Pages

Monday, October 21, 2013

பார்வை!


 
நேற்று என் அக்கா சொன்ன குட்டிக்கதை.
ஒரு ஆசிரமம் இருந்தது. ஒரு நாள் அங்கே இருந்த இரண்டு சீடர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். ஒருவன் குருவிடம் போய் புகார் செய்தான்: இவன் என்னை எருமை என்கிறான்.
குரு: எவ்வளவு தரம் அப்படி சொன்னான்?
சீடன்: ஒரு தரம். அதனால் என்ன? நான் என்ன எருமை போல மந்தமாகவா இருக்கிறேன்? இல்லை குண்டாக இருக்கிறேனா? கருப்பாக இருக்கிறேனா?
குரு: ஏம்பா, இவன் உன்னை ஒரு தரம் எருமைன்னு சொன்னதுக்கே உன்னை எருமையா பாவிச்சு கோபப்படறயே? நான் எவ்வளோ நாளா நீ பிரம்மம், நீ பிரம்மம் ந்னு சொல்லறேன்? அதை கொஞ்சமாவது பாவிச்சுப் பார்க்கக்கூடாதா?

இதுக்கு ஒரு குழுவில் நண்பர் திவாகர் போட்ட கமெண்ட்:
ஒரு பழைய சினிமா வசனம் உண்டு.

நாகேஷ் ஒரு காலண்டரைத் திருப்பி போட்டு தன் பேனாவை எடுத்து ஒரு புள்ளி வைத்து ‘இது என்ன‘ என்று கேட்பார், உடனே அதைப் பார்த்த அந்த அப்பாக் காரர் ‘அது கரும்புள்ளி’ என்பார்,

ஏன்பா.. இதொ இந்தச் சின்ன கரும்புள்ளியைச் சுத்தி எவ்வளோ பெரிய வெள்ளைப் பகுதி இருக்கு, இது கண்ணுக்குப் படலியா’ ந்னு கேட்பார்.
பிரம்மம் வெள்ளைப் பகுதி, அதில் கட்டுண்ட எருமை கரும்புள்ளி.. எருமைதான் தெரியும்..
 
உண்மைதான். பார்வைதான் வித்தியாசம். நாம் பலரும் இந்த அவசர உலகத்துல பல விஷயங்களை பார்க்கத்தவறுகிறோம். நடக்கிற அநியாயங்களில சிலதை பிடிச்சுகிட்டு உலகமே கெட்டுப்போச்சு என்று புலம்புகிறோம். நல்ல விஷயங்கள் கண்ணில் படுவதில்லை; அல்லது பார்த்தாலும் கவனத்தில் வருவதில்லை.

கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு உலகத்தை கவனித்து பாருங்கள். மரம் செடி கொடு வானம்... எல்லாவற்றையும்! ஈஶ்வர ச்ருஷ்டி எத்தனை அற்புதமானது என்று தெரிய வரும்!

No comments: