Pages

Tuesday, January 24, 2012

காமம் - 3


காமம்ன்னு சொல்லிட்டு என்னடா ஆசை பத்தி பேசிகிட்டு இருக்கானேன்னு தோணித்துண்ணா...
காமத்துக்கு அகராதியில் அர்த்தம் பார்க்கலாம். .. காமம் (p. 225) [ kāmam ] , s. lust, desire, ஆசை; 2. lasciviousness, libidinousness, காமநோய்; 3. love, desire, அன்பு; 4. semen virile, வீரியம்; 5. sexual pleasure, புணர்ச்சி இன்பம்.

லஸ்ட் என்பதே முக்கிய அர்த்தம். எப்படி ஒரு கடையிலே பல பொருட்களை வித்தாலும் வெத்தலை பாக்கு கடை என்கிறோம்? அங்கே பலதும் இருந்தாலும் வெத்திலை பாக்கே முக்கியம். ஆசை பலது இருந்தாலும் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டது பலமானது, வேகமானது, கட்டுப்படுத்த கடினமானது என்கிறார்கள். அதனால் இந்த காமம் என்கிற சொல் வழக்கில் பாலுணர்வு ஆசையை குறிப்பதாகிவிட்டது. இருந்தாலும் நான் மூல அர்த்தத்தையே இங்கே வைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உட்பகை லிஸ்டை பாருங்க. காமம் (lust), குரோதம் (anger) உலோபம் (miserliness), மோகம் (sensuality), மதம் (pride), மாற்சரியம் (envy, malice).

காமம் லிஸ்ட்ல முதல்ல இருக்கு.
காமத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது? முதல்ல கட்டுப்படுத்த முடியுமா?
முடியும்.
மனசை தறி கெட்டு ஓடாம நிறுத்தினா எல்லாமே சாத்தியம்.
அதை எப்படி செய்யறது?
புத்தியால.
சலனப்படுகிறது மனசு, திடமாக நிற்பது புத்தி. புத்தி பூர்வமா விஷயங்களை ஆராய்வது மனசை திடமாக்க அதாவது புத்தி ஆக்க உதவும்.
மனுஷ ஜன்ம பிறவி கிடைக்கிறதே கஷ்டம். ஆனாலும் எப்படியோ நமக்கு அது கிடைச்சு இருக்கு. இந்த மனித பிறவியிலதான் நாம் ஆன்மீக முன்னேற்றத்தை சாதிக்க முடியும். இதை வேற எந்த பிறவியிலேயும் செய்ய முடியாது. மாடு தபஸ் செய்ய முடியாது; ஆடு தபஸ் செய்ய முடியாது; புலி செய்ய முடியாது. மனிதன் மட்டுமே செய்ய முடியும். தபஸ் ன்னா ஏதோ காட்டிலே போய் உட்கார்ந்துகிறது இல்லை. ஒரு ஆன்மீக சாதனையை திடமாக தொடர்ந்து செய்வதே தபஸ். அடுத்த பிறவி எப்படி அமையுமோ நமக்குத்தெரியாது. அதனால புத்தியில உறைக்கற இப்பவே நாம் முடிஞ்ச அளவு ஆன்மீக முன்னேற்றத்தை அடையணும். அதுக்கு சிறந்த உபாயம் ஆசைகளை மட்டுப்படுத்தி நேரத்தை, உழைப்பை ஆன்மீக பாதையிலே செலுத்துவதுதான்.
மனசு முடிவு பண்ணியாச்சுன்னா என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்.
ஒரு அந்தணன் இருந்தான். மனவி பிறந்தகம் போயிருந்தாள். பின் மாலை நேரம். இவனுக்கு மனவியை சந்திக்க ஆசை ஏற்பட்டது. கிளம்பிவிட்டான். நல்ல வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. அப்படியும் இவன் மனசு மாறலை. மழையிலேயே பயணம் செய்தான். வழியில் யமுனை ஆறு குறுக்கிட்டது. அதில் தயங்காமல் குதித்து நீந்த ஆரம்பித்தான். வலுவான நீரோட்டத்தில் இவனது உடுப்புகள் கூட அடித்துக்கொண்டு போய்விட்டன. அங்கே மிதந்து வந்த ஒரு கட்டையை பிடித்துக்கொண்டு நீந்தினான். கரை சேர்ந்த பிறகு பார்த்தா அது கட்டை இல்லை, ஒரு ப்ரேதம். ப்ரேதத்தின் உடுப்பை அபகரித்து அணிந்து கொண்டான். மழையில் எப்படியோ மனைவி வீட்டை அடைந்துவிட்டான். இப்படிப்பட்ட கோலத்தில் கதவை தட்ட யோசித்து மாடியில் இருக்கும் மனைவியின் அறைக்கு நேரே போக உத்தேசித்தான். எப்படி போவது? அங்கே கொடி போல ஏதோ தொங்கிக்கொண்டு இருந்தது. அதை பிடித்துக்கொண்டு சர சரவென்று ஏறினான். அரவம் கேட்டு வந்து பார்த்த மனைவி திகைத்துப்போனாள்.
எப்படி ஸ்வாமி நீங்க இங்கே...
உன்னை பார்க்க அடங்காத ஆவல் ஏற்பட்டது; அதனால் வந்தேன்.
இந்த மழையிலா?
ஆமாம்.
இது என்ன துணி? ப்ரேதத்தின் துணி போல இருக்கிறதே!
ஆமாம். என் ஆடை ஆற்று வெள்ளத்தில் போய்விட்டது.
எப்படி மாடிக்கு வந்தீர்கள்? கொடியை பிடித்து மேலே ஏறினேன்.
எட்டிப்பார்த்தால் அது கொடி இல்லை; இறந்துவிட்ட பாம்பு என்று தெரிந்தது.
ஸ்வாமி நீங்கள் என் மீது வைத்த அளவு ஆசையை இறைவன் மீது வைத்து இருந்தால் கடை தேறிவிடலாமே என்றாள் மனைவி!
சுருக்க் என்று தைத்தது மனதில். அன்றிலிருந்து அவர் நடத்தை திரும்பியது. சாதுவாகிவிட்டார்.
மனதின் சக்தியை பார்த்தீர்களா?
பெண்ணுக்கு அடுத்த படியா காமம் பிறப்பது பொருளிடத்திலே. ...

No comments: