Pages

Thursday, December 20, 2018

ஞானாம்ருதம் - 3





பகவான்கிட்டேந்து எதாவது கிடைக்கணும்ன்னு ஆசை படறாளே தவிர பகவான் கிடைக்கணும்ன்னு யாரும் ஆசை படறதில்லை.

அதுக்கு மேலே ராம க்ருஷ்ணர் இன்னொன்னு கூட பண்ணினார், அதுதான் ரொம்ப ஆஸ்சர்யம். அந்த குழந்தைய உள்ள கூட்டிண்டு போய் நமஸ்காரம் பண்ணி தலைல புஷ்பம் வெச்சு தீபாராதனை ஆரத்தி காட்டி 'நீ சாக்‌ஷாத் நாராயணன்'னு சொன்னார். இது ஏதோ கதையில சொல்லறப்ப ஈஸ்வர அவதாரம்ன்னு சொல்லிடலாம். அது அப்படி இல்ல. இப்ப இது எனக்கு நல்லா புரியறது. ஏன் அப்படி பண்ணார்ன்னு. என்னன்னா இந்த லோகத்தில பணத்துக்கு வேண்டி ஜனங்கள் எங்கே வேணா போக ஸித்தமா இருக்கா. பணத்துக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். படிக்கறதுக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். வேற ஏதாவது தனக்கு ஆவஸ்யமானதுக்கு எங்கே வேணும்னாலும் போறதும் புரிஞ்சுக்க முடியும். அப்படி இருக்கறப்ப ஈஸ்வரனுக்காக? என்ன சொல்லுவானா வரமுடியாது. பெங்களூர்ல ட்ராஃபிக் ரொம்ப அதிகம். கீத கேக்கணும்ன்னுதான் இருக்கு. ஆனா எங்களால வர முடியறதில்லை. ரொம்ப கஷ்டம் பேங்க்ளூர்ல... இப்படி ஏதோ சொல்லுவோம் நாம. ஆனா இதுவே ஒரு அவசரம்.. உடம்புக்கு முடியல, ஆஸ்பத்திரி போகணும்ன்னா ட்ராபிக் ப்ளாக்ன்னு வீட்டிலேயா இருப்போம்? எப்படியாவது போயிடுவோம் இல்லையா? ஏன்னா அதுக்கு ஒரு தேவை இருக்கு. ஈஸ்வரனுக்குன்னு ஒரு ஜீவன் ஜிக்ஞாசு ... ஒரு பெரிய மஹான் சொல்லுவார் ஜீவன் முக்தனைவிட ஜிக்ஞாசு பெரியவன். ஏன்னா ஜிக்ஞாசுல ஈஸ்வரன் மானிபெஸ்ட் ஆகறதை நாம பாக்கலாம். அந்த ஆர்வம்... தமிழ்ல அழகான வார்த்தை ஒண்ணு ரமண பகவான் போடுவார்... விழைவு. அந்த ஈஸ்வரனை அடையணும் என்கிற விழைவு. இங்கேயே நிறைய பேர் இருக்கா. வெளியூர்லேந்து வந்தவா கூட இருக்கா. எப்படி வந்தா? அது உள்ளேந்து ஒரு போர்ஸ்... மனசு அத பண்ணாது. ஆத்ம ஞானத்துக்காக இங்கே போ. சத்சங்கத்துல கதை கேளுன்னு மனசு சொல்லாது. மனசு டிவி பாக்கத்தான் சொல்லும். பேப்பர் படிக்கத்தான் சொல்லும். லோக வர்த்தமானங்கள பேசத்தான் சொல்லும். லோக விஷயங்கள்ல ஈடுபடத்தான் சொல்லும். மனச விட டீப்பர் ப்ளேன்ல இருக்கற ஒரு ஃபோர்ஸ்தான் நம்மள உந்திண்டு போய் சத்சங்கத்துக்கு போக வைக்கும். ஞானிகளை போய் பாக்கச்சொல்லும். அந்த ஆர்வத்தை உண்டு பண்ணும். தபஸ் பண்ணு, தியானம் பண்ணு, சத் க்ரந்தங்களை படிக்கச்சொல்லும். இப்படி அந்த ஃபோர்ஸ் விழைவு ஜிக்ஞாசுல பாக்கறது ஞானிகளுக்கு பகவானோட தரிசனம்.

No comments: