Pages

Thursday, May 28, 2009

மனோ உற்பத்தி




முதல் சந்தேகத்துக்கு பதில் சொல்லியாச்சு. இப்ப ரெண்டாவது சந்தேகமான பிரம்மம் மனசுக்கு எட்டுமா எட்டாதான்னு சொல்கிறார்.

புலன்களாலதானே இந்த உலகத்தை அறியறோம். இந்த புலன்களுக்கு அந்தக்கரணமே ராஜா. மனசாகவும் புத்தியாகவும் வெளிப்படுகிற அந்தக்கரணம் உள்ளே தனியாவும், புலன்கள் மூலமா வெளியேவும் செயல்படும். புத்தி எப்பவும் தெளிவானது. கண்ணாடி மாதிரி. அதிலே சத்தாக இருக்கிற கூடஸ்தனோட நிழல் பிரதிபலிக்கும். (கூடஸ்தன்? நினைவிருக்கா? கடல்- கடல் நீர் திவலை மாதிரி பிரம்மம்- கூடஸ்தன்). இப்படி பிரதிபலிக்கிறதாலே அது இயல்பு மாறிடுது இல்லையா? அதனால அதுக்கு ஆபாசன்னு பேர். அந்தக்கரணம் மனசாக இதன் வழியா சஞ்சரிக்கும். அதாவது விஷயங்களோட சம்பந்திக்கும். இந்த சுத்த சத்துவ மனோ விருத்திதான் ஞானம் என்கிறது. இதை ஆழ்ந்து யோசிச்சு புரிஞ்சுக்கணும். (அதுக்காகவே  இது சின்ன பதிவு!)

10.
உகற்ப சிருட்டியாய் மனோ உற்பத்தி
முந்திய சங்கை தீர மொழிந்ததை யறிந்து கொள்வாய்
பிந்திய சங்கை தீரப் பேசுமுத் தரநீ கேளாய்
இந்தியங் களுக்கிராச னிதயமா மதினெண் ணங்கள்
புந்தியு மனமு மென்றே புறத்தகத் துலாவி யாடும்

முந்திய சங்கை (பிரமம் வாக்குக்கு எப்படி எட்டும் என்ற சந்தேகம்) தீர மொழிந்ததை அறிந்து கொள்வாய். பிந்திய சங்கை (சுயஞ்சோதியாகிய பிரமம் மனத்துக்கு எட்டும், எட்டாது எவ்விதம்) தீரப் பேசும் உத்தரம் (பதில்) நீ கேளாய்.

இந்தியங்களுக்கு (சர்வேந்திரியங்களுக்கும்) இராசன் இதயமாம். அதன் எண்ணங்கள் புந்தியும் மனமும் என்றே புறத்தகத்து உலாவி ஆடும் (ஆத்ம ஸ்மரணமே மனமும் புத்தியும் ஆகத்தோன்றும்)


Wednesday, May 27, 2009

ப்ரம்மம் வாக்குக்கு எட்டும்...




இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...
சொல்லாம சொல்லித்து.

அதாவது
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெண்ணோட சினேகிதிகள் அவளை பாக்க வந்தாங்க. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து. "எங்கேடி உன் புருஷன்?" ன்னு கேக்கிறங்க. "வெளீயே போயிருக்கார்"
"அட, பாக்க முடியாதா?"
"இல்லடி இப்ப ஒரு சாமி ஊர்வலம் வரும், அதிலே வருவார் பாக்கலாம்."

அதோ வந்தாச்சே! எல்லாரும் மாடிக்கு போய் வராந்தாவிலே நின்னு பாக்கிறாங்க. சாமி வருது. அதுக்கு முன்னே பலர் வித விதமா ஆடிகிட்டு பாடிக்கிட்டு வராங்க. இவ புருஷன் இவனாதான் இருக்கும்ன்னு ஊகம் பண்ணி "இவனா? இவனா?" -  அப்பப்ப கேக்கிறாங்க. "இல்லை, இல்லை" ன்னு சொல்லிகிட்டே வரா. அப்ப ஒரு வழியா நிஜமாவே அவளோட புருஷன் ஜம்ன்னு சிலம்பம் சுத்திகிட்டு வந்துட்டான்.

"இவனாடி?"

பதில் காணோம். இது வரைக்கும் இல்லை இல்லைன்னு வார்த்தையா சொன்னவ இப்ப வார்த்தை இல்லாம வெக்கத்தோட சும்மா இருக்கிறதை பாத்து "அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!

அது போல, "இது இல்லை, இது இல்லை" ன்னு லிஸ்ட் போட்ட வேதம், "இது இல்லாம எது இருக்கோ அதுவே பிரம்மம்" ன்னு சொல்லாம சொல்லித்து என்கிறார் குரு.

அது உன் உடம்பு இல்லை. ஏன்னா அது அநித்தியமானது.
இல்லை, சடமில்லை, துக்கம் உள்ளது இல்லை. இது நான் இல்லை இது நான் இல்லை" ன்னு சொல்லிகிட்டே போய் "கடைசிலே எது மிச்சமா இருக்குமோ அதுவே பிரம்மம்." இப்படி கூறாம கூறும் வேதம். இந்த வழியா பிரம்மம் வாக்குக்கு எட்டும்.

8.
வாக்கியந் தனக்கெட்டாது வத்துவென் றுரைத்த வேதம்
வாக்கிய விருத்தி யாலவ் வத்துவைக் காட்டிற்றன்றோ
வாக்கியங்களிலே மான மாவதே தென்றாயாகில்
வாக்கியமிரண்டும் மெய்யே மறைகள் பொய்யாது கேளாய்.

வாக்கியந்தனக்கு எட்டாது வத்து (பிரமம்) என்று உரைத்த வேதம் (மகா) வாக்கிய (த்தின் லக்ஷணா) விருத்தியால் அவ் வத்துவை காட்டிற்று அன்றோ? வாக்கியங்களிலே மானமாவது (பிரமாணவாவது) ஏது என்றாய் ஆகில் வாக்கியம் இரண்டும் மெய்யே; மறைகள் பொய்யாது கேளாய்.

9.
பிரமம் ஸ்ருதிக்கு அகோசரமும் கோசரமுமாம்

தன்பதியல்லாப் பேர்க டமையல்ல னல்ல னென்றாள்
அன்பனைக் கேட்ட நேர மவள்வெட்கி மௌனமானாள்
என்பது போல நீக்கி யிதன்றிதன் றெனச்சே டித்த
பின்பரப் பிரமந் தன்னைப் பேசாமற் காட்டும் வேதம்.

தன் பதி அல்லாப் பேர்கள்தமை அல்லன் அல்லன் என்றாள், அன்பனை (கணவனை) கேட்ட நேரம் அவள் வெட்கி மௌனமானாள் என்பது போல நீக்கி இதன்று இதன்று எனச் சேடித்த (இல்லையென்ற) பின், பரப் பிரமந் தன்னைப் பேசாமல் காட்டும் வேதம்.

Tuesday, May 26, 2009

மேலும் பிரமாணங்கள்



5. அருத்தா பத்தி பிரமாணம் என்கிறது லாஜிக். பகல்லே சாப்பிடாம ஒத்தர் இருக்கார். நான் இன்ன விஷயத்துக்காக உண்ணா விரதம் இருக்கேன் என்கிறார். ஆனா நாலு நாளாகியும் ஆசாமி குத்துக்கல்லாட்டம் இருக்கார். கொஞ்சம் கூட களைப்பா இல்லை. உடம்பு இளைக்கலை. அவர் பகல்ல சாப்பிடலையே தவிர ராத்திரி ரகசியமா ஒரு பிடிபிடிக்கிறார்ன்னு ஊகிக்கிறோம். அதான் அருத்தா பத்தி.

PG: [எது இல்லாம ஒரு விஷயம் சம்பவிக்காதோ அவ்வளோ முக்கியமான, இன்றியமையாத வஸ்து உபபாத்தியம். இங்க ராச்சாப்பாடு உபபாத்தியம். இந்த உபபாத்தியத்தால எது விளையுமோ அது சமபாத்தியம். சும்மா ஒரு பிஜி பாய்ண்ட்! ஹிஹிஹி! இன்னும்... எதோட அபாவத்தால -அதான் எது இல்லாததால- எது நடக்கமுடியாம போகுமோ அது உபபாதகம். ராத்திரி சாப்பாடோட அபாவத்தால – அதாவ்வது இல்லாம போவதால- பகல்ல சாப்பிடாதவனுக்கு உடம்போட பருமன் இல்லாம குறைஞ்சு போகும். அதனால இரவு சாப்பாடு பருமனோட உபபாதகம்.] எதுக்கு இவ்வளொ சொன்னேன்னா உபபாத்தியத்தோட சம்பந்தத்தால உபபாதகத்தை காட்டுறதுதான் அருத்தாப்பத்தி ப்ரமாணம்.

6. அநுபலப்தி ப்ரமாணம்: இத அபாவ பிரமானம்ன்னும் சொல்வாங்க. அதாவது இல்லாமையே பிரமாணம். குழப்புதா? இங்கே புத்தகம் இல்லைன்னு சொல்கிறோம். அப்படியான்னு பாக்கிறோம். ஆமா இல்லை. உண்மைதானே? இதான் அபாவ பிரமாணம்.

7. ஐதீக பிரமாணம்: காலாகாலமா ஒரு விஷயம் எல்லாரும் சொல்லிகிட்டு இருக்காங்க. அதனால அது உண்மைன்னு தெரிஞ்சுக்கிறது. பல கோவிகளிலே இந்த மாதிரி விஷயம் கேள்விப்படலாம். இங்கேதான் வஸிஷ்டர் யாகம் பண்ணார். அப்படி ஐதீகம்ன்னு சொல்லுவாங்க. அப்படி நடந்ததையும் நிரூபிக்க முடியாது - எவ்வளோ காலம் ஆச்சு? எப்படி எந்த ஆதாரமும் இருக்கும்? இல்லைன்னு சொல்லவும் முடியாது. அப்ப காலாகாலமா சொல்லிகிட்டு இருக்கிறது தப்பா?

8. ஆகமப்பிரமாணம்: சாஸ்திரங்களிலே சொல்லி இருக்கிறதை நம்புவது

சில சமயம் இந்த எட்டை ஆறுன்னும் சொல்லுவாங்க. உபமான பிரமாணம்ன்னு தனியா இல்லை. அது பிரத்யக்ஷ பிரமாணத்தோட சேத்தி; ஆகமப்பிரமாணம் சப்த பிரமாணத்திலே சேத்தி. அதனால ஆறுதான் ன்னு சொல்க்கிறவங்க உண்டு. வேற எங்காவது இப்படி வித்தியாசமா படிச்சா குழம்ப வேணான்னு சொன்னேன்.

சரி, சரி மேட்டருக்கு வரலாம்.
பிரம்மத்தை எந்த பிரமாணத்திலே சேக்கிறது?

அதுக்கு பேரோ உருவமோ இல்லை. அதனால பாக்கமுடியாது. பஞ்ச பூதங்களோட சேர்க்கை மட்டுமே இல்லை. அதனால பிரத்யக்ஷ பிரமாணம் இல்லை.

புகை அக்னி இருக்கிறதை போல எதாலும் பிரம்மம் இருக்கிறதை ஊகம் செய்ய சொல்ல முடியாது. அதனால அநுமானம் இல்லை.

பிரம்மம்தான் இருக்கு; வேற எதுவுமே அன்னியமா இல்லை. அத்னால் எதை உதாரணம் காட்டி இது போல இருக்கும்ன்னு சொல்லலாம்? அதனால உபமான பிரமாணம் இல்லை.

பிரம்மம் ஆகமத்துக்கு எட்டாது. அப்பர் சொன்னாப்போல இவ்வண்ணன், இவ்வுருவன், இந்நிறத்தன், இத்தன்மையன், இவ்விடத்தன் ன்னு ஒன்னுமே சொல்ல முடியாதே!

அப்ப பிரம்மம் வாக்குக்கு எட்டாது.

இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...


Monday, May 25, 2009

ப்ரமாணங்கள் எட்டு விதம்.



ப்ரமாணங்கள் எட்டு விதம்.
ப்ரத்யட்சம்.
அநுமானம்
உபமானம்
சத்தம்
அருத்தாபத்தி
அநுபலப்தி
ஐதீகம்
ஆகமம்

1. பிரத்யட்சம்: நேரா ஒரு பொருளை பாக்கிறது. நாம ரூபவஸ்துக்களை இப்படிபாக்கலாம். அதாவது எதுக்கெல்லாம் ஒரு பேரும் ஒரு வடிவமும் இருக்கோ அதெல்லாம் இதில வரும்.

2. அநுமானம்: நேரடியா பாக்கிர ஒரு வஸ்துவை வெச்சுகிட்டு இன்னொரு விஷயத்தை இருக்கிறதாக அறிகிறது. இப்படீஈ வழியிலே போய் கொண்டு இருக்கிறோம். ஒரு இடத்திலே புகை வருகிறதை பாக்கிறோம். ஓ என்னமோ எரியுதுன்னு நினைக்கிறோம். தீயை நாம பாக்கலை; ஆனா புகை இருக்கிற இடத்திலே தீ இருக்கத்தான் இருக்கும்ன்னு நமக்கு அனுபவம். அதனால இப்படி அநுமானிக்கிறோம்.

3. உபமானம்: அறியாத ஒருபொருளை ஏற்கெனெவே தெரிஞ்ச ஒரு பொருளால தெரிஞ்சிக்கிறது.
ஒத்தர் மானை பாத்ததே இல்லை. அது எப்படி இருக்கும் ன்னு கேக்கறார். என்ன பதில் சொல்லறது? காட்டில பாக்கலாம். மரை பசு மாதிரி இருக்கும் ன்னு சொன்னா ஓஹோ அது போலவா ன்னு கொஞ்சம் புரிஞ்சுப்பார். இது உபமான பிரமாணம். பசு உபமானம். அதால அறியப்பட்டது உபமேயம்.


4. சப்த பிரமாணம். ஆப்த வாக்கியம்னும் சொல்வாங்க. நம்மால எல்லாத்தையுமே நேரில பாத்தோ அனுபவிச்சோ தெரிஞ்சுக்க முடியாது. இப்படிதான் தெரிஞ்சுக்கணும் ன்னா நமக்கு மிகக்குறைவான விஷயங்களே தெரிய வரும். அதனால என்ன செய்யறோம்? நம்பத்தகுந்தவங்க சொன்னா அதுவே நமக்கு பிரமாணம். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பரை பாத்து பேசிகிட்டு இருக்கோம். "டேய் உனக்கு தெரியுமா ஸோ அன்ட் ஸோ செத்து போயிட்டாண்டா" என்கிறார். "அப்படியா! நம்பவே முடியலையே!" ன்னு பேச்சுக்கு சொன்னாலும் நாம அதை நம்பறோம். அவர் பொய் சொல்ல மாட்டார்ன்னு நம்பிக்கை.


Saturday, May 23, 2009

பதில்



குரு பதில் சொல்கிறார்.
அப்பனே பரப்பிரம்ம சொரூபமானது பெயர், வடிவம், கறுப்பு, சிவப்புன்னு நிறம், நெட்டை குட்டை பருமன் சன்னம் ன்னு எந்த இலட்சணமும் உள்ளது இல்லை. பஞ்சபூதங்களிலே ஒண்ணோ ரெண்டோ இல்லை. அதனால கரணங்களாலயாவாது இந்திரியங்களாலேயாவது அறிகிற வஸ்து இல்லை. இதனால அது பிரத்யட்சம், அநுமானம், உபமானம் முதலான பிரமாணங்களால அகப்படாது. அதனாலதான் ப்ரம்மம் வாக்குக்கு எட்டாதுன்னு சொன்னேன்.

7. பிரமம் வாக்குக்கு அகோசரமாயும் கோசரமாயும் இருக்குமோ?
மற்றைமுப் பிரணமா னத்தால் வத்துநி ண்ணயம்கூ டாதே
உற்றதோர் விடயம் பூத முபயமன் றாத லாலே
குற்றமாம் குணவிசேடங் கூடாம லிருக்கை யாலே
இற்றது வாக்குக்கெட்டா தென்பது மறிவாய் நீயே

மற்றை முப் (=மூன்று- பிரத்யட்சம், அநுமானம், உபமானம்) பிரணமானத்தால் வத்து (வஸ்து- பிரம்ஹ) நிண்ணயம் கூடாதே (ஆகாது). உற்றதோர் விடயம் (இந்திரியங்களுக்கு சம்பந்தப்பட்டது அல்ல) பூதம் (சீவன்) உபயமன்று (த்வைதம் அல்ல) ஆதலாலே, குற்றமாம் குணவிசேடம் கூடாமல் (பொருந்தாமல்) இருக்கையாலே இற்றது (இப்பிரகாரமாக அந்த பிரமம்) வாக்குக்கு எட்டாது என்பதும் அறிவாய் நீயே.

----------------
முன்னே வெள்ள வடி நீர் வாய்க்கால். இப்ப பாதாள சாக்கடை... சகட்டு மேனிக்கு டெலிபோன் கம்பியை வெட்டி போடறாங்க.....ம்ம்ம்... நல்லது செய்கிறதெல்லாம் இந்த கலியிலே சிரம சாத்தியம்தான். தாமதத்திற்கு மன்னிக்க.