Pages

Showing posts with label இறப்பு. Show all posts
Showing posts with label இறப்பு. Show all posts

Wednesday, November 15, 2017

இறப்பு - 3





நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..
அது அப ம்ருத்யுஞ்ஜயம்தான் தரும். சில சமயம் காலம் வருமுன்னரே இறப்புக்கான சூழ்நிலை உருவாகிவிட்டால் அப்போது செய்ய பலன் தரும்.
ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கறார். படுத்த படுக்கையா இருக்கார். இந்த சமயத்துல செய்ய அது இறப்புக்கான நேரம் இல்லைன்னா பலன் தரும்.
வெள்ளம் சுனாமி, பூகம்பம்ன்னு சில பேரிடர்கள் சில சமயம் ஏற்படும் இல்லையா? அப்ப கூட்டம் கூட்டமா இறப்பு நிகழும். எல்லாருக்குமா அந்த நேரத்தில் இறப்பு விதிச்சு இருக்கும்? இல்லை. இந்த மாதிரி சமயங்களிலதான் இந்த மாதிரி ஹோமம் செய்து இருந்தா மிராகிள்கள் நடக்கும்! அஞ்சே நிமிஷம் சார். ப்ளேனை தவற விட்டுட்டேன்! அது விபத்துக்குள்ளாகி எல்லாரும் இறந்து போனார்கள்.
தப்பிச்சு ஓடிண்டு இருதேன். நான் ஓடறப்ப ஒரு பெரிய மரம் விழுந்தது. ஜஸ்ட் ஒரு அடி பின்னால விழுந்தது!
வண்டில வேகமா பாலத்தை தாண்டினேன் சார். வண்டி பாலத்தை விட்டு வெளியே வரவும் அது இடிஞ்சு விழவும் சரியா இருந்தது.
இவர்களுக்கு எல்லாம் நேரம் வரலை. அது வரும்போது போய்விடுவார்கள். கடைசியா சொன்ன உதாரணம் சுனாமி சமயத்தில எங்க ஊர்லேயே நடந்தது! தப்பிச்ச அவர் ரெண்டு வருஷம் கழிச்சு லிம்ஃபோமா வந்து இறந்து போனார்.
இறந்து போனா என்ன ஆகிறது?
அடுத்த பிறவி எடுக்கிறது.
ஏன்?
இந்த ஜன்மத்தில செய்த செயல்களால் கர்மாக்கள் சேர்ந்து இருக்கும். அதை அனுபவிச்சு ஆகணுமே! அதுக்காக. இது 'கெட்ட' கர்மாவா இருக்கணும்ன்னு கூட இல்லை! 'நல்ல' கரமாக்களா கூட இருக்கலாம். சில கர்மாக்களை கெட்டதா நல்லதான்னு நிச்சயிக்க முடியாது. கலந்த ரிசல்டே கிடைக்கும்.
பின்ன இதுக்கு முடிவே கிடையாதான்னா... கர்மாவை - நல்லதோ கெட்டதோ- பகவத் அர்ப்பணமாக செய்தால் அதன் பலன் நமக்கு ஒட்டாது. அது பகவானுக்கே போய் சேரும். சின்ன வயதில் இருந்தே இப்படி செய்யக்கூடியவர் யார் இருக்கா?
எது பிறவி எடுக்கிறது? அது எதை கூடவே கொண்டு போகிறது?
ஜீவன்தான் பிறவி எடுக்கிறது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சேர்த்த சொத்து எதையும் கூட கொண்டு போக முடியாது! கொண்டு போவது எல்லாம் ஆணவம், கன்மம், மாயைன்னு சைவ சித்தாந்தத்தில சொல்கிற மூணுதான். ஆணவம் நான் என்கிற நீங்காத நினைப்பு. யாராலும் இந்த நான் இல்லாம இருக்க முடிகிறதோ? மாயையும் ஏறத்தாழ இதே போல. கொஞ்சமே கொஞ்சம் நேரம் இருக்கிற விஷயங்களை ஏதோ நிரந்தரம் போல எண்ணி ஏமாறுவது. இருக்கிற உண்மையை தெரியாத மாதிரி மறைக்கிறது. உலகம்ன்னு ஒண்ணை உருவாக்கி நாம் அதில அழுந்தி இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி செய்வது. கன்மம்தான் கர்மான்னு இப்ப சொன்னது.
உபநிஷத்துல விஸ்தாரமா இது எப்படி நடக்கிறதுன்னு சொல்லி இருக்கு.
இப்ப அதுக்குள்ள போகலை.

Tuesday, November 14, 2017

இறப்பு - 2






உலகில் எது ஆச்சரியம்? ன்னு யக்ஷன் கேட்ட கேள்விக்கு தர்மர் "பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டே இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?” அப்படின்னு சொல்லுகிறார்.

யோசிச்சுப்பாத்தா இது எவ்வளோ இயற்கையானது! பிறக்கும் போதே இறப்பும் நிச்சயமா இருக்கு. எப்ப என்கிறதுதான் ஆளுக்கு ஆள் வித்தியாசமா இருக்கு. பிறந்தவர் இறக்காமலே இருந்தா என்ன ஆகும்?

