Pages

Showing posts with label கர்மா -5 ஆம் சுற்று. Show all posts
Showing posts with label கர்மா -5 ஆம் சுற்று. Show all posts

Tuesday, March 16, 2010

மானச பூஜை




சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.....

ஆண்கள் பூஜை செய்ய பெண்கள் உதவணும். பூஜை செய்கிற இடத்தை மெழுகி கோலம் போட்டு, பூக்கள் போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து வைத்து நிவேதனம் செய்ய ஏதேனும் தயார் பண்ணி - இப்படி பல வேலைகளை ஒழுங்கா செய்து இருந்தாதான் நிம்மதியா பூஜையை ரங்கமணி செய்யலாம். இல்லாவிட்டால் எங்கே வில்வம் காணோம், நிவேதனம் கொண்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஆரம்பிச்சு பல பிரச்சினைகள் துவங்கி பூஜை செய்கிற குறிக்கோளே போயிடும். கடேசில கோபம்தான் மிஞ்சும்.
அதனால பூஜைக்கு உதவற தங்கமணிகளுக்கு 50% புண்ணியம்.

மனைவி செய்கிற புண்ணிய காரியத்திலே இந்த மாதிரி பங்கு ஏதும் இல்லாம போகிற வாய்ப்பே அதிகம். அதனால அவங்க புண்ணியம் முழுக்க அவங்களுக்கே.

மனைவி தப்பு பண்ணா சரியா சொல்லிக்கொடுத்து செய்ய வைக்காத தப்பு ரங்கமணிது. அதானால 50% பாபம் ரங்கமணிக்கு.

ரங்கமணி செய்கிற தப்புக்கு தங்கமணி பாவம், என்ன பண்ணுவா? முழு பொறுப்பு ரங்குக்கு. அதனால பாபம் முழுக்க அவனுக்கே!
என்ன தங்கமணிகளே சரிதானே?

பூஜைகள்ல ஆயிரத்து எட்டு விதங்கள் இருக்கிறதால அதுக்குள்ள இப்ப போகலை. அடுத்ததா...

பலரும் கேக்கிறது. தினசரி பூஜை செஞ்சுகிட்டு இருக்கேன். திடீர்ன்னு ஊருக்கு போகணும். என்ன செய்யறது?
இப்படி பட்ட கேள்விகள் ஆயிரம் முளைக்கலாம். ஒரே விடை எல்லாருக்கும் பொருந்தாது. எங்கே போனாலும் பூஜையை கூட எடுத்துகிட்டு போய் போகிற இடத்திலே செய்கிற சிலரைத்தெரியும். அந்த காலத்திலே அப்படித்தான் இருந்து இருக்காங்க.
இப்ப இது கொஞ்சம் கஷ்டமா போயிடுத்து. ஆசார அனுஷ்டானங்களோட இருக்கிறவங்களுக்கு இது சிரம சாத்யம் ஆகிகிட்டு இருக்கு.
இதிலே என் வழி என்னன்னு சொல்கிறேண். உங்களுக்கு சரின்னு தோன்றினா அப்படியே செய்யுங்க.
ஊருக்கு பூஜையை எடுத்துக்காமலே கிளம்பிடுவேன். வீட்டிலே மனைவி, அம்மா அப்பா இருக்கிறதாலே யாரானா சின்னதா பூஜையை செஞ்சுடுவாங்க. அப்படி வாய்ப்பில்லாத போதும் மற்றும் சில நாட்களும் பூஜை நேரத்திலே பஸ், ட்ரெயின் எதுலே இருந்தாலும் அப்படியே மனசுலே பூஜையை ஆரம்பிச்சு செய்வேன். இதிலே சில அட்வான்டேஜ் இருக்கு. நிறைய விதவிதமான பூக்களை அர்ப்பணிக்கலாம். நைவேத்யம் இஷ்டத்துக்கு எது வேணா எவ்வளோ வேணா செய்யலாம்!
மனசால செய்கிறது சுலபமா தோணினாலும் அப்படி இல்லை. முழு கான்சென்ட்ரேஷன் வேணும். இல்லை வழக்கம் போலே மனசுக் குதிரை எங்கானா மேய போயிடும். ஆரம்ப காலத்திலே இது பழகாதது என்பதாலே சுலபம். பழகின பிறகுதான் கஷ்டம். ஏன்னு புரியுது இல்லே?

Thursday, March 4, 2010

குளியல் மேலும்...



கடைசியா மகளிருக்கு வீட்டு விலக்கு ஏற்படுவது போல நதிகளுக்கும் உண்டு. அவை ஆடி மாத ஆரம்ப மூன்று நாட்கள். 4 ஆவது நாள் நதிக்கு கங்கை போல சுத்தம் உண்டாம்.
உடல் பலத்தைப் பொறுத்து தங்கி இருக்கிற இடத்திலிருந்து தீர்த்தத்துக்கு செருப்பில்லாம நடந்தே போகணும். குடை பிடிச்சு கொண்டு போனா கால் பாகமும், செருப்பு போட்டுக்கொண்டு போனா பாதியும், டோலியில் போனால் முழு ஸ்நாந பலனும் போய்விடுமாம்.
உடம்பு சரியில்லாதவர்கள் குதிரை வண்டியில் போக அனுமதி இருக்கு.
மற்ற ஸ்நாநங்கள்.
ஜலத்தில் குளிக்கிறதுதான் முக்கிய ஸ்நாநம். எல்லாத்திலேயும் இரண்டாவதா ஒரு தேர்வு இருக்குமில்லையா? செகண்ட் பெஸ்ட் ம்பாங்க.
அப்படி ஜலம் கிடைக்கலை அல்லது ஜலத்தில் குளிக்க முடியாதுன்னு இருக்கிறப்ப பலவித ஸ்நாநங்கள் இருக்கும்.
ஆக்னேயம் என்கிறது பஸ்ம ஸ்நாநம். வழக்கம்போல ஆசமனம், ப்ராணாயாமம், சங்கல்பம் எல்லாம். வெள்ளையான அக்னிஹோத்ர பஸ்மா எடுத்து (கிடைக்காட்டா மற்ற பஸ்மா) ஈசான மந்திரத்தால் தலையில் பூசணும். தத் புருஷ மந்திரத்தால் முகம்; அகோர மந்திரத்தால் ஹ்ருதயம்; வாமதேவ மந்திரத்தால் குஹ்யம்; ஸத்யோஜாத மந்திரத்தால் பாதங்கள்; ப்ரணவத்தால் உடம்பு முழுதும்.
சும்மா நெத்தியிலே விபூதி இட்டுக்கொண்டு ஆக்னேய ஸ்நாநம் செய்ததா நினைக்கிறாங்க. அது தப்புன்னு சொல்லத்தான்…
ஜலத்தில் குளிக்கிறதுதான் முன்னேயே பாத்த வாருண ஸ்நாநம். உடம்பு சரியில்லாதவன் தலையில் விட்டுக்காம குளிக்கலாம்; அல்லது ஈர துணியால உடம்பை துடைச்சுக்கலாம். இதுக்கு காபில ஸ்நாநம்ன்னு பெயர். வேத மந்திரங்களை (ஆபோஹிஷ்டா) சொல்லி தர்ப்பைகளால ப்ரோக்ஷணம் செய்வது ப்ராம்ம ஸ்நாநம். அஸ்தமன வேளையில் பசு மாடுகள் வீடு திரும்பும்போது அவற்றோட குளம்பு அடிபட்டு அதிலிருந்து கிளம்பற புழுதி நம் மேலே விழுவது வாயவ்ய ஸ்நாநம்.
எப்பவாவது உத்தராயண காலத்திலே மாலை வெய்யில் அடிக்கும்போதே மழை (இந்தியா இலங்கையில் கோடை மழை) பெய்யுமில்லையா? அப்படி ஏதேனும் பாத்தா உடனே அதிலே போய் நிண்ணுடனும். இது திவ்ய ஸ்நாநம். கங்கையில் குளிக்கிறதுக்கு ஒப்பாகுமாம் இது.
நல்ல மனக்குவிப்போட சங்கு சக்ர கதாதாரியா நாராயணனை மனசிலே த்யானிக்கிறது மானச ஸ்நாநம். இது யோகிகளுக்கு உரியது.
சுத்தமான மண்ணால மந்திரங்கள் சொல்லி உடம்பை தேய்த்து சுத்தி செய்து கொள்வது பார்த்திவ ஸ்நாநம்.
இத்தோட குளியல் குறித்த பதிவுகள் முடிந்தன.




