Pages

Thursday, February 9, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 2



    ராஜா அரசியல் சிக்கல்களில மாட்டிக்கொண்டு இந்தப்பக்கம் கவனம் செலுத்த நேரமே இல்லாமல் போனான்.

    இந்தக் கூத்து ஜனங்கள் மத்தில விமர்சனம் இல்லாம இருக்குமா? ராஜா ஒரு சாமியாரை அழைச்சுக்கொண்டு வந்து அரண்மனையில வெச்சு இருக்கான். அவரோ வேளா வேளைக்கு நல்லா விருந்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டம்ன்னு பொழுதைக் கழிக்கிறார் ன்னு பேச்சு அடிபட்டது. இது மெதுவா ராஜா காதுக்கும் எட்டினது. ராஜா ஷாக் ஆயிட்டான். விசாரிச்சா அது உண்மைதான்னு தெரிஞ்சது. நேரா போய்ப் பார்த்து உறுதி செய்துகிட்டான்.

    தானேதான் இவரை இங்கே கொண்டு வந்து வெச்சது. என்ன செய்யறது?

    ஒரு வாரம் பத்து நாள் போச்சு. அதே ரொடீன்தான் தொடர்ந்தது.
    ராஜா முகம் உம்முன்னு இருக்கிறதைப் பார்த்துத் துறவியும் என்ன விஷயம்ன்னு ஊகிச்சுக் கொண்டார்.
    ஒரு நாள் மாலை ராஜாகிட்ட நாம் தேர்ல ஏறி ஊரைச் சுத்திப் பார்க்கலாமான்னு கேட்டார். போகலாமே ன்னு ராஜா சொன்னார்.
    ஊருக்கு  வெளியே தேரை விடச்சொன்னார் துறவி. காட்டுக்குப் போகிற பாதை வந்தது. துறவி தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கினார். ராஜாவைப் பார்த்துச் சொன்னார். "இதோ பார்! நான் அரண்மனைக்குத் திரும்பலை; காட்டுக்குத் திரும்பிப்போறேன். உனக்கு வேதாந்தத்துல அவ்வளவு ஆர்வம் இருந்தா என்னோட வா. இல்லையானா திரும்பி போ!”

    ராஜா சொன்னான் "சாமி, என்னை நம்பி இவ்வளவு ஜனங்க இருக்காங்களே! அவங்களை விட்டுவிட்டு எப்படி வருவேன்?”
    துறவி சொன்னார். "இந்த ஜனங்களை எல்லாம் நீ காப்பாத்தறதாத்தானே நினைக்கிறாய்? உனக்கு வேதாந்த விசாரணை செய்ய நேரம் வரலை. திரும்பிப்போய் ராஜ்யத்தைக் கவனி.”
    திரும்பிக்கூடப் பார்க்காமக் காட்டை நோக்கிக் கிளம்பிட்டார் துறவி.

    இப்படி ராஜ போகத்தை பட்டுன்னு உதற முடிஞ்சது ஏன்னா வைராக்யத்தால்.

    பக்குவம் வந்தவங்களால இப்படித் தாமரை இலைத் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருக்க முடியும். இதுவே உண்மையான பற்றின்மை.
    இது வேணும் அது வேணும்ன்னு அலையாம, தேடிப்போகாம, தானாக என்ன கிடைக்குதோ அதை வைத்துக்கொண்டு இயல்பாக வாழ்க்கை நடத்துவதே இந்தப் பற்றின்மையின் அடையாளம்.

    எது கிடைக்குதோ அதை உள்ளபடி பார்க்கணும். இது நமக்கு எந்த விதத்தில பிரயோஜனம் ன்னு யோசிக்கணும். பிரயோஜனம் இல்லைன்னா அதை அப்படியே விட்டுடணும். சும்மா பார்க்கிறதெல்லாம் கைவசப்படணும், கைவசப்படறதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு ஒண்ணுமில்லை.
    இப்படி இருக்கிறவங்க  தான் என்ன செய்யணுமோ அதை ஒழுங்கா செய்து கொண்டு போவாங்க. தனக்கு என்ன கிடைக்கிறதுன்னு ஒரு கவலையும் பட மாட்டாங்க.
    நீங்க சும்மா ராஜா ராணி கதையெல்லாம் சொன்னா அது ஒண்ணும் ஒத்துக்கிற மாதிரி இல்லைன்னு சொன்னா....
    என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.


No comments: