Pages

Friday, December 14, 2012

என் உலகம் என் கையிலா? 2


பாவம், அவங்களுக்கு ஏன் எரிச்சல் நாம் கொடுக்கணும்ன்னு சில நல்லவங்க கேள்வி! நல்லா இருங்கப்பா!
இப்படி செய்யத்தான் பதஞ்சலி சொல்றார்

எப்படி இருந்தாலும் உதாசீனம் என்கிறது ஒரு மிக சக்தி வாய்ந்த ஆயுதம்
நம்பிக்கை வரலை சிலருக்கு! இல்லையா?
தினசரி வாழ்கையில இருந்து ஒரு உதாரணம் பார்க்கலாம். குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கு. அப்பா கூப்பிடறார். இனியா, நீ தனியா என்ன விளையாடுற? ஸ்கூலுக்கு நேரமாச்சு கிளம்பு! (இனியன் யார் பையன்பா? ஓ குசும்பர் பையனா? ச்சும்மா ஒரு எகன மொகன க்கு போட்டது, மன்னிச்சூ!)
இப்ப அப்பா கூப்பிடறதை கேட்டு பையன் வந்துட்டா ஒண்ணும் பிரச்சினை இல்லே. அப்படி இல்லாம, பதிலே சொல்லாம, விளையாடிகிட்டே இருந்தா எரிச்சல் வருமா வராதா? ஹா! அதான் விஷயம். இன்னிக்கு வெள்ளிக்கிழமைப்பா, ஸ்கூல் லீவுன்னு பல்பு கொடுத்தாக்கூட பரவாயில்லை. பிரச்சினை வராது. இதோ வரேன், வர மாட்டேன் போ எல்லாம் கூட ஓகே. அது அடுத்து உரையாடலை தொடரும்.

உதாசீனம்தான் எதிராளிக்கு இன்னும் எரிச்சல் மூட்டிவிடுவது. சூடான பதில் இல்லை. சூடான பதில் இருந்தா பின்னால் வாக்குவாதம் வரும். அதானே எதிராளி எதிர்பார்க்கிறது? அப்படி இல்லாம அவங்களை கடுப்பேத்தறதுக்கு உதாசீனம்தான் வழி.
(மேலே சொன்ன உதாரணத்தோட இன்னொரு வடிவம்தான் தன்னை போதுமான அளவு கவனிக்காத பெற்றோரை குழந்தைகள் அவங்களுக்கு பிடிக்காததை செய்து கவனத்தை ஈர்ப்பது. டீப் சைக்காலஜி சமாசாரம். இப்ப அதுக்கு போக வேண்டாம்.)

ஒரு சின்ன உதாரணத்தைத்தான் பார்த்தோம். நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்பது நம்மகிட்டத்தான் உண்மையில இருக்கு. இதைத்தான் சொல்ல வரேன்.
ஆகவே நமக்கு ஆளுமையில இருக்கிற பல விஷயங்களை நாமே தீர்மானிக்கலாம். தெய்வாதீனமா இருக்கற விஷயங்களில நாம் அதிகமா ஒண்ணும் செய்ய முடியாது. ப்ரார்த்தனை செய்யலாம். சில கர்மாக்களை செய்யலாம்.
மற்ற விஷயங்களில பலதும் நம்ம ஆதீனத்தில இருக்கு என்பதை நாம புரிஞ்சுக்கலை என்பதே காட்ட நினைக்கும் விஷயம்.
நிறைய பேருக்கு நிதானமா யோசிச்சு செயல்படுகிற பழக்கம் இல்லை. பெரும்பாலும் ஒரு ரிஃப்லெக்ஸாத்தான் செயல்படுகிறோம். இன்ன இன்ன செயலுக்கு இன்ன இன்ன எதிர்வினைன்னு சார்ட் போட்டு வெச்சிருக்கோம். அப்படி ஏன் வந்ததுன்னு திருப்பி யோசிக்கக்கூட மாட்டோம்! திட்டினியா திருப்பித்திட்டு. கேவலமா பேசினானா திருப்பி கேவலமா பேசு. இந்த ரீதியில கண்ணுக்குக்கண் ன்னு செயல்படுகிறோம். சரிதானா? இதுல என்ன லாபம் இருக்கு? விவாதங்கள் பலதையும் பார்க்கிறேன். ஒரு விவாதத்தால யாரும் விஷயம் புரிஞ்சுகொண்டு நடத்தையை மாத்திகிட்டதா பார்க்க / கேட்க்கக்கூடவில்லை! பரஸ்பரம் சேற்றை அள்ளி வீசறதும்..... விடுங்க.

ரைட். அப்ப என் உலகம் என் கையில்தான் பெரும்பாலும் இருக்கு. என் அம்மாவோ, அப்பாவோ, பையனோ, பெண்ணோ, மனைவியோ, மேலதிகாரியோ (அதாவது மத்த மேலதிகாரி), யாரானாலும் அவங்க கூட நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதை அவங்க தீர்மானிக்கிறாங்கன்னா நம்ம வாழ்கையை நாம் இன்னும் நம் கையிலே எடுத்துக்கலைன்னு பொருள்.

இப்படி சொல்கிறதாலே 'மத்தவங்க என்ன வேண்ணா சொல்லிட்டுப்போகட்டும். நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்கிறதைத்தான் செய்வேன்' ன்னு அர்த்தமில்லை.
குறிப்பா நான் சொல்கிற இந்த விஷயம் வளர்ந்த மனிதர்களுக்குத்தானே ஒழிய வயதில சின்னவங்களுக்கு இல்லை. பெரியவங்க ஒரு விஷயம் சொன்னா அதை கேட்டு, அதன் படி நடக்கிறது அவங்க கடமை.
நாமும் ச்சும்மா வீணுக்கு நான் என் வழிலதான் போவேன் என்கிறதும் சரியில்லை. மாற்றுக்கருத்துக்கு நாமும் உடன்படலாம், சில காரணங்களுக்காக. இவன் கரிவாயன், இப்படிச்சொல்லிட்டானே, போகட்டும் அப்படியே செய்வோம் முதல் இவர் அனுபவஸ்தர், சொன்னா சரியா இருக்க வாய்ப்புகள் அதிகமிருக்கு வரை பல வகை காரணங்கள் இருக்கலாம்.

இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. ......

No comments: