Pages

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Tuesday, September 5, 2017

வேதம் - 10





வேதத்தில் இந்த உலகில் தேவையாக இருக்கிற புத்திர ப்ராப்தி, நல்ல வது ப்ராப்தி, தீர்காயுசு, ராஜ்ய ப்ராப்தி, சத்ரு ஜெயம் இது போல எத்தனையோ நமக்குத்தேவையாக இருக்கின்ற இம்மை பொருட்களையும் வழங்கக்கூடிய பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை கொடுக்க காரணம் இதற்கு இவன் அநியதனமான உபாயங்களிலே சென்று விடக்கூடாதே; பொருளை பெற வேண்டும் என்பதற்காக துன்மார்க்கங்களிலே, வேறு அபர மார்க்கங்களிலேயே பிரவேசித்து தன் ஆத்ம சக்தியை வீணடிக்க கூடாதே என்பதற்காக தைபுண்ய விஷயாஹா வேதாஹா என முக்குணங்களில் அகப்பட்டு இருக்கிற மக்களை நீ வேறெங்கும் செய்ய வேண்டாம் செய்ய வேண்டுமானால் இங்கேயே செய்து கொண்டு இரு என்று மென்மேலும் அவர்களை சத்வ குணத்தில் உயர்த்துவதே வேதத்தின் நோக்கம்,

தேவதாத்மகமான பிரபஞ்சத்தை காண்பித்து, அதை தெரியாததாலே…. நமக்கு நீர் வேண்டி இருக்கிறது. அதை நாம் உற்பத்தி செய்கிறோம். நிலை மாற்றம் செய்கிறோம். தேக்கி வைக்கிறோம் தூய்மை படுத்துகிறோம். நீர் வளம் பெருக்குவதை பார்க்கிறோம். நாம் நீருக்கு போராடப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள், ஏன் இது வந்தது? நீரை பெருக்குவதோ அல்லது பஞ்ச பூதங்களை நிலம் காற்று விண் இதை எல்லாம் மேலோட்டமாக அவற்றை ஜடப்பொருள்கள், உயிரில்லை என்று நம்மை விட தாழ்ந்ததாக நினைக்கும் விஞ்ஞானம் செயல்படுவதால் அவற்றை வளர்க்கவும் சேமிப்பதிலேயும் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை. குறை கண்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வீழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இவை நம்மைக்காட்டிலும் உயர்ந்தவை; நாமும் இவற்றுடன் ஒரு பகுதியாக இருப்போம்; நம்மில் இவை பகுதியாக உள்ளன; இருவரும் சேர்ந்து எம்பெருமானின் சரீரமாக இருக்கிறோம் என்னும் மேன்மையான மெய் நிலை அறிவினால் நாம் இவற்றால் வரக்கூடிய இடர்களையும் களையலாம்; இவற்றை பெருக்கிக்கொள்ளலாம்
 
அவர்களால் இதுபோன்றுள்ள நமக்குத் தேவையான போருட்களை பெருக்கி தேக்கி வைத்து அனைவருக்கும் வழங்க முடியாததால்தான் , அவற்றை பெருக்க முடியாது நீங்க உங்க பெருக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசுகள் அறிவித்துள்ளன. ஆண்மையான அரசு, இன்னும் பெருக்கித்தருவோம்; எத்தனை கோடி மக்கள் வந்தாலும் வளங்களை பெருக்கிக்கொடுப்பது சேமித்து கொடுப்பது அனைவருக்கு வாரி வாரி வழங்கக்கூடிய பசுக்களாக இருப்பதே நம் மறை சமுதாயம். நீ குறைத்துக்கொள், சாப்பிடாதே என்றெல்லாம் ஆணைகள் வெளியிடுவது இந்த அரசாங்கங்கள்.

Monday, September 4, 2017

வேதம் - 9





அலௌகீகம், லௌகீகம் என்பது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்
 
லௌகீக திருஷ்டி என்ன? உலகத்தை பஞ்ச பூதங்களால் ஆனதாக பார்ப்பது. அதில் பூதாத்மா என்கிற ஆத்ம சைதன்யம் இருக்கிறது. உயிரில்லாத ஜடப்பொருட்கள் உள்ளன. இவற்றில் ஆற்றல் உள்ளது. காலம் இருக்கிறது, இடம் இருக்கிறது. இந்த ஆறின் கூட்டுப்பொருளாக…. காலம், இடம், உயிரினம், மனம் அல்லது எண்ண ஆற்றல், பருப்பொருள், பொருள் ஆற்றல் இந்த ஆறையும் காண்பதே லௌகீக திருஷ்டி
 
இதை தாண்டியது அலௌகீக திருஷ்டி இதை எல்லாம் தேவதாத்மகமாக காண்பது. அபி⁴மானிவ்யபதே³ஶஸ்து விஶேஷானுக³திப்⁴யாம் (பி.சூ 2.1.6) வாயு என்றால் வாயுவை ஏன் கும்பிடுகிறாய்?
சிலர் சொல்கிறார்கள் .. அறியாமையால், அச்சத்தால், தான் கண்டறிய முடியாமல், தன்னால் திசை காண முடியாத பொருட்களை கண்டு அஞ்சி மனிதன் வணங்கினதாக சொல்கிறார்கள். அது வேறு நாகரீகமாக இருக்கலாம். அவற்றின் உட்பொருளாக உள்ள தெய்வங்களையும் தெய்வங்களுக்கும் உட்பொருளாக உள்ள பிரம்மத்தையும் கண்டறிந்து அந்த காட்சியால் பூரித்துப்போய் போற்றி கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள். நாகரீகத்தின் துவக்கத்தை சொல்வோர் இதைத்தான் சொல்கிறார்கள். கடவுள் வழிபாடு அச்சத்தில் பிறந்தது. அறியாமையில் இருந்து பிறந்தது. தான் புரிந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாததை பார்க்கும் போது அதற்கு பணிந்து போவது மனிதனுடைய பலஹீனம். அதன் வெளிப்பாடு இந்த வழிபாடு. பலஹீனத்தில் இருந்து கடவுளும் அவரிடம் இருந்து மதம், பக்தி வந்ததாக சொல்கிறார்கள் சில அறிவாளிகள். ஆனால் இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அஞ்சி அழிந்தவர் பலர். அவர்களிலே நாம் இல்லை. இருப்பதை இல்லாததாக நினைத்து மருண்டு அதை இழந்தவர்களிலே இது இருக்கிறது என்று தாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் காட்டுபவர்களாக , நெறி வல்லுனர்களாகவே நாம் இருக்கிறோம்.  

ஆகவே தேவதாத்மகமான ஒரு பிரபஞ்சத்தை நாம் பார்த்து, நெருப்பு என்றால் நெருப்பு இயக்குகின்ற ஒரு சைதன்யம் இருக்கிறது, ஒரு அறிவாற்றல். அதன் சேதனத்தில் அக்னி என்னும் ஒரு தெய்வம் இருக்கிறது. இது எல்லாம் நமக்கு எப்படி காட்டப்படுகிறது? நானோ ஸ்பெக்டராலாஜிலே? நுண் நோக்கியிலே? ஜீவ அணு மரபியலிலே? உலகியலே? கோளியலில்? அண்ட புவியியலிலே? ஆழ் கடலியலிலே? எந்த இயலிலும் தெரியாது, இறையியலிலே மறையியலிலே, உணர்வியலிலே மட்டும் தெரியும். அதை காட்டிகொடுத்ததாலே இதற்கு அலௌகிகஹா என்று பெயர்.

