Pages

Thursday, September 8, 2011

உரத்த சிந்தனை... விடாது கருப்பு..


  பார்வையாளரில் ஒத்தர் சண்டைக்கே போயிட்டார். "ஒண்ணும் பண்ணாதுன்னு ஏன் சொல்லறீங்க? அப்படின்னா ஏன் ஹோமம் பண்ணனும்? நல்லது பண்ணும்ன்னு சொல்லுங்க.” :-))))

--

அது என்னவோ சரிதான். சாஸ்திரத்துல எந்த புகை நல்லது எது கெட்டதுன்னு எழுதி வெச்சு இருக்கு. அதுபடி ஹோமப்புகை நல்லதே.

இருபது வருஷம் முன்னே எங்க ஆஸ்பத்திரில ஹோமம் செய்து வெச்ச ஒத்தர் சொன்னார்: “புகைன்னு கண்ணை எல்லாரும் கசக்கறாங்க. ஆனா ஹோமப்புகை நல்லது. இவ்வளோ வருஷமா ஹோமம் செய்து கொண்டு வரேன். இன்னும் கண்ணாடி போடலை பாருங்க.” (அப்ப அவருக்கு 50 வயசு இருக்கும்.) எனக்கும் அப்படிதான் இருக்கு. 17 வருஷமா அக்னி காரியம் செய்து வரேன். எங்க செட்டிலேயே நான்தான் கடைசியா சாலேச்வர கண்ணாடி போட்டவன். இப்ப கூட கணினி திரையை பாக்க மட்டுமே கண்ணாடி வேண்டி இருக்கு. மத்தபடி கண்ணாடி இல்லாமலே ஊரை சுத்தலாம்; பேப்பர் படிக்கலாம்... பிரச்சினையே இல்லை.

வீட்டிலேயே ஹோமம் செய்யறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஆடிட்டர் ஒத்தர் தினமும் கணபதி ஹோமம் செய்யறார். என்ன சொந்த வீடா இருக்கறது நல்லது....

நண்பர் ஒருவர் வீட்டிலேயே ஔபாசனம் செய்ய யோசிச்சார். இது பத்தி வீட்டு சொந்தக்காரர்கிட்டே சொன்னப்ப தாராளமா பண்ணுங்க நல்லதுதான்னேன்னார். நண்பர் அறை புகை படிஞ்சு கறுப்பாகும். அப்புறமா வெள்ளை அடிச்சு தறேன்னார். வீட்டுக்கார அதெல்லாம் பரவாயில்லைன்னார். நண்பரும் சந்தோஷமா செய்ய ஆரம்பிச்சார். சில மாசங்கள் கழிச்சு வீட்டு சொந்தக்காரர் பிரச்சினை பண்ண ஆரம்பிச்சார். ஹோமத்துக்கு ஆட்சேபனை தெரிவிச்சார்.

சரின்னு ஹோமத்தை நிறுத்திட்டு நண்பரும் வேற வீடு பார்க்க ஆரம்பிச்சார். அது சாதாரணமா முடியற காரியமா இல்லை. இதுக்குள்ள ரூமுக்கு வெள்ளை அடிச்சு தரனுமேன்னு வேலையில இறங்கினார். பெய்ண்டர் வந்து பாத்துட்டு ஒரு கொட்டேஷன் கொடுத்துட்டு போயிட்டான். இவரும் லிஸ்ட் சாமான் எல்லாம் வாங்கி வெச்சுட்டு அவனை கூப்பிட்டார். தேய் தேய் ன்னு தேச்சு தேச்சு அப்புறம் பெயின்ட் அடிச்சா இன்னமும் கருப்பா தெரியறது. பெய்ண்டர் ஜகா வாங்கிட்டார். இதே போல இன்னும் நாலு பேர் வந்து முடியாம து.கா.து.கா ன்னு ஓடிட்டாங்க. எக்ஸ்பெர்ட் எல்லாம் வந்து பத்து ஆளுக்கு ஆள் சஜஷன் கொடுத்து அது படி மெஷின் கொண்டு வந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்தமா தேச்சு தேச்சு ஒண்ணும் நடக்கலை. வீதி எல்லாம் வெள்ளையா சுண்ணாம்பு பறந்ததே ஒழிய கருப்பு போகலை.

அடுத்து வந்த ஆசாமி விக்ரமாதித்யன் வம்சம் போல இருக்கு. விடாம லேயர் மேலே லேயர் அடிச்சு பன்னிரண்டு கோட் அடிச்சும் போகலை.

நண்பருக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அந்த ரூமுக்கு போய் பிரார்த்தனை பண்ணிண்டார். “ஸ்வாமி தயை செஞ்சு வந்துடுங்கோ, நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தனும்” ன்னு வேண்டிண்டார். அன்னிக்கு விக்ரமாதித்யன் அனுப்பின பெய்ண்டர் வந்து “என்ன செய்யட்டும் சார்?” ன்னு கேட்டார். நண்பர், சாமிக்கு வேண்டிகிட்டு பெயின்ட் பண்ணுப்பான்னார். நான் கிரிஸ்தவன் சார், ஹிந்து இல்லைன்னார் பெய்ண்டர். “அதனால என்னப்பா? கடவுள் நம்பிக்கை இருக்கு இல்லே? நீ உங்க சாமிகிட்டேயே வேண்டிக்க” ன்னார் நண்பர். அவரும் கொஞ்சம் நேரம் வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பிச்சார். ஒரு கோட் அடிச்சு முடிச்சதுமே படு ஆச்சரியத்துல விக்கிரமாதித்யனுக்கு போன் பண்ணார். “சார், வெள்ளையா ஆயிடுச்சு!” ஆச்சரியம் தாங்காம விக்ரமாதித்யனும் பக்கத்து ஊருக்கு பாதி வழி போய்கிட்டு இருந்தவர் திரும்பி வந்துட்டார் அதிசயத்தை பாக்க. நடந்த கதையை சொல்லிட்டேன். இதில என்ன சாரம்ன்னு நீங்க முடிவு பண்ணுங்க.

1 comment:

geethasmbsvm6 said...

சாரம் பிழிஞ்சு தந்தாச்சு. முதல்லே சொன்னது தான். நம்பிக்கை எல்லாத்துக்கும் நம்பிக்கை வேணும்; இல்லையா? இது எனக்குப் புரிஞ்சது மட்டுமே.