Pages

Monday, January 23, 2012

காமம் -2


சமீபத்தில ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது. இப்போதெல்லாம் குடும்பங்களில் ஒரு குழந்தை அரை குழந்தைன்னு மட்டுமே பெற்றுக்கொள்கிறாங்க. இதுவே பேஷன் ஆகிவிட்டது. “இத ஒழுங்கா வளர்த்தா போதாதா? இதுக்கு மேலே என்னால குழந்தை உண்டாகி கஷ்டப்பட முடியாது...” இத்தியாதி ஆர்க்யூமென்ட்ஸ்... அதுக்குள்ளே இப்ப நான் நுழைய விரும்பலை. ஆனா பிரச்சினை இந்த ஒரே குழந்தைன்னு செல்லம் கொடுக்கிறதுதான். எது கேட்டாலும் வாங்கித்தரப்படும். நல்லா படி நல்லா படி... வேற ஒண்ணுமே இலக்கு இல்லை. குழந்தை எப்படி நடந்துக்கிறது, யாரோட பழகுகிறது ஒரு விஷயமும் கவனிக்கிறதில்லை. இதுவும் பள்ளியில மத்தவங்க வாங்கி போட்டுகிட்டு வரது எல்லாம் பாத்து ஆசைப்படும். கேட்கும். அவசியமான்னு ஒரு ஆலோசனை கூட இல்லாம வாங்கித்தரப்படும். "என் குழந்தை கண் கலங்கக்கூடாது.” ஒரு கல்யாணம் கார்திக்கும் அழைத்து போகிறதில்லை! இதனாலேயே உறவுகளும் தெரியாது. இந்த குழந்தைக்கு கஷ்டம்னாலே என்னன்னு தெரியாது. ஒரு சாவு நடந்ததா குடும்பத்தில? ஸ்கூல் பாடம் கெட்டுப்போகக்கூடது. மாத்து ஏற்பாடு செய்துவிட்டு இவங்க மட்டுமே போய் வருவாங்க. ஒரு கஷ்ட நஷ்டமும் தெரியாத இந்த பெண் வயசான பிறகு வயசுக்கோளாறில யாரையான அழைச்சுகிட்டு வந்து நிக்கும். இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்! கேட்டதெல்லாம் கிடைச்ச பழக்கத்திலே இதை மறு பரிசீலனைக்கூட செய்யத்தோணாது! தயாராக இருக்காது. கிடக்கட்டும்.. இந்த நிகழ்ச்சியிலே போட்டுக்காட்டப்பட ஸ்லைட்ஷோ ஒண்ணு கவனத்தை கவர்ந்தது. உன்னக்கு ஒண்ணுமே கிடைக்கலைன்னு நினைக்கிறயா? உனக்கு என்ன எல்லாம் பகவான் கொடுத்து இருக்கான்னே உனக்கு தெரியாது. உனக்கு போட்டுக்கு ஒரு ட்ரெஸ் இருக்கா? இவங்களை பாரு எப்படி இருக்காங்கன்னு... உனக்கு போட்டுக்க ஒரு ஜோடி செருப்பு இருக்கா, இவங்களைபாரு.. ஒரு ஆசாமி ப்ளாஸ்டிக் பாட்டிலை ரெண்டா அறுத்து அதை காலில மாட்டிக்கிற மாதிரி வெட்டி போட்டுகிட்டு இருப்பார். உனக்கு ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்குதுன்னா உலகத்திலேயே இவ்வளோ சின்ன பர்சென்ட் நபர்களில நீ ஒருத்தன்... இதே ரீதியிலே அது போகும்.

முடியறத்துக்குள்ளே கண்களில கண்ணீர் வரலைன்னா அது அதிசயம்தான்! உலகத்தில இவ்வளோ பேர் கஷ்டப்படுகிறபோது நீ அதுக்குன்னு ஒண்ணு செய்யாட்டாலும் எனக்கு ஒண்ணுமே கொடுக்கலைன்னு புலம்பறதாவது இல்லாமல் இருக்கலாமே! ஒருத்தருக்கு எவ்வளோ இருந்தால்தான் போதும்?ஆசை எப்பதான் அடங்கும்?  இதுக்கு விடை கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்.

ஒரு பக்தன் இருந்தான். தீவிர பக்தி செய்து பகவானை சந்தோஷப்படுத்தினான். அவரும் காட்சி கொடுத்து என்ன வேணும்ன்னு கேட்டார். "மோக்ஷம் வேணும்" ன்னு கேட்டு இருக்கலாம்; இல்லை நிறைவோட "உன் ஆசீர்வாதம் இருந்தா போதும்" ன்னு சொல்லி இருக்கலாம்; "எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? நீயே பாத்து கொடு" ன்னு சாமர்த்தியமா சொல்லி இருக்கலாம். அசத்து இதெல்லாம் பண்ணாம "எனக்கு ரொம்ப நாளா கல்யாணமே ஆகலை. பண்ணி வை" ன்னு சொன்னான். ஆகட்டும்ன்னு பகவான் மறைஞ்சு போனார். கல்யாணம் ஆச்சு. குழந்தை பிறக்கலை. குழந்தை பிறக்கலையே அருள் பண்ணு ன்னு கெஞ்சினான். குழந்தை பிறந்தது; வளர்ந்தது. பேச்சே வரலை. திருப்பி பகவான்கிட்டே கெஞ்சினான். பேசித்து ஆனால் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளா வரலை. திருப்பி கெஞ்சல். பையனுக்கு படிப்பு வரலை; கெஞ்சல் சரியாச்சு. வயசாச்சு. வேலை கிடைக்கலைன்னு திருப்பி வேண்டுதல்; வேலையும் கிடைச்சது. இப்படியே திருப்பி திருப்பி பையனுக்கு கல்யாணம், குழந்தைன்னு வேண்டிகிட்டே இருந்தான்.

ஆசைகளுக்கு அளவில்லை, எல்லை இல்லை, முடிவும் இல்லை ... ஆசையை எல்லாராலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் அதில கொஞ்சம் நியாயம் இருக்கணும். பொது நலம் இருக்கணும். பக்தி யோகத்தில இந்த ஆசையை பகவான் பக்கம் திருப்புடா என்கிறார்கள். நமக்கு இது வேணும் அது வேணும்ன்னு நினைக்காம என் பெருமானுக்கு இது அது வேணும்ன்னு ஆசை படலாம். அது சரி! அவனுக்கு என்ன வேணும். எல்லாமே அவனுது அல்லது அவனே எல்லாமுமாயும் இருக்கிறான். அவனுக்கு இது வேணும் அது வேணும் ன்னு ஆசை படுகிறது ஒரு வகையில மூடத்தனம்தான். இருந்தாலும் நமக்கு வேணும்ன்னு நினைக்கறதைவிட இது பரவாயில்லை. இது மெதுவாக சித்த சுத்திக்கு -எண்ணத் தூய்மைக்கு - கொண்டு போகும். அது நல்லது.

Friday, January 20, 2012

காமம் -1


காமம்

முன்னே கோபத்தைப்பத்தி பார்த்தோம். இப்போ இந்த கோபத்துக்கு காரணமான காமத்தை பார்க்கலாம்.

அதெப்படி கோபத்துக்கு காமம் காரணம் ன்னா,

ஒரு பொருள் வேண்டும் ன்னு ஆசை படுகிறோம். அது கிடைக்கவில்லை. இது காமம்.

சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அதுவும் ஒரு ஆசை - காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது.

காமம் ஏன் வருகிறது?

இதுக்கு நம்மோட வாசனைகளே காரணம். முன்னே - அது இந்த பிறவியோ முன்னால கிடைச்ச பிறவியோ- நம்மில ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இது நம்மோட ஆழ் மனதில இருக்கும். இவை இப்ப நம்மோட இச்சைகளை தூண்டுகின்றன. அனுபவிக்காத ஒரு விஷயம் நமக்கு வேணும்ன்னு தோணாதில்லையா? முன்னே பயணம் செய்த போது பசித்தது. இன்ன இடத்திலே சாப்பிட்டோம். அங்கே கேசரி ரொம்ப நல்லா இருந்தது. இது நினைவிலே இருக்கும். மறு முறை அந்த பக்கம் போகும்போது பசிக்கிறதோ இல்லையோ முன்னே சாப்பிட்ட இடத்துக்கு திருப்பியும் போய் கேசரி வாங்கி சாப்பிடத்தோணும். பசிக்கு சாப்பிடணும்ன்னு தோணுவது இயற்கை உந்துதல். அது உயிர் வாழ வேண்டி இருக்கு. உயிரை தக்க வைச்சுக்கொள்ளணும் என்கிற ஆசை என்றாலும் அதை காமம்ன்னு சொல்ல முடியாது. பசிக்கும்போது வாங்கி சாப்பிடுவதை காமம்ன்னு சொல்ல முடியாட்டாலும் பசி இல்லாதப்ப இப்படி வாங்கி சாப்பிடறது காமம் இல்லாம வேறென்ன?

பசிக்கு சாப்பிடுவது என்பது நிச்சய தேவையாக போயிடுத்து. அதுக்கு மேலே அந்த தேவையை வளர விடக்கூடாது. இதைத்தான் ஆங்கிலத்துல சீலிங் ஆன் டிசயர் (ceiling on desire) என்கிறாங்க. இருக்க ஒரு இடம், உடுக்க ஒரு துணி, சாப்பாடு இவை மட்டுமே அடிப்படை தேவைகள். இவையே எப்படி இருக்கலாம்ன்னும் இருக்கு. மழைக்கு பாதுகாப்பான வீடா இருந்தா போதும். மாடி வீடு, கான்க்ரீட் வீடா இருக்கணும்ன்னு இல்லை. கிழியாததா ஒரு கீழ் துணி, ஒரு மேல் துணி இருந்தா போதும். மாற்று உடையா - இருக்கறதை துவைத்து காய வைத்து போட - இன்னொரு செட் இருக்கலாம்.

உடம்பை கெடுக்காத ஒரு அல்லது இரண்டு வேளை சாப்பாடே போதும். ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி; இரு வேளை சாப்பிடுகிறவன் போகி; மூணு வேளை சாப்பிடுகிறவன் ரோகி ன்னு சொல்கிறாங்க!

ஆனால் சாதாரணமா நாம் இதுக்கு மேஏஏஎலேயே எல்லாம் வெச்சு இருக்கோம். குடிசை வீடு இருந்தா ஓட்டு வீடு வேணும்ன்னு ஆசை; ஓட்டு வீட்டிலே இருந்தா கான்க்ரீட் கூரை வீடு வேணும்ன்னு ஆசை; அது இருந்தா மாடி வீடா இருக்கலாமேன்னு தோணும். இப்படி இல்லாததுக்கு ஆசை படுகிறவங்களே அதிகம். இருக்கிறதை வைத்துக்கொண்டு திருப்தி அடைகிறவங்க வெகு சில பாக்கியசாலிகளே. ஒவ்வொருத்தர் வாட்ரோபையும் பாருங்க. எத்தனை ட்ரெஸ் இருக்கு? வீட்டு சாப்பாடு போர் அடிக்கிறது. ஓட்டலுக்கு போய் வித விதமா சாப்பிடலாம்ன்னு நினைக்கிறவங்க எத்தனை பேர்?

ஒரு வருஷம் முன் ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது....

தொடரும்....

பஞ்சதஶீ, -1 -19



ஸத்த்வாம்°ஶை​: பஞ்சபி⁴ஸ்தேஷாம்° க்ரமாத்³தீ⁴ந்த்³ரியபஞ்சகம் | ஶ்ரோத்ரத்வக³க்ஷிரஸநக்⁴ராணாக்²யாமுபஜாயதே || 19|| 

சத்வ ப்ரதானமான ப்ரக்ருதியில் இருந்து ஐந்து சூக்ஷ்மமான இந்திரியங்கள் தோன்றின. அவை கேட்டல், தொடுதல், காணல், சுவைத்தல், நுகர்தல் ஆகியன ஆகும்.

Monday, January 9, 2012

பஞ்சதஶீ, 1- 18


தம​: ப்ரதா⁴நப்ரக்ரு«தேஸ்தத்³போ⁴கா³யேஶ்வராஜ்ஞயா | 
வியத்பவநதேஜோ'ம்பு³ பு⁴வோபூ⁴தாநி ஜஜ்ஞிரே || 18|| 

இந்த ப்ராக்ஞன் அனுபவிப்பதற்காக ஈஸ்வரனின் கட்டளையால் தமஸ் ப்ரதானமான ப்ரக்ருதியில் இருந்து ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண் ஆகிய பஞ்ச பூத கூறுகள் தோன்றின.

Wednesday, January 4, 2012

பஞ்சதஶீ, 1-17


அவித்³யாவஶக³ஸ்த்வந்யஸ்தத்³வைசித்ர்யாத³நேகதா⁴ |
ஸா காரணஶரீரம்° ஸ்யாத்ப்ராஜ்ஞஸ்தத்ராபி⁴மாநவாந் || 17|| 

மற்றது (அசுத்த ரஜோ தமோ குணங்களுடைய பிரஹ்ம நிழல்) அவித்யைக்கு ஆளாகும்; ஜீவன் எனப்படும். இந்த குணங்கள் எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பதை முன்னிட்டு இது பலவாக விசித்ரமாக தோன்றும். இந்த அவித்யையே காரண சரீரமாகும். இந்த காரண சரீரத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ளும் ஜீவன் ப்ராக்ஞன் எனப்படுவான்.