அதையும் மீறி மூன்றாவதாக இத்தனை தெய்வங்களிலும் வைத்து எல்லோருக்கும் இன்னருள் சுரந்து இந்த தெய்வங்களுக்கெல்லாம் உள்ளுறை பொருளாய் இருந்து இயக்குகின்றவன் யார்? இதைத்தான் தெய்வ மீமாம்சையில் சொல்கிறார்கள். 'ச விஷ்ணுஹு ஆஹஹி; தம் ப்ரம்மேத்யா சக்ஷதே தம் ப்ரம்மேத்யா சக்ஷதே' என்று இதைத்தான் இரண்டு விதமான சூத்திரங்களாக சொல்லி இருக்கிறது அவர்தான் பிரம்மம் எனப்படுகிறார். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு பிரம்மமே உள்ளுறை பொருளாக இருக்கிறது என்று. இந்த உலகை 'சர்வம் கல்விதம் ப்ரம்ஹ தஜ்ஜலான் இதி ஶாந்த உபாசீத'. எல்லாமே அவனில் இருந்து உண்டாகி அவனாலே நிலைநாட்டப்பட்டு அவனையே அடைவதாலே இது எல்லாம் அவனே; அவனே எல்லா பொருளாகவும் இருப்பவன் என அறிந்து தானும் அமைதியுற்று நிரந்ஜனாக 'பரம ஶாந்த உபைதி, ஶாந்த உபாசீத', 'ஞாத்வா மாம் ஶாந்தி ம்ருச்சதி'(.கீ 5.29 ) என பல இடங்களிலே பார்க்கிறோம். மேலான நிலையை அடைகிறான்; ஒன்று படுகிறான்; நிலை விளக்கம் பெறுகிறான். தன்னிலை விளக்கம் பெறுகிறான். இப்படி வேதங்களிலே பிரம்மாத்மகமாக - அதற்கும் மீறி சென்று எல்லா பொருட்களையும் பிரம்மாத்மகமாக பார்க்கக்கூடிய திருஷ்டி, இந்த இரண்டு த்ருஷ்டிதான் வேதத்தின் தனிப்பெரும் பெருமை.

Friday, September 1, 2017

வேதம் - 8





இப்படி காரியங்களை செய்தாலும் சொன்னாலும் கூட தடைகள் இருக்கின்றன. சிலதை சொல்லுகிறோம். ஆனால் ஒருவனுக்கு காதே கேட்கவில்லை. இன்னொருவன் அலட்சியமாக இருக்கிறான்; நினைவில் கொள்ளவில்லை. மற்றவன் அவித்தேயன்; சொன்னதை எப்போதும் செய்யாதவன். இன்னொருவன் அஞ்ஞானி; சொன்னதை புரிந்து கொள்ள முடியாதவன். இது போன்று உள்ளவர்களுக்கு சொல்வது பொருந்தாது. இந்த சாதாரண உரைகளிலேயே இப்படி. அது போல வேதத்திலேயும் அதை சொல்லுபவர்கள் இடத்திலே அதை கற்றபவர்கள் மத்தியில் - அதாவது எப்படி இருக்க வேண்டும்? தத்–விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத். ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம–நிஷ்டம். (முண்டக உபநிஷத் 1.2.12) குருவின் இலக்கணத்தையும் சிஷ்யன் எப்படி சமித் பாணியாக …. சமித் பாணியாக என்றால் கையில் சமித்துடன் என்று உட் பொருள் இல்லை; சமித் எப்படி ஆஜ்யத்தையும் அதன் மூலம் அக்னியையும் க்ரஹிகிறதோ அது போல ஆச்சார்யன் க்ருபைக்கு பரிபூர்ண சத்பாத்திரமாக இருக்கிற யோக்யதையைத்தான் அது இங்கே சுட்டிக்காட்டுகிறது. அது போல குரு சீடன் இலக்கணம் தகுந்த சத் பாத்திரங்களால் நிவேதிக்கப்பட்டு தகுந்த சத்பாத்திரங்களில் அருந்தவம் ஏற்ற கலம் என்பர். அதை (வேதத்தை) அறிந்த ஏற்ற கலமாக உள்ள ஆசான்கள் வழங்கி அருந்தவமாக இருக்கும் மாணாக்கர்கள் பெற்றால்தான் வேதம் பரிமளிக்கும் என்று வேதத்தின் இலக்கணத்தை பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். என்பர்- அது போல இருந்து கற்றால் தான் வேதம் பலனளிக்கும்
 
இன்னொன்று: வேதத்தில் இந்த மந்திரங்கள் இருக்கும் போது இத்தனை வேதங்கள் இவ்வளவு சம்பிரதாயங்களும இருந்தும் அந்நிய படையெடுப்பு வந்தது. கோவில்கள் தரை மட்டமாகின. தீக்கிரையாகின. கலாசார அழிவுகள்ல் எல்லாம் என் வந்தன? இதை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்? இவற்றுக்கு விடையை பின்னால் பார்க்கலாம்.

வேதத்தில் இருக்கின்ற இத்தனை ஆற்றல்களும் நிரூபாதிகமா சபாதிகமா? யார் சொன்னாலும் சொன்ன மாத்திரத்தில் பலிக்குமா?

 தீ என்று தெரியாமல் கையை வைத்தாலும் அது சுடும். அமிர்தம் என்று தெரியாமல் பருகினாலும் அது அதன் வேலையை செய்யும். ஆகவே அறிந்தோ அறியாமலோ எப்படி சொன்னாலும் நன்மை பயக்க வேண்டும். "இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11- " என்பது போல. அது இங்கே வேதத்தின் கடுமையான விதிகளுக்கு பொருந்தாது.

எப்படி வீணையின் நாதம் கை தேர்ந்த ஒருவனின் கை விரல்களின் ஆலத்தியாலே தான் விரும்பிய வண்ணம் எல்லாம் எண்ணம் உவந்திருக்கின்ற இடங்களுக்கு எல்லாம் இணையாக தானாக அது செல்வது போலே; அவன் விரும்பி இருக்கின்றனவற்றை எல்லாம் தானும் கற்று மற்றவர்களுக்கும் தரக்கூடியவன் வேத சப்தங்களிலே அர்த்தங்களிலே பாவங்களில் தத்துவங்களில் நிறைந்த சாதகத்தை செய்து இருக்கிற தபஸ், ஸ்வாத்யாயம் பிரம்மச்சரிய நித்ய நிஷ்ட நியமனாக இருக்கும் ஒருவனே அதை இயக்க முடியும் அதனால் அது ஒரு உபாதியினால் இருப்பது. யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் வருவது என்பது பகவன் நாமாக்களுக்கும் மிக உயர்ந்த நிலையில் இருக்கிற பக்தி பிரபத்தியிலும்தான் பொருந்தும். வேத சப்தங்களில் அதை இயக்கக்கூடிய யோக்கியதை இருப்பவர்கள் இயக்கினால்தான் அது பொருந்தும்.

Thursday, August 31, 2017

வேதம் - 7





மற்றவற்றில் மந்திரம் சொல்பவர்கள் அதன் உட் பொருளை அறிந்தார்களா, எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களது வாழ்கை நெறிகள், பண்புகள் இவற்றை எல்லாம் பற்றி சார்ந்து இருக்கிறது. ஆனால் ஒலி மட்டுமே ஆற்றல் பெற்றதாக இருக்கிற தன்மை வேத மந்திரங்களில் மட்டுமே இருக்கிறது.

இது எல்லோரிடமும் பலிக்குமா என்பது முக்கியமான கேள்வி. வேதத்தில் ஒலியில் மட்டும் மந்திரத்துவம் இருந்தால் யார், எப்படி சொன்னாலும் வினை வருமா? வேதத்தால் எல்லாவற்றையும் உருவாக்க முடியுமானால் இப்போது அதை சும்மா சொன்னாலே போதுமே?
 
பக்தி சாம்ராஜ்ய கதையில் பரிகாசமாக சொன்னாலும் பலன் உண்டு என்பார்கள். அதாவது வேடிக்கை கதையாக … ஸ்ரீரங்கத்து அரிசி என்று சொல்லி கலப்படம் செய்து விற்றானாம். கலப்படம் செய்தாலும் ஸ்ரீரங்கம் என்று சொன்னதால் நற்கதி கிடைத்ததாம் என்பது பக்தி கதை. இப்படி பட்ட விதிகள் மூன்றாவதான ப்ரீதி சாம்ராஜ்யத்துக்கு உண்டு, ஆனால் பகவானை மந்திர பூர்வமாக அணுகக்கூடிய விஷயங்களில் பொருந்தாது, அவன் கருணையே வடிவானவந்தான். ஆனால் அந்த கருணையை தீயிலும் அமிலத்திலும் காட்டாறு வெள்ளத்திலும் காண முடியுமா? அதில் அவனுடைய வீரியத்தைத்தான் காணலாம். எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எளிமை படுத்தியது எல்லாம் பக்தி மார்க்கத்தில்தானே தவிர ஸ்ருதி பிரக்ரியையிலே மிகக்கடுமையாக விதிகள் உள்ளன., உயரத்திலே கயிற்றின் மீது எண்ணெய் கிண்ணத்தை வைத்துக்கொண்டு நடப்பது போலத்தான் வேதங்களின் ஸ்வரங்களிலேயும் பிரயோகங்களிலேயும் நடக்க வேண்டும். இப்படி கட்டுப்பாடு உண்டு
 
இறைவனை நேரடியாக பக்தி மூலம் வழிபடும் போது தவறு செய்தால் என்ன ஆகும்? ஒருவன் இன்னொருவனுக்கு தவறு செய்கிறான். என்ன நடக்கும் என்பது தவறு செய்யப்பட்டவன் யார் என்பதை பொறுத்தது. எளியவனுக்கு, அசக்தனுக்கு சோகம் உண்டாகும். துணிவுள்ளவனுக்கு, சக்தனுக்கு கோபம் வரும். சர்வ சக்தனுக்கு மிகச்சிறந்த ஞானிகளுக்கும் இறைவனுக்கும் பரிவு, க்ருபை உண்டாகும். பாவம் தன்னிடம் தவறு செய்கிறானே என்று! அதனாலே இறைவனை ஆசார்ய முகமாக ஆரத்தழுவி பதம் பற்றி அவனை வழி படும் பக்தி நெறியிலே எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் கொள்ளலாம்; விதிகள் பொருந்தாது.

Wednesday, August 30, 2017

வேதம் - 6




சரி, இப்போ மந்திரம் என்பதோட பொருளை பார்க்கலாம். மந்தாரம் த்ராயதே இதி மந்த்ரஹ. எவனொருவன் உள்ளே மனனம் செய்கிறானோ, மனத்தால் நினைக்கிறானோ அவனை காக்கக்கூடியது மந்த்ரம். இப்போ இந்த ஒலி ஆற்றலை பார்த்தால், நிறைய வித்தியாசங்கள் உண்டு

 மூன்று மந்திர ஜாதிகள் உண்டு
 
முக்கியமாக மந்த்ரம் என்று சொன்னாலே வேத மந்திரங்கள்தான். நியதியால் மந்த்ரத்துவத்தை பெற்று இருப்பது, நியதி என்பது கயிற்றின் மேலே எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போல. இப்போது வைத்துக் கொள்ளலாம் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் சமாதானங்கள் இல்லாமல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதியில் இயங்குவது. சொன்ன சொல் காக்கக்கூடிய தன்மை பெற்றது, - யஸ்ய ஸ்மரண மாத்ரேண - நினைத்த மாத்திரத்திலேயே காப்பது- பகவானின் திரு நாமங்கள் முக்தி தரும் என்பர். அது போல.

கதியால இயங்குவன உண்டு. கதி விசேஷம் என்றால் அனுஷ்டானங்களில், உபாசனைகளில் வரும் மந்திரங்கள். எத்தனயோ உபாசன விதிகளை பார்க்கலாம். ஆகமங்களில் உள்ள விதானங்கள், தந்திர சாஸ்த்திரங்களில் வருவன. அவற்றிலேயும் அமுக்கியமான மந்த்ரத்துவம் உண்டு.இப்படி
வேதத்தில் வழங்கப்படுகின்றவனாய் உள்ள இறைவனை பல வித வடிவங்களிலே வழிபடுவது இரண்டாம் வகை.
 
மூன்றாவதாக தொல் காப்பியர் சொன்னபடி 'நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப' என்பது போல, நல்ல நெறியாளர்களாக பண்பாளர்களாக இறைவனிடம் நிறைந்த அன்பு பூண்டவர் வாயில் இருந்து வருவன எல்லாமே மந்திரம்தான்.
வேத வேத்யனாய் வேதமே வடிவானவனாய், வேதாந்தம் அறிந்து இருக்கும் ஞானிகள் தவ பெரியோர் இறைவனது திருவடிகளிலே தவிர வேறு ஒரு பொருளிலேயும் பற்றில்லாமல் இருக்கும் பெரியோர்கள் அவர்களுடைய அனுஷ்டானங்களும் வாய் மொழிகளும் மந்திரங்களை ஒத்தவை

ஆனால் சாஸ்த்திர வழக்கின் படி முக்கியமாக மந்திரம் என்பது வேதம் மட்டுமே.  

Monday, August 28, 2017

வேதம் - 5




எது புலன்களுக்கு புலப்படாதோ நம் செயல்திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதோ அந்த ஒலி திரளுக்கு மந்திரம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். ரசவாதத்திலே பதார்த்தம் என்கிறார்கள். பிரமாணம், நியதி அல்லது கிரமம் என்பர். எந்த எந்த பொருளை சேர்க்கணும்? என்ன அளவு சேர்க்கணும்? எந்த வரிசையில் எந்த சூழ்நிலையில் சேர்க்கணும்? இதுக்கு எல்லாம் ஒரு விதி இருக்கும். அந்த முறையில் சேர்க்கும் போது பல புதிய பொருட்கள் உருவாகும். அது போல சேர்க்க வேண்டிய ஒலிகள் - பதங்கள்; அவற்றை சேர்க்க வேண்டிய முறை அதாவது ஆனுபூதி கிரமம் என்னும் வரிசை; அதை சொல்ல வேண்டிய முறை ஸ்வரம் என்னும் ஒலிக்குறிகள் - இவை மூன்றும் சேர்ந்ததுக்கே மந்திரம் என்று பெயர்

 ஒருவர் எதை வேணுமானாலும் சொல்லலாம். அவருடைய தனிப்பட்ட தன்மையில் பக்தியினாலேயோ அல்லது அதிகாரத்தினாலேயோ தன் கருணை/ அன்பினாலேயோ பலவற்றை சொல்லலாம். ஆனால் என்ன நடக்கும் என்பது அந்த சொல்லுடைய ஆற்றலால இல்லை. சொல்பவருடைய ஆற்றலால நடக்கும். ராஜா சொன்னா நடக்கறதுன்னா அது அதிகாரத்தோட சக்தி. பெரியவங்ககிட்ட இருக்கறது அன்போட, கருணையோட சக்தி. எல்லாருக்கும் தக்கபடி இறங்கி வந்து கனிவோட பேசறது ஞானியோட கருணை என்கிற சக்தி. இப்படி இல்லாம வேதத்துடைய சக்தி வித்தியாசமானது

 ஒலிக்கூட்டத்தில எது முன்னே எது பின்னே வர வேண்டும் என்கிற கிரமப்படி இருக்கிற இந்த வேதம் அழியாது. மற்ற ஒலிகள் அழியலாம். அக்னி வாயு வருணன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கோம். அதெல்லாம் அழிந்தாலும் அழியும்; ஆனால் இஷேத்வா ஊர்ஜேத்வா என்பது வேத தொடரானால் அது எத்தனை காலமானாலும் அப்படியேத்தான் இருக்கும். யுகம் முடிந்து பிரளயம் வந்து திருப்பி வேதம் வெளிப்படும் போதும் அதேதான் வரும். இதை ஆநுபூதி நித்யத்வம் என்கிறார்கள்.

Thursday, August 24, 2017

வேதம் - 4




காற்று தென்னை ஓலைகள் நடுவே புகுந்து புறப்படுகிறது; மூங்கிலின் துளைகளின் வழியே புகுந்து புறப்படுகிறது. அப்போது எழுவதெல்லாம் ஓசை. ஒரு மரக்கிளை முறிந்து விழுகிறது. அப்போது எழுவது ஓசை
 
கோழி கூவுகிறது. நாய் குலைக்கிறது, சிங்கம் கர்ஜிக்கிறது . இது போல உயிரினங்களால் எழுப்பப்படுவது ஒலி. உயிரினங்களில திறம் சேர்ந்தவன் மனிதன். அவன் தன் சூழ்நிலை, தட்ப வெப்பத்துக்கு ஏற்றபடியும் தாளத்தை ஒட்டியும் பேசி வந்தவை மொழிகள். அவற்றில் செம்மையான மொழி உண்டு, நம் மொழி, செம்மொழி என்றெல்லாம் கொண்டாடுவார்கள். ஆனால் வாய்மொழி என்பது ஒரு வகை மொழியே அல்ல. அதை இப்போது இருக்கின்ற இண்டோ ஈரோபியன், இண்டோ இரானியன் என்றெல்லாம் மொழி வல்லுனர்கள் வகைப்படுத்துவது போல வகைப்படுத்த முடியாது., ஏன்னா அது உணர்வியல் வெளிப்பாடு, மற்றதெல்லாம் மொழியியல் வெளிப்பாடு.

அடுத்ததா இந்த ஒலிகளிலே வேதத்தின் தனித்தன்மையை பார்க்கலாம்.
காடுகளில சில ஒலிகளை எழுப்பினா மிருகங்கள் எல்லாம் பயந்து
ஓடுகிறதை பார்க்கிறோம். ஒலிகளால சிலர் ஈர்க்கப்படுவார்கள். ஒலிக்கு உணர்வுகளை தூண்டக்கூடிய வலிமை இருக்கிறது
 
ஒரு அறிஞர் photosynthesis போல phonosynthesis ஒளிச்சேர்க்கை போல ஒலிசேர்க்கை இருக்கிறதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். காட்டிலே நிறைய மரங்கள் இருக்கின்றனவே. அவை சாதாரணமா ஒரு இடத்திலே வளருகிற மரத்தைவிட இன்னும் செழுமையா இருக்க காரணம் அங்க இருக்கிற மண் வளம் தட்ப வெப்பம் மட்டும் இல்லை. அங்கே இருக்கிற பறவைகள் வண்டினங்களின் ஒலிகளை கேட்டு கேட்டே அவை சந்தோஷப்பட்டு வளமையா இருக்காம். இதுக்கு அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைச்சிருக்கு.. இவற்றுக்கே அவ்வளவு வலிமை இருக்கும்ன்னா நான்மறை கேள்விக்கு இன்னும் சிறந்த தன்மை இருக்காதா
 
ஒருத்தர் ஒரு கிணத்துக்குள்ள விழுந்துட்டார். , ஐயோ ன்னு கூவறார். அது கருணையும் சிரத்தையும் இருக்கற உதவக்கூடிய யார் காதிலேயும் விழுந்தா அவங்க ஒடி வந்து உதவுவாங்க. ஒரு கூக்குரலுக்கு ஒருவரை வரச்செய்யும் தன்மை இருக்கு. ஒலியால அச்சம் வருவதும் நமக்குத்தெரியும். அதே போல ஒரு அரசன் கட்டளை போடுகிறான். அதுக்கு கீழ்படுகிறோம். ஒரு கட்டளைக்கு கீழ்படிய காரணம் அன்பா இருக்கலாம்; பயமா இருக்கலாம்; அல்லது கனிவால, இரக்கத்தால இருக்கலாம். இதெல்லாம் லௌகீக சப்தங்கள். அதாவது உலகத்தில் சாதாரணமாக வழங்கி வருகிறவை. நாம் நம் புலன்களாலேயோ அல்லது ஏதோ உபகரணங்கள் உதவியுடனோ செய்யக்கூடியவை லௌகீகம்.

வேதம் அலௌகீகம், அதாவது உலகத்தில காண முடியாதது. நம்மால் இதை செய்ய முடியாது. கூட்டாக சேர்ந்தாலும் முடியாது. எதேனும் கருவியை கொண்டும் செய்ய முடியாது. இனி வர போகிற கருவிகளைக்கொண்டும் செய்ய முடியாது. இந்த ஒலிகளைத்தான் மந்திரம் என்கிறோம்.