Pages

Tuesday, May 31, 2016

கிறுக்கல்கள்! - 119



பணிவு என்பதை தன்னை மதிப்பிறக்கம் செய்து கொள்ளுவது இல்லை” என்றார் மாஸ்டர். ”நம் முயற்சி எல்லாவற்றாலும் நாம் சாதிப்பது நம் நடத்தையை மாற்றிக்கொள்ளுவது மட்டுமே, நம்மை இல்லை என்று புரிந்து கொள்ளுவதால் பணிவு வருகிறது.”

அப்படியானால் உண்மையான மாற்றம் முயற்சியால் வரவிலையா?”
ஆமாம், அதுவே சரி!”

பின்னே அது எப்படி வருகிறது?”
விழிப்புணர்வால்”

விழிப்புணர்வு பெற நாம் என்ன செய்ய வேண்டும்?”
தூக்கத்தில் இருந்து விழிக்க நாம் என்ன செய்கிறோம்?”

அப்போ யாரும் பெருமைப்பட ஒன்றுமே இல்லையா? ”
பதிலுக்கு தான் கேட்ட ஒரு உரையாடலை சொன்னார்.
நம்ம மாஸ்டர்-- என்ன ஒரு குரல், எவ்வளோ தெய்வீகமா அவர் ஓதுகிறார்!”
ஆஆஆமா! அவரோட குரல் எனக்கு இருந்தா நானும்தான் அப்படி ஓதுவேன்!”

Monday, May 30, 2016

கிறுக்கல்கள்! - 118


மாஸ்டர் கடவுள் மீது பொதுவாக இருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் உடைப்பதை கண்டு பதறிப்போன ஒரு சீடர் கூவினார்: இப்படியே போனால் எங்களுக்கு பிடிமானம் என்றே ஒன்று இருக்காது!
மாஸ்டர் சொன்னார்: பறவை தன் குஞ்சை கூட்டிலிருந்து தள்ளிவிடும் போது குஞ்சு இப்படித்தான் கூவுகிறது!
பின்னொரு சமயத்தில் சொன்னார்: பாதுகாப்பாக கூட்டிலேயே இருக்கும் பறவை போல உங்கள் நம்பிகையிலேயே மூழ்கி இருந்தால் எப்படி பறக்க முடியும்? அது பறப்பது ஆகாது! அது சிறகுகளை அசைப்பது மட்டுமே!

Friday, May 27, 2016

கிறுக்கல்கள்! - 117


ஒரு நாள் இரவு மாஸ்டர் சீடர்களை அழைத்துக்கொண்டு திறந்த வெளிக்கு போனார். நக்‌ஷத்திரங்களை காட்டியபடி சீடர்களைப்பார்த்து சொன்னார்: “எல்லாரும் என் சுட்டுவிரலையே பாருங்கள்!”
அப்புறம் அவர்களுக்கு புரிந்துவிட்டது!

Wednesday, May 25, 2016

கிறுக்கல்கள்! - 116


மாஸ்டர் விவாதங்களில் ஈடு படுவதில்லை; தவிர்த்து விடுவார். ஏன் என்று கேட்டால் விவாதங்கள் உண்மையை கண்டுபிடிக்க உதவுவதில்லை; தன் நம்பிக்கையை வலியுறுத்தவே நடக்கிறது என்பார்

உதாரணத்திற்கு கதை சொன்னார்:
வெண்ணை தடவிய ரொட்டித்துண்டை கீழே போட்டால் அது எந்தப்பக்கம் விழும்?
வெண்ணை தடவிய பக்கம் கீழே விழும்.
இல்லை. வெண்ணை தடவிய பக்கம் மேலே இருக்கும்.
பார்க்கலாமா?
பார்க்கலாம்.
வெண்ணை தடவி ரொட்டித்துண்டை கீழே போட்டார்கள். அது வெண்ணை தடவிய பக்கம் கீழே இருக்கும்படி விழுந்தது.
பாத்தியா? நா ஜெயிச்சேன்.
ஹும்! நா ஒரு தப்பு பண்ணதால நீ ஜெயிச்சே!
என்ன தப்பு?

தப்பான பக்கம் வெண்ணையை தடவிட்டேன்!

Tuesday, May 24, 2016

கிறுக்கல்கள்! - 115


மாஸ்டர் உழைத்தது ஏறத்தாழ எல்லா மக்களின் மனதிலும் இருக்கும் கோட்பாடுகள், நம்பிக்கைகள், தெய்வம் குறித்த கற்பனை எல்லாத்தையும் தகர்த்தெறிவதற்கு.
ஏன் என்று கேட்டால் அவை அனைத்தும் ஒரு விஷயத்தை காட்டவே பயனாக வேண்டும்; அதுவே முடிவல்ல என்பார்.
அவருக்கு பிடித்த கிழக்கத்திய சிந்தனை ஒன்று: “சாது சந்திரனை சுட்டிக்காட்டும் போது முட்டாள்கள் பார்ப்பதென்னவோ அவரது விரலைத்தான்!”