Pages

Showing posts with label முதல் பாகம்.. Show all posts
Showing posts with label முதல் பாகம்.. Show all posts

Friday, October 14, 2011

பஞ்சதஶீ 1-4



ததா² ஸ்வப்நே'த்ர வேத்³யந்து ந ஸ்தி²ரம்° ஜாக³ரே ஸ்தி²ரம்|

தத்³பே⁴தோ³'தஸ்தயோ​: ஸம்°விதே³க ரூபா ந பி⁴த்³யதே || 4||




அதே போல் கனவு நிலையும். அதில் காண்பவை நிலையற்றை என்கிறோம். விழிப்பு நிலையில் காண்பவை நிலையானவை எனச்சொல்கிறோம். இப்படி இவை வேறானவை. ஆயினும் இந்த கனவை காண்பதும் நினைவை காண்பதும் ஒரே பொருளாகும்.

Saturday, October 8, 2011

பஞ்சதஶீ 1-2


த த்பாதா³ம்பு³ருஹ த்³வந்த்³வ ஸேவா நிர்மல சேதஸாம் | 
ஸுக² போ³தா⁴ய தத்த்வஸ்ய விவேகோ'யம்° விதீ⁴யதே || 2||

அந்த பாதங்களுக்கு சேவை செய்து உள்ளத்தூய்மை அடைந்தோருக்கு சுகத்தை தரும் புத்தியில் தத்வத்தின் விவேகம் பிரகாசிக்கிறது. 

Thursday, October 6, 2011

பஞ்சதஶீ, முதல் பாகம் -1


  ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமி எழுதிய பஞ்ச தஶீ என்னும் அத்வைத நூல் இனி வாரம் 3-4 நாட்கள் வரும்.
தத்வவிவேகோநாம - ப்ரத²ம​: பரிச்சே²த³​:.
தத்துவ விவேகம் எனும் முதல் பாகம்.

நம​: ஶ்ரீஶங்கராநந்த³ கு³ரு பாதா³ம்பு³ஜந்மநே |
ஸ விலாஸ மஹா மோஹ க்³ராஹ க்³ராஸைக கர்மணே || 1||

என் குரு ஶ்ரீஶங்கராநந்தரின் பாத கமலங்களை வணங்குகிறேன். அவர் மஹா மோஹத்தின் காரியமான இந்த பிரபஞ்சத்தை நசிக்கச்செய்கிறார்.