Pages

Friday, October 7, 2011

இறை தூதர்...


ஒரு பணக்கார யூத விவசாயி. ஒரு நாள் தன் வீட்டுக்குள் அரக்க பரக்க ஓடி வந்து சேர்ந்தார். "ரெபக்கா, ரெபக்கா! எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு!"
"என்ன விஷயம்?"
"ஊர்ல எல்லாரும் பேசிக்கிறாங்க. ஒரு இறை தூதர் வந்துட்டாராம்!"
"அதனால என்ன?"
"என்னவா? வருஷக்கணக்கில கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சோம். இப்ப நமக்கு ஆயிரம் பசு மாடுகள் இருக்கு. வயலெல்லாம் நிறைய விளைஞ்சு குதிரில தானியங்கள் நிறைய இருக்கு. தோப்புகளில மரங்கள் நல்லா காய்ச்சு இருக்கு. நிறைய பணம் இருக்கு."
"பின்னே?"
"இப்ப இது எல்லாத்தையும் விட்டுட்டு இந்த இறைதூதர் பின்னாலே போகணுமே!"
"கவலைப்படாதீங்க! நமக்கு பேரோ இருந்தார், ஒரு ஹமன் இருந்தார், ஹிட்லர் இருந்தார். எல்லார்கிட்டேந்தும் கடவுள் நம்பளை காப்பாத்தலையா? இறை தூதர்கிட்டேந்தும் காப்பாத்துவார்!"

1 comment:

Geetha Sambasivam said...

யூதர் இல்லையா! சரிதான்! :))))))