Pages

Thursday, April 7, 2011

சித்தம் காண்பித்து கொடுப்பது...




द्रष्टृदृश्योपरक्तं चित्तं सर्वार्थम् ।।23।।
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யோபரக்தம்° சித்தம்° ஸர்வார்த²ம் || 23|| 

த்³ரஷ்ட்ரு = பார்க்கிறவன்; «த்³ரு«ஶ்யோபரக்தம்° = பார்க்கப்படும் வெளி வஸ்துக்கள் உடன் கூடியிருப்பதால்; சித்தம்° = சித்தமானது; ஸர்வார்த²ம் = எல்லா வஸ்துக்களையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஒரு பக்கம் காண்பவனான புருஷனுடனும் மறு பக்கம் பார்க்கப்படும் பொருட்களுடனும் சித்தம் சம்பத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே இது எல்லாவற்றையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஜலத்தில் பிரதிபலித்த சந்திரன் வானத்தில் உள்ள சந்திரன் இல்லை என்பது போல சித்தத்தில் ப்ரதிபலிக்கிற புருஷன் நிஜ புருஷன் இல்லை. ஆனால் சித்தத்தில் பிரதிபலிப்பதையே புருஷனாக விவேகம் இல்லாதவர் எண்ணுகின்றனர். உண்மையில் பார்க்கிறவன் என்பது சித்தத்தில் உள்ள புருஷனின் ப்ரதிபிம்பமே. அதனால் சித்தம் எல்லாப்பொருட்களையும் காண்பித்து கொடுப்பதாகிறது.

2 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்?????

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்!!!!!!!