Pages

Tuesday, May 31, 2016

கிறுக்கல்கள்! - 119



பணிவு என்பதை தன்னை மதிப்பிறக்கம் செய்து கொள்ளுவது இல்லை” என்றார் மாஸ்டர். ”நம் முயற்சி எல்லாவற்றாலும் நாம் சாதிப்பது நம் நடத்தையை மாற்றிக்கொள்ளுவது மட்டுமே, நம்மை இல்லை என்று புரிந்து கொள்ளுவதால் பணிவு வருகிறது.”

அப்படியானால் உண்மையான மாற்றம் முயற்சியால் வரவிலையா?”
ஆமாம், அதுவே சரி!”

பின்னே அது எப்படி வருகிறது?”
விழிப்புணர்வால்”

விழிப்புணர்வு பெற நாம் என்ன செய்ய வேண்டும்?”
தூக்கத்தில் இருந்து விழிக்க நாம் என்ன செய்கிறோம்?”

அப்போ யாரும் பெருமைப்பட ஒன்றுமே இல்லையா? ”
பதிலுக்கு தான் கேட்ட ஒரு உரையாடலை சொன்னார்.
நம்ம மாஸ்டர்-- என்ன ஒரு குரல், எவ்வளோ தெய்வீகமா அவர் ஓதுகிறார்!”
ஆஆஆமா! அவரோட குரல் எனக்கு இருந்தா நானும்தான் அப்படி ஓதுவேன்!”

No comments: