Pages

Saturday, March 28, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -4




#ஐய்யப்பன்1008 - 4
ௐ கு³ணாகு³ணநிரூபகாய நம: ।குணம் அகுணம் ஆகியவற்றை ஆராய்பவனே
ௐ கு³ணாத்⁴யக்ஷாய நம: ।குணத்துக்கு தலைவனே
ௐ கு³ணநித⁴யே நம: ।குணநிதியே
ௐ கோ³பாலேநாঽபி⁴பூஜிதாய நம: ।கோபாலனும் பூஜித்தவனே
ௐ கோ³ரக்ஷகாய நம: ।பசுக்களை காப்பவனே
ௐ கோ³த⁴நாய நம: ।பசு செல்வத்தை உடையவனே
ௐ க³ஜாரூடா⁴ய நம: ।யானையில் ஏறி பயணம் செய்பவனே
ௐ க³ஜப்ரியாய நம: ।யானை மீது பிரியம் கொண்டவனே
ௐ க³ஜக்³ரீவாய நம: । யானை கழுத்தனே
ௐ க³ஜஸ்கந்தா⁴ய நம: । 60 யானையை ஒத்த (வலிமை கொண்ட) தோள்களை கொண்டவனே
ௐ க³ப⁴ஸ்தயே நம: ।(வலிவான) கைகளை உடையவனே
ௐ கோ³பதயே நம: ।பசுக்களுக்கு தலைவனே
ௐ ப்ரப⁴வே நம: ।பிரபுவே
ௐ க்³ராமபாலாய நம: ।கிராமத்தை காப்பவனே
ௐ க³ஜாத்⁴யக்ஷாய நம: ।யானைகளுக்கு தலைவனே
ௐ தி³க்³க³ஜேநாঽபி⁴பூஜிதாய நம: ।திக் கஜங்களால் பூஜிக்கப்படுபவனே
ௐ க³ணாத்⁴யக்ஷாய நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ க³ணபதியே நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ க³வாம்பதயே நம: ।பசுக்களின் தலைவனே
ௐ அஹர்பதயே நம: । 70 பகலின் தலைவனே
ௐ ஜடாத⁴ராய நம: ।ஜடையை தாங்கியவனே
ௐ ஜலநிபா⁴ய நம: ।நீரை ஒத்தவனே
ௐ ஜைமிந்யாத்³ ருʼஷி பூஜிதாய நம: ।ஜைமினி முதலன ரிஷிகளால் பூஜிக்கப்படுபவனே
ௐ ஜலந்த⁴ரநிஹந்த்ரே நம: ।ஜலந்தரனை கொன்றவனே
ௐஶோணாக்ஷாய நம: ।சிவந்த கண்களை உடையவனே
 

51. குணா குணநிருபக: மூன்று குணங்களோடு கூடியதும், அவைகள் அற்றதுமான பொருள்களைக் காட்டுபவன்.
52. குணாத்யக்ஷ: மூன்று குணங்களையும் அறிந்தவன்.
53. குணநிதி: குணங்களுக்கு இருப்பிடமானவன்.
54. கோபாலேனாபி பூஜித: கண்ணனால் பூஜிக்கப் பட்டவன்.
55. கோரக்ஷக: பசுக்களைக் காப்பாற்றுபவன். கோரக்ஷகன் என்ற சித்த உருவானவன். 56. கோதன : பசுக்களையே செல்வமாகக் கொண்டவன்.
57. கஜாரூட : யானையை வாகனமாகக் கொண்டவன். இந்த வடிவத்தை ஜகன் மோகன சாஸ்தா என்று கூறுவர்.
58.கஜப்ரிய :யானையிடம் அன்பு கொண்டவன். வேழ முகம் கொண்ட விநாயகப் பெருமானிடம் பிரியமானவன்.
59. கஜக்ரீவ : யானையின் கழுத்தைப் போன்று கழுத்து உள்ளவன்.
60.கஜஸ்கந்த: யானையின் தோளைப் போன்ற திண்தோள் படைத்தவன்.
61.கபஸ்தி : சூரிய வடிவானவன்.
62. கோபதி : பசுக்களுக்கு பதி: பசுக்களை உடையவன்.
63. ப்ரபு: வல்லமை உள்ளவன். ரக்ஷகன்.
64. கிராமபால : கிராமங்களைக் காப்பாற்றுபவன்.
65. கஜாத்யக்ஷ: யானைகளுக்கெல்லாம் அரசன்.
66. திக்கஜேனாபி பூஜித: எட்டுத்திக்குகளிலும் உள்ள யானைகளால் பூஜிக்கப்பட்டவன். (திக்கஜங்களாவன: ஐராவதம், புண்டரீகம்,வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், ஸர்வபௌமம், ஸுப்ரதீகம்)
67. கணாத்யக்ஷ :பரமசிவனின் பிரதம கணங்களுக்கும் கட்டளையிடுபவன்.
68. கணபதி : கணங்களுக்கு அரசன்.
69. கவாம்பதி: பசுக்களுக்கு பதியானவன்.
70.அஹர்பதி : சூரியன்.
71. ஜடாதர : ஜடைதரித்தவன், வேதங்களில் ஜடை என் கின்ற உச்சாரண பேதத்தைத் தரித்தவன். ஓதுகிறவன். வேத ஐடா பாராயணத்தில் பிரியம் உள்ளவன்.
72. ஜலநிப: தண்ணீ ரைப் போன்றவன்.
73. ஜைமின்யைரபி பூஜித: வேதத்தில் ஜைமினி சாகையை ப்ரதானமாகத் தங்கள் வேதமாகக் கொண்ட அந்தணர்களால் பூஜிக்கப்பட்டவன். (ஆயிரம் பிரிவுகள் கொண்ட ஸாம வேதத்தில் ஜைமினி சாகை என்று ஒரு பிரிவு உள்ளது)
74. ஜலந்தர நிஹந்தர :ஜலந்தரன் என்னும் அரக்கனை அழித்தவன்,
75. சோணாக்ஷ : சிவந்த கண்களை உடையவன்.

No comments: