Pages

Thursday, October 20, 2011

பஞ்சத³ஶீ 1 -5


ஸுப்தோத்த்தி² தஸ்ய ஸௌஷுப்த தமோ போ³தோ⁴ ப⁴வேத் ஸ்ம்ரு«தி​: |
ஸா சாவபு³த்³த⁴ விஷயாவ பு³த்³த⁴ம்° தத்ததா³ தத​: || 5|| 

சுசுப்தி எனும் ஆழ் உறக்கத்திலிருந்து வெளி வருபவன் சுசுப்தியில் ஒன்றும் அறியப்படவில்லை என நினைவில் வைத்திருக்கிறான். நினைவில் வைத்து இருப்பது என்பது முன்பேயே அறியப்பட்டதாகவே இருக்கவேண்டும். ஆகவே ஆழ் உறக்கமானாலும் ஏதும் அறியப்படவில்லை என்பது அறியப்படுகிறது. 

No comments: