Pages

Tuesday, September 6, 2011

உரத்த சிந்தனை: மேலும் ஹோமங்கள்...


வைதிகம், தாந்திரிகம் இல்லாம மூணாவதா இருக்கிறது ஆகம ரீதியா செய்கிறது. இது கோவில்களில கடைபிடிக்கிறது. கோவில் அர்ச்சகரை கூப்பிட்டு ஹோமம் பண்ணித் தரச்சொன்னா இந்த வழியிலதான் செய்வார். ஒரு வழியில இதுவும் தாந்திரிகம்தான்.

தாந்த்ரிக ஹோமங்கள் வைதிக ஹோமங்களிலேந்து நிறையவே வித்தியாசமானது. வைதீக ஹோமங்களில இன்னதுதான் அக்னியில போடலாம்ன்னு இருக்கு. சுத்தி போடுகிற தர்பைகளுக்குள்ள இன்னது மட்டுமே இருக்கலாம்ன்னு இருக்கு. இன்னதுதான் ஹோம த்ரவ்யம். இது இல்லைன்னா இதுன்னு லிஸ்ட் போட்டு வெச்சு இருக்கு. எரிகிற விறகா பால் உள்ள மரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். கண்ட கண்ட மரத்தை இல்லை. பூ, மங்கள அக்ஷதை போல பல விஷயங்களை அக்னியில போடுவதில்லை.

ஆனா தாந்த்ரிக ஹோமங்களில பல வேற விஷயங்களை அக்னியில போடுவாங்க. பட்டுப் புடவையே போடுகிறதை கூட பார்க்கிறோம். பட்டுப்புடவையில பல பொருட்களை கட்டி மூட்டையா கடைசியிலே போடுவது உண்டு.

தேவர்களை ஆவாஹனம் செய்ய சிலது உண்டு.

ஒரு ப்ராஹ்மணன் மேலே ஆவாஹணம் செய்யலாம். பித்ரு தேவதைகளை அப்படி செய்துதான் ச்ராத்தம் நடக்கிறது.

அக்னியில செய்யலாம். எந்த தேவதையை குறித்தும் மந்திரம் சொல்லி அக்னியில ஹோமம் செய்ய அக்னி அந்தந்த தேவதைக்கு அதை கொண்டு போய் கொடுத்துடுவார். ஆதி காலத்துல அவருக்கு இந்த வேலை மட்டுமே இருந்ததாம். இதுக்கு பதிலா ஒண்ணுமில்லை. அதனால வெறுத்து போய் ஒளிஞ்சு கொண்டார். மனிதர்கள் செய்த ஹோமங்களோட பலன் தேவர்களுக்கு போய் சேரலை. அவஸ்தை பட்ட அவர்கள் தேடி தேட அக்னியை கண்டு பிடிச்சு சமாதானப்படுத்தினாங்க. எந்த ஹோமம் செய்தாலும் உனக்குத்தான் முதல் ஆஃபர் ன்னு சொல்லிட்டாங்க. அக்னிக்கு ஒரு வழியா ஹவிர்பாகம் கிடைக்க அவரும் உற்சாகமா அப்புறம் தேவர்களுக்கு கொண்டு கொடுக்க ஆரம்பிச்சார். இது நான் சொல்லலை. வேதத்தில இருக்கற கதை.

ஆவாஹனம் செய்யறது தண்ணியில செய்யலாம். ஒரு செப்பு குடத்தை வைத்து சுத்த மடி ஜலம் நிரப்பி அதில் ஆவாஹணம் செய்யலாம். கும்பாபிஷேகம் அப்படித்தானே நடக்கிறது? ஜல கும்பத்தில் தேவதைகளை மந்திரத்தாலே இழுத்து ஹோம கூடத்துக்கு எடுத்துப்போய் ஹோமங்கள் செய்து சக்தியூட்டி திருப்பி அந்த அந்த கடத்து ஜலத்தை அபிஷேகம் செய்து சிலைகளுக்கு தெய்வ சக்தியை ஊட்டுகிறார்கள்.

இதில ஒரு விஷயம் பாருங்க. எவ்வ்வளவு பூஜைகள் செய்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு ஹோமங்கள் செய்து சக்தி ஊட்ட வேண்டியிருக்கு. பூஜைகளை விட ஹோமங்கள் இன்னும் சக்தி மிகுந்தவைன்னு புரிஞ்சுக்கலாம்.

லௌகீக ரீதியா ஹோமங்கள் செய்கிறவங்க நிறைய அலங்காரங்கள் செய்கிறாங்க. அட்டகாசமா அலங்காரம் செய்து பூஜை எல்லாம் விமரிசையா செய்து பட் தம் தும் ன்னு பலமான சப்தம் எழுப்பி (மந்திரமாம்!) நிறைய நெய்யை அக்னியில கொட்டிட்டா பார்க்கிற மக்கள் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிடுவாங்க. மந்திரமாவது, ப்ரொசீஜராவது? அதெல்லாம் யாருக்கு தெரியும்?

பல வருஷங்களுக்கு முன்னே என் நண்பர் வீட்டில் ஹோமம் நடந்தது. செய்கிறவர் சில பல கமென்ட்ரியோடவே செய்தார். புகை கொஞ்சம் அதிகமா இருந்தது. சிலர் கண்ணை கசக்கினாங்க. அதை பாத்துட்டு குருக்கள் சொன்னார், “ அது ஒண்ணும் பண்ணாது, கவலைப்படாதீங்க" பார்வையாளரில் ஒத்தர் சண்டைக்கே போயிட்டார். "ஒண்ணும் பண்ணாதுன்னு ஏன் சொல்லறீங்க? அப்படின்னா ஏன் ஹோமம் பண்ணனும்? நல்லது பண்ணும்ன்னு சொல்லுங்க.” :-))))

2 comments:

Geetha Sambasivam said...

நம்பிக்கை முக்கியம்

Geetha Sambasivam said...

வைதிகம், தாந்த்ரிகம், ஆகமம் வித்தியாசங்களை இன்னும் கொஞ்சம் தெளிவா விளக்கி இருக்கலாம்.