Wednesday, March 3, 2010

குளிக்கும்போது கவனிக்க வேண்டியது..



குளிக்கும்போது கவனிக்க வேண்டியது சிலதை பார்க்கலாம்.
சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசாமல் சாப்பிட்டால் ஆயுசு அதிகமாகும். பேசிக்கொண்டு சாப்பிட்டால் ஆயுசு குறையும். ஹோமம் செய்யும் போது பேசினால் செல்வம் குறையும். பேசாமல் ஹோமம் செய்தால் அதிகமாகும்.
இதே போல குளிக்கும் போது பேசக்கூடாது.
நதி, குளங்களில் குளிக்கும்போது சூரியனை நோக்கியே குளிக்க வேண்டும். நதியில் ஓடும் தண்ணீர் இருந்தால் நீர் ஓட்டத்தை எதிரிட்டு குளிக்க வேண்டும்.

ஒரு கோவிலில் இருக்கும்போது இன்னொரு கோவில் ஸ்வாமியை புகழக்கூடாது. ஒரு க்ஷேத்திரத்தில் இன்னொரு க்ஷேத்திரத்தை புகழக்கூடாது. அதே போல ஒரு நதியில் குளிக்கும்போது இன்னொரு நதியை நினைக்கக்கூடாது. (காசியும் கங்கையும் மட்டும் விதிவிலக்கு)
கோவிலுக்கு போய் வருகிறோம். இல்லை தேர் திருவிழாவில்/ உத்ஸவத்தில் கலந்துகொண்டு திரும்புகிறோம். உடனே குளிக்கக்கூடாது. மங்கள் காரியம் செய்த உடன் குளிக்கக்கூடாது. உறவினர், சினேகிதர் ஆகியோரை வழி அனுப்பிவிட்டு வந்து உடனே குளிக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது.
வியாதி உள்ளவர்; பல கவலைகளால் குழப்பமடைஞ்ச மனமுள்ளவர்: சாப்பிட்டவர்; நன்றாக அலங்காரம் செய்து கொண்டவர் இவர்கள் நதிகளில் குளங்களில் குளிக்கக்கூடாது.
யாருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாரோ அவர் சமுத்திரத்தில் குளிக்கக்கூடாது.
குளங்கள் தர்மத்துக்கான பொது குளமாயிருந்தால் குற்றமில்லை. தனியார் குளமானால் அனுமதி இல்லாமல் அதில் குளித்தால் குளத்தின் சொந்தக்காரருடைய பாபத்தில் கால் பங்கை பெறுவோம். அனுமதி பெற்று 4-5 மண் கட்டிகளை அதிலிருந்து எடுத்து போட்டு விட்டு அதில் குளிக்கலாம்.
வீட்டுக் கிணறானாலும் ஒரு அடி இரண்டு அடி ஜலமே இருந்தால் அது குளிக்கத் தகுந்தது இல்லை. குறைந்தது 4 அடி ஆழம் ஜலமிருக்க வேண்டும்.
அதே போல் கொஞ்சமே ஜலமிருக்கிறதெனில் ஏரி, நீர்நிலை இவற்றில் *முழுகிக்* குளிக்கக்கூடாது. கைகளால் ஜலத்தை எடுத்து தலையில் விட்டுக்கொள்ளணும். அதே போல சமுத்திரத்திலும்.
[முழுக வேண்டும் என்ற ஆசையில் வெகுதூரம் ஆழமான இடத்துக்கு போய்விட வாய்ப்பு இருக்கிறதே? இதை காரணம் காட்டி சொல்லவில்லை. ஆனாலும் சில சாஸ்திர விஷயங்கள் லாஜிக்காக இருக்கிறன.]
நதி வற்றிப்போய் இருக்கு. அப்புறம் மழை பெய்தோ அணை திறந்தோ தண்ணீர் வருகிறது. இது அசுத்தமானது. பத்து நாட்கள் வரை இது குளிக்க அருகதையில்லாதது.
வண்ணான் துறையில் குளிக்ககூடாது. சரி, நதியில் துணி துவக்கிறார்களே, என்ன செய்வதுன்னா - வேறு வழியில்லாவிடில் பத்து முழம் தள்ளி குளிக்கலாம்.

சில சமயங்களில் சுத்தமாகிறதுக்காக குளிக்கச்சொல்லி இருக்கு.
அழுதால், வாந்தி எடுத்தால், ஷவரம் செய்து கொண்டால். மைதுனம் செய்தால், நாய், நாயை தின்பவனை தொட்டால், பிரசவித்த பெண்ணை தொட்டால், வீட்டு விலக்கானவர்களை தொட்டால்....லிஸ்ட் ரொம்ப பெரிசு. அத்தோட நம்ம டாபிக்குக்கு நேரடி சம்பந்தமில்லை. சிரத்தை உள்ளவர்கள் தேடி தெரிந்து கொள்ளலாம்.

இரவில் குளிக்கக்கூடாது. ராத்திரியில் நடுவில் உள்ள இரண்டு யாமம் மஹா நிசி எனப்படும்.
[ஒரு யாமம்  என்பது சுமார்  3 மணி நேரம். நடு இரவு 12 மணி என்று வைத்துக்கொண்டால் இரவு 9 முதல் காலை 3 வரை மஹா நிசி. இன்னும் சரியாக வேண்டுமானால் சூர்ய அஸ்தமனம் முதல் உதயம் வரை 4 ஆக பிரித்துக்கொள்ளவும். ஒரு இரவில் 4 யாமம்.] இந்த நேரத்தில் நிச்சயம் குளிக்கக்கூடாது. காம்ய ஸ்நாநமும் நைமித்திக ஸ்நாநமும் விலக்கானதால் அவசியமானால் சில விதிகள் படி செய்யலாம்.
ஊருக்கு போய்விட்டு வருகிறோம். குளிக்க வாய்ப்பு கிடக்கவில்லை. இரவாகிவிட்டது. இப்படி இருந்தால் வென்னீரில் அக்னியின் முன்னிலையில் அல்லது தங்கத்தை (யார் அதுன்னு கேக்கக்கூடாது!) பார்த்து/ நீரில் போட்டுக்கொண்டு குளிக்கலாம். க்ரஹணம், ஸூர்ய சங்க்ரமணம் (மாதப்பிறப்பு), விவாஹம், மரண ஜனனங்கள், யாத்திரை ஆகியன இந்த சட்டத்தில் வரும்.

மீன், தவளை, ஆமை எல்லாமே தண்ணீரில் முழுகித்தான் இருக்கின்றன. [கங்கையிலேயே முழுகி இருந்தாலும்] அவற்றுக்கு ஸ்நாந பலன் இல்லை. அது போல விதிப்படி செய்யாத ஸ்நாநம் என்கிறார் யாக்ஞவல்கியர்.


Tuesday, March 2, 2010

குளியல்- தீர்த்தங்களில் குளியல்




புனித தீர்த்தங்களிலே குளிக்க குறிப்பிட்ட கிரமம் உண்டு.
சங்கல்பம், மந்திரங்கள் சொல்வது, தலையில் புரோக்ஷணம் செய்து கொள்வது, குளிக்கும் போது மந்திரங்கள் சொல்வது, குளித்து முடித்து தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வது இப்படி 5 அங்கங்கள் அதுக்கு.
முதல்லே சங்கல்பம்: வழக்கம் போல் வடக்கோ கிழக்கோ நோக்கி குக்குடாசனத்தில் அமர்ந்து, ஆசமனம் செய்து தர்ப்பங்களுடன் கூடிய கைகளை வலது தொடை மேல் இடது கையை வைத்து அதன் மேல் மூடிய படி வலது கையை வைத்து இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் இன்னாராகிய நான் இந்த ஸ்வாமியின் சந்நிதியில் இன்ன நதியில் ஸ்னானம் செய்கிறேன் என்று சங்கல்பிப்பது.
பின் தீர்த்தத்தை நோக்கி வேதத்துக்கு அதிகாரமுள்ளவர் வருண சூக்தம் சொல்லவேண்டும். அதிகாரம் இல்லை, பயிற்சி இல்லை எனில் கீழ் காணும் ஸ்லோகத்தை கூற வேண்டும்.

அதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோப|
பை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||
[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]
[பிழை திருத்தப்பட்டது 3/3/2010)
கங்கா ஸ்மரணம்:
கங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||
[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]
து3ர்போஜன து3ரா லாப து3ஷ் ப்ரதிக்ரஹ ஸம்ப4வம்|
பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஜந்ஹுகன்யே நமோஸ்துதே||

விஷ்ணு ஸ்துதி:
ஸமஸ்த ஜக3தா3தா4ர ஸ2ங்க2சக்ர க3தா3த4ர|
மஹி தே3வ மமாநுஞாம் யுஷ்மதீர்த2 நிஷேவணே ||
த்வம் ராஜா ஸர்வ தீர்தா2நாம் த்வமேவ ஜகத:பிதா|
யாசிதம் தே3ஹி மே தீர்த்த2ம் ஸர்வ பாபாபநுத்தயே ||

[சேர்க்கப்பட்டது 3/3/2010)

பின் ஜலத்தில் இறங்கும் முன் அந்த ஜலத்தால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.
யக்ஷ ப்ரச்ன கதையில் முதலில் பீமன் இப்படி செய்யாமல் ஜலத்தில் இறங்கினாராம். அதனால் நேரிட்ட பிரச்சினைகளும் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? உபநயனமானவர்கள் ஆபோ ஹிஷ்டா என்ற மந்திரத்தால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். (மற்றவர் மந்திரமில்லாமல்)
பின் தீர்த்தத்தில் இறங்கி மூன்று முறை அகமர்ஷன ஸூக்தம் சொல்லியபடி முழுகி முழுகி எழுந்திருக்க வேண்டும். உடலை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இந்த சமயத்தில் பேசக்கூடாது. [பேசினால் காந்தியை இழக்கிறோம் என்கிறார்கள்!]

குளிரக்குளிர குளித்து கொண்டே இருக்கலாம். ஆனா எப்படியும் அதுக்கு முடிவு வந்தே ஆகணும் இல்லையா?
குளித்து முடித்ததும் ஆடையை பிழியாமலே ஜலத்தில் நின்று கொண்டே தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
கிழக்கு பார்த்து நின்று பூணூல் இடது தோளில் இருக்க தேவ தர்ப்பணங்கள்.
வடக்கு பார்த்து பூணூல் மாலையாக தோள்களில் இருக்க ரிஷி தர்ப்பணங்கள்.
தெற்கு பார்த்து பூணூல் வலது தோளில் இருக்க பித்ரு தர்ப்பணங்கள்.
இரண்டு கைகளாலும் சேர்த்தெடுத்து பசுவின் கொம்பு உயரத்துக்கு இறைக்க வேண்டும்.

கடைசியிலே தண்ணீரை அசுத்தமாக்கியதுக்கு பிராயச்சித்தமாக யக்ஷ்மா என்ற தேவதையை உத்தேசித்து கரையிலே தர்ப்பணம் ஒண்ணும் உண்டு!

யன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|
தத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||
[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]

இப்படிச் சொல்லி கரையில் இரு கைகளாலும் ஜலத்தை விட வேண்டும்.
பிறகு கரையேறலாம். உடம்பின் ஜலம் வடியும் வரை மௌனமாக நிற்க வேண்டும். உடம்பின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் விழும் ஜலம் ஒவ்வொரு தேவதையை திருப்தி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவசரப்பட்டு துடைத்துக்கொண்டு இதை இழக்க வேண்டாம்.
குடுமி இருக்கிறவங்க அதை முன் புறமாக தொங்கவிட்டு பிழியலாம்.
இதற்கு மந்திரம்:
லதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு வர்த்தந்தே பிதரோ மம|
தேஷாம் ஆய்யாய நார்த்த2ந்து இத3மஸ்து சிகோ3தகம்.||
[கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய சிகா ஜலம் இது.]
இது பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கும். தலை முடியை கையால் தட்டிவிட்டு ஜலத்தை வெளியேற்றக்கூடாது. அது மற்றவர் மேல் சிறிது விழுந்தாலும் பாபம் ஆகும்.
மேல் துணியை எடுத்து 4 ஆக மடித்து துணியின் நுனி வழியாக பிழிய வேண்டும்.
கீழ் துணியை நுனிகளை திரட்டி பிழிய வேண்டும்.
இது இரண்டுக்கும் மந்திரம் உண்டு.
கரையில் குக்குடாசனத்தில் அமர்ந்து ஆசமனம் செய்ய வேண்டும். அப்போது மேல் துணி இடது மணிக்கட்டு மேலே இருக்க வேண்டும்.
இரண்டு உலர்ந்த துணிகளால் (துண்டு) தலையையும் உடம்பையும் துவட்டிக்கொள்ள வேண்டும்.
பின் தீர்த்தக்கரையில் ஓர் பிராம்ஹணனுக்கு கர்மாவில் குற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதை விலக்க கொஞ்சம் தக்ஷிணை சக்திக்கு தக்கபடி தர வேண்டும்.
இப்படியாக தீர்த்த ஸ்நாநம்.

Monday, March 1, 2010

குளியல்:




காலையிலே எழுந்து இன்னும் குளிக்கலைன்னா சூரிய உபாசனைக்கு முன்னாலேயாவது குளிச்சுடணும்.
எழுந்தவுடன் குளிக்கிறதானால் சரீர சுத்தி, பல் தேய்கிறது, ஜல மலம் கழிப்பது எல்லாம் செய்துவிட்டு ஆசமனம் செய்தே குளிக்கணும். குளிக்கிறதே ஒரு கர்மா ஆனதால் அதுக்கு முன்னே கூடியவரை சுத்தி இருக்கணும். அதுக்குத்தான் ஆசமனம். ஆசார அனுஷ்டானங்களோட இருக்கிறவங்க ஒருமுறை குளிச்சு தலை, அக்குள் துவட்டிக்கொண்டு இன்னொரு முறை குளிப்பாங்க.
எந்த தண்ணியிலே குளிக்கிறது?
அட என்னங்க. தண்ணி கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு! எந்த தண்ணின்னு கேள்வி வேறயான்னு முணு முணுக்காதீங்க. எங்கே வாய்ப்பு இருக்கோ அங்க இந்த ஆர்டர்லே தேர்ந்தெடுக்கலாம்.
ஓடுற நீர் இருக்கிற நதி, நதி, ஏரி, அருவி, பொதுவா இருக்கிற குளம், குட்டை, கிணறு. அது சரி எவ்வளோ தூரம் ஓடினா அது நதி? 8000 வில் தண்ட தூரமாம். சுமார் 8 கி.மீ ன்னு வெச்சுக்கலாம்.
ம்ம்ம்... இப்பதான் மாசி மகம் போச்சு. அதான் நினைவுக்கு வருது. சாதாரணமாக சமுத்திரத்திலே குளிக்கிறது இல்லை. அமாவாசை, பௌர்ணமி அன்றைக்கு மட்டும் செய்யலாம். ம்ம்ம்... நீங்க சொல்கிறதுக்கு முன்னாலேயே நான் சொல்லிடறேன். ராமேஸ்வரம் மட்டும் இதுக்கு விதி விலக்கு! அங்கே என்னிக்கு வேணுமானாலும் மண்ணில் வில் வரைந்து சீதாராமருக்கு பூஜை செய்து சங்கல்பம் செய்து குளிக்கலாம்.
புனித தீர்த்தங்களிலே குளிக்க குறிப்பிட்ட கிரமம் உண்டு. சங்கல்பம், மந்திரங்கள் சொல்வது, தலையில் புரோக்ஷணம் செய்து கொள்வது, குளிக்கும் போது மந்திரங்கள் சொல்வது, குளித்து முடித்து தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வது இப்படி 5 அங்கங்கள் அதுக்கு. கடைசிலே தண்ணீரை அசுத்தமாக்கியதுக்கு பிராயச்சித்தமாக யக்ஷ்மா என்ற தேவதையை உத்தேசித்து கரையிலே தர்ப்பணம் ஒண்ணும் உண்டு!
உடம்பில் துணி இல்லாமல்; பேசிக்கொண்டே குளிக்கக்கூடாது. நாராயணனை நினைவு கொள்ளாமல் குளிக்கக்கூடாது. குளிக்கும் தண்ணீரில் வேண்டுமென்றோ கவனமில்லாமலோ அசுத்தம் செய்யக்கூடாது - கொப்பளிப்பது, ஜல மலம் கழிப்பது - இப்படி. புனிதமான கோவில் குளங்களில குளித்து விட்டு நன்றாக டெடர்ஜெண்ட் போட்டு துணி துவைக்கிறார்கள்! :-( இதுவும் ரொம்பவே பாபம். சிலர் அதில் வழுக்கி குளத்தில் வழிக்கூட வாய்ப்பு இருக்கு.
வென்னீரில் குளிக்கிறது உடம்பு சரியில்லாதவங்களுக்கு. தண்ணீரை நன்றாக கொதிக்க வெச்சு அதில பொறுக்கும் சூட்டுக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.
ஃப்லாட்லே இருக்கேன். மேலே இருக்கிற தண்ணி தொட்டி தவிர வேற வழியில்லைன்னு நினைக்கிறவங்களுக்கு: பல இடங்களிலே புதுசா தண்ணி தனியா பிடிக்கன்னு (fresh water line) தனியா ஒரு குழாய் இருக்கும். அந்த தண்ணியிலே மோட்டார் வேலை செய்கிறப்ப புதுசா தண்ணி பிடிச்சு குளிச்சு பாருங்க. உங்க சைனுசைடிஸ், மூட்டு வலி இனம் புரியாத அலர்ஜின்னு பலதும் குறைய ஆரம்பிச்சுடும். அனுபவப்பட்டு சொல்கிறேன்.

குளித்து முடித்து ஆசமனம் செய்தால் அடுத்த கர்மாவுக்கு ரெடி.
இப்படியாக குளிப்பதால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், சுகம், தைரியம், உயர்ந்த ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும்ன்னு சத்யவ்ரதர் சொல்கிறார்.
குளியல் பத்தி 5-6 பதிவுக்கு சமாசாரம் இருந்தாலும் இடம், பொருள், ஏவல் உத்தேசித்து சிலதை சொன்னேன். மேலும் சந்தேகமோ குறிப்பாகவோ ஏதேனும் தெரிந்து கொள்ள தனி மடல் இடுங்கள்.

Tuesday, February 23, 2010

நியாஸம் -தொடர்ச்சி2




இது மாதிரி ஆகிவிடக்கூடாது!
சாதாரணமாக மனித மனசு கொஞ்சம் மலினமானது. அது கொஞ்சம் ஜாக்கிரதை குறைவாக இருந்தாலும் பலவித ஆசைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக பலவித கோப தாப பொறாமை முதலியதற்கும் இடம் கொடுத்துவிடும். அதைதான் ராமக்ருஷ்ணர் வேடிக்கையாக சொன்னார் என்று நினைக்கிறேன். எப்படி கங்கை குளியலால் பாபங்கள் விலகுமோ அப்படி ஜபத்தினால் மனசும் கொஞ்சம் தூய்மையாகும். இதை வளர்த்துகிட்டே போகணும். பழைய படி மலின எண்ணங்களுக்கு இடம் கொடுக்ககூடாது. அதுக்கு முயற்சியாவது செய்ய வேணும்.

இது சக்தி பஞ்சாக்ஷரீ சமாசாரம். இதைபோலவே மத்ததுக்கும் உண்டு. பீஜாக்ஷரங்கள் மாறும். த்யான ஸ்லோகம் மாறும். அடிப்படை ஒண்ணேதான்.
நியாஸம் கூட மந்திரத்தையே மூணாகவோ ஆறாகவோ பிரிச்சு பயன்படுத்தறதும் உண்டு.

நாம ஜபத்துக்கு இப்படி ஒரு நியமமும் இல்லை. ஆசமனம் பண்ணி உட்கார்ந்து மனசில இஷ்ட தேவதையை த்யானம் பண்ணி ஜபம் ஆரம்பிக்க வேண்டியதுதான். இந்த நாம ஜபத்திலே ஒரு சௌகரியம் என்னன்னா இதை அப்புறமும் நிறுத்தவே தேவையில்லை. நினைவு வரும்போதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்.
நாம ஜபமோ க்ரம ஜபமோ ஏதானாலும் மனசு அதிலே எவ்வளவு குவிப்போட ஈடுபடும் என்கிறதை பொறுத்துதான் பலன். அதனால இதுவா அதுவா என்கிற கேள்வியெல்லாம் தேவையில்லை. இருந்தாலும் க்ரம ஜபம் குரு மூலமா பெற்றவங்களுக்கு அதை விட்டுவிட்டு நாம ஜபத்திலே இறங்கறதுலே அவ்வளவு விசேஷம் இல்லை. சேர்த்து செய்வதிலே தப்பு இல்லை.
ஜபம் முடிஞ்சாச்சா? அடுத்து சூரியன் உதிக்கப்போகுது. சூரிய உபாசனைக்கு தயாராகலாம்.

Monday, February 22, 2010

நியாஸம் -தொடர்ச்சி




கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.
உதாரணம் சொல்ல கொஞ்சம் தயக்கம்தான். இருந்தாலும் இது முக்கியம் என்பதால் சொல்லுவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மந்திரங்கள் குரு மூலமாகவே உபதேசம் பெற வேணும். அப்படி உபதேசம் பெறும்போது சூக்ஷுமமான ஒரு விஷயமும் பரிமாறிக்கப்படும். . அது இன்னும் சக்தி உடையதா இருக்கும். அதனால் மந்திரம் இங்கே சொல்லப்படாது.
சக்தி பஞ்சாக்ஷரீ ஐ எடுத்துக்கலாம்.
இப்படி ஆரம்பிப்போம்.

அஸ்ய ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய
வாமதேவ ரிஷி:
அனுஷ்டுப் ச2ந்த:
சாம்ப3சதா3ஸி2வோ தே3வதா
--
ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்திரத்துக்கு வாமதேவ ரிஷி: இந்த ரிஷிதான் இந்த மந்திரத்தை கண்டு உலகிற்கு கொடுத்தார். இந்த மந்திரம் பங்தி ச்சந்தஸில் அமைந்துள்ளது. இந்த மந்திரத்துக்கு தேவதை சாம்பசதாஸி2வன்.
ரிஷி புத்தி சம்பந்தப்பட்டதால் அதை சொல்லும்போது தலையை தொடுகிறோம். ச்சந்தஸ் என்பது ஒலியுடன் சம்பந்தப்பட்டதால் வாயை தொட வேண்டும். தேவதையை ஹ்ருதயத்தில் ஸ்தாபிப்பதால் அங்கே தொட வேண்டும்.
-
ஹ்ராம் பீஜம். ஹ்ரீம் சக்தி: ஹ்ரூம் கீலகம்.
சாம்ப சதாசிவ ப்ரஸாத சித்த்யர்த்தே ஜபே வினியோக:
பீஜம் வலது தோள்; சக்தி இடது தோள்; கீலகம் நடு மார்பு/ தொப்புள்; இந்த இடங்களில் தொட வேண்டும். வினியோகஹ என்னும் போது உள்ளங்கைகளை பக்கத்து பக்கத்தில் நீட்டி வைத்து இருந்து மந்திரம் சொல்லி விரல் நுனிகள் ஹ்ருதயத்தை நோக்கி சுழற்றி திருப்ப வேண்டும். (சில சம்பிரதாய வித்தியாசங்கள் உண்டு)
ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

இவற்றைச் சொல்லி கட்டை விரலில் ஆரம்பித்து சின்ன விரல் வரை - விரல் கையில் சேருமிடத்தில் இருந்து நுனி வரை தடவிக்கொடுக்க வேண்டும். எப்படி என்பதை முன்னேயே பார்த்தோம்.
ஹ்ர: கலதல கரப்ருஷ்டாப்யாம் நம:
இதைச்சொல்லி கைகளை உள்ளும் புறமும் மற்ற கையால் துடைக்க வேண்டும்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா.
ஹ்ரூம் ஸி2காயை வஷட்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.
--
ஹ்ராம் ஹ்ருதயாய நம: - ஐந்து விரல்களாலும் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா. - வலது கை நடு விரல் மோதிர விரலால் தலை உச்சியையும்;
ஹ்ரூம் ஸி2காயை வஷட். - கட்டை விரலால் சிகையையும் தொட வேண்டும்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.. . -கைகளை மறித்து தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .- நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும்.
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.- சுட்டு விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும்.

பூ4ர் பு4வஸுவரோம் இதி திக்பந்த: :
தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.

இதுவே ஜபம் முடிந்த பின் செய்யும்போது பூ4ர் பு4வஸுவரோம் இதி விமோக: என்றாகும். சுற்றுவதும் இடமாக ஆகும். கட்டை அவிழ்த்து விடுகிறோம் இல்லையா?

அடுத்து த்யான ஸ்லோகம்:
மூலே கல்பத்3ருமஸ்ய த்3ருத கனகநி4பம் சாரு பத்3மாஸனஸ்த2ம்
வாமாங்காரூட3 கௌ3ரி நிபி3ட குசப4ராபோ4க3 கா3டோப கூ3ட3ம்
நானாலங்கார காந்தம் வர பரசு2 ம்ருகாபீ4தி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே3 பாலேந்து3 மௌலிம் க3ஜ வத3ன கு3ஹாஸ்லிஷ்2ட பார்ஸ்2வம் மஹேஷம்
--
பொருள்: கற்பக விருக்ஷத்தின் அடியில் பொன் போன்ற மேனியுடன் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவரும், இடது புறம் மடியில் அமர்ந்திருக்கும் கௌரியின் மார்பை இறுகத்தழுவி இருப்பவரும், பலவிதமான அலங்காரங்களுடன் பிரகாசிப்பவரும், வரம், பரசு, மான், அபயம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவரும், முக்கண்ணரும், சிரசில் இளம் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கணபதியும் குஹனும் இரு புறமும் சேர்ந்திருக்கப்பெற்றவரும் ஆகிய மஹேஸ்வரனை வந்தனம் செய்கிறேன்.

லம் ப்ருத்வியாத்மனே க3ந்தா3ந் தா4ரயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பைஹி பூஜையாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்3ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் த3ர்ஸ2யாமி
வம் அம்ருதாத்மனே மஹா நைவேத்யம் நிவேத3யாமி
ஸம் ஸர்வாத்மனே ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.

இதுக்கு அப்புறம் ஜபம். முடிஞ்சு திருப்பியும் அங்க ந்யாஸம் (வித்தியாசம் சொல்லி இருக்கேன்), த்யானம், பஞ்ச பூஜை.
முடிஞ்சது. ஆசமனம் செய்து விட்டு இந்த உலக வியவகாரங்களுக்கு திரும்பலாம்.

உலக வியவகாரங்கள்ன்னதும் ஒரு கதை ஞாபகம் வருது.
ராம க்ருஷ்ணரை ஒத்தர் கேட்டாராம். என் ஸ்வாமி? கங்கையிலே குளிச்சா எல்லா பாவமும் போயிடும் இல்லையா? ஆனா இங்கேயே வசிக்கிறவங்க அப்படி ஒண்ணும் வித்தியாசமா இருக்கிறதா தெரியலையே?
பரம ஹம்ஸர் வேடிக்கையா பதில் சொன்னார்.
உண்மைதான்பா! கங்கைகிட்டே போகும்போதே காத்திலே கங்கை தண்ணி துளிகள் சேர்ந்து வந்து பாவம்கள் குளிக்க போறவரைவிட்டு கிளம்பிடும். எங்கே போகும்? அக்கம் பக்கம் இருக்கிற செடி கொடிகள் மரங்களிலே தங்கும். ஆசாமி கங்கைலே ஜம்முன்னு குளிச்சுட்டு வருவார். அது வரை நல்லா இருக்கும். கரைக்கு வந்து துணி உடுத்திகிட்டு வீட்டுக்கு திரும்பும்போது மிட்டாய் கடையை பார்த்தவுடனே நாக்கிலே ஜலம் ஊறும். அவரை விட்டு போய் கரையிலே காத்துகிட்டு இருக்கிற பாபங்கள் அப்பாடான்னு திருப்பியும் அவங்க மேலே வந்து உக்காந்துடும்!

இது மாதிரி ஆகிவிடக்கூடாது!

Friday, February 19, 2010

ந்யாஸம்




நியாஸம்
முன்னே தாந்த்ரிகத்தில் ன்னு சொன்னேன் இல்லையா? யோசித்ததில அது அவ்வளவு சரியில்லைன்னு தோணுது. தாந்த்ரீகத்தில் சேராத மந்திரங்களுக்கும் உண்டு. ஏன் வேத மந்திரமான ருத்ரத்துக்கே லகு ந்யாஸம் மஹா ந்யாஸம்ன்னு உண்டு.
ந்யாஸம் என்கிறதுக்கு ஒப்பு கொடுக்கிறதுன்னு பொருள்.
எதை ஒப்புக்கொடுக்கிறது?
நம்மையேதான்.
கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம்.
மந்திர ஜபத்திலே ஈடுபட போறப்ப வெளியிலிருந்து பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைக்கிறோம் இல்லையா? நமக்கு தெரிஞ்சு வரக்கூடிய பிரச்சினைகளை தடுக்க முயற்சி எடுக்கிறோம். கொசு விரட்டி வெச்சுக்கிறோம்; அல்லது கொசுவை கஷ்டப்படுத்த மனசில்லையானா கொசு வலைக்குள் புகுந்துக்குறோம். மின்காத்தாடியை தகுந்த வேகத்திலே வெச்சுக்கிறோம். வீட்டுல இருக்கிறவங்களை கொஞ்ச நேரம் தொந்திரவு செய்யக்கூடாதுன்னு சொல்கிறோம். இப்படி பலது.
நமக்குத் தெரியாத பாதிப்புகளும் இருக்கலாம். அதெல்லாம் கண்னுக்கு தெரியாது என்பதால சூக்ஷுமம் என்கிறோம். அதற்கும் பாதுகாப்பு செய்துக்கணும்.
எப்படின்னா..
உடம்பிலே சில முக்கிய இடங்களில் தேவதா ஸ்தாபனம் செய்து இப்படி செய்யலாம். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு நிலையிலே ஒரு இடத்திலே (ஜீவ) ஆத்மா நிலைக்குமாதலால் (இது ஒரு வகை பார்வை) அதில் நாம் ஜபம் செய்ய மந்திரத்தின் அதி தேவதையை ஸ்தாபனம் செய்வதால அதைச்சுத்தி சில வட்டங்களில் வேறு சில தேவதைகளை ஸ்தாபனம் செய்து சூக்ஷுமமா இடைஞ்சல் வராம பாதுகாப்பு செய்துக்கலாம்.
இப்படி செய்ததும் அந்தக்கரணத்துக்கும் (ம்ம்ம்ம்ம்... சரி, மனசுக்கும்ன்னு வெச்சுக்கலாம்) ஆன்மாவில நிலை பெற்ற தேவதைக்கும் இடையே வேறு ஏதும் வராது.
இப்படி செய்வதே ந்யாஸம்.
கர ந்யாஸம் என்பது ஒவ்வொரு விரலிலும் பின் கைமுழுவதும் தேவதா ஸ்தாபனம் செய்வது. விரல்கள் மிகவும் தொடு உணர்வு மிக்கவை. ஏதானாலும் விரல்களால் தொட்டு தெரிஞ்சுக்கிறோம். ஒரு பொருள் சூடா, சில்லுன்னா, வற வறன்னா, வழ வழன்னா எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது விரல்களால தடவிப்பார்த்துதான். விஞ்ஞானமும் விரல்கள் வெகு சென்சிடிவ் ன்னு ஒத்துக்குது. உடம்பு முழுதும் நரம்பு நுனிகள் விரவி இருந்தாலும் அவை விரல் நுனிகளிலே அதிக அளவிலே அடர்த்தியா இருக்கு.
ஒவ்வொரு விரலும் கையோட ஒட்டி இருக்கு இல்லையா? அங்கே ஒரு ரேகை இருக்கும். இந்த இடத்தை அடையாளம் வெச்சுப்போம்.
மந்திரங்களாலே இந்த ரேகையில் ஆரம்பித்து விரல் நுனி வரை தடவிக்கொடுக்கணும். கட்டை விரல் நுனியால் மத்த விரல்களையும் ஆள் காட்டி விரல் நுனியால் கட்டை விரலையும் இப்படி தடவிக்கொடுக்கணும்.
வலது கை விரல்களை வலது கை விரல்களாலும் இடது கை விரல்களை இடது கை விரல்களாலும் தடவிக்கொடுக்கணும். கை மாத்தி செய்வதில்லை.
அங்க ந்யாஸம் என்கிறது ஹ்ருதயம், சிரஸ், சிகை, கவசம், 3 கண்கள் இவற்றுடன் சம்பந்தப்பட்டது. வலது கை நடு 3 விரல்களால் ஹ்ருதய ஸ்தானத்தையும்; நடு, மோதிர விரல்களால் தலை உச்சியையும்; கட்டை விரலால் சிகையையும் (சிகை இல்லைன்னா என்ன செய்வது?!) மந்திரங்களால் தொட வேண்டும். கைகளை மறித்து 10 விரல்களாலும் தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும். நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும். வலது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும். பின் தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.
இதை அடுத்து த்யானம். ஒவ்வொரு தேவதைக்குமான த்யான ஸ்லோகத்தை சொல்லி அப்படி அந்த தேவதையை த்யானம் செய்ய வேண்டும். த்யானித்த தேவதைக்கு உடனே பூஜை செய்ய வேண்டும். அட என்னாப்பா? பூஜையா? முன்னேயே சொல்லக்கூடாதா? தூபம் தீபம் ன்னு ஒண்ணும் தயார் பண்ணலையேன்னு சொல்லாதீங்க. மனசை வழி நடத்தி இப்படி போன பிறகு செயல்களுக்கு அதிக இடமில்லே! மனசாலேயே பஞ்ச பூதங்களாலேயே பூஜை செய்துடலாம்.
சம்ஸ்க்ருத எழுத்து ஒவ்வொண்ணுக்கும் ஒரு தேவதை சம்பந்தம் உண்டு.
லம் என்பது ப்ருத்வீக்கு பீஜாக்ஷரம். ஹம் ஆகாசம்; யம் வாயு; ரம் அக்னி; வம் ஜலம்.
லம் என்பதால் சந்தனம்; ஹம் ஆல் புஷ்பம்; யம் ஆல் தூபம்; ரம் ஆல் தீபம்; வம் ஆல் நிவேதனம். ஸம் ஆல் கைகளை இரு புறமும் துடைத்து எல்லா உபசாரங்களும். எவ்வளொ சுளுவா ஆத்ம பூஜை முடிஞ்சுப்போச்சு!
இதன் பின் ஜபம்.
இதே போல மந்திர ஜபம் முடிந்ததும் அங்க ந்யாஸம் செய்து (அந்தந்த தேவதைகளுக்கு நன்றி சொன்னதாக வைத்துக்கொள்லலாம்!:-)) திக் பந்தத்தை இடமாக சுற்றி விடுவிக்கலாம். கர ந்யாஸம் முடிக்கும்போது செய்வதில்லை.

கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.

Thursday, February 18, 2010

ஜபம்




சரி உட்கார்ந்தாச்சு! இப்ப என்னப்பா?

ஜபம் செய்ய ஆரம்பிக்கு முன்னே சிலது மனசில வைச்சுகறது நல்லது.
நம்ம பிரச்சினைகள் எப்பவுமே நம்மோட இருக்கத்தான் இருக்கும். கொஞ்சம் காணாம போனதா நினைச்சாலும் திருப்பியும் வரத்தான் வரும். இப்ப கொசு விரட்டி போட்டு துரத்திட்டாலும் நாளை மாலை அது எல்லாமே திருப்பி வரது உறுதி!
அது போல பிரச்சினைகள் திருப்பி திருப்பி வந்துண்டேதான் இருக்கும்.
 
அதனால் இப்ப என்ன ஆச்சு? உறுதியா மனசில சொல்லிக்கணும். "பிரச்சினைகளே! நீங்க எல்லாரும் எங்கேயும் போக மாட்டீங்கன்னு தெரியும்; வந்து உங்ககிட்டே வம்பு வெச்சுக்கிறேன். இப்ப கொஞ்சம் எல்லாரும் தள்ளி நில்லுங்க. கொஞ்ச நேரம் பகவானோட இருந்துட்டு வரேன்.”
இப்படி சொல்லி எல்லத்தையும் பக்கமா தள்ளிவிட்டு அடுத்து...

வெளியிலுள்ள விஷயங்களில மனசை போகவிடாம ஒரு முகப்படுத்தணும். இவ்வளோ நாள் ஓடி ஓடி பழக்கப்பட்ட [தட்டச்சுப்பிழை "பாழாக்கப்பட்ட" ன்னு இருந்தது. திருத்தினேன். இப்ப அப்பபடியே இருந்திருக்கலாம்ன்னு தோணுது!] மனசு அவ்வளோ சுலபமா ஒருவழிப்படுமா? அதுக்கு என்ன செய்யறது? இதற்கு புருவ மத்திய நாட்டம், நாசிகாக்ர திருஷ்டி – அதாங்க மூக்கு நுனியை பாக்கிறது இதெல்லாம் உதவும். அதாவது கண்களை மூடிக்கொண்டு புருவங்களின் மத்தியோ அல்லது மூக்கின் நுனியையோ பார்க்கிறது போல "பார்வையை¨ திருப்புங்க!

வழக்கிலே மிகவும் உபயோகமானது இந்த நேரத்திலே பிராணாயாமம் செய்வது. அது பெரிய டாபிக் என்கிறதால இப்ப ஒண்ணும் எழுதலை. மேலும் சரியான நேர இடைவெளி கொடுத்து பண்னலைன்னா பிரச்சினைகள் வரும். அதனால நல்லா இதை பழகினவங்ககிட்டே தெரிஞ்சுக்கணும்.

இதை பழகலைன்னா பரவாயில்லை. பழகும் வரை நல்லா ஆழ்ந்த மூச்சு எடுத்து விடலாம். மூணு தரம் செய்தா போதும்.
ரெய்கி கத்துத்தரப்ப இப்படி கத்துத்தராங்க. இப்படி செய்யும் போது மூளையோட மின் அலைகள் ஆல்பா ஆக மாறுவதா விஞ்ஞானம் சொல்லுது. இது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும்.

ஒருமையான மனதை எங்கேயாவது வைக்கணுமே? அதுவே த்யானம்.
எந்த தேவதையை குறிச்சு ஜபம் செய்யப்போறோமோ அந்த தேவதையை சுத்தியே - தலை, முகம், கை கால் எல்லாம் இப்படி இப்படி இருக்கும்ன்னு - நினைக்கறதே த்யானம். பல ஜபங்களுக்கும் த்யான ஸ்லோகம் உண்டு. அதை தெரிஞ்சு கொண்டு அதை சொல்லும்போது கற்பனை செய்து பார்க்கலாம்.
அதுக்கு அப்புறம் ஜபம் துவக்க வேண்டியதுதான்.

பலருக்கும் ஜபம் செய்யும் போது பக்கத்திலே தள்ளிவிட்ட எண்ணங்கள் திருப்பி திருப்பி வந்து தொல்லைதரும். இது நாளடைவிலேதான் சரியாகணும். அதனால எப்போதெல்லாம் நம் மனசு வெளியே போயிடுச்சுன்னு தெரியுதோ அப்பல்லாம் திருப்பி அதை ஜபத்திலே கொண்டு வந்து விடணும். என்னடா இப்படி திருப்பி திருப்பி ஜபம் கெட்டு போய்கிட்டு இருக்கேன்னு வருத்தப்படறதுல பிரயோசனம் இல்லை. இப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. சிதறுகிற எண்ணங்களை குறைச்சு பின்னே ஒரே விஷயத்துல அதை திருப்பி விடுகிறதுதான் ஜபம்.

தாந்திரிகத்துல த்யானத்துக்கு முன்னே நியாசம் உண்டு. அது என்னன்னா...

Wednesday, February 10, 2010

கர்மா அடுத்த சுற்று - உட்காருவது எப்படி?




உட்காருவது எப்படி?
"அட என்னங்க இது உக்காரக்கூட தெரியாதா என்ன" என்கிறீங்களா?
நான் சொல்லுகிறது தரையில் உட்காருவதைப்பத்தி. பலருக்கும் உட்காரத்தெரியுது. ஆனால் சரியாக உட்காரத்தெரியலே. ஏன்னா...
பலருக்கும் தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாமல் போய்விட்டது. டேபிள் சேர் சோபா என்றாகிவிட்ட இந்த காலத்தில் இது எதிர்பார்க்கக்கூடியதே. திடுதிப்பென்று ஜபம் செய்யலாம் என்றோ, பெரியவர்களுடன் பேசவோ அமரும்போது கஷ்டப்படுகிறோம். அதனால் இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
முதலில் தரையில் நேரடியாக உட்காரக்கூடாது என்பது சாஸ்திரம். செய்த புண்ணியங்கள் பூமிக்கு போய்விடும் என்கிறார்கள். போவதற்கு அப்படி ஒண்ணும் புண்ணியம் பண்ணவில்லை என்றாலும் அப்படி உட்காராமல் இருப்பது நல்லது.
உட்காருமிடம் சுத்தமாக இருக்கணும்.
கீழே ஆசனம் ஏதேனும் போட்டு அமர வேண்டும். மரப்பலகை (மணை), பாய், கைகுட்டை கூடப்போதும். இல்லை ஒரு துண்டைக்கூட பயன்படுத்தலாம். சிலர் ஒரு சில்க் கைக்குட்டை வைத்துகொள்கிறார்கள். (அரவிந்தர் ஆஸ்ரம கடைகளில் கிடைக்கும்) இது வெகு சின்னதாக மடியும். எடுத்துச்செல்ல சௌகரியம். கம்பளமும் நல்லது; ஆனால் சூடு.
அஜினம் (தோல்) இப்போது கிடைப்பதில்லை. மேலும் மான் தோலை சோம யாகம் செய்தவர் மட்டுமே பயன்படுத்த சாஸ்திரங்களனுமதிக்கின்றன.
தர்ப்பை ஆசனம் வெகு உன்னதமானது. புதிய தர்ப்பைகள் வேளா வேளைக்கு கிடைப்பது கஷ்டம். (பாருங்கப்பா! வெறும் புல் கூட இந்த காலத்திலே கிடைப்பது துர்லபம் ஆயிருச்சு!) அதனால் தர்பையால பாய் முடைஞ்சு விற்கிறாங்க. அதை பயன்படுத்தலாம். ஒரு 6 மாசம் வரும். காசி போன்ற இடங்களிலே சுலபமா கிடைக்கும்.

உட்காரும்போது நம் உடலை தசைகள் எல்லாம் பாலன்ஸ் செய்கின்றன. அப்படியே உட்காருகிறோம். அவை தளராமல் அப்படியே இறுக்கத்தில் இருந்துவிடுகின்றன. இதுதான் கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்காரமுடியாமல் இப்படியும் அப்படியுமாக அசைய வேண்டிய கட்டாயத்துக்கான காரணம்.

இதை எப்படி சரி செய்வது?
வழக்கம் போல உட்கார்ந்துவிடுங்கள். அப்புறம் முன் பக்கமாக இடுப்பில் இருந்து வளையுங்கள். உட்கார்ந்து கொண்டு நமஸ்காரம் செய்வது போல. இப்போது இடுப்பு அருகில் உள்ள தசைகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும். அப்படியே நிமிர்ந்து விடுங்கள். அவ்வளோதான்! எத்தனை சுலபம் பாத்தீங்களா?
இதே எஃபக்ட் கைகளை பக்கத்தில் ஊன்றிக்கொண்டு உடலை அவற்றின் பலத்தில் தூக்கி கீழே இறக்கினாலும் கிடைக்கும். வயதானவர்களுக்கு கடினமாயிற்றே என்று அதை முதலில் சொல்லவில்லை.
அடுத்து கவனிக்க வேண்டியது முதுகு எலும்பு நிமிர்ந்து நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். இது பலருக்கும் கஷ்டமாக தோன்றும். ஆனால் முன்னே சொன்ன படி உட்கார்ந்த பிறகு இது சுலபமே என்று தெரியவரும். சரியாக உட்காராத போது தசைகள் இறுக்கத்தில் இருப்பதால் முதுகு வளைந்தால்தான் பாலன்ஸ் கிடைக்கும். அதனால் முதுகை வளைத்தே உட்காருக்கிறோம். அப்போது அதுதான் சௌகரியமாக இருக்கும். ஆனால் தசைகள் இதை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நேரத்தில் வலிக்க ஆரம்பித்து விடும். முதுகு எலும்பை நேராக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் இது தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது. அதனால் வலிக்காது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பழக்கமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டி இருக்கும். இதெல்லாம் நாளடைவில் பழகிவிடும். இயல்பாகவே சரியாக உட்காருவோம்.
இப்படி செய்தும் நிமிர்ந்து உட்காரமுடியாமல் இருந்தால் வஜ்ராசன் பழக்கிக்கொள்ள வேண்டும். அதில் இயல்பாகவே நிமிர்ந்துதான் உட்கார முடியும். பாதங்கள் மடங்குவது பழகிவிட்டால் இதுவும் நன்றாகவே உட்கார உதவும்.

குருவின் கட்டளை வேறாக இல்லாத பட்சத்தில் ஜபம் செய்ய சுகாசனமோ (வழக்கமாக உட்காருவது) சித்தாசனமோ, பத்மாசனமோ சிறந்தது. பத்மாசனம் உடனடியாக முடியாது போனால் அர்த்த பத்மாசனத்தில் சில நாள் பழகலாம். அது ஒரு பக்கம் மட்டுமே பத்மாசனம் போல காலை வைத்துக்கொண்டு உட்காருவது.

Wednesday, February 3, 2010

கர்மா அடுத்த சுற்று -காலையில் எழுந்து




காலை எப்போது எழுந்திருக்கணும்?

பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னேயே எழுந்திருக்கணும்.

அதாவது 6 மணிக்கு சூரிய உதயம்ன்னா 4-30 க்கு முன்னேயே.

சரிப்பா, அடுத்த அஞ்சலை பாக்கப் போகலாம் என்கிறீர்களா?

:-)))

நம்மில் பலருக்கும் இரவு சீக்கிரம் தூங்கப் போகும் பழக்கம் இல்லை, சர்வ சாதாரணமாக 10 -11 ஆகிவிடுகிறது. அப்படி தாமதமா தூங்கபோனா இது கஷ்டம்தான். நான் சின்ன பையனா இருக்கும் போது ஹோசூரில் சீக்கிரம் இருட்டி 7 மணிக்கெல்லாம் வீடு அடங்கிவிடும். மின் விளக்குகளும் அதிகம் கிடையாது. இப்போது எப்போ தூங்கப் போறோம் என்கிறதை சீரியல்கள்தான் நிர்ணயிக்குது. சரி, சரி! நாம்தான் இதை நிர்ணயம் செய்யணும். இரவு ஒன்பதுக்குப் பிறகு தூங்கப்போனால் காலை நாலரைக்கு எழுந்திருப்பது கஷ்டம்தான்.

அது சரி! இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்ய?
ஜபம், த்யானம் இதுக்கெல்லாம் இதே மிக நல்ல நேரம்.

இரவு படுக்கப்போகும்போது மனமும் உடலும் களைத்து இருக்கும். மனம் தேவையான தேவையில்லாத பல விஷயங்களையும் எதிர்கொண்டு எதிர்வினையை தூண்டி தூண்டியே களைத்து போயிருக்கும். நாள் முழுதும் பறந்து பறந்து இரை தேடிய பறவை களைப்பாகி சுகம் அனுபவிக்க கூட்டில போய் பட்டென்று விழுவது போல, அப்பாடா என்று படுத்து விடுகிறோம்.

இரவு மூளையில் உள்ள ரசாயனங்கள் மீண்டும் உற்பத்தி ஆகிறது. ஜீவாத்மா மனம் ஒடுங்கி - கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நித்திரையில அனுபவிக்கிற சுகம் பிரமாநந்தம்.

இந்த பிரம்மானந்தத்தாலே காலையிலே புத்துணர்ச்சியோட எழுந்திருக்கிறோம்.

இதனாலத்தான் யோகிகள் தவிர யாராலேயும் தூக்கம் இல்லாம இருக்க முடியாது. ஓரளவு தள்ளிப்போடலாமே ஒழிய, இல்லாமலே இருக்க முடியாது.

இருக்கட்டும். காலை எழும் போது மனம் புதுசா இருக்கா? அது மலினமான எண்ணங்களுக்கு போகு முன்னே அதை கொஞ்சம் சீர் செஞ்சு நல்ல வழியிலே திருப்பி விட்டோம்னா நாள் முழுதும் நல்ல படியா போகும். அதனால மனசளவில இறைவனோட ஒன்றி இருக்கப் பார்க்கணும். இதுக்குத்தான் விடிகாலையிலே ஜபம், த்யானம்.

என்ன ஜபம்?

யாருக்கு என்ன உபதேசம் ஆகியிருக்கோ அதுதான்.

காயத்ரி உபதேசம் ஆனவங்களுக்கு சந்தேகமில்லாமல் அதுவே. அப்புறம்தான் அவருக்கு உபதேசமான மற்ற மந்திரங்கள்.

ஏதுமில்லையானால் நமக்கு பிடிச்ச நாம ஜபம். இதுல ஒரு சாதகமான விஷயம், இதையே நாள் முழுதும் தொடர முடியும் என்கிறதுதான். அதைப்பத்தி அப்புறம் பார்க்கலாம்.

ஜபம் செய்ய காலை குளியலை முடிச்சும் செய்யலாம். இந்த குளிரிலே யார்ப்பா குளிக்கிறதுன்னு கேட்டா, சரி சரி - குளிக்க வேண்டாம். ( இப்போதைக்குத்தான்!) கழிவறையை பயன்படுத்திவிட்டு, பல் தேய்த்து, கை கால் சுத்தி செய்து, முகம் கழுவி, நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஜபம் செய்ய அமரலாம்.

த்யானத்திலே உக்காந்தா ஒரு சப்தமும் கேட்கக்கூடாது; குளிரோ வெயிலோ தெரியக்கூடாது; கொசு கடிச்சாலும் தெரியக்கூடாது ன்னு எல்லாம் வீண் கற்பனை வேண்டாம். அதெல்லாம் அட்வான்ஸ்ட் லெவெல். அந்த மட்டத்துக்கு போகும் / பழகும் வரை தொந்திரவு ஏதும் இல்லாதபடிக்கு பாத்துக்கலாம். செல் போனை ஆஃப் பண்ணிடலாம். கொசு விரட்டி இருக்கான்னு பாத்துக்கலாம். மின் விசிறியை தேவையான வேகத்துக்கு போட்டுக்கலாம். இப்படி பலதை யோசிச்சு செய்துக்கலாம். இதுக்கும்தான் இந்த அதிகாலை நேரம் வசதின்னு சொல்கிறது.

இந்த நேரம் நாம் ஜபம் த்யானம் செய்கிற நேரம்ன்னு தெரிஞ்சா மத்தவங்களும் இதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிண்டு போயிடுவாங்க. தொந்திரவு செய்ய மாட்டாங்க.