Pages

Monday, January 23, 2012

காமம் -2


சமீபத்தில ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது. இப்போதெல்லாம் குடும்பங்களில் ஒரு குழந்தை அரை குழந்தைன்னு மட்டுமே பெற்றுக்கொள்கிறாங்க. இதுவே பேஷன் ஆகிவிட்டது. “இத ஒழுங்கா வளர்த்தா போதாதா? இதுக்கு மேலே என்னால குழந்தை உண்டாகி கஷ்டப்பட முடியாது...” இத்தியாதி ஆர்க்யூமென்ட்ஸ்... அதுக்குள்ளே இப்ப நான் நுழைய விரும்பலை. ஆனா பிரச்சினை இந்த ஒரே குழந்தைன்னு செல்லம் கொடுக்கிறதுதான். எது கேட்டாலும் வாங்கித்தரப்படும். நல்லா படி நல்லா படி... வேற ஒண்ணுமே இலக்கு இல்லை. குழந்தை எப்படி நடந்துக்கிறது, யாரோட பழகுகிறது ஒரு விஷயமும் கவனிக்கிறதில்லை. இதுவும் பள்ளியில மத்தவங்க வாங்கி போட்டுகிட்டு வரது எல்லாம் பாத்து ஆசைப்படும். கேட்கும். அவசியமான்னு ஒரு ஆலோசனை கூட இல்லாம வாங்கித்தரப்படும். "என் குழந்தை கண் கலங்கக்கூடாது.” ஒரு கல்யாணம் கார்திக்கும் அழைத்து போகிறதில்லை! இதனாலேயே உறவுகளும் தெரியாது. இந்த குழந்தைக்கு கஷ்டம்னாலே என்னன்னு தெரியாது. ஒரு சாவு நடந்ததா குடும்பத்தில? ஸ்கூல் பாடம் கெட்டுப்போகக்கூடது. மாத்து ஏற்பாடு செய்துவிட்டு இவங்க மட்டுமே போய் வருவாங்க. ஒரு கஷ்ட நஷ்டமும் தெரியாத இந்த பெண் வயசான பிறகு வயசுக்கோளாறில யாரையான அழைச்சுகிட்டு வந்து நிக்கும். இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்! கேட்டதெல்லாம் கிடைச்ச பழக்கத்திலே இதை மறு பரிசீலனைக்கூட செய்யத்தோணாது! தயாராக இருக்காது. கிடக்கட்டும்.. இந்த நிகழ்ச்சியிலே போட்டுக்காட்டப்பட ஸ்லைட்ஷோ ஒண்ணு கவனத்தை கவர்ந்தது. உன்னக்கு ஒண்ணுமே கிடைக்கலைன்னு நினைக்கிறயா? உனக்கு என்ன எல்லாம் பகவான் கொடுத்து இருக்கான்னே உனக்கு தெரியாது. உனக்கு போட்டுக்கு ஒரு ட்ரெஸ் இருக்கா? இவங்களை பாரு எப்படி இருக்காங்கன்னு... உனக்கு போட்டுக்க ஒரு ஜோடி செருப்பு இருக்கா, இவங்களைபாரு.. ஒரு ஆசாமி ப்ளாஸ்டிக் பாட்டிலை ரெண்டா அறுத்து அதை காலில மாட்டிக்கிற மாதிரி வெட்டி போட்டுகிட்டு இருப்பார். உனக்கு ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்குதுன்னா உலகத்திலேயே இவ்வளோ சின்ன பர்சென்ட் நபர்களில நீ ஒருத்தன்... இதே ரீதியிலே அது போகும்.

முடியறத்துக்குள்ளே கண்களில கண்ணீர் வரலைன்னா அது அதிசயம்தான்! உலகத்தில இவ்வளோ பேர் கஷ்டப்படுகிறபோது நீ அதுக்குன்னு ஒண்ணு செய்யாட்டாலும் எனக்கு ஒண்ணுமே கொடுக்கலைன்னு புலம்பறதாவது இல்லாமல் இருக்கலாமே! ஒருத்தருக்கு எவ்வளோ இருந்தால்தான் போதும்?ஆசை எப்பதான் அடங்கும்?  இதுக்கு விடை கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்.

ஒரு பக்தன் இருந்தான். தீவிர பக்தி செய்து பகவானை சந்தோஷப்படுத்தினான். அவரும் காட்சி கொடுத்து என்ன வேணும்ன்னு கேட்டார். "மோக்ஷம் வேணும்" ன்னு கேட்டு இருக்கலாம்; இல்லை நிறைவோட "உன் ஆசீர்வாதம் இருந்தா போதும்" ன்னு சொல்லி இருக்கலாம்; "எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? நீயே பாத்து கொடு" ன்னு சாமர்த்தியமா சொல்லி இருக்கலாம். அசத்து இதெல்லாம் பண்ணாம "எனக்கு ரொம்ப நாளா கல்யாணமே ஆகலை. பண்ணி வை" ன்னு சொன்னான். ஆகட்டும்ன்னு பகவான் மறைஞ்சு போனார். கல்யாணம் ஆச்சு. குழந்தை பிறக்கலை. குழந்தை பிறக்கலையே அருள் பண்ணு ன்னு கெஞ்சினான். குழந்தை பிறந்தது; வளர்ந்தது. பேச்சே வரலை. திருப்பி பகவான்கிட்டே கெஞ்சினான். பேசித்து ஆனால் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளா வரலை. திருப்பி கெஞ்சல். பையனுக்கு படிப்பு வரலை; கெஞ்சல் சரியாச்சு. வயசாச்சு. வேலை கிடைக்கலைன்னு திருப்பி வேண்டுதல்; வேலையும் கிடைச்சது. இப்படியே திருப்பி திருப்பி பையனுக்கு கல்யாணம், குழந்தைன்னு வேண்டிகிட்டே இருந்தான்.

ஆசைகளுக்கு அளவில்லை, எல்லை இல்லை, முடிவும் இல்லை ... ஆசையை எல்லாராலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் அதில கொஞ்சம் நியாயம் இருக்கணும். பொது நலம் இருக்கணும். பக்தி யோகத்தில இந்த ஆசையை பகவான் பக்கம் திருப்புடா என்கிறார்கள். நமக்கு இது வேணும் அது வேணும்ன்னு நினைக்காம என் பெருமானுக்கு இது அது வேணும்ன்னு ஆசை படலாம். அது சரி! அவனுக்கு என்ன வேணும். எல்லாமே அவனுது அல்லது அவனே எல்லாமுமாயும் இருக்கிறான். அவனுக்கு இது வேணும் அது வேணும் ன்னு ஆசை படுகிறது ஒரு வகையில மூடத்தனம்தான். இருந்தாலும் நமக்கு வேணும்ன்னு நினைக்கறதைவிட இது பரவாயில்லை. இது மெதுவாக சித்த சுத்திக்கு -எண்ணத் தூய்மைக்கு - கொண்டு போகும். அது நல்லது.

No comments: