரிந்திருந்தால் போயிருக்கலாமோ என்னவோ. முன்னே சொன்னது போல கோவில்கள் பற்றி சிந்தனையே இல்லை.

சரி சரி… அதோ கொஞ்சம் பரபரப்பு. நடை திறக்கிறார்கள் போலும். நானும் பையரும் போய் க்யூவில் சேர்ந்து கொண்டோம். அடித்துப்பிடித்து மக்கள் முன்னே போனார்கள். இதற்கு அங்கே உள்ளே இருந்தவர் ஒருவரிடம் அழைத்து வந்த ப்ராம்ஹணர் ஏதோ ஜாடை காட்டிவிட்டார். அவரும் கூப்பிட்டு இங்கே உக்காருங்கள் என்று உட்கார்த்தி வைத்துவிட்டார். கிழக்கே பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்துவிட்டோம். நேரடியாக விஷ்ணு பாதத்தில் சமர்ப்பணம் என்பதால் தர்ப்பை போடுவது ஆவாஹனம் என்பது இல்லை. அதே போல வரிசை இல்லை. அந்த அஷ்ட கோண தொட்டியில் போட்டால் போதுமானது என்றாலும் முடிந்த வரை விஷ்ணு பாதத்திலெயே போட முயற்சி செய்தேன். 10 நிமிடங்களில் மொத்த கூட்டமும் காலி! அப்புறம் நாங்கள் மட்டுமே இருந்தோம். எல்லாரும் அவரவர் கொண்டு வந்த பிண்டங்களை மூட்டையில் இருந்து கொட்டிவிட்டு தக்‌ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். நிதானமாக செய்து முடித்து பண்டாவுக்கும் கூட்டி வந்த ப்ராம்ஹணருக்கும் தக்‌ஷிணை கொடுத்து மீண்டோம். மூன்றே கால் போல சாப்பிட்டோம்.
அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.

Friday, July 29, 2022

காஶி யாத்திரை - 31 கயா- 2




12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள்.
இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்‌ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆமாம் அதில் ஒருவர் மிகவும் வயதானவர். பையாஜி என்று மற்றவர்கள் மிகவும் மரியாதையுடன் அவரை நடத்துகிறார்கள். சின்ன குழந்தைக்கு பூணூல் இன்னும் போடவில்லை சும்மா வந்து இருந்தாற்போல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் யாரோ அழைத்துப்போய்விட்டார்கள்.
இந்த கயா பிராமணர்களைப் பற்றி சில விஷயங்களை முன்னாலேயே சொல்லி இருந்தார்கள். இவர்களுடைய தேசாசாரம் நமக்கெல்லாம் ஒத்து வராது. இவர்கள் எதையும் தூக்கி குடிப்பதில்லை. எச்சில் செய்தே குடிக்கிறார்கள். நம் பக்கத்து ஶ்ரார்த்த உணவு இவர்களுக்கு சரிப்பட்டு வருவதில்லை என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அதெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நம்முடைய சாப்பாட்டுக்கு பழகிவிட்டார்கள் என்றும் இரண்டு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டு வாத்தியார் இந்த யாத்திரை போய்விட்டு வந்தவர். அவர் வந்து இவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பால்பாயசம் பூரி ஆகியவை. ஆகவே அதை நிச்சயமாக செய்து விடுங்கள் மற்றபடி நம் சௌகரியம் போல் செய்யலாம் என்று சொல்லியிருந்தார். பெண்கள் அதற்கு சரியாகவே தயார் செய்து கொண்டிருந்தனர் நிறைய பால் பாயசமும் பூரியும் செய்து மற்றபடி நம் வழக்கமான தமிழ்நாட்டு ஶ்ராத்த சமையல் ஆக செய்திருந்தார்கள்.
எப்படி இருந்தாலும் நம் பக்க மக்கள் இவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு ஶ்ராத்தத்தில் போக்தாவாக இருந்தால் ஆயிரம் காயத்ரி ஜபம் செய்து அடுத்த கர்மாவுக்கு அருகதை ஆவார்கள் என்று சாஸ்திரம். ஆனால் இவர்களோ தினசரி ஏதோ ஒரு ஶ்ராத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தியாவந்தனம் செய்கிறார்களோ இல்லையோ என்று நம்மவர்கள் சந்தேகிக்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் க்ஷேத்திர வாசிகளை தூஷிக்கக் கூடாது என்று இருக்கிறது. இவர்கள் இல்லாமல் நாம் இங்கிருந்து யாரையும் அழைத்துப் போய் எல்லாம் சரிப்படாது. ஆகவே இவர்களை வைத்து ஶ்ராத்தத்தை நடத்த வேண்டியது.
நம் பக்கத்து சிரார்த்த நடைமுறை அனைத்தும் அந்த தாத்தாவுக்கு தெரிந்து இருந்தது. சரியாக பிரதி வசனமும் சொன்னார். கொஞ்சம் முன்னே பின்னே மற்றவர்கள் இருந்தாலும் இவரை ஒட்டி அவர்களும் பிரதி வசனம் சொல்லிக் கொண்டு போனார்கள். வரணம் எல்லாம் நான் செய்தேன். சில உபசாரங்கள் என் பையர் செய்தார்.
இவர்களுடைய ஆச்சாரத்தை பற்றி அவ்வளவு சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். வழக்கமான இந்த மாதிரி விஷயங்களுக்கு போகக்கூடிய பிராமணர்கள் கைகால்களை பார்த்தாலே சில விஷயங்கள் புரிந்துவிடும். அதிகமாக பிரதி கிரகம் வாங்கின தோஷங்களும் காயத்ரி செய்யாமல் ஶ்ராத்தங்களில் திருப்பி திருப்பி பங்கெடுக்கும் தோஷங்களும் காலில் இருக்கும் தோல் வியாதியில் தெரிந்துவிடும். இவர்களுடைய கால்களை நாம் கழுவி விடும்போது இதைப் பார்த்து விடலாம். ஆனால் இவர்கள் கால்கள் நன்றாகவே இருந்தன உண்மையில் மிகவும் சுத்தமாக இருந்தன. இந்த இடத்தின் விசேஷமோ இல்லை விஷ்ணு பாதத்தின் விசேஷமோ எப்படி இருந்தாலும் இவர்கள் சுத்தர்கள் என்று என் மனதில் ஒரு திருப்தி உண்டாயிற்று.
ஹோமம் முடிந்து இவர்களுக்கு இவர்களுக்கு உணவிடும் நேரம் வந்தது. இவர்களுக்காக பிளாஸ்டிக்கில் டம்ப்ளர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவற்றை ஒன்றுக்கு இரண்டாக பக்கத்தில் வைத்துவிட்டார்கள். தண்ணீர் பாயசம் முதலியவை இதிலேயே கொடுத்தார்கள். பார்த்த அளவில் அவர்களுக்கு நம் பக்கத்து உணவு சரிப்படவில்லை தான். நாம் நம் பாரம்பரியத்தின் படியே சமைப்போம் என்று இருப்பதை விட்டுக் கொடுத்துவிட்டு இவர்களுக்கு தகுந்தாற்போல் சமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்கள் சாப்பிட்டு திருப்தி அடைவதே மிகவும் முக்கியம். நீங்கள் திருதியாகவே இருக்க மாட்டீர்கள் என்று சீதை சாபம் கொடுத்து இருந்தாலும் ஶ்ராத்தத்தின் முடிவில் இவர்கள் இரு கைகளையும் தூக்கி திருப்தி சொல்லி ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
இவர்களை அனுப்பிவிட்டு பிண்ட தானத்துக்கு உட்கார்ந்தோம். இதைப்பற்றி கொஞ்சம் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் இறந்துபோன என் உறவினர்கள் ஜாபிதா தயாராக வைத்திருந்தோம். காருண்ய பித்ரு என்று சொல்லி இவர்கள் அனைவருக்குமே பிண்டம் கொடுத்தோம். இது இல்லாமல் என் மனைவியும் பையனும் சில பெயர்கள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களுடைய நண்பர்கள். சில நாட்களுக்கு முன் கோதாவரியில் நதியில் தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்துபோன பாடசாலை வாத்தியார் வித்யார்த்தி அவர்களுக்கும் பிண்டம் தரப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று தோன்றி ட்விட்டரில் இருந்து ஒரு சின்ன பதிவு போட்டு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பெயரும் கோத்திரமும் சொன்னால் பிண்டம் வைக்கிறேன் என்று சொல்லி ஒரு பத்து பன்னிரண்டு பெயர்கள் கிடைத்தது கிடைத்தன. அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பிண்டங்கள் வைத்தோம்.
இதில் ஸக்த பிண்டம் என்று ஒன்று வருகிறது. கோதுமை மாவை வறுத்து கொஞ்சம் நீர்த்த பால் சேர்த்து இதை பிண்டமாக பிடிக்கிறார்கள். அது ஒன்று வைக்க வேண்டி இருந்தது. யாரைக்குறித்து என்று நினைவில்லை.
இப்படியாக பல்குனி நதி ஶ்ராத்தம் முதல் நாள் இரண்டரை மணி போல முடிந்தது.
12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள்.
இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்‌ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆமாம் அதில் ஒருவர் மிகவும் வயதானவர். பையாஜி என்று மற்றவர்கள் மிகவும் மரியாதையுடன் அவரை நடத்துகிறார்கள். சின்ன குழந்தைக்கு பூணூல் இன்னும் போடவில்லை சும்மா வந்து இருந்தாற்போல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் யாரோ அழைத்துப்போய்விட்டார்கள்.
இந்த கயா பிராமணர்களைப் பற்றி சில விஷயங்களை முன்னாலேயே சொல்லி இருந்தார்கள். இவர்களுடைய தேசாசாரம் நமக்கெல்லாம் ஒத்து வராது. இவர்கள் எதையும் தூக்கி குடிப்பதில்லை. எச்சில் செய்தே குடிக்கிறார்கள். நம் பக்கத்து ஶ்ரார்த்த உணவு இவர்களுக்கு சரிப்பட்டு வருவதில்லை என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அதெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நம்முடைய சாப்பாட்டுக்கு பழகிவிட்டார்கள் என்றும் இரண்டு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டு வாத்தியார் இந்த யாத்திரை போய்விட்டு வந்தவர். அவர் வந்து இவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பால்பாயசம் பூரி ஆகியவை. ஆகவே அதை நிச்சயமாக செய்து விடுங்கள் மற்றபடி நம் சௌகரியம் போல் செய்யலாம் என்று சொல்லியிருந்தார். பெண்கள் அதற்கு சரியாகவே தயார் செய்து கொண்டிருந்தனர் நிறைய பால் பாயசமும் பூரியும் செய்து மற்றபடி நம் வழக்கமான தமிழ்நாட்டு ஶ்ராத்த சமையல் ஆக செய்திருந்தார்கள்.
எப்படி இருந்தாலும் நம் பக்க மக்கள் இவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு ஶ்ராத்தத்தில் போக்தாவாக இருந்தால் ஆயிரம் காயத்ரி ஜபம் செய்து அடுத்த கர்மாவுக்கு அருகதை ஆவார்கள் என்று சாஸ்திரம். ஆனால் இவர்களோ தினசரி ஏதோ ஒரு ஶ்ராத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தியாவந்தனம் செய்கிறார்களோ இல்லையோ என்று நம்மவர்கள் சந்தேகிக்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் க்ஷேத்திர வாசிகளை தூஷிக்கக் கூடாது என்று இருக்கிறது. இவர்கள் இல்லாமல் நாம் இங்கிருந்து யாரையும் அழைத்துப் போய் எல்லாம் சரிப்படாது. ஆகவே இவர்களை வைத்து ஶ்ராத்தத்தை நடத்த வேண்டியது.
நம் பக்கத்து சிரார்த்த நடைமுறை அனைத்தும் அந்த தாத்தாவுக்கு தெரிந்து இருந்தது. சரியாக பிரதி வசனமும் சொன்னார். கொஞ்சம் முன்னே பின்னே மற்றவர்கள் இருந்தாலும் இவரை ஒட்டி அவர்களும் பிரதி வசனம் சொல்லிக் கொண்டு போனார்கள். வரணம் எல்லாம் நான் செய்தேன். சில உபசாரங்கள் என் பையர் செய்தார்.
இவர்களுடைய ஆச்சாரத்தை பற்றி அவ்வளவு சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். வழக்கமான இந்த மாதிரி விஷயங்களுக்கு போகக்கூடிய பிராமணர்கள் கைகால்களை பார்த்தாலே சில விஷயங்கள் புரிந்துவிடும். அதிகமாக பிரதி கிரகம் வாங்கின தோஷங்களும் காயத்ரி செய்யாமல் ஶ்ராத்தங்களில் திருப்பி திருப்பி பங்கெடுக்கும் தோஷங்களும் காலில் இருக்கும் தோல் வியாதியில் தெரிந்துவிடும். இவர்களுடைய கால்களை நாம் கழுவி விடும்போது இதைப் பார்த்து விடலாம். ஆனால் இவர்கள் கால்கள் நன்றாகவே இருந்தன உண்மையில் மிகவும் சுத்தமாக இருந்தன. இந்த இடத்தின் விசேஷமோ இல்லை விஷ்ணு பாதத்தின் விசேஷமோ எப்படி இருந்தாலும் இவர்கள் சுத்தர்கள் என்று என் மனதில் ஒரு திருப்தி உண்டாயிற்று.
ஹோமம் முடிந்து இவர்களுக்கு இவர்களுக்கு உணவிடும் நேரம் வந்தது. இவர்களுக்காக பிளாஸ்டிக்கில் டம்ப்ளர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவற்றை ஒன்றுக்கு இரண்டாக பக்கத்தில் வைத்துவிட்டார்கள். தண்ணீர் பாயசம் முதலியவை இதிலேயே கொடுத்தார்கள். பார்த்த அளவில் அவர்களுக்கு நம் பக்கத்து உணவு சரிப்படவில்லை தான். நாம் நம் பாரம்பரியத்தின் படியே சமைப்போம் என்று இருப்பதை விட்டுக் கொடுத்துவிட்டு இவர்களுக்கு தகுந்தாற்போல் சமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்கள் சாப்பிட்டு திருப்தி அடைவதே மிகவும் முக்கியம். நீங்கள் திருதியாகவே இருக்க மாட்டீர்கள் என்று சீதை சாபம் கொடுத்து இருந்தாலும் ஶ்ராத்தத்தின் முடிவில் இவர்கள் இரு கைகளையும் தூக்கி திருப்தி சொல்லி ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
இவர்களை அனுப்பிவிட்டு பிண்ட தானத்துக்கு உட்கார்ந்தோம். இதைப்பற்றி கொஞ்சம் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் இறந்துபோன என் உறவினர்கள் ஜாபிதா தயாராக வைத்திருந்தோம். காருண்ய பித்ரு என்று சொல்லி இவர்கள் அனைவருக்குமே பிண்டம் கொடுத்தோம். இது இல்லாமல் என் மனைவியும் பையனும் சில பெயர்கள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களுடைய நண்பர்கள். சில நாட்களுக்கு முன் கோதாவரியில் நதியில் தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்துபோன பாடசாலை வாத்தியார் வித்யார்த்தி அவர்களுக்கும் பிண்டம் தரப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று தோன்றி ட்விட்டரில் இருந்து ஒரு சின்ன பதிவு போட்டு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பெயரும் கோத்திரமும் சொன்னால் பிண்டம் வைக்கிறேன் என்று சொல்லி ஒரு பத்து பன்னிரண்டு பெயர்கள் கிடைத்தது கிடைத்தன. அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பிண்டங்கள் வைத்தோம்.
இதில் ஸக்த பிண்டம் என்று ஒன்று வருகிறது. கோதுமை மாவை வறுத்து கொஞ்சம் நீர்த்த பால் சேர்த்து இதை பிண்டமாக பிடிக்கிறார்கள். அது ஒன்று வைக்க வேண்டி இருந்தது. யாரைக்குறித்து என்று நினைவில்லை.
இப்படியாக பல்குனி நதி ஶ்ராத்தம் முதல் நாள் இரண்டரை மணி போல முடிந்தது.
 

Wednesday, July 27, 2022

காஶி யாத்திரை - 30 கயா - 1





காஶி யாத்திரை - 30 கயா - 1
கயாவில் முதல் நாள் கர்மா ஆரம்பித்தது. இப்போது ஒரு சௌகரியம். வாத்தியார் பக்கத்து ரூமில் தான் இருந்தார். கயை தவிர வேறு எங்கும் காரியத்தை இப்போது ஏற்றுக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட முடியாது. தங்கியிருந்த இடம் சங்கர மடம். வழக்கம்போல ப வடிவில் கட்டிடம். தங்கும் அறைகள் பரவாயில்லை. எக்கச்சக்க ஈக்கள். ஏதோ பிரச்சனை. அடிக்கடி தண்ணீர் வரவில்லை மோட்டார் போடுங்கள் என்று சொல்லி போட்டுக் கொள்ள வேண்டி இருந்தது. அங்கே நிர்வாகி பிரம்மச்சாரி இளைஞர். பாவம் அனுபவமில்லை. என்ன பிரச்சனை என்று புரியவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சப்ளை சீக்கிரம் நின்று விடுகிறது என்றால் சப்ளை லைனில் எங்கோ லீக் இருக்கிறது. கவனியுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். ஆள் கிடைக்காமல் அடுத்த நாள் குழாய் ரிப்பேர் செய்பவர் வந்து லீக் பார்த்து சரி செய்தார். அதேபோல மின்சார சப்ளை ஏதோ பிரச்சனை. அடிக்கடி போய்க்கொண்டிருந்தது. பக்கத்து ட்ரான்ஸ்பார்மர் பிரச்சினை என்றார்கள்.
வாத்தியார் 9 மணி போல ஆரம்பிக்கலாம் என்று சொல்லி நிஜமாகவே ஒன்பது மணிக்கு ஆரம்பித்துவிட்டார். மடத்திலிருந்து கோவில் ஐந்து நிமிட நடைதான். ஆனால் நிஜமாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆட்டோ பிடித்து போய் விடலாம் என்றார்கள். நான்தான் கிறுக்கு ஆயிற்றே. நீங்கள் ஆட்டோவில் வாருங்கள் நான் முன்னால் போகிறேன் என்று நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு 50 மீட்டர் போவதற்குள் போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு ஸ்கூல் பஸ் எதிரே வான் முதலியவை, ஒன்றையொன்று தாண்ட முடியாமல் பிரச்சனைகள் இருந்தது. அதனால் மற்றவர்களும் ஆட்டோவிலிருந்து இறங்கி என் பின்னாலேயே நடந்து வந்து விட்டார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமப்பட்டு அந்த நெரிசலான இடத்தை கடந்து விட்டோம்.
எங்கள் செருப்புகளை எல்லாம் போகும் வழியில் ஒரு கடையில் விட்டுவிட்டோம். அந்த கடையில் விஷ்ணு பாதம் முதலான சில விஷயங்களை மக்கள் வாங்கினார்கள்.
 
வறண்ட பல்குனி நதி

பல்குனி நதி வறண்டு கிடந்தது. படத்தை பாருங்கள். போன வாரம் போன போதும் கூட அப்படியேதான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் நாமே தூண்டி தண்ணீரை எடுத்துக் கொள்ள முடிந்தது. இங்கே ஒரு அடி பம்ப் போட்டிருக்கிறார்கள். இது பல்குனி நதி தண்ணீர் தானே; இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். ஏனோ எங்களுக்கு திருப்தி ஆகவில்லை. ஒரு 100 தப்படி தூரத்தில் ஒரு பண்டா ஷமியானா போட்டிருந்தார். கிணறு தோண்டி வைத்திருக்கிறார் என்று தெரிந்தது. நானும் பையரும் அங்கே போய் கை கால் சுத்தி செய்து கொண்டு கொஞ்சம் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ஒரு தாமிர பாட்டிலில் அனுஷ்டானத்துக்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்காக தயாரானோம். கை பம்பில் தண்ணீர் அடித்து கைகால்களை கழுவிக்கொண்டு உடனே கூடியவரை ஓடிப்போய் போய்விட வேண்டும்; மீதி தூரத்தை சூட்டை பொறுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதுபோலவே நான் முதலில் ஓடிப் போய் விட்டேன் பையனும் பின்னாலேயே ஓடி வந்துவிட்டார். இரண்டு பேரும் ஷமியானா நிழலுக்கு போய் சேர்ந்து அப்பாடா என்று மூச்சு விட்டோம். ஏறத்தாழ 75 பர்சன்ட் தூரத்தை பிரச்சினையில்லாமல் கடந்துவிட்டோம். மீதி தூரம் சூடான மணல் ஒரு கை பார்த்து விட்டது.
எங்களைப் பார்த்தவுடன் அந்த பண்டா வரவேற்றார். அவர் அனுமதியுடன் முதலில் பையர் கீழே இறங்கினார். சுமார் 15 அடி ஆழம் ஆறு அடி விட்டத்திற்கு குழி. அதில் நடுவில் ஒரு இரண்டரை அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. நீரை முகர்ந்து கொண்டு குழியின் ஓரத்துக்கு தள்ளி வந்து கைகால்களை சுத்தம் செய்துகொண்டு பின்னால் பாட்டிலை நிரப்பிக்கொண்டு தலையையும் ப்ரோக்‌ஷணம் பண்ணிக்கொண்டு மேலே வந்து சேர்ந்தார். என்ன கொடுக்கட்டும் இவருக்கு என்று கேட்டார். ஒரு ஐம்பது ரூபாய் கொடுக்கலாம் என்று சொன்னேன். அவர் திருப்தியுடன் வாங்கிக்கொண்டு விட்டார். நானும் கீழே இறங்கி ப்ரோக்‌ஷணம் செய்துகொண்டு கைகால்களை சுத்தி செய்து கொண்டு மேலே வந்து விட்டேன். இப்போது கால்கள் ஈரமாக இருந்ததால் மீண்டும் ஓட்டமாக ஓடி பாதி தூரத்தை கடந்து, பின்னால் சூடான மணலில் மீதி தூரத்தை கடந்தோம். நேராகப் போய் கை பம்பி தண்ணீர் அடித்து கால்களை குளிர்வித்து கொண்டோம்.

ஆனால் வரும் காலத்தில் இது பிரச்சினையாக இருக்காது என்று தோன்றுகிறது. ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் செக் டேம் ஒன்றை கட்டுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டவர் வாழிய!
இந்த ஆற்றங்கரையில் இருந்து பார்த்தால் நிறைய படிகள் இருக்கின்றன. வெறுமனே அடுத்த படி பார்த்துக்கொண்டு மேலே ஏறுவது உசிதம். அந்த காலத்து மக்கள் பத்தடி உயரம் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு தோதாக ஒன்னரை அடி உயரம் படிகள் இருந்தன. சிரமப்பட்டுதான் ஏற வேண்டியிருந்தது. இந்த இடம் கொஞ்சம் மாறிப் போய் விட்டாலும் பெரும்பாலும் அப்படியே இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இந்தப் படிகளுக்கு இடையே கொஞ்சம் தட்டையான பூமி வரும். இங்கேதான் போனமுறை வந்தபோது கூட வந்த உதவியாளர் ஒன்பதே ஒன்பது விராட்டிகளை வைத்துக்கொண்டு எப்படி சரு தயார் செய்வது என்பதை காட்டினார். மூன்று லேயராக முக்கோணமாக 3 விரட்டிகளை வைத்து கீழே கொளுத்திப்போட்டுவிட்டு மேலே உங்கள் பாத்திரத்தை வைத்து அரிசியை களைந்து போடுங்கள் என்றார். பல்குனி நதியில் இருந்து வந்து கொண்டிருக்கும் இதமான காற்று அதை எரிய வைத்துக் கொண்டே இருந்தது. வெகு சீக்கிரத்தில் சரு தயாராகிவிட்டது.
இப்போது தீர்த்த சிராத்தத்தை பார்வண விதமாக செய்வதாக இருந்ததால் இங்கே வெறும் சங்கல்பம் மட்டும். படிகளின் முடிவில் ஒரு கோவில் இருக்கிறது. அதன் முன் மண்டபத்திற்கு போய் சேர்ந்தோம். இதன் எதிரே இருந்த இடத்தில் ஆறுக்கு ஆறு வரிசையில் ஒரு பேட்ச் ஹோமம் செய்து விட்டு போயிருந்தார்கள். அதைப் போலப் பிண்டங்களையும் வைத்து விட்டு போயிருந்தார்கள். கோவில் பண்டா பெண் போல் இருக்கிறது; ஒருவர் எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்தார். நாங்கள் உட்கார்ந்து கயா யாத்திரை சங்கல்பம் செய்தோம். பிறகு அன்றைய பல்குனி நதி ஶ்ராத்த சங்கல்பத்தை செய்தோம். முடித்துவிட்டு அங்கேயே தர்ப்பணம் செய்தோம். கோவில் பண்டாவிடம் கேட்டு தர்ப்பணத்துக்கு சில தட்டுகளை வாங்கிக் கொண்டோம். இதெல்லாம் முடிந்த பிறகு அவருக்கு தட்சிணையை கொடுத்துவிட்டு தங்கும் இடத்துக்கு வந்து விட்டோம். பெண்கள் சமையல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
 

 

Saturday, July 23, 2022

காஶி யாத்திரை - 29 காஶி - 12



நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய குடும்பமே பயணம் செய்து கொண்டிருந்தது. வயதானவர் ஒருவர். அவருடைய இரண்டு மகன்கள். இரண்டு நாட்டுப் பெண்கள். இரண்டு குழந்தைகள். ஒரு கை குழந்தை. இப்படி பெரிய குடும்பம். வாரணாசி கூட தாண்டாத நிலையில் ஏதோ ஒரு இடத்தில் வண்டி நின்றது. நாங்கள் நின்ற இடத்தில் பிளாட்பார்ம் கூட இல்லை. ஆனால் ஒரு முதியவர் கூட நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உதவியுடன் முதியவர் வண்டியில் ஏறினார். இந்த குடும்பம் உடனடியாக போய் அவர் காலை தொட்டு கும்பிட்டது. அவர் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு கட்டாக எடுத்தார். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 40 ரூபாய் கொடுத்தார். எல்லோருக்கும் பரம சந்தோஷம். வாங்கி வந்திருந்த இரண்டு பக்கெட் ஐஸ்கிரீம் ஐ கொடுத்துவிட்டு எல்லோருக்கும் ஆசிர்வாதம் செய்து விட்டு இறங்கிப் போய்விட்டார். குழந்தைகள் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இந்த பயணங்களில் நான் கவனித்த இன்னொரு விஷயம் குழந்தைகள் பாட்டுக்கு மணி பத்து பதினொன்று என்று என்ன ஆனாலும் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். எட்டு மணி ஆனால் கண்கள் சுற்றும், தூங்கி விடுவோம் என்ற எங்கள் காலம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
ரயில் சோன் நதியை நெருங்கியது. முன்னே எங்கள் அப்பா அம்மாவுடன் வந்து திரும்பும் போது இதை பார்த்த நினைவு இருக்கிறது. பலத்தில் நுழைந்த பின் அது பாட்டுக்கு பாலத்தின் மீது போய் கொண்டேஏஏஏஏஏ இருந்தது. பக்கத்தில் இருந்தவரிடன் விசாரித்தேன். ‘இது ஸோன் நதி பாலம். இந்தியாவிலேயே மிக நீளமான பாலமாக்கும்! 99 தூண்கள் இருக்கிண்றன’ என்றார். இப்போது எதிரே சின்னப்பையன் ஒருவன் இருந்தான். இந்த பாலம் பற்றி தெரியுமா என்றேன். தெரியாது என்று தலை அசைத்தான். சொன்னேன். அது அப்போது மிக நீளமானது. இப்போது அசமில் போகிபீல் பாலம். இன்னும் பலதும் கூட வந்துவிட்டன.
முன்னே சொன்னது போல இது தாமதமாக போய்க்கொண்டிருக்கும் ரயில். ஆகவே சூப்பர் எக்ஸ்பிரஸ் முதல் நேரத்துக்கு போய்க் கொண்டிருக்கும் மிக மிக மெதுவான கூட்ஸ் வண்டி வரை எல்லாவற்றுக்கும் இது வழி கொடுத்து பிறகு கிளம்பி போய்க்கொண்டிருக்கிறது. ரபி கஞ்சில் பாதி சீட் காலி ஆகிவிட்டது. கீழே படுத்திருந்தவர்களுக்கு நிம்மதி. இந்த இடத்தில் அநியாயமாக ஐந்து வண்டிகள் தாண்டிப் போயின. ஸ்டேஷன்கள் இடையில் வண்டி மிக வேகமாக தான் போய்க் கொண்டிருந்தது. இந்த தாமதங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் ஏற்கனவே இருந்த இரண்டு மணி நேரத்தில் நிச்சயம் ஒரு மணியாவது சரிசெய்து இருக்கும். இப்போது எங்கே இருக்கிறோம் என்று பார்த்துக்கொண்டு கடைசியில் இரவு … இல்லை காலை 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம். அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள். எங்கள் லக்கேஜை அவர்கள் வாங்கிக் கொண்டதால் பெரிய ரிலீப் கிடைத்தது. வண்டியில் சங்கரமடத்திற்கு போய் சேர்ந்தோம். அடுத்து அரைகுறையாக தூங்கினேன். காலை எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே நிறைய நேரம் படுத்திருந்தேன். என்ன செய்வது? ஒவ்வொரு சமயமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகும்போது நடுராத்திரி போய் சேர்வதாக அமைந்துவிட்டது. நல்ல காலமாக கயை கடைசி இடம். இங்கிருந்து கல்கத்தா போகும் வண்டி காலையில் தான் போய் சேருகிறது தூங்கி எழுந்த பிறகு போய் சேரும். சௌக்கியம்.
காலையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தர்மபத்னி சமையலுக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தும் ப்ரயாகை, காசியில் ஆள் கிடைக்கவில்லை. உதவி இல்லாமல் சிரம்பப்பட்டார்கள். இதை கேள்விப்பட்டுவிட்டு கொல்கொத்தா நண்பரின் மனைவி இரவு ரயிலில் கிளம்பி கயை வந்து சேர்ந்துவிட்டார்! ஆட்டோவில் வரும் வழியில் பால் கறப்பதை பார்த்தாராம். வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!

Wednesday, July 20, 2022

காஶி யாத்திரை - 28 காஶி - 11




காஶி யாத்திரை - 28 காஶி - 11
அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் 7 மணிக்கு கயாவுக்கு கிளம்பும் ஒரு வேனில் கிளம்புவதாக ஏற்பாடு. அவர்கள் 12 மணி போலத்தான் போய் சேர்வார்கள். நாங்கள் எட்டரைக்கு போய்விடுவோம்.
சற்று ஓய்வெடுத்துவிட்டு எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தோம். அடுப்படியை ஒழித்து எல்லாவற்றையும் சுத்தி செய்து ஒப்படைத்துவிட்டு மூன்று மணிக்கே கணக்கைத் தீர்த்து விட்டு கிளம்பினோம். ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தபோது மணி மூணரை. அங்கே வழியே லாபியில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம் போல் போதிய இருக்கைகள் இல்லை; ம்ம்ம்ம் இருக்கைகளுக்கு இடமுமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். இந்த இடத்தில்தான் இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு பெரிய மின்விசிறியை பார்த்தேன். படம் எடுத்தேனா என்று நினைவில்லை. இல்லை போலிருக்கிறது. அறிவிப்பு பலகை வண்டி வரும் நேரம் 4-10 என்று காட்டிக்கொண்டிருந்தது. அது மெதுவாக நாலரை என்றாகிவிட்டது. நான்கு மணி போல நாங்கள் லாபியில் இருந்து கிளம்பி எட்டாவது பிளாட்பார்ம் போக வேண்டியிருந்தது. அங்கே போனோம். இந்த ரயில் நிலையத்தில் ஒவ்வோர் இடத்திலும் எஸ்கலேட்டர் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாத வயதான நடக்க சிரமப்படும் என்னைப் போன்றவர்களுக்கு எது பெரிய வரம். இன்னும் எஸ்கலேட்டரில் ஏற இறங்க தடுமாற்றம் வரவில்லை என்பது இன்னும் பெரிய வரம். எட்டாவது பிளாட்பாரத்துக்குப் போய் அங்கே கொஞ்சம் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். அரவிந்தன் கைபேசியை பார்த்து அரைமணி தூரத்தில்தான் இருக்கிறது என்று ஒரு மணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார். அது நகரவே இல்லை போலிருக்கிறது. இது ஒரு பிரச்சனை. எப்போதுமே தாமதமாகும் வண்டி மேலே மேலே தாமதமாகிக் கொண்டே போகும் என்பது எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இருக்கிறது. அது இன்னும் அப்படியேதான் இருக்கிறது போலிருக்கிறது. இது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். அறிவிப்பு பலகையில் நேரம் மாறிக் கொண்டே இருந்தது. இதற்குப் பின்னால் வருவதாக சொல்லப்பட்ட வண்டிகள் முன்னதாகவே வந்து கிளம்பி போய்க் கொண்டிருந்தன. ஒரு ஆறு மணி போல் இது அறிவிப்பு பலகையில் இருந்தே காணாமல் போய்விட்டது.
இந்த எட்டாம் பிளாட்பாரத்தில் இன்னும் கட்டுமான வேலைகள், கொஞ்சம் கூடுதல் வேலைகள் கொஞ்சம் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. சிறுநீர் கழிப்பதற்காக இடத்தை தேடி பிளாட்பார்மில் முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர் போய் பார்த்தாகிவிட்டது. ஒரு இடத்தையும் காணோம். இதற்கு நடுவில் அறிவிப்பு பலகையில் இருந்து போய்விட்ட இந்த வண்டி வந்துவிட்டதானால் என்ன செய்வது என்று ஒரு பிரச்சனை வேறு மனசில் இருந்தது. கடுப்பாகிப் போய் கடைசியில் கைபேசியில் தேடிப்பிடித்து டிவிட்டரில் ஒரு மெசேஜ் போட்டேன்.

Worst times. Send railways have not improved at all since Inc days. been waiting for Doon express in Varanasi since 3-30. Still no signs of train. Worst experience for a 69 year old with ill health.
@RailMinIndia
6:23 PM · Apr 22, 2022·
பதில் வந்தது.
Kindly share your PNR number and mobile no. via DM so that we may assist you. You may also raise your concern directly on http://railmadad.indianrailways.gov.in or dial 139 for speedy redressal. #OneRailOneHelpline139

உடனே அதுக்கு பதில் போட்டேன்.

PNR 2337829948 Cell.. 7*******26

6:31 PM · Apr 22, 2022·

அப்பறம் ஒண்ணும் நடக்கலை. ஆனா திடுதிப்புன்னு ரயில் வந்தாச்சு. வழக்கம் போல நான் என் பையை மட்டும் எடுத்துகொண்டு தனியிடம் ஓடினேன். பத்து கோச் தள்ளிதான் என்னோடது. எட்டரை மணிக்கு போய் சேர்வதாக டைம் டேபிள். அதனால் சீட் மட்டுமே வாங்கி இருந்தது. இப்போது எட்டரைக்கு எங்கே போய் சேர்வது? இரவு டிபனும் தண்ணீரும் பையர் கொண்டு வந்து கொடுத்தார்.
ரிசர்வ் கம்பார்ட்மெண்ட். ஆனா கூட்டமோ கூட்டம்! அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். என் சீட்டை கண்டுபிடித்தேன் ஜன்னலோரம் தனி இருக்கை. அங்கே பார்த்தால் ஒரு குண்டு பெண்மணி உட்கார்ந்திருந்தார். இது என் சீட் என்றேன். பிரச்சினை இல்லாமல் பக்கத்து சீட்டுக்கு போய்விட்டார்.
அதே போல எதிர் சீட்டுக்கு வந்தவர் அங்கே இருந்தவரை எழுப்பி விட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டார். டிடிஈ எல்லாம் கடைசி வரை வரவே இல்லை. டாய்லெட்டில் தண்ணீர் இல்லை! கோச்சே வழக்கமான கோச் போல இல்லை. ஏதோ ‘அஜீஸ்’ செய்தது மாதிரி இருந்தது.
ஒரு வழியாக செட்டில் ஆகிவிட்டு செல்லை திறந்தால் இப்படி ஒரு மெசேஜ்:

RailwaySeva
@RailwaySeva
Replying to
@drtvasudevan
Sir, We are still waiting for details (http://M.No. and PNR No.) so that we register your complaint and expedite resolution.

6:38 PM · Apr 22, 2022·OneDirect Suite - P

ராமான்னு நினைச்சுண்டு பதில் போட்டேன்.

I have sent it. At last train arrived and am seated. Wonder what you can do for me now thanks anyway.
6:51 PM · Apr 22, 2022·
ஒரு வழியா அந்த பஞ்சாயத்து முடிஞ்சது.
கொல்கத்தாவில் தங்கியிருந்தபோதே பயணத்துக்கு உகந்த உணவு பற்றி பேச்சு எழுந்தது. அப்போது நான் சொன்னேன் இதை பாருங்கள் நாம் வீட்டில் சாப்பிடுவது படி சாப்பிடுவோம் என்று எதிர்பார்க்கக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் இருப்பார்கள். டாய்லெட்டில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. கை சுத்தப்படுத்திக் கொள்ள முடியுமா முடியாதா என்பதெல்லாம் விஷயங்கள். அதனால் என்ன செய்யவேண்டும் என்றால் முடிந்தவரை பிரச்சனை இல்லாதபடிக்கு சாப்பிடும்படி செய்ய வேண்டும். உதாரணமாக பூரி செய்வதாக இருந்தால் சின்னச் சின்னதாக. ஒன்று எடுத்தால் அப்படியே வாயில் போட்டுக் கொள்ளும்படி செய்ய வேண்டும். பெரியதாக வழக்கம்போல் செய்துவிட்டு அதை உடைத்து கொண்டு என்று செய்வதே சரியாக வராது. எதானாலும் சின்ன சின்ன யூனிட்டாக ஒவ்வொன்றும் வாயில் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்றார்கள். முடிந்தவரை ஈரம் இருக்கும் விஷயமாக வேண்டாம். காய்கறிகள் போட்டு ஏதாவது செய்தால் என்ன? அந்த பாத்திரத்தையும் கழுவ வேண்டி இருக்கும். அதை பொட்டலமாக்க முடியாது. ரொம்ப அருமையான ஐடியா சொல்லுகிறேன். வாயில் கொள்ளும்படியான சமோசா. யோசித்துப்பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் அவசியமில்லை. எல்லாம் உள்ளே இருக்கிறது. ஒரு சின்ன பேப்பர் டவல் வைத்துவிட்டால் கையை கழுவிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் கூட இந்த பேப்பர் டவலால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு முடித்துவிடலாம்.
 இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இந்த நேரத்துக்கு இரவு உணவு சின்ன சின்ன பூரியாக கொடுத்திருந்தார்கள். டாய்லெட்டில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன் அல்லவா. இப்போது பிரச்சினையே இல்லை.
சில பேருக்கு பயணத்தில் மற்றவர்களை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. பொதுவாக இந்த பயணங்களில் நான் ஜெபத்தில் உட்கார்ந்து விடுவேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காததால் மனது ஒன்றவில்லை. ஆகவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். கங்கையைத் தாண்டி ரயில் போவது, வழியில் வரும் ஸ்டேஷன்கள் அப்போது செல்பேசியில் நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்பது என்று நேரம் போய்விட்டது.

ரயிலில் இருந்து வரனாசி 'காட்' கள்.

 
 

Tuesday, July 19, 2022

காஶி யாத்திரை - 27 காஶி - 10




 
ஆரம்பத்திலேயே போவது பித்ரு காரியங்களுக்காக. கோவில் போன்ற சமாசாரங்கள் இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக இருந்தேன்.
 



புதிய கட்டுமானம்.

வாராநதி சேருமிடம்.

வாரா காட்

வாரா காட் பிள்ளையார் கோவில்.

புதிய கட்டுமானம்.

 

அதைப்போல எதையும் வாங்க வேண்டும் என்று உத்தேசித்து இருக்கவில்லை. இதனால் பல விஷயங்கள் சௌகரியமாக போய் விட்டது. இருந்த உடல்நிலைக்கு மேற்கொண்டு எந்த ஒரு  வருத்தும் விஷயமும் இல்லாமல் போய்விட்டது.
 அடுத்த நாள் விடிகாலையில் இரண்டரை மணிக்கு எழுந்து காசி விஸ்வநாதர் கோவிலில் மங்கள ஆரத்தி பார்க்க போக வேண்டும் என்று சொன்னார்கள். நான் தெளிவாக முடியாது என்று சொல்லிவிட்டேன். மெதுவாக நான் போய் அவரை தரிசித்து கொள்கிறேன்; இந்த இரண்டரை மணிக்கு கிளம்பி போவதெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்காக என் பையர் ‘சரி நான் அப்பாவை அப்புறமாக அழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று சொல்லி தங்கிவிட்டார். பெண்கள் இருவரும் அரவிந்தனை துணைக்கு அழைத்துக்கொண்டு  இரண்டரை மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றால் இங்கே ஒன்றரை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே வண்டிக்கு சொல்லி வைத்திருந்தார்கள். அங்கே நேரத்துக்கு போய் சேர்ந்து ஏகப்பட்ட கெடுபிடிகள்… ஆதார் கார்டு முதலியவற்றை காண்பித்து டிக்கெட்டை காண்பித்து உள்ளே போனார்கள் என்று தெரிந்தது. இவர்களுக்கு கர்ப்பகிரகத்தில் உள்ளே போய் தொடும்தூரத்தில் சிவலிங்கத்தை பார்த்து தரிசனம் செய்ய முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.
 நான் வழக்கம்போல 4 மணிக்கு எழுந்து ப்ராணக்ரியா முடித்து குளித்து பையனுடன் கிளம்பி கோவிலுக்கு போனேன். நான்காம் நம்பர் கேட்டுக்கு போங்கள் என்று திருப்பி திருப்பி சொன்னார்கள். டிக்கெட் வாங்கிவிட்டு இருந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அதுவோ அந்த இரண்டரை மணி தரிசனத்துக்கு தான். எப்படியும் செல்போன் கொண்டு போகாதே, அதைக்கொண்டு போகாத, இதைக்கொண்டு போகாதே என்று சொன்னதால் பேசாமல் நான் வெறும் கையுடன் கிளம்பிவிட்டேன். பையர் பணத்துக்காக பவுச் மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். வண்டி ஓட்டுனர் நான்காம் நம்பர் கேட் முகப்பில் கொண்டு விட்டுவிட்டார். இறங்கி நாங்கள் பாட்டுக்கு நேரே போக ஆரம்பித்தோம். டிக்கெட் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொன்னோம். சரி போங்க என்று உள்ளே அனுப்பி விட்டார்கள். உள்ளே போய் நீண்ட நெடிய கியூவில் போய் நின்றோம். கொஞ்சம் சீக்கிரமாகவே நகர்ந்தது. கர்ப்பகிரகத்திற்கு முன்னால் மூன்றாக பிரித்து விட்டார்கள். ஒன்று நேராக போக, இரண்டாவது இடது பக்கம் மூன்றாவது வலது பக்கம் போயிற்று. நாங்கள் வலது பக்கம் போனோம். தவறு செய்து விட்டோம் என்று  பின்னால் தெரிந்தது. மேலே நகர்ந்து போனால் சுவாமிக்கு நேராக திறப்பு இருக்கிறது. நன்றாக பார்க்க முடிகிறது. இங்கே ஒரு சூட் (chute)வைத்திருக்கிறார்கள். இதில் நாம் கொண்டுபோன கங்கைஜலம் பூ முதலியவற்றை போட்டு விடலாம். ஜலத்தை விட்டால் அது பூவையும் எடுத்துக்கொண்டுபோய் நேரே சுவாமியின் மேலே விழும்படி அமைத்திருக்கிறார்கள். இதனால் பலரும் சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு பூஜையும் செய்து கொண்டு போக முடிகிறது. அங்கே இருக்கிறதா பண்டா மாலை பூ முதலியன போட்டால் ஏற்கனவே போட்ட அவற்றை அதாவது நிர்மால்யத்தை எடுத்து கொடுக்கிறார். சட்டுப்புட்டென்று தரிசனம் முடிந்து விட்டதால் மேலே என்ன செய்வது என்று தெரியவில்லை. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சன்னதிக்கு வலது பக்கம் இருக்கிறோம். இப்போது பிரதட்சணம் வர வேண்டுமென்றால் அது முடியவில்லை க்யூவை தாண்ட வழி இல்லை. ஆகவே சோமசூக்த பிரதட்சிணம் செய்வது போல இடது பக்கமாக போய் முக்கால்வாசி தூரம் போய் அங்கேயே உள்ளவற்றைப் பார்த்துக்கொண்டு அதே மாதிரி திரும்பினோம். அடுத்து ஞானவாபி எங்கே என்று தேடினோம். பார்த்தோம். கிணறை சலவைக்கல் போட்டு மூடிவிட்டார்கள்.  இந்த சன்னதியை ஒட்டிய வளாகம் மிகவும் பெரியதாக இருக்கிறது. நிறைய பேர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜபம் தியானம் முதலியவற்றைச் செய்ய முடிகிறது; செய்தார்கள்; பார்த்தோம். ஓரிடத்தில் ஒரு பெரிய பேட்ச் பிராசசிங் நடந்துகொண்டிருந்தது. பல பேரை உட்காரவைத்து ஏதோ சங்கல்பம் செய்து பிராமணர் ருத்ர ஜபம் செய்து கொண்டிருந்தார். பிறகு வெளியே வந்தோம். அன்னபூரணியை தேடிக் கொண்டு போனோம். வழியில் பிள்ளையாரையும் பார்த்தோம். அன்னபூரணி கோவில் வெளியே தனியாக இருக்கிறது. இந்த இடம் இன்னும் கொஞ்சம் முன்னேறலாம். ஏதும் செய்யப்படாமலேயே இருக்கிறது. தெரு குறுகியது. கூட்டமும் அதிகம். கொஞ்சம் சிரமப்பட்டு க்யூவில் நின்று உள்ளே போனோம். தரிசனம் செய்தோம். வெளியே வந்தால் சிவப்பு தொப்பியை மாட்டிக் கொண்டு ஒரு ஐம்பது அறுபது பேர் இருந்தார்கள். குழு சுற்றுலாவாக வருபவர்களுக்கு இப்படி ஒரு ஏற்பாடு போலிருக்கிறது. கூட்டத்தில் தவறினால் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று தெரிகிறது. ஏறத்தாழ போன வழியே திரும்பிவந்து விசுவநாதர் கோயில் வாசலுக்கு வந்து அங்கிருந்த நாலாம் நம்பர் வீட்டுக்கு வந்து வெளியே வந்தோம். டுக் டுக் வண்டியோட்டி காத்துக்கொண்டிருந்தார். அதில் ஏறி திரும்பினோம். வரும் வழியில் ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த டுக்டுக் வாங்க ஏறக்குறைய இரண்டரை லட்சம் செலவாகிறது. ஐம்பதாயிரம் போட்டால் மீதி கடனாகவும் மானியமாகவும் கிடைக்கிறது. இரண்டு வருஷத்துக்கு பின்னால் ஒரு 20000 செலவு செய்து பேட்டரியை பேட்டரி புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. ‘பரவாயில்லையே! அப்படியானால் ரன்னிங் காஸ்ட் என்ன?’ என்று கேட்டோம். ‘அது ஒன்னும் பிரச்சினை இல்லை 50 ரூபாய் செலவாகும் தினமும் அவ்வளவுதான்.’ 
‘அதை எங்கே சார்ஜ் செய்வீர்கள்?’
‘எந்த கடை பக்கத்திலும் நிறுத்தி சார்ஜ் போட்டு விட்டு வீட்டுக்கு போய்விடலாம்’  என்றார் அவர். பரவாயில்லை இது நிச்சயமாக ஒரு பெரிய முன்னேற்றம் தான் என்று நினைத்துக் கொண்டேன். சத்தம் இல்லை புகை இல்லை. சீக்கிரமாகவே போக வேண்டிய இடத்திற்கு போக முடிகிறது.
 திரும்பி வந்த பிறகு சமாராதனைக்கு பெண்கள் எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னால் தம்பதி பூஜை கங்கா பூஜை முடித்து விட்டு வந்து விடலாம் என்று வாத்தியார் வீட்டுக்கு போனோம். வாத்தியார் அப்பாவை செய்து வைப்பார் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு வேறு வேலையாக போய்விட்டார். வாத்தியாரின் அப்பா வயோதிகர். அதாவது என்னைவிட வயது கம்மியாக இருந்தாலும் இயலாமை என்னைவிட அதிகமாக இருக்கிறது. இப்படி சிலரை பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம்; உடம்பு பரவா இல்லை என்பதெல்லாம் தெரிகிறது!  வாத்தியாரின் அப்பா நிதானமாக  சங்கல்பம் முதலியவற்றை செய்து வைத்து பூஜையை செய்து வைத்தார். அவருக்கும் அவரது தர்ம பத்னிக்கும் தம்பதி பூஜை. ப்ரயாக் இலிருந்து தமிட குடுவையில் கொண்டு வந்த கங்கை ஜலத்தில் கங்கா பூஜை. பூஜை மிக விஸ்தாரமாக இல்லாமல் அதேசமயம் மிகவும் சுருக்கமாக இல்லாமல் ஒரு அரை மணிநேரம் செய்து முடிக்கப்பட்டது. கொண்டு போயிருந்த வஸ்திரங்கள் முதலியவற்றை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதங்களை பெற்று ரூமுக்கு திரும்பினோம். ஒரு பதினோரு மணி போல சமாராதனைக்காக பிராமணர்கள் வந்துவிட்டார்கள். சங்கல்பம் செய்து அவர்களுக்கு சுருக்கமான பூஜை செய்து உணவளித்து உண்டபின் உபசாரங்களை செய்து புக்த தக்ஷிணை கொடுத்து நமஸ்காரங்கள் செய்து ஆசீர்வாதங்களை பெற்றோம். ஏறத்தாழ ஒரு மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  மாலையில் வண்டி நாலு மணிக்கு.  இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் கைபேசியை பார்த்துவிட்டு இந்த டூன் எக்ஸ்பிரஸ்… நேற்றைய வண்டி இன்னும் கல்கத்தா போய் சேரவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதுவே காலை 7 மணிக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். இன்னைய வண்டி? அரை மணி தாமதம். சரி சரி.
 

Tuesday, July 12, 2022

காஶி யாத்திரை - 26 காஶி - 9




 

 படகு அடுத்த துறையில் இருந்தது. வாத்தியார் தலையை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கொண்டு வருகிறான். கூரையை காணோம். இதனால் அடையாளம் தெரியவில்லை. எல்லோரும் படகில் ஏறிக் கொண்டோம். ஏன் கூரையை போடவில்லை என்று கேட்டால் காத்து அதிகமாக வீசும் போது போட மாட்டோம் என்று சொன்னார்கள். அப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறது. அது பிய்ந்து போய்விடுமா இல்லை படகு திசைமாறி தடுமாறுமா என்று யோசித்தேன். வெறுமே மேலே நிழலுக்காக காய போடுவது எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

 படகு கிளம்பி விட்டது நேராக வாரணா போனோம். இது காட்களில் வடக்கு முனை. வழக்கமான ‘காட்’டுகள் எல்லாம் தாண்டி மொத்தமாக சுமார் 13 கிலோ மீட்டர் போக வேண்டியிருந்தது. இந்த இடத்தில் வாரணா நதி வந்து சேருகிறது. சுமார் பாதி தூரம் போன பிறகு ‘காட்’டுகளில் எல்லாம் முடிந்து விட்டன. ஒரு பாலம் வேறு தாண்டி சென்றது. இந்த இடத்தில் அரசு ஏதோ புதிதாக வாட்டர் ப்ராண்ட் கட்டுவதாக தெரிகிறது. வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சற்று தாண்டி ஒரு மிதக்கும் எல்என்சி ஜி பிளான்ட் ஒன்றை பார்த்தேன். இதுவும் துவங்கி இன்னும் முற்றுப்பெறாத ஒரு சமாசாரம் போலிருக்கிறது. இன்னும் போட் எல்லாமே டீசலில் தான் ஓடுகிறது. இன்னும் எல்என்சி க்கு மாறவில்லை. அது மாறினால் கங்கையில் இந்த டீசல் சேர்ந்து நாறுவது நின்று போகும். அந்த நாள் எந்த நாளோ!

 ஒரு வழியாக வாரத்துக்கு போய் சேர்ந்தோம். இதற்கு ஆதிகேசவ காட் என்று பெயரும் உண்டு போலிருக்கிறது. இங்கே வந்து சேர்வதற்குள் முதலீடு சரு செய்து, அதை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது ஈடும் வைத்து விட்டார்கள்இங்கே பிராமணர்கள் அவர்களுடைய ஆரம்ப பங்கு முடிந்தவுடன் இறங்கி சற்று தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலை பார்க்க போய்விட்டார்கள். இங்கே ஆறு அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால் வெகு வெகு அமைதியான சூழ்நிலை.

பிண்ட பிரதானம் தர்ப்பணம் முடித்து விட்டோம். கோவிலுக்கு போன பிராமணர்களும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே இருந்து திரும்ப ஆரம்பித்தோம். இது வரை காற்று பலமாக அடித்துக்கொண்டு இருந்தது, இப்போது நின்று போயிற்று. படகுக்காரர் கூரையையும் போட்டுவிட்டார்

அடுத்து பஞ்ச கங்கா காட். இங்கே தீர்த்தம் பிந்து மாதவ தீர்த்தம்இங்கேயும் வழக்கம்போல எல்லாவற்றையும் செய்தோம். அடுத்து மணிகர்ணிகா காட். இங்கே சக்கர புஷ்கரணி தீர்த்தம்இங்கே வந்து சேர்ந்தவுடனே என் ப்ரெண்ட் பச்சைக்குருவி  வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நட்பு பாராட்டியது. இதுவே இரண்டு நாட்கள் முன்னே தீர்த்த ஸ்நானம் செய்வதற்காக வந்தபோது வந்திருந்தது. ‘என்னண்ணா திரும்பி வந்து விட்டீர்கள்!’ என்று கேட்க வந்தது போல் தோன்றியது! போன முறையும் சரி இப்போதும் சரி செல்போன் காமிராவுக்கு மட்டும் அது பிடிபடவே இல்லை!

 மணிகர்ணிகா காட் மண் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது வெள்ளி போல் ஜொலிக்கும். இது என்ன விஷயம் என்று படகோட்டியிடம் கேட்டேன். ஏதோ ஹிந்தியில் சொன்னார். ஒன்னும் புரியவில்லை. இதுகுறித்து ஜியாலஜி நிபுணர் ஆன என் உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் போட்டோ எடுத்து அனுப்பும் படி சொன்னார். இதற்காக அரவிந்தனிடம் செல்போனை கொடுத்து போட்டோ எடுக்க சொன்னேன்ஆனால் மண்ணை தனியாக எடுத்தால் கருப்பாக தான் தெரிகிறது. இது ஏதோ சமாசாரம் புரியவில்லை.

 மணிகர்ணிகா ஶ்ராத்தத்தை வழக்கம்போல் முடிக்க ஐந்து கட்டங்களும் பூர்த்தியாகி விட்டன. அக்கம்பக்க படகுகளிலிருந்து பிராமணர்களை சிலரை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்யச் சொன்னார்கள். அவர்களும் ஆசீர்வாதம் செய்து தக்‌ஷிணை வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

மீதி பூஜைகள் அடுத்த நாளுக்கு தள்ளிப்போயின.

 

சமீபத்திய காரிடார் நுழைவாயில்

சீதளா காட் அருகே கங்கோத்ரி ஸேவா ஸமிதி, கங்கா ஸேவா நிதன், இங்கேதான் மாலை கங்கா ஹாரத்தி.

முன்ஷி காட் அஹல்யாபாய் காட்.




கெய்ல் இன் மிதக்கும் சிஎன்ஜி ஸ்டேஷன்.




Monday, July 11, 2022

காஶி யாத்திரை - 25 காஶி - 8




அடுத்தநாள் காலை ஏழரை மணிக்கு கிளம்புவதாக திட்டம். இதனால் கோவில் விஷயம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஏழரை மணிக்கு பையர் வாத்தியாருக்கு போன் செய்தார். வாத்தியார் ‘ஆச்சு, நானும் கிளம்பிவிட்டேன்; நீங்கள் முன்னே போங்க’ என்றார். இந்த படித்துறை போக சுலபமான வழி இருக்கிறது. முதல் நாள் தெரியாமல் வெய்யிலில் வெந்தேன். யாரும் சரியான குறிப்பு கொடுக்கவில்லை. அன்று இல்லத்தரசி திரும்பி வந்தபோது அஷ்டவக்ரன் (அரவிந்தனின் நண்பன்) நிழலிலேயே திருப்பி அழைத்து வந்துவிட்டான். பிரச்சினையே இல்லை என்றார். சரி என்று அடுத்த முறை அதில் போய் கற்றுக்கொண்டேன்ஆற்றுக்கு இணையாகவே தெருக்கள் எல்லாம் இருக்கின்றன. முதல் நாள் போன வழி கொஞ்சம் இடது திரும்பி பின் வலது என்று சொன்னேன் அல்லவா? அப்படி இல்லாமல் வலது பக்கமே திரும்பினால் ஆயிற்று. குறுகலான வீதி. அவ்வப்போது இரு சக்கர வண்டியும் பசு மாடும் கடந்து போகும். ஏறத்தாழ முழுக்க நிழலே. கடைசியில் இது சிவாலயா காட்டுக்கு கொண்டு விடுகிறது. அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. பெரிய வெற்று வெளியும். இடது பக்கமாக கீழே இறங்கினால் படித்துறை. நேராகவும் போகலாம். அடுத்த காட்டுக்கு போகும். இதே வழியில் தொடர்ந்து போனதில் வழியில் உள்ள உணவக காவலாளி, பசுமாடுகள் நாய்கள் எல்லாம் பழக்கமாகிவிட்டன. நாங்களும் படித்துறைக்கு போய் சேர்ந்து விட்டோம்.

 இன்றைக்கு காலையில் கொஞ்சம் தூறல் இருந்தது. இப்போது நல்ல காத்து. ஆனால் சூடு ஏற ஆரம்பித்து விட்டது. நேற்று பார்த்த படகைக் காணோம். சரி என்று படிகளில் உட்கார்ந்து இருந்தோம். ஒரு கால்மணி நேரத்தில் நேற்று பார்த்த ஒரு பிராமணர் வந்து சேர்ந்தார். அவர் ஒரு இடத்தில் போய் நின்றுகொண்டு போனில் பேசிக்கொண்டே இருந்தார். மற்றவர்களை கூப்பிடவா இல்லை வேறு விஷயமா தெரியாது. மெதுவாக இன்னும் 2-3 பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். வாத்தியார்? அவரைத்தான் காணவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. தொடரும் வயிற்றுப் போக்கில் மிகவும் தளர்ந்து போய் இருந்தேன். அங்கேயே படுத்துக் கொண்டு விடலாமா என்று தோன்றியது. ஆனால் தரையோ சூடாக இருந்தது. படகு வந்து விட்டாலாவது அதில் போய் உட்கார்ந்து செட்டிலாகி விடலாம் என்று பார்த்தால் அதையும் காணோம். ஒருவழியாக எட்டரை மணிக்கு பொறுமை இழந்து நான் ரூமுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். படிகளில் ஏற ஆரம்பித்தேன். அதன் கடைசியில் இருந்த ஆல மரத்தின் பின்னால் இருந்து வெளியே வருகிறார். கையில் போன். நான் கிளம்பிட்டேன் என்று யாரோ சொல்லி விட்டார்களா இல்லை தற்செயலா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நான் நின்று விட்டேன். வாத்தியார் கிட்ட வந்து என்ன ஆச்சு என்று கேட்டார். நான் சொன்னேன்: ‘எனக்கு பொறுமை போய்விட்டது வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. என்னும் ஆரம்பிக்கிற அறிகுறியே காணமே’ என்றேன். ‘என்னண்ணா செய்வது, பிராமணர்கள் வரணும் என்றார். அவர்கள் வந்து அரைமணி நேரம் ஆயிற்று என்றேன். பிறகு ‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் வேண்டுமானால் ரூமுக்கு போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாருங்கள்’ என்றார். ஆசுவாசம் எல்லாம் ஆக மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும்  இதற்கு மேல் உடம்பு தேறப்போவதில்லை. கடுப்பாகி விட்டது என்பதால் கிளம்பினேன்’ என்று சொன்னேன். அவர் ‘சரி, நீங்கள் இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதோ பார் இவர்கள் எல்லாம் ஏற்கனவே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இவர்களை மேலும் காக்க வைக்க மாட்டேன். உடனடியாக ஆரம்பிப்பது என்றால் வருகிறேன்; இல்லையானால் ரூமுக்கு போகிறேன் என்றேன். இல்லை இல்லை, உடனே ஆரம்பித்து விடலாம்’ என்றார். படகை காணமே என்றேன். இல்லை படகு இங்கே தான் இருக்கிறது என்றார். சரி என்று கீழே போனோம்.

 

 இப்படி வருகிறவர்களை அலைக்கழிப்பது சரிப்படவே இல்லை. ஆனால் இந்த மாதிரி இடங்களில் எல்லாம் அனேகமாக இப்படித்தான் இருப்பதாக படுகிறது. ஒரு டீமாக வேலை செய்யும்போது ஒரு சரியான புரிதல் வேண்டாமா? மற்றவர் மீது பழி போடுவது மிகச்சுலபமாக இருக்கிறது. நேரம் தவறாமை பற்றித்தான் கவலையே இல்லை சரி, கால் மணி தாமதமாகலாம். இல்லை தவிர்க்க முடியாவிட்டால் அரை மணி. தாமதமாகும் என்றால் ஒரு சின்ன தகவல் தெரிவிப்பதுகொஞ்சமாவது அக்கறை? ஊஹும்! இந்த அழகுக்கு ‘என் ஆரோக்கியத்தின் ரகசியம் எதைப்பத்தியும் கவலைப்படாமல் இருப்பது’ என்கிறார்கள். ஒரு வேலையை செய்து கொடுப்பதாக கமிட் செய்து விட்டு அதை செய்யாமல் காலம் தாழ்த்தி விட்டு ‘எதைப்பற்றியும் கவலை இல்லை’ என்றால் என்ன சொல்லுவது?

கல்கத்தா நண்பர் முன்னேயே ‘ஊரில் இருந்தே வாத்தியார் அழைத்து வந்துவிடுங்கள். உள்ளூர் வாத்தியாருக்கு எப்போதுமே ஒரு நிர்பந்தம் இருக்கும்.’ என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். 15 நாள் ஆயிற்றே என்று யோசித்தோம். இருந்தாலும் அது போலவே செய்ய நினைத்து பேசிய வாத்தியாருக்கு கடைசியில் மாமனார் உடல்நிலை மோசமாகி கிளம்ப முடியாமல் போனது. துரத்ருஷ்டம்!