Pages

Wednesday, September 6, 2017

கிறுக்கல்கள் -148





கடவுள் என்று தேடினாயானால் ஒரு கருத்தை தேடுகிறாய். சத்தியத்தை பார்க்க மாட்டாய் என்றார் மாஸ்டர். ஒரு கதை சொன்னார்.

மடாலயத்தில் ஒரு சன்யாசிக்கு ஒரு அறையை கொடுத்து இருந்தார்கள். அவர் அதைப்பற்றி புகார் கூறினார். "நான் நக்ஷத்திரங்களை பார்த்து த்யானம் செய்ய நினைத்தேன். ஆனால் என் அறை ஜன்னலுக்கு அப்பால் ஒரு மரம் இருந்து கொண்டு காட்சியை தடுக்கிறது."

விஷயம் என்னவென்றால் அதற்கு முன் அந்த அறையில் இருந்த சந்நியாசி அந்த மரத்தை பார்த்து த்யானம் செய்து ஞானம் அடைந்தார்!

No comments: