Pages

Tuesday, November 9, 2010

முன் கூறிய அஹிம்சை முதலியவற்றில் யோகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறை.




  जातिदेशकालसमयानवछिन्नाः सार्वभौमा महाव्रतम् ।।31।।
ஜாதிதே³ஶகாலஸமயாநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம் || 31||

ஜாதி, தே³ஶ, கால, ஸமய, அநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம்.

ப்ராஹ்மணன் முதலிய ஜாதியாலும்; தீர்த்தம் முதலான இடத்தாலும்; சதுர்தசீ போன்ற காலத்தாலும்; ப்ராம்ஹணனுக்கு உணவிடுதல் போன்ற அநியத காலங்களாலும் எவ்விதத்திலும் தடை செய்யப்படாதவையாக எல்லா பூமிகளிலும் அல்லது அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருவதாக உள்ளது மஹா விரதமாகும்.

சிலர் சில விஷயங்களை கடை பிடிக்கிறார்கள். இன்னிக்கு வெள்ளிக்கிழமை- அசைவம் சாப்பிட மாட்டேன் என்பார்கள். அது போலவே காசிக்கு /கயாவுக்கு/ தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறேன், இன்னிக்கு அமாவாசை என்று பலவற்றை சொல்லி அசைவம் சாப்பிடுவதில்லை என்பர். இது ஒரு நோக்கத்தில் நல்லதுதான். ஆனால் இது யோகாங்கமான அஹிம்சை இல்லை. யோகாங்க அஹிம்சை இப்படி ஒரு ஜாதி, இடம், காலம் போன்ற எந்த விசேஷமும் இல்லாமல் தடையற்ற எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் காட்டப்படும் அஹிம்சையாகும். இதே போல மற்ற ஸத்யம், பிறர் சொத்தை அபகரிக்காமை (அஸ்தேயம்), ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவற்றில் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த காலமும் எந்த இடத்திலும் அனுஷ்டிக்கப்படுவது மஹா விரதமாகும்.

No comments: