Pages

Tuesday, April 28, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 29





ௐ இஷ்டநாமவிதா⁴யகாய நம: ।விரும்பிய பெயர்களில் விளங்குபவனே
ௐ ஸாமரஸ்யாய நம: ।சமரச போக்குள்ளவனே
ௐ அப்ரமேயாய நம: ।ஆழம் காணமுடியாதவனே
ௐ பாஷண்டி³நே நம: ।மதக்கொள்கைகளில் மாறுபடுபவன் போன்றவனே
ௐ பர்வதப்ரியாய நம: ।மலைகளை விரும்புபவனே
ௐ பஞ்சக்ருத்யபராய நம: ।ஐந்தொழில்களை ஆற்றுபவனே
ௐ பாத்ரே நம: ।திறம் வாய்ந்தவனே
ௐ பஞ்சபஞ்சாதிஶாயிகாய நம: ।ஐந்தைந்தாக பெருகுபவனே
ௐ பத்³மாக்ஷாய நம: ।தாமரைக்கண்ணனே
ௐ பத்³மவத³நாய நம: । 710தாமரை முகத்தினனே
ௐ பாவகாபா⁴ய நம: ।நெருப்பு வடிவினனே
ௐ ப்ரியங்கராய நம: ।பிரியத்தை அளிப்பவனே
ௐ கார்தஸ்வராங்கா³ய நம: ।தங்க மேனியனே
ௐ கௌ³ராங்கா³ய நம: ।மஞ்சள் மேனியனே
ௐ கௌ³ரீபுத்ராய நம: ।கௌரியின் புதல்வனே
ௐ த⁴நேஶ்வராய நம: ।செல்வத்தின் அதிபதியே
ௐ க³ணேஶாஶ்லிஷ்டதே³ஹாய நம: ।
கணேசரால் ஆலிங்கனம் செய்யப்பட்ட தேகமுடையவனே
ௐ ஶிதாம்ஶவே நம: ।
ௐ ஶுப⁴தீ³தி⁴தயே நம: ।சுபமான ஒளியுள்லவனே
ௐ த³க்ஷத்⁴வம்ஸாய நம: । 720தக்‌ஷனை துவம்சம் செய்தவனே
ௐ த³க்ஷகராய நம: ।விரைந்து செயலாற்றுபவனே
ௐ வராய நம: ।உயர்ந்தவனே
ௐ காத்யாயநீஸுதாய நம: ।காத்யாயனீயின் மகனே
ௐ ஸுமுகா²ய நம: ।அழகிய முகமுடையவனே
ௐ மார்க³ணாய நம: ।தேடுபவனே

 சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
703. இஷ்ட நம விதாயக: இஷ்டர்களுக்கு கெடுதல் செய்யாதவன்.
704. ஸாமரஸ்ய: சமரசப் போக்கு உள்ளவன்.
705. அப்ரமேய: ஊகிக்க முடியாதவன்.
706. பாஷண்டி: பாஷண்டன் போன்றவன்.
707. பர்வதப்ரிய: மலையில் ஆசை உள்ளவன்.
708. பஞ்சக்ருத்ய: ஐந்து தொழில் கொண்டவன்.
709. பரோ பேத: இதரர்களோடு சேர்ந்தவன்.
710. பஞ்ச மஞ்சாதி சாயிக: பெரிய மஞ்சத்தில் படுத்திருப்பவன்.
711. பத்மாக்ஷ: தாமரைக் கண்ணன், தாமரை மணிகளைப் பூண்டவன்.
712. பத்ம வதன: தாமரை போன்ற முகம் உடையவன்.
713. பாவகாப: தீ போன்ற வடிவானவன், அல்லது தீக்குழியோடு விளங்குபவன்.
714. ப்ரியங்கர: பிரியம் அளிப்பவன்.
715. கார்த்த ஸ்வராங்க: தங்கம் போல் அவயங்கள் உடையவன்.
716. கௌராங்க: சிவந்த அங்கம் உள்ளவன்.
717. கௌரீ புத்ர: கௌரியின் புதல்வன்.
718. கணேஸ்வர : சிவ கணங்களுக்குத் தலைவன்.
719. ஆஸ்லிஷ்ட: (பூர்ணா - புஷ்களா இவர்களால்) ஆலிங்கனம் செய்யப்பட்டவன். 720. ஸ்லிஷ்ட வபு: அழகான சரீரம் உள்ளவன்.
721. சீதாம்சு:குளிர்ந்த காந்தி உள்ளவன்.
722. சுபதீதிதி :மங்களமான காந்தி உடையவன்.
723. தக்ஷத்வம்ஸ: தக்ஷனை ஸ்மரித்தவன்.
724. தக்ஷகர: பலம் உள்ள கைகளை உடையவன்.
725. வர: ஸ்ரேஷ்டன், மாப்பிள்ளை .
726. காத்யாயனி ஸுத: காத்யாயன முனிவரின் புதல்வியான தேவியின் புதல்வன்.
727. ஸுமுக: அழகான முகம் உடையவன்.
728. மார்கண: தேடுகிறவன். யாசிப்பவன். ஜல உருவினன்.

Monday, April 27, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 28





ௐ ஜநஹம்ஸாய நம: ।மனிதரில் அன்னம் போன்றவனே
ௐ ப²லபாணிப்ரபூஜிதாய நம: ।
கனியை கைக்கொண்டவனால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ அர்சிதாய நம: ।அர்ச்சனை செய்யப்பட்டவனே
ௐ வர்த⁴நாய நம: ।வளர்ப்பவனே
ௐ வாக்³மிநே நம: । 680பேச்சாளனே
ௐ வீரவேஷாய நம: ।வீர வேடம் பூண்டவனே
ௐ விது⁴ப்ரியாய நம: ।தனிமையை விரும்புபவனே
ௐ லாஸ்யப்ரியாய நம: ।நடனத்தை விரும்புபவனே
ௐ லயகராய நம: ।லயம் செய்பவனே
ௐ லாபா⁴லாப⁴விவர்ஜிதாய நம: ।லாபம் நஷ்டம் ஆகியவற்றை நீக்கியவனே
ௐ பஞ்சாநநாய நம: ।சிங்கம் போன்றவனே
ௐ பஞ்சகு³டா4ய நம: ।மறைந்திருக்கும் ஐந்து கொண்டவனே
ௐ பஞ்சயஜ்ஞப²லப்ரதா³ய நம: ।5 யக்ஞங்களின் பலனை அளிப்பவனே
ௐ பாஶஹஸ்தாய நம: ।பாசத்தை கைக்கொண்டவனே
ௐ பாவகேஶாய நம: । 690அக்னிக்கு தலைவனே
ௐ பர்ஜந்யஸமக³ர்ஜநாய நம: ।மேகம்போல கர்ஜிப்பவனே
ௐ பபாரயே நம: । ?பாபாரயேபாபத்துக்கு எதிரியே
ௐ பரமோதா³ராய நம: ।மிக்க உதார குணமுள்ளவனே
ௐ ப்ரஜேஶாய நம: ।ப்ரஜைகளுக்கு ஈசனே
ௐ பங்கநாஶநாய நம: ।சேற்றை அழிப்பவனே
ௐ நஷ்டகர்மணே நம: ।கர்மங்கள் நீங்கினவனே
ௐ நஷ்டவைராய நம: ।விரோதங்கள் நீங்கினவனே
ௐ இஷ்டஸித்³தி⁴ப்ரதா³யகாய நம: ।விரும்பியவற்றை சித்திக்க அருள்பவனே
ௐ நாகா³தீ⁴ஶாய நம: ।நாகங்களுக்கு தலைவனே
ௐ நஷ்டபாபாய நம: । 700பாபங்கள் நீங்கினவனே

 சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
678. ஜனஹம்ஸ: ஜனங்களுக்கு ஹம்ஸம் போன்றவன்.
679. ஹலபாணி ப்ரபூஜித : கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரால் பூஜிக்கப்பட்டவன்.
680. அர்ச்சித: அர்ச்சிக்கப்பட்டவன்.
681. வர்ச்சஸ: காந்தன்.
682. வாக்மீ : பேச்சாளன்.
683. வீரவேஷ : வீர வேஷம் பூண்டவன். வீரன் என்ற தேவதையின் உருவன்.
684. விதுப்ரிய: சந்திரனிடம் பிரியம் உள்ளவன்.
685. லாஸ்யப்ரிய : ஸ்திரீகள் செய்யும் ஒரு வித கூத்திற்கு லாஸ்யம் என்று பெயர். அதில் விருப்பம் உள்ளவன்.
686. லயகர: மறைத்தலைச் செய்பவன்.
687. லாபலாப விவர்ஜித: லாப நஷ்டங்களைத் தள்ளினவன்.
688. பஞ்சானன : ஐந்து முகம் உள்ளவன். சிங்கத்தை வைத்துக் கொண்டவன். விரிந்த (மலர்ந்த) முக முள்ளவன்.
689. பஞ்சகுரு: பஞ்ச பாண்டவர்களுக்கு ஆசான். பராசரன் முதலிய ஐந்து மூர்த்திகளைக் குருவாக கொண்டவன்.
690. பஞ்ச யக்ஞ பலப்ரத : ஐந்து விதமான வேள்வியின் பலனை அளிப்பவன். அவைகளாவன - 1) அக்னி ஹோத்ரம், 2) தர்ச பூர்ண மாஸௌ, 3) சாதுர் மாஸ்யம், 4) பசு பந்தம், 5) ஸோமயாகம் (அல்லது) தேவ, பிரம்ம, பூத, பித்ரு , மனுஷ்ய யக்ஞங்கள் அல்லது அபிகமனம், உபாதானம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம், என்பவைகளாகும். விஸ்வஸ்ருஜா மயனம் என்ற ஒரு பெரிய வேள்வி - ஸத்ரயாகம் அனேக நாட்கள் பல தீக்ஷிதர்களால் நடத்தக் கூடியது. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து தத்துவங்களால் பூஜிப்பது என்ற மந்திர சாஸ்திரம் கூறும் பூஜையின் பலனை அளிப்பவன்.
691. பரசு ஹஸ்த : கோடாலியைக் கையில் கொண்டவன்.
692. பாவகேச: தீ இறைவன்.
693. பர்ஜன்ய ஸம கர்ஜித: இடி போல் கர்ஜிப்பவன்.
694. பாபாரி: பாபிகளுக்கு சத்துரு ஆனவன்.
695. பர மோதார: மிகவும் உதார குணம் உள்ளவன்.
696. ப்ரஜேச: பிரஜைகளுக்கு அரசன்.
697. பங்க நாசன: பாபத்தை அகற்றுபவன்.
698. நஷ்ட கர்மா: கர்மங்கள் அற்றவன்.
699. நஷ்ட வைர: வைர மற்றவன்.
700. இஷ்ட ஸித்தி ப்ரதாயக: வேண்டுபவற்றை அளிப்பவன்.
701. நாகாதீச: ஸர்ப்பங்களுக்கு ஈசன்.
702. நஷ்ட பாப: பாபம் அற்றவன்.

Saturday, April 25, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 27





ௐ டா³கீநாய நம: ।டாகினீ எனும் சக்தியுடன் இருப்பவனே
ௐ ஸூர்யதேஜஸ்விநே நம: ।சூரியனின் தேஜசை கொண்டவனே
ௐ ஸர்பபூ⁴ஷாய நம: ।பாம்புகளை அணிந்தவனே
ௐ ஸத்³கு³ரவே நம: ।நல் குருவே
ௐ ஸ்வதந்த்ராய நம: ।சுதந்திரமானவனே
ௐ ஸர்வதந்த்ரேஶாய நம: ।எல்லா தந்திரங்களுக்கும் அதிபதியே
ௐ த³க்ஷிணாதி³க³தீ⁴ஶ்வராய நம: ।தென் திக்கின் அதிபதியே
ௐ ஸச்சிதா³நந்த³கலிகாய நம: ।சச்சிதானந்த கொழுந்தே
ௐ ப்ரேமரூபாய நம: ।அன்பு வடிவினனே
ௐ ப்ரியங்கராய நம: । 660ப்ரியத்தை அளிப்பவனே
ௐ மித்⁴யாஜக³த³தி⁴ஷ்டாநாய நம: ।மாயா உலகை பராமரிப்பவனே
ௐ முக்திதா³ய நம: ।முக்தி அளிப்பவனே
ௐ முக்திரூபகாய நம: ।முக்தி வடிவினனே
ௐ முமுக்ஷவே நம: ।முக்தியில் தீவிர முனைப்பு கொண்டவனே
ௐ கர்மப²லதா³ய நம: ।செயல்களுக்கு பலனை தருபவனே
ௐ மார்க³த³க்ஷாய நம: ।வழி அறிந்தவனே
ௐ கர்மணாய நம: ।கர்மங்களில் ஈடுபட்டவனே
ௐ மஹாபு³த்³தா⁴ய நம: ।பேரறிவினனே
ௐ மஹாஶுத்³தா⁴ய நம: ।பெரும் சுத்தமானவனே
ௐ ஶுகவர்ணாய நம: । 670கிளிப்பச்சை நிறத்தவனே
ௐ ஶுகப்ரியாய நம: ।சுகத்தை விரும்புபவனே
ௐ ஸோமப்ரியாய நம: ।
சோம யாகத்தை விரும்புபவனே / சந்திரனை விரும்புபவனே
ௐ ஸுரப்ரீயாய நம: ।தேவர்களால் மகிழ்விக்கப்பட்டவனே
ௐ பர்வாராத⁴நதத்பராய நம: ।பருவ கால ஆராதனையில் பிரியம் கொண்டவனே
ௐ அஜபாய நம: ।அசபா மந்திர உருவினனே

      சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
653. டாகின : டாகினி என்ற சக்தியோடு விசுத்தி சக்கரத்தில் இருப்பவன்.
654. ஸூர்ய தேஜஸ்வி : சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.
655. ஸர்வ பூஷ: எல்லாம் அணிந்தவன்.
656. ஸத்குரு: ஸன்மார்க்கத்தைப் போதிக்கும் குருநாதன்.
657. ஸ்வதந்த்ர: பிற ஏவல் அற்றவன்.
658. ஸர்வதந்த்ரேச : எல்லாக் காரியங்களுக்கும் எஜமானன்.
659. தக்ஷிணாமூர்த்தி ரூபக : தக்ஷிணா மூர்த்தி உருவம் கொண்டவன்.
660. சித்ஸதானந்த கலிக: ஸச்சிதானந்த ரூபன்.
661. ப்ரேமரூப: இதரர்களால் விரும்பத் தக்க உருவமும் உள்ளமும் கொண்டவன். அன்பு வடிவானவன்.
662. ப்ரியங்கர: அடியவர்களுக்குப் பிரியத்தை அளிப்பவன்.
663. மித்யா ஜகத திஷ்டான: பொய்யான உலகைக் கொண்டவன்.
664. முக்தித: மோக்ஷம் அளிப்பவன்.
665. முக்தி ரூபக:மோக்ஷம் அடையும் வழியைக் காண்பிப்பவன்.
666. முமுக்ஷ: விடுதலையை விரும்பியவன். அதாவது மோக்ஷத்தைக் கருதியவன்.
667. கர்மபலத கர்மாக்களுக்குப் பலன் அளிப்பவன்.
668. மார்க்கதக்ஷ:வழி நடையில் ஸமக்தன்.
669. கார்மண: கர்மாக்களில் சம்பந்தித்தவன்.
670. மஹாபுத்த: பெரிய புத்தன். உருவன்.
671. மஹாசுத்த: ரொம்பவும் சுத்தமானவன்.
672. சுகவர்ண: கிளிபோல் நிறம் உள்ளவன்.
673. சுகப்ரிய: சுக முனிவரிடம் பிரியம் கொண்டவன்.
674. ஸோமப்ரிய: சந்திரனிடம் பிரியம் கொண்டவன்.
675. ஸுரப்ரீத: தேவர்களால் சந்தோஷிக்கப்பட்டவன்.
676. பர்வாராதன தத்பர: பருவ கால பூஜையில் ஆசை கொண்டவன்.
677. அஜப: அஜபா மந்திர ரூபன்.

Friday, April 24, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 13




 
அப்பாடா என்ன வெயில் காயறது” என்றபடி வெள்ளி செம்பில் இருந்து பித்தளை டம்ளரில் தண்ணீரை ஊற்றி குடித்தார் தாத்தா.
 ஆமாம் தாத்தா ரொம்ப தான் காயறதுஅது சரி நீ ஏன் எப்பவும் அந்தப் பித்தளை டம்ளரில் மட்டுமே தண்ணி காபி எல்லாம் குடிக்கிற?
 ஆமாண்டா இது எனக்கு மட்டும் தான். வேற யாரும் இதை உபயோகிக்க மாட்டா
 இதே மாதிரிதான் பாட்டியும் வேற டம்ளர் வெச்சிருக்காளா?
 ஆமாம். சாதாரணமா அந்த காலத்திலிருந்து இப்படித்தான் ஒரு பழக்கம். அவா அவா டம்ளர் அவா அவா பஞ்சபாத்திரம், சாப்பிடற தட்டு, துண்டு, வேட்டி, மத்த துணிமணி  இப்படி எல்லாமே அவா அவா தனித்தனியா தான் வெச்சிருப்பாஅப்புறம்தான் எல்லாம் கலந்தாங் கட்டியா போயிடுத்து. நாங்கதான் இன்னும் இந்த பழக்கத்தை விடாமல் இருக்கோம்.
 இதுவும் நீ முன்ன சொன்ன அந்த எச்சில் சமாஜாரம் மாதிரிதானே தாத்தா
ஆமாண்டா, அதேதான்.
அது சரி, நீ வெளியூர் போறப்ப என்ன செய்வே தாத்தா?” என்று கேட்டாள் பேத்தி.
வெளியூர் போனா எல்லாம் என்னுத எடுத்துண்டு போவேன்மா. கூடவே என்னோட போர்வை என்னோட ஜமக்காளம் எல்லாம் எடுத்துண்டு போவேன்அதனாலதான் அந்த காலத்துல ஊர் விட்டு ஊர் போறதுன்னா நிறைய லக்கேஜ் எடுத்துட்டு போகணும். இப்பல்லாம் இந்த பழக்கம் எல்லாம் விட்டே போச்சு.
அது சரி தாத்தா யாரான விருந்தாளி வந்தால் என்ன பண்ணுவே?
சிரத்தை  இருக்கறவா அவளோடத கொண்டு வருவா. சில சமயம் வெள்ளில டம்ளர் வெச்சிருப்போம். அதுல ஜலம் காப்பி கொடுக்கலாம்.
வெள்ளிக்கு எச்சில் தோஷம் கெடயாதா தாத்தா?
ஊஹும். கெடயாது. அலம்பிட்டு திருப்பி யார் வேணா உபயோகிக்கலாம்.
அப்ப நீயும் வெள்ளி டம்ப்ளர் வெச்சுண்டு இருக்கலாமே தாத்தா?
வெச்சுண்டு இருக்கலாம். ஆனா இது ஆரம்ப காலத்துலேந்து பழகிப் போச்சு.
அப்பவே வெள்ளில வாங்கி இருக்கலாம் இல்லியா?
ம்ம்ம்ம் வாங்கி இருக்கலாம். அப்பல்லாம் ரொம்ப வறுமைடா. நானும் பாட்டியும் கிட்டத்தட்ட பத்து வருஷம் சரியான வருமானம் இல்லாம கஷ்டப்பட்டோம். வெள்ளி டம்ளருக்கு எங்க போக?
அப்ப இந்த வெள்ளி செம்பு?
அது எங்கப்பா கல்யாணத்தப்ப சீர் செஞ்சது” என்று இடை மறித்தாள் பாட்டி. “அப்பறம்தான் அவர்கிட்டேந்து ஒண்ணும் வாங்கிக்க மாட்டேன்னுட்டார் இவர். மானஸ்தர்!” 
அதெல்லாம் சும்மா! அவரே கஷ்டப்பட்டுண்டு இருந்தார். கடன வாங்கி அதெல்லாம் வாங்கிக்கொடுக்க தயாரா இருந்தார். நாதான் கூடவே கூடாதுன்னுட்டேன்.
சரி, இப்படி பித்தள வெள்ளி மாதிரி வேற எதாவது?
தண்ணி வெச்சுக்க தாம்ரபாத்ரம் வெண்கலம் இதெல்லாம் வெச்சுக்கலாம். ஏன் தங்கத்துல கூட வெச்சுக்கலாம்
தங்கமா?
ஆமாண்டி. தங்கம்தான். அந்த காலத்துல ராஜாக்கள் வெச்சுண்டு இருப்பா, கேக்கவே வேண்டிதில்ல. பெரிய பணக்காரா சிலர் வெச்சுண்டு இருப்பா
எதுக்குத்தாத்தா வெள்ளி தங்கம் எல்லாம்?
பாட்டி சொன்னாள்: சுத்தம் பண்ணறது சுலபம்டா. தாம்ரம் வெண்கலம் பித்தளை எல்லாம் களிம்பு ஏறும். அத தேய்க்கறதுக்குள்ள…. தங்கம் வெல அதிகம். இந்த காலத்துல யாராலயும் முடியாது. வெள்ளி வசதிப்பட்டவா பலர் வெச்சுக்கறா. தாத்தா கூட வெளியூர் போனா எடுத்துண்டு போக சின்ன வெள்ளி டம்ளர் வெச்சுண்டு இருக்காளே!
ஆம்ம்மா, அத எடுத்துண்டு போனா அத காபந்து பண்ணனும். அதுலேயே மனசு இருக்கும். அதுக்கு அத கொண்டு போகாமலே இருக்கலாம்.
பின்ன எதுக்கு அத உபயோகப்படுத்தணும்?
சித்ரா சொன்னார்: வெள்ளி தங்கம் எல்லாம் ஹெவி மெட்டல்டி. அதுல பாக்டீரியா மாதிரி எதுவும் உசிரோட இருக்க முடியாது. செத்துப்போயிடும்.
அப்படியாம்மா?
அப்பா நெட்ல அன்னிக்கு பாத்தேன் ரெண்டரை ஆயிரத்துக்கு தங்கம் ப்ளேட் பண்ண தட்டு, டம்ப்ளர் எல்லாம் ஒரு செட்டா இருக்கு. உனக்கு அத வாங்கவா?” என்றார் கணேசன்.
பாட்டியின் கண்கள் ஆசையில் மின்னின
எதுக்குடா? தோட்டத்துல வாழமரம் இருக்கறப்ப, இலை கிடைக்கறப்ப தங்கம் எதுக்குடா”என்றார் சாஸ்திரிகள்.
நீ சும்மா இரு தாத்தா! நா பெரியவனான அப்பறம் வேலைக்கு போய் பணம் சம்பாதிச்சு, உனக்கும் பாட்டிக்கும் அத வாங்கி கொடுக்கறேன். சரியா?’ என்றான் பேரன்.
என் கண்ணே’ என்று அணைத்துக்கொண்டாள் பாட்டி!

- நிறைந்தது-