Pages

Thursday, December 13, 2012

என் உலகம் என் கையிலா? - 1


என் உலகம் என் கையிலா?
சில நாட்கள் நடந்த கோளாறான சிந்தனைகளின் விளைவு! ஹும் படிச்சுடுங்க, நான் பாவம்!

கடந்த சில நாட்களா... சரி சரி உங்களுக்கு புரிஞ்சுடுத்து.
இந்த உலகம் உலகம் ன்னு சொல்லறாங்களே அது எது? நான் இருக்கிறதா நினைக்கிறதா, நீங்க இருக்கிறதா நினைக்கிறதா இல்லை அதுவா இருக்கிறதா?

முன் காலத்திலே 'கடவுள் ஒரு நாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்' ன்னு ஒரு பாட்டு உண்டு. அதில உலகம் எப்படிப்பா இருக்குன்னு கேப்பார். ஒருத்தன் வாழ்வே இனிமை ம்பான். இன்னொருத்தன் அதுவே கொடுமை ம்பான். இப்படி பாட்டு போகும்.

ஒரே உலகம் ஒத்தருக்கு இனிமையாவும் இன்னொருத்தருக்கு கொடுமையாவும் எப்படி இருக்க முடியும்? அது அப்படித்தான் இருக்கு என்கிறது நிதர்சனம். அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது.

ஒத்தர் அப்பாடா என்ன வெய்யில் என்கறார். இன்னொருத்தர் அதைப் பத்தியே ஒரு சிந்தனையும் இல்லாம வெயில்லே நடந்து போறார். சின்னப்பசங்க வெயிலான்னு ஆச்சரியமா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு கிரிக்கெட் ஆடறாங்க! எலும்பும் தோலுமா மூட்டு வியாதிகளோட இருக்கற கிழம் ஒண்ணு அப்பாடா, சொகமா இருக்குனு கூடச்சொல்லலாம்!

அப்ப உலகம் ஒவ்வொருத்தர்கிட்டேதான் இருக்கு. அவரவர் மனசில இருக்கிறது போலவேத்தான் இருக்கு.

இந்த மனசு... , இந்த மனசுதான் பல விஷயங்களுக்கும் காரணம். வாழ்கையை கொடுமையாக்கவும் இதால முடியும்; இனிமையா ஆக்கவும் இதால முடியும்.
இப்படி ரொம்பவே ஜெனரலைஸ் செய்யறத்துக்கு முன்னாடி சில விஷயங்களை … ஹிஹிஹி... மனசில ஏத்திப்போம்!
காத்து அடிக்குது, வெயில் அடிக்குது, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது (அட, நிசமா மழையே காணோம்ன்னாலும் கற்பனையிலதான் கொஞ்சம் கொட்டட்டுமே!) இதெல்லாம் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அது நம்மை பாதிக்காதுன்னு சொல்லவும் முடியாது. மழை இல்லைன்னு சொல்லி வெளியே போய் நனையாம திரும்பி வர முடியாது! ச்சும்மாவான்னா ஒரு கறபனையை வளத்துக்கொண்டு அது படி இருக்குன்னு சாதிச்சா.... பைத்தியக்காரன் பட்டம் சீக்கிரம் வந்துடும்!
இந்த இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். அதீனம் ன்னா ஆளுகை. அதுலேந்துதான் ஆதீனம் வந்தது.  சரி சரி, டைக்ரஸ் ஆக வேணாம்கிடக்கட்டும்.

என்ன சொன்னேன்? இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். இயற்கையா மழை பெய்யுது; பெய்யாம இருக்கு. நம்மால ஒண்ணும் பெரிசா செய்ய முடியலை. அதுவே மழை வேணும்ன்னு தெய்வத்தை வேண்டிக்கொண்டு சில கர்மாக்கள் செய்தா சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மழை பெய்யுது. இப்படி சில விஷயங்கள் நம் ஆளுகைக்கு உட்படாம தெய்வங்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கு. இதை இப்ப இந்த பதிவுல விட்டுடுவோம்.

மீதி பல விஷயங்கள் நம் ஆளுகையில இருக்கு. கொஞ்சம் விவரமா பார்க்கலாம்.
சில வருஷங்கள் முன்னே ஒரு அம்மா என்கிட்ட பொலம்பிகிட்டு இருந்தாங்க. 'சில பேர் என்னை வேணும்ன்னு எரிச்சலூட்டறாங்க' என்பதே அதில முக்கிய விஷயம். கடைசியா என்ன செய்யட்டும் ன்னு கேட்டாங்க. இப்படி பொலம்பறதே கூட ஒரு மாதிரி ரிலீஃப்தான். இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டேன்..
அவங்களோட குறிக்கோள் என்ன?
நான் எரிச்சலாகணும்...
சரி, அவங்களோட குறிக்கோள் நிறைவேறக்கூடாதில்லையா? அதானே நீங்க விரும்பறது?
ஆமாம்.
சரிதான். எப்படி அது நிறைவேறாம இருக்கும்?
.. புரியலை.....
அதாவது அவங்க நீங்க எரிச்சலடையணும்ன்னு நினைச்சு சில விஷயங்கள் சொல்லறாங்க அல்லது சில வேலைகள் செய்யறாங்க.
ஆமாம்.
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க என்ன செய்யணும்?
அதானே உங்ககிட்டே கேட்டுக்கிட்டு இருக்கேன்!
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க எரிச்சலடையக்கூடாது.
ஆமாம், அது எப்படி முடியும்?
அது எப்படி முடியாது? எரிச்சலடைகிறது யார்? அவங்களா, நீங்களா? அது யார் ஆதிக்கத்தில இருக்கு?
எரிச்சலடைய வேண்டியது நான்தான். அது எப்படி எரிச்சலடையாம இருக்க முடியும்?
அது உங்க கண்ட்ரோல்லதானே இருக்கு!
அவங்க ப்ரொவோக் பண்ணறாங்களே?
ஆமாம். அப்படித்தான் சொன்னீங்க. உங்களுக்கு எது எரிச்சல் மூட்டும்ன்னு நல்லா ஸ்டடி பண்ணி வெச்சு இருக்காங்க. எதை சொன்னா உங்களுக்கு கோபம் வருது, எதை செய்தா கோபம் வருது...
ஆமாம். அதை எல்லாம் வேணும்ன்னு அவங்க செய்யறாங்க.
வேணும்ன்னு செய்யறாங்களோ அல்லது அது அவங்க இயல்போ, கிடக்கட்டும். நீங்க பதிலுக்கு கோபப்படாம எரிச்சல் அடையாம இருந்தாதான் அவங்களை தோற்கடித்ததா ஆகும்.

இந்த ஆர்க்யூமெண்ட் எல்லாம் கேட்டுட்டு அவங்க எரிச்சல் ஆகாம இருந்ததுதான் விசேஷம். ரொம்ப கண்ட்ரோல் செய்திருப்பாங்க போலிருக்கு.

அதுக்கு நான் என்ன செய்யணும்?
கொஞ்சம் யோசிக்கணும். அவங்க சொன்னது உண்மையா? உதாரணமா " நீ ஒரு முட்டாள்" ன்னு சொல்கிறாங்க. சாதாரணமா நம்ம எல்லாருக்குமே இதை கேட்டா கோபம் வரும். திட்டினது மேலதிகாரி (இல்லை, தங்கமணி ன்னு தனியா வேற சொல்லணுமா? அதான் மேலதிகாரின்னு சொல்லியாச்சில்லே?) மாதிரி இருந்தா மனசில திட்டிட்டு வெளிவே வந்துடுவோம். இல்லைன்னா சண்டை போடுவோம். இந்த சண்டையத்தான் தவிர்கப்பார்க்கிறோம். யோசிக்கலாம், அவங்க சொன்னது உண்மையா? ஆமாம்ன்னா உண்மைய சொன்னதுக்காக யாரையும் கண்டனம் செய்ய முடியாது. இல்லை பொய் ன்னா, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். இவங்க சொல்கிறது பொய், உண்மைத்தன்மையை யாராலும் மாத்த முடியாது; சொல்லிட்டு போகட்டும்; எனக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி யோசிக்க தோணியாச்சுன்னா அவங்க சொல்கிறதை பொருட்டாவே எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓஹோ அப்படியா ன்னு சிரிச்சுகிட்டே நகர்ந்துட்டா அவங்க எரிச்சல் ஆயிடுவாங்க!
(இன்னும் வரும்)

4 comments:

Geetha Sambasivam said...

ஓஹோ, அப்படியா! :))))))))

Geetha Sambasivam said...

//ச்சும்மா//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சினிமாப்பாட்டெல்லாம் வர வர வெளுத்துக்கட்டறீங்க போல! :))))))

Geetha Sambasivam said...

முன்னாடி ஒரு கமென்ட் கொடுத்த நினைவு. வந்ததோனு தெரியலை. கரன்ட் போச்சு அப்போ.

திவாண்ணா said...

1. ஆமாம். அப்படித்தான்.
2. சின்ன வயசில பாத்தத்து. சாந்தி நிலையம். சின்ன வயசில பாத்ததால நினைவிருக்கு. என்ன, 2 நாள் முன்னே நடந்ததைதான் கேக்ககூடாது! :-))
3. வந்துடுத்து.