Pages

Thursday, March 31, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம்...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியா எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.

ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.

Wednesday, March 23, 2011

சித்தமும் வஸ்துகளும்...



 तदुपरागापेक्षित्वाच्चित्तस्य वस्तु ज्ञाताज्ञातम् ।।17।।
தது³பராகா³பேக்ஷித்வாச்சித்தஸ்ய வஸ்து ஜ்ஞாதாஜ்ஞாதம் || 17||

தத்³ உபராக³ = அந்த விஷயத்தின் சம்பந்தம் (இந்திரியங்கள் மூலம்); அபேக்ஷித்வாத் = எதிர் பார்க்கப்படுவதால்; சித்தஸ்ய = சித்தத்தின்; வஸ்து ஜ்ஞாதா ஜ்ஞாதம் = வஸ்து அறியப்பட்டதாகவும் அறியப்படாததாகவும் ஆகிறது.

யோக சித்தாந்தப்படி சித்தம் எங்கும் இருப்பது. அதன் சம்பந்தம் எல்லாவற்றுக்கும் இருக்கிறது என்றாலும் எல்லா விஷயங்களும் எப்போதும் அறியப்படுவதில்லை. அந்த விஷய சம்பந்தத்திற்கு சித்தத்தின் அதிகாரத்தை உண்டு பண்ணும் சக்தி இல்லை. அதனால் அந்த விஷயம் அறியப்படவில்லை. சாதாரணமாக நம் சரீரத்தில் இருக்கும் இந்திரியங்களின் வாயிலாக வெளி வஸ்துக்களுடன் சித்தத்துக்கு நேரும் சம்பந்தமே விஷய அதிகாரத்தை உண்டு பண்ண முடிகிறது. அப்படி இல்லாதது அறியப்படாததாக ஆகிறது.

Tuesday, March 22, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் ...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியே எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.
ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.



Friday, March 18, 2011

த்ருஷ்டியும் ஸ்ருஷ்டியும்:



न चैकचित्ततन्त्रं वस्तु तदप्रमाणकं तदा किं स्यात्।16।।
ந சைகசித்ததந்த்ரம்° வஸ்து தத³ப்ரமாணகம்° ததா³ கிம்° ஸ்யாத்| 16||

ந ச = ஆகாது; ஏக = ஒரு; சித்த தந்த்ரம் = சித்தத்தின் தந்திரம் (ஒருவனது ஞானத்தால் உண்டுபண்ணதாக); வஸ்து = வெளியில் உள்ள குடம் போன்ற வஸ்து; தத³ = பின்னால் (வஸ்துவை உண்டு பண்ணிய சித்தம் வேறு விஷயத்தில் நாட்டம் கொண்டால் அறியப்பட்ட வஸ்து); அப்ரமாணகம்° = ப்ரமாணம் இல்லை என்பதால்; ததா³ கிம்° ஸ்யாத் = இல்லாமல் போகுமா என்ன?

திருஷ்டி ஸ்ருஷ்டிவாதிகள் சொல்வது என்னவென்றால் விக்ஞானத்தை விட பொருள் வேறாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ஜடம். ஞானத்தால்தான் அது தோற்றத்தை அடைய வேண்டும். மனசு என்று ஒன்று அறிவதால்தான் ஒரு பொருள் இருக்கிறது. அறிய ஒன்றும் இல்லையானால் பொருள் இல்லை. ஆகவே அறியப்படும் வஸ்துக்களும் ஞானம் இருக்கும் போது மட்டுமே இருக்கின்றன. மற்ற நேரங்களில் இருப்பதாக சொல்ல ஆதாரம் ஏதுமில்லை. எப்படி சுக துக்கங்கள் இருக்கும் போது அவை அனுபவிக்கக்கூடியவையாக இருக்கிறதோ; நாமும் அதனால் அவற்றை ஒப்புக்கொள்ளுகிறோமோ அதே போல பொருட்களையும் அனுபவத்தில் இருக்கும்போது மட்டுமே ஒப்புக்கொள்ள வேன்டும்.

இதை இங்கு பதஞ்சலி ஆக்ஷேபிக்கிறார்.

ஒரு குடத்தை பார்க்கிறோம். அதனால் அதன் இருப்பு ஏற்படுகிறது எனில் அது ஒருவர் பார்த்ததாலா, பலர் பார்த்ததாலா? ஒருவர் பார்ப்பதை நிறுத்திவிட்டால் அது இல்லாமல் போகுமா? ஒருவர் பார்த்து குடம் உண்டானால் மற்றவர் பார்க்க பார்க்க காரணம் (பொருள் உண்டாவதன் காரணம்) மாறிக்கொண்டே இருப்பதால் குடம் அழிந்து அழிந்து தோன்ற வேண்டுமே? அப்படியா நடக்கிறது? இல்லை அது ஒருவனுடைய சித்த ஆதீனம் (சித்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது) என்றால் அவன் அதை பார்ப்பதை நிறுத்த மற்றவரும் பார்க்க முடியாமல் போக வேண்டும். அப்படியும் அனுபவத்தில் இல்லை.
இதனால் வெளி வஸ்துக்கள் ஒருவரது ஆதீனத்தில் இல்லை.


Thursday, March 17, 2011

ஞானமும் அறியப்படுவதும்:



वस्तुसाम्ये चित्तभेदात्तयोर्विविक्तः पन्थाः ।।15।।
வஸ்துஸாம்யே சித்தபே⁴தா³த்தயோர்விவிக்த​: பந்தா²​: || 15||

வஸ்து ஸாம்யே அபி = அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும்; சித்த பே⁴தா³த் = சித்தம் என்பது வித்தியாசப்படுவதால்; தயோர் = அவற்றின்; விவிக்த​: = வேறுவேறான; பந்தா²​: = வழிகள் (ஆக இருக்கின்றன)

பௌத்தர்களின் வாதம் என்னவெனில் ஞானத்தை தவிர்த்து ஏதுமே இல்லை. உலகில் ஒவ்வொரு கணமும் உண்டாகி அழியும் பொருட்களே இருக்கின்றன. இவற்றை அறியும் அறிவுக்கும் பொருட்களுக்கும் வேறுபாடு இல்லை. கணத்தில் தோன்றி மறையும் வஸ்துக்களே இருப்பதால் அனேக விசித்திரமானவையாக அவை தோன்றுகின்றன. ஆக ஞானத்தைத்தவிர ஏதுமே இல்லை. ஆக காரணங்களின் உண்மையான சொரூபம் முக்குணங்களே என்பது சரியில்லை.

இதற்கு பதஞ்சலி சொல்லும்பதில்:
அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும் அறிகின்ற மனிதர்களில் வேற்றுமை இருக்கிறது. அதனால் வெவ்வேறான விளைவுகள் உண்டாகின்றன.
ஒரு பெண் இருக்கிறாள். அவளைப்பற்றி அவளது கணவனுக்கு ஏற்படுவது ஸுக ஞானம். அவளது குழந்தைக்கு ஏற்படுவது பாசம். அவளது சக்களத்திமார்களுக்கு ஏற்படுவது துக்கம். அவளிடம் ஆசை கொண்ட ஒருவனுக்கு உண்டாவது மோஹம். சம்பந்தமில்லாத மூன்றாம் மனிதன் ஒருவனுக்கு ஏற்படுவது உதாசீனம். இப்படி அறியப்பட்டது ஒன்றாயிருக்க உண்டாகும் அறிவின் தன்மை வெவ்வேறாக இருக்கலாம்.
ஆகவே ஞானத்தால் அறியப்பட்டதும் ஞானமும் ஒன்று என்பது பொருத்தமில்லை. அறிவோர் இடத்து முக்குணங்களில் எது தலை தூக்குகிறது என்பதைப்பொறுத்து ஞானம் அமையும்.