Pages

Friday, March 1, 2013

சக்யம்

 
சக்யம்:
நாம் யார் சொன்னால் கேட்போம்? நம் பெற்றோர்? நம் ஆசிரியர்? நம் மனைவி/ கணவன்?
யோசித்து பார்த்தால் சாதாரணமாக நம் நண்பன் சொல்வதைத்தான் கேட்போம். உறவு என்பதில் நம் சாய்ஸ் ஒன்றும் இல்லை. என் அப்பாவின் தம்பிக்கு மகன் பிறந்தால் அவன் என் சித்தப்பா பிள்ளை ஆகிவிடுகிறான். இதில் என் சாய்ஸ் ஏதுமில்லை. ஆனால் நண்பன் என்பது அப்படி இல்லை. நான் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம். சண்டை போடலாம்... உண்மையில் சண்டை போட்டுக்கொண்டு வளரும் நட்பு இன்னும் பலமாக இருக்கிறது. நீடித்து நிலைக்கிறது. சண்டை போட்டதால் நம் ஜன்ம வைரி ஆகிவிடுவதில்லை. பிறகு சமாதானம் செய்து கொள்கிறோம். அல்லது இன்னொரு பரஸ்பர நண்பன் சமாதானம் செய்து வைப்பான். யார் பக்கம் உண்மையில் தவறு என்பது எல்லாம் ஒரு காரணியாக இல்லாது போகும். சாரிடா என்று இருவரும் சொல்லிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதில்தான் நீக்குப்போக்கு ஆரம்பிக்கிறது. இது தொடருமானால் வாழ்கையில் இவர்கள் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகம்.

இன்று சர்வ சகஜமாக பார்க்கக்கிடைப்பது டைவோர்ஸ்.

குழந்தை திருமணம் கூடாது என்று சட்டம் இயற்றிய அரசு, திருமண வயதை கூட்டிக்கொண்டே போகிறது. வயது கூட கூட பெண்ணோ ஆணோ மனசு இறுகி விடுகிறது. நீக்குப்போக்குகள் மறைய ஆரம்பித்துவிடுகிண்றன. எதிர்பார்ப்புகள் பலதும் இருக்கிறன. இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனைவியும் கணவனும் சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலே வாழ்கையை தள்ளிக்கொண்டு போகிறார்கள். தினசரி சண்டை சச்சரவிலேயே போகின்றன நாட்கள். குழந்தை பிறந்தாலும் இவர்கள் உறவில் ஒரு மாற்றமும் வருவதாகக்காணோம்! மாறாக குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஈகோ மோதலுக்கு இன்னொரு சமாசாரம் கிடைக்கிறது போலிருக்கிறது!

இப்போதெல்லாம் திருமணம் வயதான காலத்தில் நடக்கிறது. ஹார்மோன்கள் பீக்கில் இருக்கும் போது நடக்கிறது. உடல் அழகுதான் மனசில் முன் நிற்கிறது. அந்த அழகு காணாமல் போகும்போது மனசு ஏமாறுகிறது! பூங்கொடி என்று பெயருக்கு தகுந்தாற்போல் இருந்த பெண் ஓரிரு வருடங்களில் அந்த பூங்கொடி இருக்கும் ஜாடி போல ஆனபின் .... சிக்ஸ் பேக்ஸ் ஆசாமிக்கு அலுவலக வேலை குடும்ப டென்ஷனில் தொப்பை விழுந்த பின்.... காமத்தில் ஆரம்பிக்கும் உறவு அது விலகும் காலகட்டத்தில் விட்டுச்செல்வது ஏமாற்றமும் வெறுமையுமே!

முன் காலத்தில் இப்படி இல்லை. அதாவது சார்தா சட்டம் வருமுன். குழந்தையிலேயே இவன் இவளுக்கு; இவள் இவனுக்கு என்று நிர்ணயித்து திருமணம் நடத்தி விடுவார்கள். காமம் உட்புகாத காலத்திலேயே ஏற்படும் இந்த உறவு நட்பாகத்தான் மலரும். பலரும் கற்பனை செய்வது போல திருமணம் ஆகிவிட்டதால் இவர்களது தாம்பத்ய உறவு உடனே ஆரம்பிப்பதில்லை. வீட்டு பெரியவர்கள் அதில் கண்டிப்புடன் இருப்பார்கள்.

ஹார்மோன்கள் தம் வேலையில் ஆரம்பிக்கும் காலத்தில் ஆசை வரும். உடல் வளர்ச்சியும் ஏற்படும் காலத்தில்தான் தாம்பத்யம் அனுமதிக்கப்படும். அந்த ஆசை போன பின் மீண்டும் நட்பு தொடரும். வாழ்கை சுகமாகவே செல்லும். எண்பது வயது பாட்டிக்கு காப்பி கொண்டு கொடுத்தால் அந்த கிழத்துக்கு கொடுத்தியா என்று கேட்பார். ஏன்டா இந்த கிழவி லொக்லொக் ன்னு இரும்பிகிட்டு கிடக்கே சுக்கு கஷாயம் போட்டு கொடுக்கச் சொல்லறதுதானே ன்னு கிழவர் கேட்பார். இப்போது கணவன் மனைவி இடையில் உறவு மற்றவருக்கு ஜுரம் அடிக்கிறதா என்று கூடத்தெரியாத அளவுக்கு இருக்கிறது.

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான்..... (தொடரும்...)

 

4 comments:

Subhashini said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கேள் திவா அண்ணா.... பிரமாதம்

Geetha Sambasivam said...

//உண்மையில் சண்டை போட்டுக்கொண்டு வளரும் நட்பு இன்னும் பலமாக இருக்கிறது. நீடித்து நிலைக்கிறது. சண்டை போட்டதால் நம் ஜன்ம வைரி ஆகிவிடுவதில்லை. பிறகு சமாதானம் செய்து கொள்கிறோம்.//

ஹிஹிஹிஹி! ஜூப்பரு!:)))))))

Geetha Sambasivam said...

சப்தபதி பத்தி ஏற்கெனவே எழுதி இருக்கீங்க. இருந்தாலும் இன்னும் விபரமாக எழுதுங்க. :)))))

திவாண்ணா said...

சுபாக்கா தாங்க்ஸ்!
கீதாக்கா! :-))
சப்தபதி திங்கள் பதிவில் தொடரும்....