ஒரு ராஜா இருந்தான். இறப்பற்ற வாழ்கையை தரும் தண்ணீர் இருக்கிற சுனையைப்பத்தி அவனுக்கு கொஞ்சம் தகவல் கிடைத்தது. அதைத்தேடி கிளம்பினான். சில வருஷங்கள் சுற்றி அலைந்து ஒரு வழியா அதை கண்டு பிடிச்சான். ஆஹான்னு சந்தோஷப்பட்ட நேரத்தில அங்க ஒரு காகம் வந்தது. அதோட இறக்கை ஒண்ணு காணவே காணோம். மத்ததும் நிறைய இறகுகள் பிஞ்சு இருந்தது. அதால பறக்கவே முடியலை. மெதுவா தத்தித்தத்தி நொண்டிக்கொண்டே வந்து சேர்ந்தது. பார்க்கவே பரிதாபமா இருந்தது. ஹீன ஸ்வத்தில "ராஜா, நீ இறப்பிலா வாழ்வு தரும் சுனையை தேடி வந்தயா?” ன்னு கேட்டது. ராஜா ஆமாம்ன்னான். சரி. நானும் அப்படித்தான் அலைஞ்சு திரிஞ்சு இதை கண்டு பிடிச்சேன், தண்ணி குடிச்சேன். இந்த தண்ணியை குடிக்கறதுக்கு முன்னால என் நிலையை கொஞ்சம் பாத்துட்டு முடிவு பண்ணுன்னு சொல்லித்து. ராஜா கொஞ்சம் யோசிச்சுட்டு சரியாத்தான் சொல்லறேன்னு நன்றி சொல்லிட்டு தண்ணியை குடிக்காமலே திரும்பிட்டான்! 
 
ஆண்டவா என்னை கொண்டு போக மாட்டயா? ன்னு அழுது புலம்பறவங்களை நாமும் பார்த்து இருப்போம். ஊஹும்! லேசில போகாது. இந்த பிறவில அனுபவிக்க வேண்டிய கர்மாவை அனுபவிச்சுட்டுத்தான் போகும்.

அதே போல போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. கோவிந்த தீக்‌ஷிதர் கோவில் ஒண்ணை கட்டினார். ஸ்தபதி அருமையான வேலை செஞ்சு இருந்தார். கும்பாபிஷேகத்துக்கு முந்திய நாள் மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தபோது அதிர்ச்சியானார். அவரிடம் முன்னே வேலை செய்த ஒரு நபரை பார்த்தார். அவர் இறந்துபோய் சில வருடங்கள் ஆகிவிட்டு இருந்தன. இவன் எப்படி இங்கே இப்போ? யோசித்துக்கொண்டு இருந்தப்ப அவன் கிட்டே வந்து வணங்கி "ஐயா வணக்கம். நான் சாதாரணமா மனிதர் கண்னுக்கு தெரிய மாட்டேன். ஆனா உங்க தபோ சக்தியால நீங்க என்னை பார்க்க முடியறது" என்றான். கூடவே "இப்ப எனக்கு யமதர்மராஜனுக்கு வேலை செய்யச்சொல்லி இருக்காங்க" என்றான். "எமனா? உனக்கு இங்க என்ன வேலை?"ன்னு கேட்டார். "ஐயா இந்த கோவிலை கட்டின ஸ்தபதிக்கு ஆயுசு முடியுது. நாளை கும்பாபிஷேகத்துக்கு குறிச்ச நேரத்துக்கு கொஞ்சம் முந்தி அவரை கொண்டுபோயிடுவேன்; ஏணியில ஏறும்போது கீழே விழுந்து போயிடுவார்" என்றான்.

அடுத்த நாள் காலை தீக்‌ஷிதருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வளோ நல்ல வேலை செய்து கொடுத்த ஸ்தபதி இறந்து போவதாவது! அத்தோட கும்பாபிஷேகத்துக்கும் அது தடையா இருக்குமே! ஸ்தபதியை வீட்டுக்கு அழைத்துப்போனார். ஒரு அறையில் வைத்துப்பூட்டினார். சாவியை வெளியே ஆணியில் மாட்டிவிட்டு காவலுக்கு ஒரு ஆளையும் போட்டுவிட்டு வந்துவிட்டார். கும்பாபிஷேகத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. கடைசி நேர வேலை ஒன்றை செய்ய ஸ்தபதியை தேடினார்கள். எங்கெங்கோ அலைந்து கண்டிபிடித்தும் விட்டார்கள். காவலுக்கு இருந்தவர் அவசரமாக இயற்கை உபாதையை கவனிக்க போயிருந்தார். ஆணியில் மாட்டி இருந்த சாவியால் கதவைத்திறந்து அவரை வெளியே விட்டார்கள். அவசரமான வேலையை தெரிந்துகொண்ட ஸ்தபதி அவசர அவசரமாக போனார். அதே அவசரத்தில் ஏணி ஏறினவர் தடுக்கி விழுந்தார்; போய் சேர்ந்தார்!

நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..




Monday, November 13, 2017

இறப்பு - 1





இறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க! பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க!

மனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு!

வெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(
யோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு! ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே? அப்புறம் என்ன பயம்? இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம்? எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை!

பிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.

ரைட்! இந்த இறப்பு என்கிறது என்ன? எது செத்து போகிறது? உடம்பா? அதுதான் அங்கயே அப்படியே இருக்கே? உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்க.

என் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா? அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.

உடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ்! பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும்! தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு? அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம்? இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை!

நொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம்? அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது? எந்த புள்ளியில? தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.