Pages

Monday, September 5, 2011

உரத்த சிந்தனை... தாந்திரிக ஹோமங்கள்..


இப்ப புதுசா பல பல ஹோமங்கள் வேற உருவாகிகிட்டு இருக்கு....
-----

தனக்கு பிடிச்சதை எல்லாம் ஹோமத்தில புகுத்திட்டாங்க.

இன்ன ஆன்மீக தலைவரை பிடிச்சு இருக்கா? அவருக்கு ஒரு ஹோமம். என்ன மந்திரம்? அது என்ன பெரிய விஷயம்? அவர் பேரையே சொல்லி ஸ்வாஹா ன்னு சொல்லிட்டா போச்சு! இல்லை அவரை ரொம்ப பிடிச்ச ஒத்தர் ஒரு சஹஸ்ர நாமாவளியே எழுதி இருப்பார். அதை சொல்லியே ஹோமம் செய்துடலாம். ம்ம்ம்ம் போதும் இது இப்ப.

தாந்த்ரீக வழியிலே ஹோமங்கள் செய்யலாம். அது வைதீக முறைக்கு அதிகாரம் இல்லாதவர்களுக்கு குறிப்பா சொல்லப்பட்டாலும் எல்லோருமே செய்கிறாங்க. வேதம்தான் படிக்கலையே அப்புறம் என்னன்னு யோசனை போல இருக்கு. அந்த காலத்து கதைகளிலே மந்திரவாதி வருவான். அவன் எப்ப ஹ்ரீம் க்லீம் ன்னு சொல்லறானோ அப்ப மந்திரம் போடறான்னு தெரிஞ்சுப்போம்! ஹ்ரீம் க்லீம் எல்லாம் பீஜாக்ஷரங்கள்.

பீஜாக்ஷரங்கள்? பீஜ = விதை அக்ஷரம் = எழுத்து.

இன்ன இன்ன தேவதைக்கு இன்ன இன்ன அக்ஷரம் ன்னு வரையரை இருக்கு. அதன் படி மந்திரம் அமையும். என்ன தேவதை என்ன அக்ஷரம்ன்னு யாரானா லிஸ்ட் தயார் செய்தா தேவலை!

பல சமயம் தேவதைகள் தனியா இருக்காது. கூட சில தேவதைகளும் இருக்கும். சில சமயம் அவை சொல்லப்படும். பல சமயம் இல்லை. முதன்மை தேவதையோட த்யான ஸ்லோகத்தை ஆராய்ஞ்சு பாத்தா என்ன என்ன தேவதைகள் கூட இருக்குன்னு தெரிஞ்சுடும். உதாரணமா தாமரை கையிலே இருந்தா சூரியன் இருப்பார்.  இப்படி பலது. காயத்ரியை ஆராய்ஞ்சு பாத்து என்ன என்ன தேவதை கூட இருக்காங்கங்கன்னு சொல்லுங்களேன்!

யார்கிட்டேயாவது போய் கிஞ்சித் ஹிரண்யம் கொடுத்து மந்திரம் எழுதி வாங்கி நெட்டுரு பண்ணி ஹோமம் செய்வதில பெரிய பலன் இருக்காது. ஐடியலா ஹோமம் செய்கிறவர் மந்திர சித்தி அடைஞ்சு இருக்கணும். மந்திர சித்திக்கு புரச்சரம் என்கிற ப்ரொசீஜர் உண்டு. அந்த மந்திரத்தை பல முறை -அக்ஷர லக்ஷம் ன்னு சொல்வதுண்டு- உருப்போட்டு மந்திர சித்தி பெற்றவர் செய்கிற ஹோமம் ஒரு சில ஆவர்த்தி ஆனாலும் நல்ல பலன் இருக்கும். சும்மா 'ஆல்சோ ரேன்' மக்கள் செய்கிற ஹோமத்துக்கு பலன் எவ்வளோ ஆயிரம் ஆவர்த்தி ஆனாலும் 'ஸோ ஸோ தான். இந்த மாதிரி இந்த காலத்துல ஆளை கண்டு பிடிக்கறது அரிதுதான். குறைஞ்ச பக்ஷம் நிறைய காயத்ரியாவது பண்ணி ஆத்ம சக்தியை பெருக்கிகொண்டவரா இருக்கணும்.
இல்லையே, இன்னார் இப்படி பண்ணினார், எனக்கு பலன் கிடைச்சுடுத்துன்னு சொல்கிறவங்களுக்காக இப்பவே ஒரு டிஸ்கி போட்டு வைக்கிறேன். அது பல விஷயங்களையும் தாண்டி பலன் கொடுத்துடும். அது மெதுவா அப்புறம் சொல்லறேன்.
தாந்திரிகம் அதிகமா இன்னும் இருக்கிறது கேரளாவிலே. அங்கே உதிச்ச ஆதி சங்கரர்தான் நிறைய மந்திரங்களை தொகுத்து எழுதினார். ப்ரபஞ்சசாரம் என்று பெயர்.

ஒரே தேவதைக்கு பல மந்திரங்களும் இருக்கும். நரசிம்ஹருக்கு முன்னூத்தி சொச்சம்ன்னு நினைவு.

எது எப்படி இருந்தாலும், ஹோமத்துக்கு முன்னே குறிப்பிடத்தக்க அளவு மந்திரத்தை ஜபம் செய்து விட்டு ஹோமம் செய்வதே உசிதம். அப்பதான் கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.

1 comment:

Geetha Sambasivam said...

இல்லையே, இன்னார் இப்படி பண்ணினார், எனக்கு பலன் கிடைச்சுடுத்துன்னு சொல்கிறவங்களுக்காக இப்பவே ஒரு டிஸ்கி போட்டு வைக்கிறேன். அது பல விஷயங்களையும் தாண்டி பலன் கொடுத்துடும். அது மெதுவா அப்புறம் சொல்லறேன்.//

சொல்லலையே?