Pages

Showing posts with label ஞானாம்ருதம். Show all posts
Showing posts with label ஞானாம்ருதம். Show all posts

Monday, January 14, 2019

ஞானாம்ருதம் - 4





பல காலம் ப்ரவசனத்துக்கு வெளியூரே போகாம ஒரே இடத்தில... நொச்சூர்லயோ திருவண்ணமலையிலோ இருந்தாக்கூட இதை பாத்திருக்கேன். எங்கேந்தோ பாம்பேலேந்தோ... சில சமயம் வெளிநாட்டுலேந்து கூட.... வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எத்தனையோ கஷ்டங்களை சகிச்சுண்டு அபூர்வமா ... அது ஒண்ணும் ஜெனரல் பெனாமெனன் கிடையாது.. அபூர்வமா ... சத் சங்கத்துக்கு மட்டும் ஆசைபட்டுண்டு யாரானா பார்க்க வருவா. அவாள எந்த ஃபோர்ஸ் இங்க இழுத்துண்டு வந்துதோ அதே ஃபோர்ஸ் நமக்குள்ள பூந்துண்டு நம்ம பேசவும் வைக்கும். அத பார்க்கறப்பவே தெரியும்.... பகவானோட கிருபைன்னா என்னன்னு அப்பத்தான் நமக்கும் புரியும். அந்த விழைவு... அதப்பாத்துத்தான் ராமக்ருஷ்ணர் நரேந்திரனை நீ நாராயணன்னு சொன்னார். அந்த விழைவு... தலைல தீப்பிடிச்சுண்ட மாதிரி... வேதாந்தத்திலயே அப்படித்தான் எக்ஸாம்பிள் கொடுப்பா.. தலைல நெருப்பு பத்திண்டா ஜலத்த தேடிண்டு எப்படி ஓடுவோம் நாம? நாளைக்கு அணைச்சுக்கறோம்ன்னு உக்காண்டு இருப்போமானா? ப்ரதீப்த சிரஹா ஜலராசிரிவ ...
நமக்கு முன்னாடியே ம்ருத்யு ஜரா வியாதின்னு தோஷம் எல்லாம் கண்ணு முன்ன வந்து நிக்க... நமக்கு மரணம் இருக்கு என்கிற உண்மைய நாம எதிர்கொள்ளறப்ப .. நமக்கு வியாதி இருக்கு. நமக்கு இஷ்ட பட்டவா எல்லாரும் நம்ம கூடவே இருப்பான்னு சொல்ல முடியாது... அந்த துன்பம் யாரும் வராம இருக்கட்டும் ஆனா வந்தா என்ன பண்ணறது? இதுக்குத்தான் சம்சாரம்ன்னு சொல்றோம். அந்த துன்பங்கள் எல்லாம் இருக்கு லோகத்தில. அதை எல்லாம் பாக்கறத்த அந்த டீப் பெய்ன் எக்ஸ்க்ரூஷியேடிங் பெய்ன் அது ஒருவாட்டி பட்டுதானாத்தான் நாம முழிச்சுக்கறோம். நாம நினைச்சா மாதிரி இந்த லோகத்தில சுகமா இருக்க முடியாது. சுகமா இருக்கறதெல்லாம்.... பெரிவா ஒரு ... ரெண்டு உதாரணம் சொல்லுவா. ஒண்ணு பாம்பு வாயில இருக்கற தவளை. அது முன்னாடி போற ஒரு ஈய பிடிக்கப்போறதாம். அந்த பாம்பு வாய க்ளோஸ் பண்ணிடுத்துன்னா உள்ளா போயிடும். சக்‌ஷுஶ்வரண களஸ்தமாம் தர்புறம்ன்னு மலையாளத்துல... அத்யாத்ம ராமாயணத்துல.. அந்த தவள மாதிரி ஜீவன் இங்க எல்லாம் சுகம்தான் ஒரு துன்பமும் வராதுன்னு நினைச்சு தன்னத்தானே ஏமாத்திண்டு நித்யமான வஸ்துவ மறந்து அநித்தியமான த்ரவ்யங்களையே நித்யம்ன்னு நினைச்சுண்டு ஆஶ்ரயிச்சுண்டு இருக்கு.

நல்லா புரிஞ்சுக்கணும்.
அநித்யமான த்ரவ்யங்கள உபயோகப்படுத்தாம யாரும் இருக்க முடியாது. நான் பணம் சம்பாதிக்கறத நிந்த பண்ணல. அது எல்லாருக்குமே வேணும். எனக்கும் வேணும் உங்களுக்கும் வேணும். சாப்டறத்துக்கு வேணும். அது ஒன்லி அ மீன்ஸ்... நெசசிடி. அது வியவகாரத்துக்கு வேணும். த்ரவ்யங்கள ... தேகம், ஆரோக்யம், வீடு குடும்பம் இதெல்லாம் வியவஹாரம் செய்யலாம். ஶ்ரயிக்கப்படாது. அது எப்ப வேண்ணா ஏமாத்திடும். நித்யமான வஸ்துவ வியவகாரம் பண்ண முடியாது; அத ஆஶ்ரயிக்கணும். நாம் இதை தலைகீழா பண்ணறோம். அந்தியமான த்ரவ்யங்கள ஆஶ்ரயிக்கறோம். நித்யமானத வியவகாரம் செய்யப்பாக்கறோம். ஒரு கோவில கட்டி அந்த கோவில்ல அநேக கர்மாக்கள செஞ்சு வியவகாரம் பண்றோம். இதுக்கெல்லாம் பணம் வேணுமே? அப்படின்னு பணத்த ஆஶ்ரயிக்கறோம். பகவான் என்ன சொல்றார்னா நீ என்னா ஆஶ்ரயிச்சுக்கோ, அப்பறம் பணத்த வியவகாரம் பண்ணு, பரவாயில்ல. அப்படி நாம் பண்ணறதில்லை.

Thursday, December 20, 2018

ஞானாம்ருதம் - 3





பகவான்கிட்டேந்து எதாவது கிடைக்கணும்ன்னு ஆசை படறாளே தவிர பகவான் கிடைக்கணும்ன்னு யாரும் ஆசை படறதில்லை.

அதுக்கு மேலே ராம க்ருஷ்ணர் இன்னொன்னு கூட பண்ணினார், அதுதான் ரொம்ப ஆஸ்சர்யம். அந்த குழந்தைய உள்ள கூட்டிண்டு போய் நமஸ்காரம் பண்ணி தலைல புஷ்பம் வெச்சு தீபாராதனை ஆரத்தி காட்டி 'நீ சாக்‌ஷாத் நாராயணன்'னு சொன்னார். இது ஏதோ கதையில சொல்லறப்ப ஈஸ்வர அவதாரம்ன்னு சொல்லிடலாம். அது அப்படி இல்ல. இப்ப இது எனக்கு நல்லா புரியறது. ஏன் அப்படி பண்ணார்ன்னு. என்னன்னா இந்த லோகத்தில பணத்துக்கு வேண்டி ஜனங்கள் எங்கே வேணா போக ஸித்தமா இருக்கா. பணத்துக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். படிக்கறதுக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். வேற ஏதாவது தனக்கு ஆவஸ்யமானதுக்கு எங்கே வேணும்னாலும் போறதும் புரிஞ்சுக்க முடியும். அப்படி இருக்கறப்ப ஈஸ்வரனுக்காக? என்ன சொல்லுவானா வரமுடியாது. பெங்களூர்ல ட்ராஃபிக் ரொம்ப அதிகம். கீத கேக்கணும்ன்னுதான் இருக்கு. ஆனா எங்களால வர முடியறதில்லை. ரொம்ப கஷ்டம் பேங்க்ளூர்ல... இப்படி ஏதோ சொல்லுவோம் நாம. ஆனா இதுவே ஒரு அவசரம்.. உடம்புக்கு முடியல, ஆஸ்பத்திரி போகணும்ன்னா ட்ராபிக் ப்ளாக்ன்னு வீட்டிலேயா இருப்போம்? எப்படியாவது போயிடுவோம் இல்லையா? ஏன்னா அதுக்கு ஒரு தேவை இருக்கு. ஈஸ்வரனுக்குன்னு ஒரு ஜீவன் ஜிக்ஞாசு ... ஒரு பெரிய மஹான் சொல்லுவார் ஜீவன் முக்தனைவிட ஜிக்ஞாசு பெரியவன். ஏன்னா ஜிக்ஞாசுல ஈஸ்வரன் மானிபெஸ்ட் ஆகறதை நாம பாக்கலாம். அந்த ஆர்வம்... தமிழ்ல அழகான வார்த்தை ஒண்ணு ரமண பகவான் போடுவார்... விழைவு. அந்த ஈஸ்வரனை அடையணும் என்கிற விழைவு. இங்கேயே நிறைய பேர் இருக்கா. வெளியூர்லேந்து வந்தவா கூட இருக்கா. எப்படி வந்தா? அது உள்ளேந்து ஒரு போர்ஸ்... மனசு அத பண்ணாது. ஆத்ம ஞானத்துக்காக இங்கே போ. சத்சங்கத்துல கதை கேளுன்னு மனசு சொல்லாது. மனசு டிவி பாக்கத்தான் சொல்லும். பேப்பர் படிக்கத்தான் சொல்லும். லோக வர்த்தமானங்கள பேசத்தான் சொல்லும். லோக விஷயங்கள்ல ஈடுபடத்தான் சொல்லும். மனச விட டீப்பர் ப்ளேன்ல இருக்கற ஒரு ஃபோர்ஸ்தான் நம்மள உந்திண்டு போய் சத்சங்கத்துக்கு போக வைக்கும். ஞானிகளை போய் பாக்கச்சொல்லும். அந்த ஆர்வத்தை உண்டு பண்ணும். தபஸ் பண்ணு, தியானம் பண்ணு, சத் க்ரந்தங்களை படிக்கச்சொல்லும். இப்படி அந்த ஃபோர்ஸ் விழைவு ஜிக்ஞாசுல பாக்கறது ஞானிகளுக்கு பகவானோட தரிசனம்.

Wednesday, December 5, 2018

ஞானாம்ருதம் - 2





இப்படி செய்ய முடியுமான்னு நினைக்கலாம். வள்ளலார் பாடி இருக்கார். மரணமில்லா பெருவாழ்வு வாழலாமே! நான் அடைஞ்சிருக்கேன்பா, உன்னாலேயே முடியும். நீயும் செய்யேன்னு கெஞ்சரா மாதிரிதான் பாட்டு இருக்கும்.
விவேகானந்தர் இளைஞனா இருந்தப்ப இப்படியேதான் கேட்டுண்டு அலைஞ்சார். கடவுளை பாத்திருக்கீங்களா? முதல்ல ஒத்தர் காட்டிக்கொடுத்தது நபீந்த்ரநாத் தாகூரோட அப்பா மஹரிஷி தேவேந்திரநாத் தாகூர். கங்கையில் ஒரு ஹவுஸ் போட்ல உக்காந்து த்யானம் பண்ணிண்டு இருக்கார். நரேந்திரன் 15 வயசு பையன். கங்கையில் குதிச்சு நீந்தி அங்கே போய், அவரை தட்டி எழுப்பி தண்ணி சொட்ட சொட்ட நின்னுண்டு கேக்கறான்: கடவுளை பாத்திருக்கீங்களா? தேஜஸோட ஒரு பையன் இப்படி ஈரத்தோட நின்னுண்டு கேட்கறதை பாத்து அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு. உசந்த நிலையை அடைஞ்ச யோகியானாலும் அவருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அவர் சொன்னார் " உன்ன பாத்தா யோகி மாதிரி இருக்கு. உன் கண்களில யோக லக்‌ஷணம் இருக்கு. உன்னால் அடைய முடியும். நீ இங்க உக்காரு.” நரேனுக்கு கோவம் வந்துடுத்து. நான் கேட்டது நீங்க பகவானை பாத்திருக்கீங்களான்னு. இவர் பாட்டுக்கு வேற என்னவோ சொல்லிண்டு போறாரே?
இது ஒரு டெக்னிக். யார் கேள்விக்காவது பதில் சொல்ல தெரியலைன்னா அவாளை கொஞ்சம் ஸ்துதிச்சுட்டா போறும். அவா எங்கேயோ மேல போயிடுவா! என்ன கேக்க வந்தோம்ன்னு மறந்தே போயிடுவா.
நரேனுக்கு திருப்தி ஆகலை. திருப்பியும் தண்ணில குதிச்சு நீஞ்சி கரைக்கு போயிட்டான்.
அப்புறம்தான் யாரோ அவனோட காலேஜ் ப்ரொபசர், ராமகிருஷ்ணரை அறிமுகப்படுத்தறார். முதல்ல கல்கத்தால ஒரு பஜனைல வெச்சு பார்க்கறார். இனிமையா பஜன் கூட பாடினார். அப்புற தக்‌ஷிணேஸ்வர் போய் ராமகிருஷ்ணரை பாத்து இதே கேள்வியத்தான் கேட்டார். “நீங்க பகவானை பாத்திருக்கீங்களா?”
அவர் இவனுக்கு புரியறா மாதிரி சொன்னார்: "பாத்திருக்கேன்பா. இதோ உன்னை இப்ப பார்க்கறதைவிட கிட்ட பாத்திருக்கேன்! ”
'சந்தம் சமீபே ரமணம் ரதிப்ப்ரதம்' ன்னு பாகவதம் சொல்லறது. ரொம்ப கிட்டே. அதவிட கிட்ட வர முடியாது. எனக்குள்ளேயே என்னோட சொரூபமாவே இருக்கற பொருளா, ஆனந்தத்துக்கு இருப்பிடமா சாந்தியோட தாமமா பகவானை நான் பாத்திருக்கேன். நான் பாத்திருக்கேன்னு மட்டுமில்லை. உனக்கு வேணுமானால் காட்டிக்கொடுக்க முடியும். அப்புறம் தனக்குத் தானே பேசிண்டாராம் ' அப்படி யாருக்கு வேணும்? யாருக்குமே ஈஸ்வரன் வேண்டாம்!”
ஐஸ்வர்யத்துக்குத்தான் ஆசைப்படறாளே தவிர ஈஸ்வரனுக்கு யாரும் ஆசைப்படறதில்லையே?

Monday, December 3, 2018

ஞானாம்ருதம் - 1





யது மஹா ராஜா அவதூதரை பாத்து ஆச்சரியப்படறான். எனக்கு வேளா வேளைக்கு நல்ல அறுசுவை சாப்பாடு கிடைக்கறது. வேலை செய்ய எத்தனையோ ஆட்கள் இருக்கா. கைதட்டின்னா வந்து ஏன்னு கேட்க பத்து பேர் இருக்கா. எங்கானா போகணும்ன்னா ரதம் கொண்டு வந்து நிறுத்தறா. இருந்தாலும் சந்தோஷம் இல்லே.
இவருக்கோ ஒண்ணுமே இல்ல. இடுப்புல ஒரு கோவணத்தத்தவிர துணிகூட இல்ல. அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா, எங்க கிடைக்கும்ன்னு கூட தெரியாது. ஆனா இவ்வளோ ஆனந்தமா இருக்காரே?

அவதூதர்கிட்ட போய் கேட்கறான். "ப்ரூஹி ஆத்மனி ஆனந்த காரணம்" அதெப்படி இவ்வளவு ஆனந்தமா இருக்கீங்க?
லோகத்தில இப்படி ஆர்கிட்டேயும் போய் கேட்போமானா? அப்படி கேட்டா த்ரிஷ்டி பட்டுடும்ன்னு சொல்லுவோம்.
சௌக்கியமா இருக்கறதுதானே இயல்பா இருக்கணும். அதானே ஆரோக்கியம்?
யாரானா உடம்பு சௌக்கியமா இருக்கறவங்ககிட்டப்போய் அதெப்படி இவ்வளோ சௌக்கியமா இருக்கீங்க? உங்களுக்கு என்ன பிபி வராதா? கான்சர் மாதிரி வியாதி எல்லாம் வராதா? ன்னு கேட்போமானா? அப்படி கேட்ட அடிதான் கிடைக்கும்!
ஏன்னா ஆரோக்கியமா இருக்கறதுதான் இயல்பு.
அதே போல ஆனந்தமா இருக்கறதுதான் இயல்பு.
ஆனா லோகத்தில அது அன்நேசுரலாத்தான் இருக்கு. ஆனந்தமா ஒத்தர் இருக்கறது காணமாட்டேங்கிறது. துக்கிக்கறது நேச்சுரலா இருக்கு. ஆனந்தமாவே இருந்த கிருஷ்ணன்தான் கீதையில 'அநித்யம் அசுகம் லோகம்' ன்னு சொல்லறார்.
இது அநித்யம்ன்னா லோகத்துக்கு வந்திருக்கற நான் என்னதான் செய்யணும்?
'இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்!'
ஆனந்தமா இருக்கணும்ன்னா என்னை பக்தி பண்ணு; பஜனை பண்ணு.
பகவானை பாத்துண்டு இருந்தா ஆனந்தமா இருக்கலாம். லோகத்தையே பாத்துண்டு இருந்தா என்னைக்காவது அது கடிக்கும்!... லோகத்தில எதையாவது ஒண்ண பிடிச்சுண்டு நான் ஆனந்தமா இருக்கேன்னு சொன்னா என்னைக்காவது ஒரு நாள் அது உன்னை விட்டு போயிடும். அப்ப துக்கமே வரும்.