Pages

Monday, May 16, 2011

புனிதம்




சிலர் பிறக்கும் போதே புனிதமாக பிறக்கிறார்கள்.
சிலர் புனிதத்தை அடைகிறார்கள்.
சிலர் மீது புனிதம் திணிக்கப்படுகின்றது.

ஒரு எண்ணைக்கிணறு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மிகப்பெரிய தீயாக இருந்ததால் அதன்கிட்டே கூட யாரும் போக முடியவில்லை. கம்பெனியின் தீ அணைப்பு படையால் அதற்கு 200 அடி கிட்டே கூட நெருங்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் உள்ளூர் தீயணைப்புப்படைக்கு தகவல் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு பழங்கால வண்டி தட்டுத்தடுமாறிக்கொண்டு பாதையில் ஓடி தீக்கு 50 அடி தூரத்தில் நின்றது. அதில் இருந்து குதித்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்துக்கொண்டு பின் தீ மீது தண்ணீர் அடித்து அதை அணைத்தார்கள். கம்பெனி ஆசாமிகளுக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு வீரமா?!
சில நாட்கள் கழித்து கம்பெனி ஒரு பாராட்டு விழா நடத்தியது. வீரர்களின் துணிச்சல், கடமை உணர்வு எல்லாம் வானளாவ புகழப்பட்டது. கடைசியில் ஒரு பெரும் தொகைக்கு காசோலை கொடுத்தார்கள்.
விழா முடிந்ததும் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்: அந்த பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?
உள்ளூர் தலைவர் சொன்னார்: "முதலில் அந்த வண்டியின் பாழாப்போன ப்ரேக்கை பழுது பார்க்கணும்!”


2 comments:

Geetha Sambasivam said...

ஹாஹாஹாஹா, ஆனாலும் அரதப்பழசான ஜோக் உள்ள கதை இது. :P

திவாண்ணா said...

ஜோக் சரி, அதை எதோட கணக்ட் பண்ணியிருக்குன்னு பாருங்க!