Pages

Monday, December 3, 2018

ஞானாம்ருதம் - 1





யது மஹா ராஜா அவதூதரை பாத்து ஆச்சரியப்படறான். எனக்கு வேளா வேளைக்கு நல்ல அறுசுவை சாப்பாடு கிடைக்கறது. வேலை செய்ய எத்தனையோ ஆட்கள் இருக்கா. கைதட்டின்னா வந்து ஏன்னு கேட்க பத்து பேர் இருக்கா. எங்கானா போகணும்ன்னா ரதம் கொண்டு வந்து நிறுத்தறா. இருந்தாலும் சந்தோஷம் இல்லே.
இவருக்கோ ஒண்ணுமே இல்ல. இடுப்புல ஒரு கோவணத்தத்தவிர துணிகூட இல்ல. அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா, எங்க கிடைக்கும்ன்னு கூட தெரியாது. ஆனா இவ்வளோ ஆனந்தமா இருக்காரே?

அவதூதர்கிட்ட போய் கேட்கறான். "ப்ரூஹி ஆத்மனி ஆனந்த காரணம்" அதெப்படி இவ்வளவு ஆனந்தமா இருக்கீங்க?
லோகத்தில இப்படி ஆர்கிட்டேயும் போய் கேட்போமானா? அப்படி கேட்டா த்ரிஷ்டி பட்டுடும்ன்னு சொல்லுவோம்.
சௌக்கியமா இருக்கறதுதானே இயல்பா இருக்கணும். அதானே ஆரோக்கியம்?
யாரானா உடம்பு சௌக்கியமா இருக்கறவங்ககிட்டப்போய் அதெப்படி இவ்வளோ சௌக்கியமா இருக்கீங்க? உங்களுக்கு என்ன பிபி வராதா? கான்சர் மாதிரி வியாதி எல்லாம் வராதா? ன்னு கேட்போமானா? அப்படி கேட்ட அடிதான் கிடைக்கும்!
ஏன்னா ஆரோக்கியமா இருக்கறதுதான் இயல்பு.
அதே போல ஆனந்தமா இருக்கறதுதான் இயல்பு.
ஆனா லோகத்தில அது அன்நேசுரலாத்தான் இருக்கு. ஆனந்தமா ஒத்தர் இருக்கறது காணமாட்டேங்கிறது. துக்கிக்கறது நேச்சுரலா இருக்கு. ஆனந்தமாவே இருந்த கிருஷ்ணன்தான் கீதையில 'அநித்யம் அசுகம் லோகம்' ன்னு சொல்லறார்.
இது அநித்யம்ன்னா லோகத்துக்கு வந்திருக்கற நான் என்னதான் செய்யணும்?
'இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்!'
ஆனந்தமா இருக்கணும்ன்னா என்னை பக்தி பண்ணு; பஜனை பண்ணு.
பகவானை பாத்துண்டு இருந்தா ஆனந்தமா இருக்கலாம். லோகத்தையே பாத்துண்டு இருந்தா என்னைக்காவது அது கடிக்கும்!... லோகத்தில எதையாவது ஒண்ண பிடிச்சுண்டு நான் ஆனந்தமா இருக்கேன்னு சொன்னா என்னைக்காவது ஒரு நாள் அது உன்னை விட்டு போயிடும். அப்ப துக்கமே வரும்.

No comments: