Pages

Wednesday, September 6, 2017

கிறுக்கல்கள் -148





கடவுள் என்று தேடினாயானால் ஒரு கருத்தை தேடுகிறாய். சத்தியத்தை பார்க்க மாட்டாய் என்றார் மாஸ்டர். ஒரு கதை சொன்னார்.

மடாலயத்தில் ஒரு சன்யாசிக்கு ஒரு அறையை கொடுத்து இருந்தார்கள். அவர் அதைப்பற்றி புகார் கூறினார். "நான் நக்ஷத்திரங்களை பார்த்து த்யானம் செய்ய நினைத்தேன். ஆனால் என் அறை ஜன்னலுக்கு அப்பால் ஒரு மரம் இருந்து கொண்டு காட்சியை தடுக்கிறது."

விஷயம் என்னவென்றால் அதற்கு முன் அந்த அறையில் இருந்த சந்நியாசி அந்த மரத்தை பார்த்து த்யானம் செய்து ஞானம் அடைந்தார்!

Tuesday, September 5, 2017

கிருஷ்ண யஜுர் வேத உபாகர்மா 2017





வரும் புதன் கிழமை கிருஷ்ண யஜுர் வேத உபாகர்மா. காயத்ரி ஜபம் ஏற்கெனெவே முடிந்து விட்டது. உபாகர்மாவுக்கான மந்திரங்கள் இங்கே  
 

வேதம் - 10





வேதத்தில் இந்த உலகில் தேவையாக இருக்கிற புத்திர ப்ராப்தி, நல்ல வது ப்ராப்தி, தீர்காயுசு, ராஜ்ய ப்ராப்தி, சத்ரு ஜெயம் இது போல எத்தனையோ நமக்குத்தேவையாக இருக்கின்ற இம்மை பொருட்களையும் வழங்கக்கூடிய பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை கொடுக்க காரணம் இதற்கு இவன் அநியதனமான உபாயங்களிலே சென்று விடக்கூடாதே; பொருளை பெற வேண்டும் என்பதற்காக துன்மார்க்கங்களிலே, வேறு அபர மார்க்கங்களிலேயே பிரவேசித்து தன் ஆத்ம சக்தியை வீணடிக்க கூடாதே என்பதற்காக தைபுண்ய விஷயாஹா வேதாஹா என முக்குணங்களில் அகப்பட்டு இருக்கிற மக்களை நீ வேறெங்கும் செய்ய வேண்டாம் செய்ய வேண்டுமானால் இங்கேயே செய்து கொண்டு இரு என்று மென்மேலும் அவர்களை சத்வ குணத்தில் உயர்த்துவதே வேதத்தின் நோக்கம்,

தேவதாத்மகமான பிரபஞ்சத்தை காண்பித்து, அதை தெரியாததாலே…. நமக்கு நீர் வேண்டி இருக்கிறது. அதை நாம் உற்பத்தி செய்கிறோம். நிலை மாற்றம் செய்கிறோம். தேக்கி வைக்கிறோம் தூய்மை படுத்துகிறோம். நீர் வளம் பெருக்குவதை பார்க்கிறோம். நாம் நீருக்கு போராடப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள், ஏன் இது வந்தது? நீரை பெருக்குவதோ அல்லது பஞ்ச பூதங்களை நிலம் காற்று விண் இதை எல்லாம் மேலோட்டமாக அவற்றை ஜடப்பொருள்கள், உயிரில்லை என்று நம்மை விட தாழ்ந்ததாக நினைக்கும் விஞ்ஞானம் செயல்படுவதால் அவற்றை வளர்க்கவும் சேமிப்பதிலேயும் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை. குறை கண்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வீழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இவை நம்மைக்காட்டிலும் உயர்ந்தவை; நாமும் இவற்றுடன் ஒரு பகுதியாக இருப்போம்; நம்மில் இவை பகுதியாக உள்ளன; இருவரும் சேர்ந்து எம்பெருமானின் சரீரமாக இருக்கிறோம் என்னும் மேன்மையான மெய் நிலை அறிவினால் நாம் இவற்றால் வரக்கூடிய இடர்களையும் களையலாம்; இவற்றை பெருக்கிக்கொள்ளலாம்
 
அவர்களால் இதுபோன்றுள்ள நமக்குத் தேவையான போருட்களை பெருக்கி தேக்கி வைத்து அனைவருக்கும் வழங்க முடியாததால்தான் , அவற்றை பெருக்க முடியாது நீங்க உங்க பெருக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசுகள் அறிவித்துள்ளன. ஆண்மையான அரசு, இன்னும் பெருக்கித்தருவோம்; எத்தனை கோடி மக்கள் வந்தாலும் வளங்களை பெருக்கிக்கொடுப்பது சேமித்து கொடுப்பது அனைவருக்கு வாரி வாரி வழங்கக்கூடிய பசுக்களாக இருப்பதே நம் மறை சமுதாயம். நீ குறைத்துக்கொள், சாப்பிடாதே என்றெல்லாம் ஆணைகள் வெளியிடுவது இந்த அரசாங்கங்கள்.

Monday, September 4, 2017

வேதம் - 9





அலௌகீகம், லௌகீகம் என்பது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்
 
லௌகீக திருஷ்டி என்ன? உலகத்தை பஞ்ச பூதங்களால் ஆனதாக பார்ப்பது. அதில் பூதாத்மா என்கிற ஆத்ம சைதன்யம் இருக்கிறது. உயிரில்லாத ஜடப்பொருட்கள் உள்ளன. இவற்றில் ஆற்றல் உள்ளது. காலம் இருக்கிறது, இடம் இருக்கிறது. இந்த ஆறின் கூட்டுப்பொருளாக…. காலம், இடம், உயிரினம், மனம் அல்லது எண்ண ஆற்றல், பருப்பொருள், பொருள் ஆற்றல் இந்த ஆறையும் காண்பதே லௌகீக திருஷ்டி
 
இதை தாண்டியது அலௌகீக திருஷ்டி இதை எல்லாம் தேவதாத்மகமாக காண்பது. அபி⁴மானிவ்யபதே³ஶஸ்து விஶேஷானுக³திப்⁴யாம் (பி.சூ 2.1.6) வாயு என்றால் வாயுவை ஏன் கும்பிடுகிறாய்?
சிலர் சொல்கிறார்கள் .. அறியாமையால், அச்சத்தால், தான் கண்டறிய முடியாமல், தன்னால் திசை காண முடியாத பொருட்களை கண்டு அஞ்சி மனிதன் வணங்கினதாக சொல்கிறார்கள். அது வேறு நாகரீகமாக இருக்கலாம். அவற்றின் உட்பொருளாக உள்ள தெய்வங்களையும் தெய்வங்களுக்கும் உட்பொருளாக உள்ள பிரம்மத்தையும் கண்டறிந்து அந்த காட்சியால் பூரித்துப்போய் போற்றி கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள். நாகரீகத்தின் துவக்கத்தை சொல்வோர் இதைத்தான் சொல்கிறார்கள். கடவுள் வழிபாடு அச்சத்தில் பிறந்தது. அறியாமையில் இருந்து பிறந்தது. தான் புரிந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாததை பார்க்கும் போது அதற்கு பணிந்து போவது மனிதனுடைய பலஹீனம். அதன் வெளிப்பாடு இந்த வழிபாடு. பலஹீனத்தில் இருந்து கடவுளும் அவரிடம் இருந்து மதம், பக்தி வந்ததாக சொல்கிறார்கள் சில அறிவாளிகள். ஆனால் இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அஞ்சி அழிந்தவர் பலர். அவர்களிலே நாம் இல்லை. இருப்பதை இல்லாததாக நினைத்து மருண்டு அதை இழந்தவர்களிலே இது இருக்கிறது என்று தாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் காட்டுபவர்களாக , நெறி வல்லுனர்களாகவே நாம் இருக்கிறோம்.  

ஆகவே தேவதாத்மகமான ஒரு பிரபஞ்சத்தை நாம் பார்த்து, நெருப்பு என்றால் நெருப்பு இயக்குகின்ற ஒரு சைதன்யம் இருக்கிறது, ஒரு அறிவாற்றல். அதன் சேதனத்தில் அக்னி என்னும் ஒரு தெய்வம் இருக்கிறது. இது எல்லாம் நமக்கு எப்படி காட்டப்படுகிறது? நானோ ஸ்பெக்டராலாஜிலே? நுண் நோக்கியிலே? ஜீவ அணு மரபியலிலே? உலகியலே? கோளியலில்? அண்ட புவியியலிலே? ஆழ் கடலியலிலே? எந்த இயலிலும் தெரியாது, இறையியலிலே மறையியலிலே, உணர்வியலிலே மட்டும் தெரியும். அதை காட்டிகொடுத்ததாலே இதற்கு அலௌகிகஹா என்று பெயர்.

அதையும் மீறி மூன்றாவதாக இத்தனை தெய்வங்களிலும் வைத்து எல்லோருக்கும் இன்னருள் சுரந்து இந்த தெய்வங்களுக்கெல்லாம் உள்ளுறை பொருளாய் இருந்து இயக்குகின்றவன் யார்? இதைத்தான் தெய்வ மீமாம்சையில் சொல்கிறார்கள். 'ச விஷ்ணுஹு ஆஹஹி; தம் ப்ரம்மேத்யா சக்ஷதே தம் ப்ரம்மேத்யா சக்ஷதே' என்று இதைத்தான் இரண்டு விதமான சூத்திரங்களாக சொல்லி இருக்கிறது அவர்தான் பிரம்மம் எனப்படுகிறார். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு பிரம்மமே உள்ளுறை பொருளாக இருக்கிறது என்று. இந்த உலகை 'சர்வம் கல்விதம் ப்ரம்ஹ தஜ்ஜலான் இதி ஶாந்த உபாசீத'. எல்லாமே அவனில் இருந்து உண்டாகி அவனாலே நிலைநாட்டப்பட்டு அவனையே அடைவதாலே இது எல்லாம் அவனே; அவனே எல்லா பொருளாகவும் இருப்பவன் என அறிந்து தானும் அமைதியுற்று நிரந்ஜனாக 'பரம ஶாந்த உபைதி, ஶாந்த உபாசீத', 'ஞாத்வா மாம் ஶாந்தி ம்ருச்சதி'(.கீ 5.29 ) என பல இடங்களிலே பார்க்கிறோம். மேலான நிலையை அடைகிறான்; ஒன்று படுகிறான்; நிலை விளக்கம் பெறுகிறான். தன்னிலை விளக்கம் பெறுகிறான். இப்படி வேதங்களிலே பிரம்மாத்மகமாக - அதற்கும் மீறி சென்று எல்லா பொருட்களையும் பிரம்மாத்மகமாக பார்க்கக்கூடிய திருஷ்டி, இந்த இரண்டு த்ருஷ்டிதான் வேதத்தின் தனிப்பெரும் பெருமை.

Friday, September 1, 2017

வேதம் - 8





இப்படி காரியங்களை செய்தாலும் சொன்னாலும் கூட தடைகள் இருக்கின்றன. சிலதை சொல்லுகிறோம். ஆனால் ஒருவனுக்கு காதே கேட்கவில்லை. இன்னொருவன் அலட்சியமாக இருக்கிறான்; நினைவில் கொள்ளவில்லை. மற்றவன் அவித்தேயன்; சொன்னதை எப்போதும் செய்யாதவன். இன்னொருவன் அஞ்ஞானி; சொன்னதை புரிந்து கொள்ள முடியாதவன். இது போன்று உள்ளவர்களுக்கு சொல்வது பொருந்தாது. இந்த சாதாரண உரைகளிலேயே இப்படி. அது போல வேதத்திலேயும் அதை சொல்லுபவர்கள் இடத்திலே அதை கற்றபவர்கள் மத்தியில் - அதாவது எப்படி இருக்க வேண்டும்? தத்–விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத். ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம–நிஷ்டம். (முண்டக உபநிஷத் 1.2.12) குருவின் இலக்கணத்தையும் சிஷ்யன் எப்படி சமித் பாணியாக …. சமித் பாணியாக என்றால் கையில் சமித்துடன் என்று உட் பொருள் இல்லை; சமித் எப்படி ஆஜ்யத்தையும் அதன் மூலம் அக்னியையும் க்ரஹிகிறதோ அது போல ஆச்சார்யன் க்ருபைக்கு பரிபூர்ண சத்பாத்திரமாக இருக்கிற யோக்யதையைத்தான் அது இங்கே சுட்டிக்காட்டுகிறது. அது போல குரு சீடன் இலக்கணம் தகுந்த சத் பாத்திரங்களால் நிவேதிக்கப்பட்டு தகுந்த சத்பாத்திரங்களில் அருந்தவம் ஏற்ற கலம் என்பர். அதை (வேதத்தை) அறிந்த ஏற்ற கலமாக உள்ள ஆசான்கள் வழங்கி அருந்தவமாக இருக்கும் மாணாக்கர்கள் பெற்றால்தான் வேதம் பரிமளிக்கும் என்று வேதத்தின் இலக்கணத்தை பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். என்பர்- அது போல இருந்து கற்றால் தான் வேதம் பலனளிக்கும்
 
இன்னொன்று: வேதத்தில் இந்த மந்திரங்கள் இருக்கும் போது இத்தனை வேதங்கள் இவ்வளவு சம்பிரதாயங்களும இருந்தும் அந்நிய படையெடுப்பு வந்தது. கோவில்கள் தரை மட்டமாகின. தீக்கிரையாகின. கலாசார அழிவுகள்ல் எல்லாம் என் வந்தன? இதை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்? இவற்றுக்கு விடையை பின்னால் பார்க்கலாம்.

வேதத்தில் இருக்கின்ற இத்தனை ஆற்றல்களும் நிரூபாதிகமா சபாதிகமா? யார் சொன்னாலும் சொன்ன மாத்திரத்தில் பலிக்குமா?

 தீ என்று தெரியாமல் கையை வைத்தாலும் அது சுடும். அமிர்தம் என்று தெரியாமல் பருகினாலும் அது அதன் வேலையை செய்யும். ஆகவே அறிந்தோ அறியாமலோ எப்படி சொன்னாலும் நன்மை பயக்க வேண்டும். "இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11- " என்பது போல. அது இங்கே வேதத்தின் கடுமையான விதிகளுக்கு பொருந்தாது.

எப்படி வீணையின் நாதம் கை தேர்ந்த ஒருவனின் கை விரல்களின் ஆலத்தியாலே தான் விரும்பிய வண்ணம் எல்லாம் எண்ணம் உவந்திருக்கின்ற இடங்களுக்கு எல்லாம் இணையாக தானாக அது செல்வது போலே; அவன் விரும்பி இருக்கின்றனவற்றை எல்லாம் தானும் கற்று மற்றவர்களுக்கும் தரக்கூடியவன் வேத சப்தங்களிலே அர்த்தங்களிலே பாவங்களில் தத்துவங்களில் நிறைந்த சாதகத்தை செய்து இருக்கிற தபஸ், ஸ்வாத்யாயம் பிரம்மச்சரிய நித்ய நிஷ்ட நியமனாக இருக்கும் ஒருவனே அதை இயக்க முடியும் அதனால் அது ஒரு உபாதியினால் இருப்பது. யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் வருவது என்பது பகவன் நாமாக்களுக்கும் மிக உயர்ந்த நிலையில் இருக்கிற பக்தி பிரபத்தியிலும்தான் பொருந்தும். வேத சப்தங்களில் அதை இயக்கக்கூடிய யோக்கியதை இருப்பவர்கள் இயக்கினால்தான் அது பொருந்தும்.