Pages

Showing posts with label கங்கை. Show all posts
Showing posts with label கங்கை. Show all posts

Tuesday, August 7, 2012

கங்கா ஸ்தோத்ரம் -7 -நிறைவு



(13)

येषां हृदये गङ्गा-भक्तिस् तेषां भवति सदा सुख-मुक्तिः ।
मधुर-मनोहर-पज्झटिकाभिः परमानन्द-कलित-ललिताभिः ॥

யேஷாம்ʼ ஹ்ருʼத³யே க³ங்கா³ ப⁴க்திஸ்
தேஷாம்ʼ ப⁴வதி ஸதா³ ஸுக²-முக்தி:
மது⁴ர-மநோஹர-பஜ்ஜ²டிகாபி⁴:
பரமானந்த³-கலித-லலிதாபி⁴:

பரமானந்தத்தினால் உருவாகி அழகும் குழைவும் இனிமையும் நிறைந்து மனதைக் கவரும் பஜ்ஜடிகா என்ற செய்யுள்வகையில் செய்யப்பட்ட இந்த செய்யுள்களால் யாரது ஹ்ருதயத்தில் கங்கா பக்தி ஏற்படுகிறதோ, அவர்களுக்கு எப்பொழுதும் எளிதில் முக்தி கிடைக்கும்.

yeṣāṁ hṛdaye gaṅgā bhaktis teṣāṁ bhavati sadā sukha-muktiḥ
madhura-manohara-pajjhaṭikābhiḥ paramānanda-kalita-lalitābhiḥ


(14)

गङ्गास्तोत्रम् इदं भवसारं वाञ्छितफलदं विमलं सारम् ।
शङ्कर-सेवक-शङ्कर-रचितं पठति च विनयीदम् इति समाप्तम् ॥

க³ங்கா³-ஸ்தோத்ரம் இத³ம்ʼ ப⁴வ-ஸாரம்ʼ
வாஞ்சி²தப²லத³ம்ʼ விமலம்ʼ ஸாரம்
ஶங்கர-ஸேவக-ஶங்கர-ரசிதம்ʼ
பட²தி ச விநயீத³ம் இதி ஸமாப்தம்

ஶிவனின் சேவகரானஶங்கரர் இயற்றிய இந்த கங்கா ஸ்தோத்ரமானது உலகிலெல்லாம் ஸாரமானது, அர்த்த புஷ்டி உடையது, வேண்டிய பலனை அளிக்கவல்லது, குற்றமற்றது. இதனை வினயமுள்ளவரே படிப்பர் (படித்து பயனுறுவர்). இவ்வாறு இது முற்றும்.

gaṅgā-stotram idaṁ bhava-sāraṁ
vāñchitaphaladam vimalaṁ sāram
śaṅkara-sevaka-śaṅkara-racitaṁ
paṭhati ca vinayīdam iti samāptam

குறிப்பு:  இதை எழுதியது ஆதி ஶ்ரீ பகவத்பாதர் என்னும் சங்கரரா என்பது சர்ச்சைக்குரியது என அறிகிறோம். இருப்பினும் படித்து ரசிக்கலாம். மேலும்கேட்டு ரசிக்க
பாடல் தரவிறக்கத்துக்கு : 

ChinmayanandaAshramSwamiBrahmanandaStotramala-Part2/1-07GangaStotram.mp3.

Wednesday, August 1, 2012

கங்கா ஸ்தோத்ரம் -6


(11)

वरम् इह नीरे कमठो मीनः किं वा तीरे शरटः क्षीणः ।
अथवा श्वपचो मलिनो दीनः तव न हि दूरे नृपतिः कुलीनः ॥

வரம் இஹ நீரே கமடோ² மீந:
கிம்ʼ வா தீரே ஶரட: க்ஷீண:
அத²வா ஶ்வபசோ மலிநோ தீ³ந:
தவ ந ஹி தூ³ரே ந்ருʼபதி: குலீந:

(தேவீ!) உன் நீரில் ஆமையாகவோ, மீனாகவோ அல்லது உன் கரையில் ஒரு மெலிந்த பச்சோந்தியாகவோ ஒரு தீனமான அழுக்கடைந்த சண்டாளனாகவோ வசிப்பது உன்னை விட்டு தூரத்தில் பெருங்குடியில் உதித்த அரசனாக இருப்பதைவிடச் சிறந்தது.

varam iha nīre kamaṭho mīnaḥ kiṁ vā tīre śaraṭaḥ kṣīṇaḥ
athavā śvapaco malino dīnaḥ tava na hi dūre nṛpatiḥ kulīnaḥ


(12)

भो भुवनेश्वरि पुण्ये धन्ये देवि द्रवमयि मुनि-वर-कन्ये ।
गङ्गा-स्तवम् इमम् अमलं नित्यं पठति नरो यः स जयति सत्यम् ॥

போ⁴ பு⁴வனேஶ்வரி புண்யே த⁴ந்யே
தே³வி த்³ரவமயி முநி-வர-கந்யே
க³ங்கா³-ஸ்தவம் இமம் அமலம்ʼ நித்யம்ʼ
பட²தி நரோ ய: ஸ ஜயதி ஸத்யம்

ஓ உலகுக்கெல்லாம் தலைவியே! புண்ணியமானவளே, பாக்கியம் நிறைந்தவளே! உருகிய தன்மை படைத்த தேவி! சிறந்த (ஜஹ்நு) முனிவரின் புதல்வியே! பவித்திரமான இந்த (உனது) கங்கா ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பவர்கள் நிச்சயம் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர்!

bho bhuvaneśvari puṇye dhanye devi dravamayi muni-vara-kanye
gaṅgā-stavam imam amalaṁ nityaṁ paṭhati naro yaḥ sa jayati satyam

Tuesday, July 31, 2012

கங்கா ஸ்தோத்ரம் - 5



 (9)

रोगं शोकं तापं पापं हर मे भगवति कुमति-कलापम् ।
त्रिभुवन-सारे वसुधा-हारे त्वम् असि गतिर् मम खलु संसारे ॥

ரோக³ம்ʼ ஶோகம்ʼ தாபம்ʼ பாபம்ʼ
ஹர மே ப⁴க³வதி குமதி-கலாபம்
த்ரிபு⁴வன-ஸாரே வஸுதா⁴ஹாரே
த்வம் அஸி க³திர் மம க²லு ஸம்ʼஸாரே

பகவதீ! என் நோய்கள், சோகங்கள், கஷ்டங்கள், பாபங்கள், தவறான சிந்தனைகள் ஆகியவற்றை நீக்குவாயாக! மூவுலகங்களில் சிறப்புமிக்கவள் நீ! பூமியின் மேல் மாலை போல (வளைந்து அழகாக) விளங்குபவள். இந்த சம்சாரத்தில் எனக்கு நீயே கதி!

rogaṁ śokaṁ tāpaṁ pāpaṁ hara me bhagavati kumati-kalāpam
tribhuvana-sāre vasudhāhāre tvam asi gatir mama khalu saṁsāre



(10)

अलकानन्दे परमानन्दे कुरु करुणामयि कातर-वन्द्ये ।
तव तट-निकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः ॥

அலகானந்தே³ பரமானந்தே³
குரு கருணாமயி காதர-வந்த்³யே
தவ தட-நிகடே யஸ்ய நிவாஸ:
க²லு வைகுண்டே² தஸ்ய நிவாஸ:

அலகானந்தா என்ற பெயருடன் இமயத்தில் உத்பவிப்பவளே! ஆபத்தில் தவிப்பவர்களால் வணக்கப்படுபவளே! கருணைமிக்கவளே! (அவர்களை) பரமானந்தத்தில் சேர்ப்பிப்பாய்! உன் கரையின் அருகே வசிப்பவர்கள் (பிறகு) வைகுண்டத்தில் வாசத்தை அடைவார்கள்.

alakānande paramānande kuru karuṇāmayi kātara-vandye
tava taṭa-nikaṭe yasya nivāsaḥ khalu vaikuṇṭhe tasya nivāsaḥ

Monday, July 30, 2012

கங்கா ஸ்தோத்ரம் - 4



(7)

तव चेन् मातः स्रोतः-स्नातः पुनर् अपि जठरे सोऽपि न जातः ।
नरक-निवारिणि जाह्नवि गङ्गे कलुष-विनाशिनि महिमोत्तुङ्गे ॥

தவ சேந் மாத: ஸ்ரோத: -ஸ்நாத:
புநர் அபி ஜட²ரே ஸோ'பி ந ஜாத:
நரக-நிவாரிணி ஜாஹ்நவி க³ங்கே³
கலுஷ-விநாஶிநி மஹிமோத்துங்கே³

அன்னையே! உன் நீரில் முழுகி எழுபவர்கள் மீண்டும் (தாயின்) வயிற்றில் பிறப்பதில்லை; உன் பக்தர்களின் பாபங்களை அழித்து அவர்களை நரகத்தில் இருந்து காக்கிறாய்! பெருமதிப்பு வாய்ந்தவள் நீ!

tava cen mātaḥ srotaḥ-snātaḥ punar api jaṭhare so’pi na jātaḥ
naraka-nivāriṇi jāhnavi gaṅge kaluṣa-vināśini mahimottuṅge


(8)
पुनर् असद्-अङ्गे पुण्य-तरङ्गे जय जय जाह्नवि करुणापाङ्गे ।
इन्द्र-मुकुट-मणि-राजित-चरणे सुखदे शुभदे भृत्य-शरण्ये ॥

புநர் அஸத்³-அங்கே³ புண்ய-தரங்கே³
ஜய ஜய ஜாஹ்நவி கருணாபாங்கே³
இந்த்³ர-முகுட-மணி-ராஜித-சரணே
ஸுக²தே³ ஶுப⁴தே³ ப்⁴ருʼத்ய-ஶரண்யே

ஜாஹ்நவி! உன் அலைகள் பவித்திரமானவை. உன் காலடியில் இந்திரனின் மகுடத்து மணிகள் ஒளிர்கின்றன (அதாவது இந்திரனும் உன்னை வணங்குகிறான்)! உன்னிடம் சரணமடைந்தவர்களை சுக மங்களங்களுடன் வைத்திருக்கிறாய்!

punar asad-aṅge puṇya-taraṅge jaya jaya jāhnavi karuṇāpāṅge
indra-mukuṭa-maṇi-rājita-caraṇe sukhade śubhade bhṛtya-śaraṇye

Saturday, July 28, 2012

கங்கா ஸ்தோத்ரம் -3




(5)

पतितोद्धारिणि जाह्नवि गङ्गे खण्डित-गिरि-वर-मण्डित-भङ्गे ।
भीष्म-जननि हे मुनि-वर-कन्ये पतित-निवारिणि त्रिभुवन-धन्ये ॥

பதிதோத்³தா⁴ரிணி ஜாஹ்நவி க³ங்கே³
க²ண்டி³த-கி³ரி-வர-மண்டி³த-ப⁴ங்கே³
பீ⁴ஷ்ம ஜநநி ஹே முநி-வர-கந்யே
பதித-நிவாரிணி த்ரிபு⁴வந-த⁴ந்யே

ஜஹ்னு முனிவரின் மகளே! பாதை தவறியவர்களை உயர்த்தி விடுபவளே! நீ எந்த பெரும் (இமய) மலையைப் பிளந்து கொண்டு வருகிறாயோ அதனால் (அதன் சிகரங்கள் உன்னிடம் பிரதிபலிப்பதனால்) உன் பிரவாஹம் அழகுபடுத்தப்படுகிறது. பீஷ்மனின் தாயே! மூவுலகையும் உய்வுறச்செய்பவளே!

patitoddhāriṇi jāhnavi gaṅge khaṇḍita-giri-vara-maṇḍita-bhaṅge
bhīṣma janani he muni-vara-kanye patita-nivāriṇi tribhuvana-dhanye


(6)

कल्प-लताम् इव फलदाम् लोके प्रणमति यस् त्वां न पतति शोके ।
पारावार-विहारिणि गङ्गे विमुख-युवति-कृत-तरलापाङ्गे ॥

கல்ப-லதாம் இவ ப²லதா³ம்' லோகே
ப்ரணமதி யஸ் த்வாம்ʼ ந பததி ஶோகே
பாராவார-விஹாரிணி க³ங்கே³
விமுக²-யுவதி-க்ருʼத-தரலாபாங்கே³

தாயே! கல்பவ்ருக்ஷத்தைப் போல் உன் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாய்! அத்தகைய உன்னைத் தொழுபவர்கள் (எதற்கும்) வருத்தப்படுவதில்லை.  புருஷனை அடையத்துடிக்கும் வனிதை போல் நீ கடலை அடையத்துடிக்கிறாய்!

kalpa-latām iva phaladām loke praṇamati yas tvāṁ na patati śoke
pārāvāra-vihāriṇi gaṅge vimukha-yuvati-kṛta-taralāpāṅge

Friday, July 27, 2012

கங்கா ஸ்தோத்ரம் -2


 

(3)
हरि-पद-पाद्य-तरङ्गिणि गङ्गे हिम-विधु-मुक्ता-धवल-तरङ्गे ।
दूरीकुरु मम दुष्कृति-भारं कुरु कृपया भव-सागर-पारम् ॥

ஹரி-பத³-பாத்³ய-தரங்கி³ணி க³ங்கே³
ஹிம-விது⁴-முக்தா-த⁴வல-தரங்கே³
தூ³ரீகுரு மம து³ஷ்க்ருʼதி-பா⁴ரம்'
குரு க்ருʼபயா ப⁴வ-ஸாக³ர-பாரம்

ஹரியின் திருவடி அலம்பிய நீரே நதி வடிவமாக வரும் கங்கையே! பனி, சந்திரன், முத்து போல் வெண்மையானவை உன் அலைகள்! என் பாபமெனும் பாரத்தை தூர விரட்டி ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்க கருணையுடன் அருள்வாய்!

hari-pada-pādya-taraṅgiṇi gaṅge hima-vidhu-muktā-dhavala-taraṅge
dūrīkuru mama duṣkṛti-bhāraṁ kuru kṛpayā bhava-sāgara-pāram


(4)

तव जलम् अमलं येन निपीतं परम-पदं खलु तेन गृहीतम् ।
मातर् गङ्गे त्वयि यो भक्तः किल तं द्रष्टुं न यमः शक्तः ॥

தவ ஜலம் அமலம்' யேந நிபீதம்'
பரம-பத³ம்' க²லு தேந க்³ருʼஹீதம்
மாதர் க³ங்கே³ த்வயி யோ பக்த³:
கில தம்ʼ த்³ரஷ்டும்ʼ ந யம: ஶக்த:

அன்னை கங்கையே! குற்றமற்ற உன் ஜலத்தை யார் அருந்துகிறார்களோ அவர்கள் பரம பதத்தை அடைகிறார்கள். உன் மீது பக்தி கொண்டவர்களை யமன் காணக்கூட இயலாது அல்லவா!

tava jalam amalaṁ yena nipītaṁ parama-padaṁ khalu tena gṛhītam
mātar gaṅge tvayi yo bhaktaḥ kila taṁ draṣṭuṁ na yamaḥ śaktaḥ


பாடல் தரவிறக்கத்துக்கு : 



Thursday, July 26, 2012

கங்காஸ்தோத்ரம்-1


 श्रीमच्छङ्करभगवत्पादविरचितं गङ्गास्तोत्रम्
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் இயற்றிய கங்காஸ்தோத்ரம்
Ganga Stotram by Shri Shankara Bhagavatpada

(1)
देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवन-तारिणि तरल-तरङ्गे
शङ्कर-मौलि-विहारिणि विमले मम मतिर् आस्तां तव पद-कमले

தே³வி ஸுரேஶ்வரி ப⁴க³வதி க³ங்கே³
த்ரிபு⁴வந-தாரிணி தரல-தரங்கே³
ஶங்கர-மௌலி-விஹாரிணி விமலே
மம மதிர் ஆஸ்தாம்' தவ பத³-கமலே


கங்கா தேவியே! தேவர்களுள் முக்கியமானவளே! பெருமை மிக்கவளே! நீ மூன்று உலகங்களையும் காப்பாற்றுகிறாய். உனது அலைகள் என்றும் நகர்கின்றன. நீ தூய்மையானவள், சங்கரனின் முடிமேல் இருப்பவள்! உனது பாத கமலங்களில் என் மனது நிலைக்கட்டும்!

devi sureśvari bhagavati gaṅge tribhuvana-tāriṇi tarala taraṅge
śaṅkara-mauli-vihāriṇi vimale mama matir āstāṁ tava pada-kamale



(2)
भागिरथि सुख-दायिनि मातस् तव जल-महिमा निगमे ख्यातः ।
नाहं जाने तव महिमानं पाहि कृपामयि माम् अज्ञानम् ॥

பா⁴கீ³ரதி² ஸுக²-தா³யிநி மாதஸ்
தவ ஜல-மஹிமா நிக³மே க்²யாத:
நாஹம்ʼ ஜாநே தவ மஹிமாநம்ʼ
பாஹி க்ருʼபாமயி மாம் அஜ்ஞாநம்


அன்னை பாகீரதீ! (எல்லோருக்கும்) சுகம் தருபவளே! உன் நீரின் சிறப்பு வேதங்களிலும் பாடப்படுகிறது! (ஆனால்) நானோ உன் மஹிமையை அறியேன்! என் அஞ்ஞானத்தைப் பொறுத்துக் காத்தருள்வாய்!

bhāgirathi sukha-dāyini mātas tava jala-mahimā nigame khyātaḥ
nāhaṁ jāne tava mahimānaṁ pāhi kṛpāmayi mām ajnānam

இந்த பாடலை முழு வடிவில் இங்கே தரவிறக்கி கேட்கலாம்.